புதன், 4 ஆகஸ்ட், 2021

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.(Capitalism, Socialism, Communism)

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.
அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.
 

முன்னுரை:

ஒரு நாட்டில் ஒரு அரசு எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்கின்றதோ அதனை பொருத்தே அந்நாட்டின் பொருளாதார வளர்சியும் அமைகின்றது என்பது நிதர்சனமாகும்.எனவே நாட்டின் பொருளாதார வளர்சியை கருத்தில்கொண்டு இன்றைய உலகில் மூன்று விதமான பொருளாதார கொள்கைகளே அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அம்மூன்று பொருளாதார கொள்கைகளையும் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணமாக மிக எளிய உதாரணங்களால் என்னால் முடிந்தளவு விவரிக்க முயலுகின்றேன்.

பொருளாதாரக் கொள்கைகள்:

1.கம்யூனிச பொருளாதாரக் கொள்கை.

2.கேப்பிடலிச பொருளாதாரக் கொள்கை.

3.சோசியலிச பொருளாதாரக் கொள்கை.

1.கம்யூனிச பொருளாதார கொள்கை என்றால் என்ன ?

கம்யூனிச பொருதார கொள்கை என்பது நாட்டில் கிடைக்கப் பெறும் பொருளை அனைவரும் சரிசமமாக பிரித்துக் கொள்வதற்கு சொல்லப்படும். உதாரணமாக கூறினால் பண்டைய காலத்தில் உணவிற்காக வேட்டையாடும் பொருளை அனைவரும் பங்கு பிறித்து எடுத்துக் கொள்வதை போன்றதாகும்.

2.கேப்பிடலிச பொருளாதார கொள்கை என்றால் என்ன?

 நாட்டில் கிடைக்கப் பெரும் பொருளை யார் எடுத்தாரோ அவரே அதற்கு முழு உரிமை பெறுவார் என்பதாகும்.இதற்கு உதாரணம் யார் உணவை வேட்டையாடினாரோ அவரே அதனை வைத்துக்கொள்ளலாம் என்பதை போன்றதாகும்.

3.சோசியலிசம் என்றால் என்ன.?

நாட்டில் கிடைக்கப்பெறும் பொருளை மக்களின் தேவைக்கு ஏற்பவாறு அரசே பங்கிட்டு கொடுப்பதற்கு சொல்லப்படும்.உதாரணமாக வேட்டையாடிய பொருளை அரசு தன் கையில் எடுத்து அதனை அவரவரின் தேவைக்கேற்ப வழங்குவதை போன்றதாகும்.இவற்றில் ரஷ்யா,சீனா போன்ற பெரும் நாடுகள் கம்யூனிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும், அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் கேப்பிடலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும்,இந்தியா போன்ற சில நாடுகள் சோசியலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றது.

இப்பொழுது இம்மூன்று கொள்கைகளில் எக்கொள்கை மக்களின் பொருளாதார வளர்சிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை என்னுடைய கண்ணோட்டத்தில் விவரிக்க விரும்புகின்றேன்.

எது சிறந்த கொள்கை?

என்னைப்பொருத்தமட்டில் இம்மூன்று கொள்கைகளையும் வரம்பு மீறாமல் கடைபிடிப்பதே ஒரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்சிக்கு காரணமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.நாட்டில் ஒருவன் அதிகம் உழைக்கின்றான் எனில் அவனுக்கு அப்பொருளில் கூடுதல் உரிமை கொடுப்பதில் தவறேதும் கிடையாது என்பதே எனது கண்ணோட்டமாகும். இதனடிப்படையில் கேப்பிடலிசம் என்பதும் ஒரு நாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய சிறந்த பொருளாதார கொள்கையாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் ஒருவன் மட்டும் உழைத்து பலரும் சரிசமமாக பிறித்துக்கொள்வது என்பது ஒரு காலத்தில் மிகப்பெரும் அடக்குமுறைக்கு காரணமாகவும் அமையலாம் என்பதும் எனது கருத்தாகும்.

அவ்வாறே இல்லாத ஒருவனுக்கு பகிர்ந்து அளிப்பது என்பதும் மிகச்சிறந்த செயலேயாகும்.ஏனெனில் ஏதுமில்லாத ஒருவனுக்கு ஏதேனும் சில பொருட்களை கொடுத்து உதவுவது என்பது அவனுக்கு புதிய வாழ்வை அமைத்து கொடுப்பதைப்போன்றதுதானே.!இதனடிப்படையில் கம்யூனிசம் என்பதும் ஒவ்வொரு நாட்டிற்குமான சிறந்த பொருளாதார கொள்கையாகவே காணப்பட வேண்டும் என்பதும் எனது கண்ணோட்டமாகும்.

அவ்வாறே அத்தியாவசிய பொருட்களை அரசே பொறுப்பேற்று அதை சீராக பங்கிடுவதும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையேயாகும்.ஏனெனில் அத்தியாவசிய பொருட்களை முதலாளிகளின் கையில் கொடுத்துவிடுவதோ அல்லது மக்களின் கைகளிலேயே விட்டுவிடுவதோ பொருளாதார தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடலாம்.எனவே இதனடிப்படையில் சோசியலிசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான சிறந்த பொருளாதார கொள்கையாகவே இருக்கின்றது.

(குறிப்பு)இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில் எப்பொழுது இவை மூன்றிலும் வரம்பு மீறப்படுமோ அப்பொழுதே அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் சீர்கெட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Previous Post
Next Post