![]() |
பழம் நிறைந்த மரமே கல் அடிபடும் |
கிராமத்தின் எல்லையில் ஒரு துறவி இருந்தார்.மக்கள் அவரிடம் அவ்வப்பொழுது சென்று சில நல்லுபதேசங்களை செவிமடுத்து வருவது வழக்கமாக இருந்தது.ஒரு நாள் அக்கிராமத்தில் சிறந்த கல்வியாளராகவும், பண்பாலராகவும் திகழ்ந்து வந்த ஒரு வாளிபன் அத்துறவியை சந்தித்து "தன்னை இந்த ஊர் மக்களில் சிலர் மிக மோசமானவன் என்றும் பிரயோஜனமற்றவன் என்றும் தூற்றிக்கொண்டே இருக்கின்றனர்"அது எனக்கு மிக வருத்தத்தை தருகின்றது.எனவே நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்..!
அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக்கொண்டே நீ என்னிடம் வந்த பாதையில் இரண்டு மாமரங்களை கடந்து வந்தாயா என்று கேட்டார் .உடனே அவ்வாலிபனும் ஆம் அதனை கடந்துதான் வந்தேன் என்றார்.!அம்மரத்தின் அடியில் யாரையும் கண்டாயா என்று கேட்டார்.அதற்கு அவ்வாலிபன் ஆம் "ஒரு மரத்தின் அடியில் நிறைய சிறுவர்கள் கூடி நின்று கற்களை எறிந்து மாங்கனியை பறித்துக்கொண்டிருந்தார்கள்.மற்றொரு மரமோ யாருமற்ற காலியிடமாக கிடந்தது என்று பதிலளித்தான்.
சற்றும் தாமதமின்றி "இதனைப்போன்றுதான் நீயும்" என்றார் துறவி.உன்னிடம் நற்பண்புகளும்,நற்சிந்தனைகளும் இருக்கும் காலெமெல்லாம் உன்னை நோக்கி சில மக்கள் கல்எறிந்து கொண்டேதான் இருப்பார்கள்."நன்றாக நினைவில் வைத்துக்கொள் "உன் மீது காழ்புணர்ச்சியிலும்,பொறாமையிலும் சிலர் கல் எறிகின்றார்கள் என்றால் நீ பழங்கள் நிறைந்த மரமாக இருக்கின்றாய் என்பதை உணர்ந்துகொள் என்று அவ்வாலிபனுக்கு அத்துறவி உபதேசித்தார்..!அவ்வாலிபனும் அத்துறவியின் அந்த உண்மையான வார்த்தைகளை செவிமடுத்து மனம்நெகிழ்ந்து விடைபெற்றான்.
நீதி :
1.ஒவ்வொரு ஊரிலும் நான்கு பேர் உங்களை இழிவாக பேச காத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
2.நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதற்கு காழ்புணர்ச்சியாளார்களும், பொறாமைகாரர்களுமே சிறந்த அடையாளம்.
3.காழ்புணர்சியாளார்களையும்,பொறாமைகாரர்களையும் கண்டுகொள்ளவே தேவையில்லை.அவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்க தேவையில்லை.
4.உங்களுடைய இலட்சியத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டே இருங்கள். நீங்களும் உங்கள் செயலும்தான் உங்களுக்கான மதிப்பீடு.மக்களின் பார்வையோ,அங்கிகாரமோ அல்ல.