முன்னுரை:
என் ஆயுதப்படையும்,என் கப்பல்படையும்,என் விமானப்படையும் என் ஏவுகனைகளும்,என் அணுகுண்டுகளும் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதை உனக்கு காட்டாமல் விடப்போவதில்லை என்று கூறிக்கொண்டு அப்பாவி பொதுமக்களின் மீதும்,ஏதும் அறியாத பள்ளி குழந்தைகளின் மீதும் கொத்துக்கொத்தாக வீசித்திரியும் ஆதிக்க மனநோய் பிடித்த கொடூரர்களை மனநோயாளிகள் என்றே இங்கு அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.எப்படி அடிபட்டு வெறிபிடித்த மிருகங்களாக ஹிட்லரும்,முசோலினியும் ஜெர்மனியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்று இரண்டாம் உலகப்போரை தொடங்கி நாடுபிடிக்கும் மனநோயில் திரிந்தார்களோ அதனைப்போன்றே தற்போது இஸ்ரேல் அதிபர் 1.நெதன்யாகு, அமெரிக்க அதிபர் 2.டோனல்ட் ட்ரம்ப் என்ற இரண்டு நாடுபிடிக்கும் மனநோயாளிகள் இந்த உலகில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தி அதில் குழிர்காய போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த உலகில் பொருளாதாரத்திலோ அல்லது தொழில்நுட்பத்திலோ அல்லது இராணுவத்திலோ தன்னைவிட எந்த நாடும் பலமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விசித்திரமான மனநோய். இவர்களின் மனநோய் தெருவில் நடக்கும் எவரைப் பார்த்தாலும் தனக்கு அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு முற்றிவிட்டிருக்கின்றது. தன்னைவிட அல்லது தனக்கு நிகரான பலமுடையவராக இந்த உலகில் யாரும் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த மன நோயாளிகளுக்குள் குடிகொண்டிருக்கும் மோசமான நிலை.தன்னைவிட பலமாகவோ அல்லது தனக்கு நிகராகவோ யாரையாவது இவர்கள் கண்டால் அவரின்மீது எப்படியாவது ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுப்பாட்டில் அவரை வைத்துவிட வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.எந்த நாடாவது சுயமாக முன்நேற்றம் காண்கின்றது என்றால் அடுத்த நொடியே அதனை நாசமாக்குவதற்கோ அல்லது அதனை அநியாயமாக சூரையாடுவதற்கோ திட்டம் தீட்டிவிடுவார்கள்.அதற்காக அந்நாட்டை உலகின் அச்சுறுத்தல் என்றோ அல்லது தனது நாட்டிற்கு எதிரான பயங்கரவாதம் என்றோ இந்த முட்டால் உலகிற்கு முகத்திரை அணிவித்து அந்நாட்டையும் அதன் வளங்களையும் சுரண்டி சூரையாடிவிடுவார்கள்.
இவர்கள் நினைத்தாள் ஒருசில நிமிடங்களில் ஏதோ ஒரு நாட்டின் தலைவரை மிக இலகுவாக கொலை செய்துவிட முடியும் என்றும்,இவர்கள் நினைத்தால் ஏதோ ஒரு நாட்டின் மொத்த வளங்களையும் சூரையாடி சின்னாபின்னமாக்க முடியும் என்றும் காட்டிக்கொள்வது இந்த உலகை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற எச்சரிக்கை மணியாகவே நான் காண்கின்றேன்.இத்தகைய மனநோயாளிகள் இந்த உலகையும் அதன் வரைபடத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இப்பொழுதேனும் இந்த உலகை காக்க விரும்பும் நல்லுள்ளங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கட்டுரையை தொகுத்திருக்கின்றேன்.நிச்சயம் இந்த கட்டுரை தற்போது இந்த உலகை சூழ்ந்திருக்கும் போர் நிலையையும் அதன் காரணியையும் தெளிவுபடுத்தும் என்றே நம்புகின்றேன். நீங்களும் இந்த கட்டுரையை வாசித்து பிற நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
ஆதிக்க மனநோயே போர்களின் துவக்கப்புள்ளி:
இந்த உலகம் முழுவதையும் ஏதாவதொரு வகையில் தன் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆட்சி செய்துவிட வேண்டும் என்ற பேராசை இந்த உலகம் சுழல ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்துகிடக்கத்தான் செய்கின்றது.நாட்டின் அரசர்களாக இருந்தவர்கள் அவர்களின் ஆளுகைக்கேற்ப தனக்கு கீழுள்ள மனிதர்களின் மீது தன்னால் முடிந்தளவு ஆதிக்கம் செலுத்தத்துடித்தார்கள்.பிரஞ்சைகளாக இருந்தவர்கள் அதே ஆதிக்கத்தை எப்படியாவது அடைந்து அனைத்து மக்களையும் தானும் அடக்கியாண்டுவிட வேண்டும் என்ற பேராவலில் ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.இவ்வளவுதான் மக்களுக்கும், மன்னர்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் மத்தியில் அன்று முதல் இன்று வரை இருக்கும் வேறுபாடாக நான் காண்கின்றேன்.இவற்றைத்தவிர்த்து ஒரு மனிதன் சகமனிதனின் மீது அநியாயமாக ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று போதிப்பதற்கோ அதனை செயல்படுத்துவதற்கோ ஒருவரும் இல்லாத நிலையையே இந்த மனித சமூகம் எல்லா காலங்களிலும் எட்டியிருந்திருப்பதாக வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.
ஆம்!இது என் எல்லை என்றும்,இது என் வான்பரப்பு என்றும்,இது என் நிலப்பரப்பு என்றும், கூறிக்கொண்டு இந்த உலகில் ஓட்டப்பட்ட இரத்தங்கள் பல நூறு மில்லியன் லிட்டர்கள் என்பதை வரலாறுகள் இன்றும் துள்ளியமாக பதிவு செய்துவைத்திருக்கின்றது.யாரோ ஒருவரின் மீது எங்கோ ஏற்பட்ட வெறுப்பிற்காக, அல்லது யாரோ ஒருவருடன் எதற்காகவோ ஏற்பட்ட முரன்பாட்டிற்காக, அவரின் இரத்தத்தை ஓட்டாமல் ஓயப்போவதில்லை என்றும் அவரின் உடமைகளை பறித்து நடுத்தெருவில் அவரை நிறுத்தாமல் விடப்போவதில்லை என்றும் இந்த மனித சமூகத்திற்குள் நடந்தேரிய அட்டூழியங்கள் எண்ணில் அடக்கமுடியாதவை.
உண்மையில் இந்த உலகில் மனித சமூகம் பல்வேறு காரணங்களுக்காக போர்புரிந்திருக்கின்றது.அவற்றில் சில போர்கள் தன்னை தற்காத்துக்கொள்ளவும்,தன் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் நடத்தப்பட்டிருந்தாலும்,பல போர்கள் பிற மக்களை அடிமைகளாக்கி அடக்கியாளவும்,அவர்களின் உடமைகளை அநியாயமாக சொந்தமாக்கிக்கொள்ளவும்,அவர்களின் நம்பிக்கைகளை இழிபடுத்தி புலங்காகிதம் அடைந்துகொள்ளவும்தான் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை மிக வெளிப்படையாகவே இங்கு நான் பதிவு செய்ய கடமைபட்டிருக்கின்றேன்.
அவ்வளவேன் ஏதும் அறியாத ஒரு வீட்டு செல்லப்பிராணி பக்கத்துவீட்டில் வைத்திருந்த பானையில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டது என்பதற்காக இரண்டு வீட்டார்களும் பல ஆண்டுகளாக கோத்திரம்,கோத்திரமாக போர்புரிந்திருக்கின்றது என்ற வரலாறுகளின் மூலம் இந்த மனித சமூகம் எத்துணை மோசமான மடமைத்தனத்தில் கழித்திருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.இப்படி இந்த பூமியில் இந்த மனித சமூகம் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தன் பலம் என்ன என்பதை வெளிக்காட்டவோ அல்லது இங்கு எல்லோரும் எனக்கு கீழ்தான் என்பதை நிறூபித்துக்காட்டவோ செய்த அட்டூழியங்கள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை. தொட்டதிற்கெல்லாம் கொலை,கொள்ளை சர்வநாசம் என்று காட்டுமிராண்டித்தனமான வாழ்வை இந்த மனித சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்திருக்கின்றது.
ஆனால் தற்பொழுது இந்த மனித சமூகம் மனித நேயம்,சட்ட ஒழுங்கு,சமூக அக்கரை என்ற பெரும் பாக்கியம்பெற்ற நாகரீத்தின் பக்கம் வார்த்தெடுக்கப்பட்டபின்பும் எதெற்கெடுத்தாலும் போர்,அழிவு,நாசம் என்ற இழிவான சூழல்களுக்குள் இழுத்துச்செல்லப்படுவது இந்த மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் காண்கின்றேன். எப்படியாவது யாரோ ஒருவரின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனநோய் இன்று ஒவ்வொரு வீட்டின் சமயலரை தொடங்கி வானம், பூமி,கடல் என்று பரந்துவிரிந்து சென்றுகொண்டேபோகின்றது.அந்தளவிற்கு கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் அடக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மன நோயாளிகள் தற்போதைய பூமியை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதாகவே என்னால் உணரமுடிகின்றது.
இரண்டாம் உலகப்போரில் கிட்டதட்ட 90 லட்சம் உயிர்களை காவு வாங்கிவிட்டு ஒருசில ஆண்டுகளாக போரின்றி சப்தமின்றி அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த பூமியையும் அதன் வரைபடங்களையும் சிதைத்துப்பார்ப்பதற்கு தற்போது இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் அவரைப்போன்ற ஆதிக்க மனநோய்பிடித்த அவரது நண்பரான அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பும் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கின்றார்கள்.மனித வாழ்வின் மான்புகளை உணராத இந்த மனநோயாளிகள் இந்த மனித சமூகத்தை திரும்பவும் கற்காலத்திற்கே திருப்பி இழுத்துச்செல்ல அணி திரட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டை காத்துக்கொள்வதற்காகவே உறுவாக்கிய NATO என்ற இராணுவ கூட்டமைப்பை வைத்து பல்வேறு நாடுகளையும் பிடித்துவிடலாம் என்று இந்த இரு மனநோயாளிகளும் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் மடத்தனங்களால் ஏற்படப்போகும் மிகப்பெரும் ஆபத்தை இந்த உலகம்தான் சந்தித்துக்கொண்டிருக்கின்றது இன்னும் சந்தித்திக்கவும்போகின்றது.ஒருசில தினங்களுக்கு முன்பு ஈரானை திடீரென்று தாக்கி அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அவர்கள் நாட்டின் அதிஉயர் பதவியில் இருந்த தலைவர் அயதுல்லா கமேனியை பலநூறு குண்டு மழைபொழிந்து அவரை கொலை செய்தார்கள்.அதன் விளைவாக ஈரான் இஸ்ரேலின் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துவருகின்றது.மேலும் கப்பல் பறிமாற்றம் செய்யும் ஹர்மூஸ் அணையை தங்களின் பகுதியில் முற்றாக மூடிவிட்டது. அதனால் இன்று பல்வேறு நாடுகளும் எறிபொருள் மற்றும் எறிவாயு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது.குறிப்பாக தங்களின் இறையாண்மையை இழிவு செய்யும் வண்ணம் செயல்பட்ட நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் செய்த மடத்தனத்திற்கு அவர்களின் நட்பு நாடுகளும் இப்பொழுது தண்டனை பெறுகின்றன. இவற்றிற்கிடையில் தற்பொழுது ஹர்மூஸ் அணையை திறப்பதற்காக மிகப்பெரும் படையை திரட்டி இந்த பூமியை நாசக்காடாக்குவோம் எல்லோரும் வாருங்கள் என்று இந்த இரு மனநோயாளிகளும் ஏனையோர்களையும் கூவி அழைப்பது கொடுமையிலும் கொடுமை.
முடிவுரை:
இந்த இரு மனநோயாளிகளும் செய்யும் அட்டூழியங்களை தாங்கள் செய்யும் சாகசங்களாகத்தான் இப்பொழுதும் கூறிக்கொள்கின்றார்களே தவிர இவர்கள் தங்களின் தவறுகளை உணர்வதற்கோ அல்லது யாராவது இவர்களுக்கு உணர்த்துவதற்கோ வாய்ப்பே இல்லாத நிலையை அடைந்துவிட்டார்கள். இத்தகைய நிலையில் மொத்த பூமியையும் ஒருசில விநாடிகளில் அழித்தொழித்துவிடும் அணுஆயுதங்களையும் இந்த மன நோயாளிகள் கையில் வைத்திருக்கின்றார்கள் என்பதை விரைவாக கருத்தில்கொண்டு முதலில் இவர்களை அதிகாரக் கட்டிலிலிருந்து இந்த உலகம் அகற்றவேண்டும். அடுத்தபடியாக ஆதிக்க மனோபாவம் கொண்ட இந்த மனநோயாளிகளுக்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சையுமளிக்க வேண்டும் என்பதையே இவர்களுக்கான மற்றும் இந்த உலகம் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்பதை இறுதியாக இங்கு பதிவுசெய்து கொண்டு இக்கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
நன்றி: ஆசிரியர்.அ.சதாம் உசேன் ஹஸனி.




