செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)
யார் இந்த அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டிலா..?யார் அவர்..?அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்றோ..?அல்லது பள்ளி பருவ காலத்தில் ஏதோ ஒரு பாட புத்தகத்தில் படித்த பெயராயிற்றே என்றும் யோசிப்பீர்களேயானால்..!தயவு கூர்ந்து இந்த கட்டுரையை முழுவதுமாக வாசியுங்கள்!ஏனெனில் அவர் நம் வாழ்வில் மிகவும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மிகச்சிறந்த நபராவார். 

நாமெல்லாம் இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வீரன் அலெக்சான்டரை நன்றாக அறிவோம்.அவர் இந்த உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் என்றும் படித்திருப்போம்.ஆனால் அவரை ஒப்பற்ற தலைவனாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டிலை அறிவு சார்ந்த துறையினரே மிகக்குறைவாகத்தான் அறிந்திருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஏனெனில் அரிஸ்டாட்டிலின் சேவை என்பது முற்றிலும் கல்விக்கான சேவையாக மட்டுமே இருந்தது.மக்களுக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பை மிக ஆழமாக ஆய்வுசெய்து அதற்கான தீர்வுகளை முன் வைப்பதிலேயே தன்னை அற்புதச் சுரங்கமாக அவர் வடிவமைத்துக் கொண்டார்.இதனால் பெரிதும் வெளிப்படாத அவர் பின் ஒரு காலத்தில் அலெக்சான்டர் என்ற மாபெரும் மன்னனுக்கு கல்வி போதிக்கும் ஆசானானார். அவரின் அந்த போதனையே பிற்காலத்தில் அலெக்சாண்டரை ஒரு தலை சிறந்த தலைவனாக்கியது.

தன் ஆசிரியரை என்றும் மறவாத அலெக்சான்டர் தான் வெற்றி கொண்ட இடங்களில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் மன்னனின் பரிசாக தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்கு அனுப்பி வந்ததாக வரலாற்றிலும் நம்மால் காண முடிகின்றது.அந்தளவிற்கு அரிஸ்டாட்டில் கல்வியின் மீது பேராவல் கொண்டவராக திகழ்ந்தார் என்பதை நம்மால் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நாம் நம்முடைய கல்விக்காலங்களில் வரலாற்று புத்தகங்களில் அரிஸ்டாட்டில் என்பவர் கிரேக்கத் தத்துவத்தின் தந்தை என்பதாக மட்டுமே படித்திருப்போம். ஆனால் உண்மையில் அவர் வானவியல் சார்ந்தும்,உயிரியல் சார்ந்தும், தர்க்கவியல் சார்ந்தும்,அறிவியல் சார்ந்தும் அவ்வளவு ஏன் இறையியல் சார்ந்தும்கூட பேசியிருப்பது அவருடைய தூர நோக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது.

அவ்வாறே அவருடைய வாழ்வில் பெரும்பங்கை பரந்துவிரிந்த சிந்தனையை மக்களுக்கு ஊட்டவேண்டும் என்ற பேரவலிலேயே அவர் கழித்திருக்கின்றார் என்றும்,மக்களிடம் புரையோடிப்போய் கிடந்த மூடநம்பிக்கையை நீக்கி சுதந்திரமாக சிந்திக்கும் பண்பையும் ஊக்குவித்துக்கொண்டே இருந்திருக்கின்றார் என்றும் வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.மேலும் இந்த உலகின் அறிவியல் எத்தகைய அளவுகோளுடையதாக இருக்க வேண்டும் என்பதை முதல் முதலில் வரையறுத்து கூறியவரும் அவறேயாவார்.

அதாவது ஒரு பொருளின் உண்மை தன்மை என்ன என்பதையும் அதன் அளவு என்ன என்பதையும்,அதன் பயன் என்ன என்பதையும்,மக்களால் அதை எப்படி எல்லாம் அனுக முடியும் என்பதையும் மிகத்தெளிவாக அன்றே  வரையறுத்து காண்பித்தார்.இந்த உலகில் நிகழும் அனைத்து காரியங்களுக்கு பின்பும் ஒரு காரணமுன்டு என்பதையும்,அது மிக முக்கியமான ஒரு நோக்கம் கொண்டது என்பதையும் மக்களிடம் பரப்புரை செய்து மக்கள் அனைவரையும் பகுத்தறிவின் பக்கம் திருப்பிப்போட்டார்.

அவருடைய ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்த உலகை படைத்த இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதேயாகும். ஆம் அவர் இந்த உலகம் யாரோ ஒரு மகா சக்தி படைத்தவரால் படைக்கப்பட்டதே என்று மிக உறுதியாக குறிப்பிடுகின்றார்.அதற்கு ஆதாரமாக அறிவியலையே முன்வைக்கவும் செய்கின்றார்.அதாவது இந்த உலகம் தானாக தோன்றும் சக்தியற்றது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.எனவே நிச்சயம் இதை உறுவாக்கிய ஒருவர் இருக்கத்தான் வேண்டும் என்பதோடே தன் கடவுள் கொள்கையை அவர் முடித்துக் கொள்ளவும் செய்கின்றார்.

மேலும் இன்று அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் அதிகமான சொற்களை உறுவாக்கியவரே அவர்தான் என்று அறிவியல் உலகம் இன்றும் அவரை போற்றிப்புகழ்வது அவருடைய மிகப்பெரும் தனிச்சிறப்பாகும். அவ்வாறே ஆட்சி அதிகாரங்கள் குறித்தும் பல்வேறு விதிகளை அவர் தொகுத்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. இப்படி கல்வி துறையில் அனைத்து கலைகளிலும் மிகப்பெரும் உச்சத்தை தொட்டவராகவே அவரை நம்மால் காணமுடிகின்றது.இங்கு அவருடைய ஒரு சில சேவையை நான் குறிப்பிடுவதின் மிக முக்கியமான நோக்கம் இன்றைய தலைமுறை சுதந்திரமாக பல்வேறு விஷயங்களை சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மேலும் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் எவ்வித தொலை தொடர்பு சாதனங்களுமின்றியே பல்வேறு விதிகளை வரையறுத்திருக்கும் பொழுது பல்வேறு நவீன உபகரனங்களை பெற்ற நாம் அறிவியளின் உச்சத்திற்கே செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவருடைய செயல் நமக்கு தருகின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய சிறப்புகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கின்றேன்.எனவே அண்பர்களே .. இந்த உலகை உற்று நோக்குவதற்கும்,அதன் உண்மைத்துவத்தை கண்டறிவதற்கும் உங்கள் வாழ்வில் சிறிது நேரத்தை இன்றிலிருந்தேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.மேலும் உங்கள் குழந்தைகளிடமும் சுதந்திரமாக சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கல்வியில் சிறந்த சமூகத்தை கட்டமைக்க நீங்களும் ஒரு காரணமாக அமையுங்கள்..!

Previous Post
Next Post