![]() |
கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும் |
கடன் அட்டை வாழ்விற்கு அவசியமா?
இன்றைக்கு நம் வாழ்வில் கடன்அட்டை என்பது ஒரு முக்கிய அங்கமாக இடம்பிடித்துவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். சாதாரண கூழித்தொழிலாளி தொடங்கி அனைத்து கோடீஸ்வரர்களும் இந்த கடன் அட்டைக்கு அடிமைதான் என்றால் அது ஒருபொழுதும் மிகையாகாது. கடன் அட்டையின் வட்டியை செலுத்துவதற்காகவே இங்கு பெரும்பாலானோர் ஓடாய் உழைக்கின்றனர் என்பதும் நான் நிகழ் உலகில் பார்க்கும் உண்மையாக இருக்கின்றது.முன்பெல்லாம் வாழ்வாதாரத்திற்காக உழைத்த மக்கள் இன்று இந்த கடன் அட்டைக்காகவே உழைத்து உயிர் வாழ்வது மிகப்பெரும் சாபக்கேடாகும்.
இன்றைக்கு வங்கிகளும் சில நிறுவனங்களும் தங்களின் வியாபாரத்தை செழிப்பாக்கிக்கொள்ள உறுவாக்கிய திட்டமே கடன்அட்டை என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் ஆசைகளின் அடிவருடிகளாக இருப்பவர்களே இதற்கு நல்ல வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.இதனைப்பற்றி மிக எளிய முறையில் சொல்வதானால் உனக்கு சொந்தமான பொருளையே நீ வட்டிக்கு வாங்குவதை போன்றதாகும்.அதாவது ஒரு பொருள் எப்படியானாலும் தன்னுடையதாகத்தான் ஆகப்போகின்றது என்று தெரிந்தும் அதனை இப்பொழுதே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் கூடுதல் விலைக்கு வட்டியுடன் வாங்குவதைப்போன்றதாகும்.இதுதான் இருப்பதிலேயே மிகப்பெரும் ஊதாரித்தனம் என்று பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு ஒரு பிரபல்யமான பொருளாதர கொள்கை கொண்ட பல்கலை கழகத்தால் சிறிய சோதனை ஒன்றும் நடத்தப்பட்டது.அதாவது அதில் சில குழந்தைகளின் கைகளில் இணிப்புத்துண்டு ஒன்றை கொடுத்து இதனை இப்பொழுதே வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம் என்றும் ஆனால் அதனை 10 நிமிடத்திற்கு பிறகு சாப்பிட்டால் மற்றொரு இணிப்புத்துண்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது.
சில குழந்தைகள் மட்டுமே அவ்வாறு 10 நிமிடம் காத்திருந்து இரண்டு இனிப்புத்துண்டுகளை பெற்று சாப்பிட்டதாகவும் பல குழந்தைகள் அதனை கொடுத்த உடனே சாப்பிட்டுவிட்டன என்றுமே அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.மேலும் எந்த குழந்தைகள் காத்திருந்து சாப்பிட்டனவோ அந்த குழந்தைகளே பிற்காலத்தில் மிகவும் பொருளாதார பொறுப்புள்ள குழந்தைகளாக வந்தன என்றும் அவ்வாய்வின் மூலம் நிறூபனமும் ஆனது என்பதாக சொல்லப்படுகின்றது.எனவே நாளைக்கு எனக்கே சொந்தமாகப்போகும் ஒரு பொருளை இன்றே கடன் அட்டை மூலம் அதிக பணம் கொடுத்து பெறுவது நம்முடைய வாழ்விற்கு அவசியம்தானா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்..
கடன் அட்டையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
1.கடன் அட்டைக்கு 36 % வட்டி வசூலிக்கப்படுகின்றது என்பதே இதன் மிகப்பெரும் ஆபத்தாகும்.ஒரு நாள் நீங்கள் அதற்கான தொகையை கட்டத்தவறினாலும் உங்கள் உழைப்பில் பெரும்பகுதியை நீங்கள் வட்டியாக கட்ட தயாராகிக்கொள்ள வேண்டும்.இது கந்துவட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் சொல்லக்கூடிய வட்டி முறையைவிட மிக மோசமான வட்டி என்பதாகவே நான் கருதுகின்றேன்.
2.கடன்அட்டை என்பது பெரும்பாலும் நம்மிடம் பொருளாதார மேலான்மையை கெடுத்துவிடும் என்பதும் இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாக நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இன்று நம் கையில் அட்டை இருக்கின்றது என்பதற்காக தேவையேயற்ற பொருளையும் கூட நாம் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாராகிவிடுகின்றோம் என்பது உலவியல் ரீதியான உண்மையாகும்.
உதாரணமாக 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க நீனைக்கும் கை பேசியை 25 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு இந்த அட்டைகள் நம்மை தூண்டுகின்றது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும்.இதனால் நம்முடைய பொருளாதாரம் சார்ந்த மேலான்மை முற்றிலும் கெட்டு நாம் நம்முடைய ஆசைக்காக எதனையும் வாங்கும் நபர்களாக மாறிவிடுவோம்.
3.நம்முடைய சேமிக்கும் பழக்கத்தை கடன்அட்டை பாழாக்கிவிடும் என்பது நான் அறிந்த உண்மையாகும்.என்னைப்பொறுத்தமட்டில் சேமிப்பு என்பதே நம்முடைய பொருளாதாரத்தின் மிகப்பெரும் பலமாக கருதுகின்றேன்.கடன் அட்டைகள் என்பது நிச்சயமாக அதனை கலவாடிச்சென்றுவிடும் காரணியாக இருக்கின்றது என்பதாகவே கருதுகின்றேன்.எனவே கடன்அட்டை என்பது நம்முடைய சேமிப்பிற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே நான் கருதுகின்றேன்.
4.டெபிட்கார்டைக்காட்டிலும் க்ரெடிட் கார்டுகளில் மோசடி நிகழ்வது அதிகம் என்ற ஆபத்து உள்ளது.க்ரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை மிக இலகுவாக கண்டறிய முடிகின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.எனவே அது போன்ற பண மோசடிகளை தவிர்க்க க்ரெடிட் கார்டுகளை தவிர்ப்பதே நல்லது.
கடன் அட்டையாள் ஏற்படும் சாதகங்கள் என்ன ?
1.கடினமான சூழலை தவிர்ப்பதற்காக கடன் அட்டையை பெறலாம். உதாரணமாக அவசியத்தேவை என்று நினைக்கும் பொருள் இப்பொழுது வாங்கவில்லையானால் பிறகு எப்பொழுதும் கிடைக்கவே கிடைக்காது என்ற சூழல் இருந்தால் அப்பொழுது கடன் அட்டை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.அதுவும் அக்கடனை மிக விரைவிலேயே கட்டிவிடும் திட்டத்தோடே அதனை பெறுவதும் மிக அவசியமானது என்றே நான் கருதுகின்றேன்.
2.இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள் (no cost EMI) என்ற சலுகையை பயன்படுத்துவதற்காகவும் கடன் அட்டையை பயன்படுத்துவது சிறந்ததாகும். எந்தவித வட்டியுமில்லாத கடனாகவே அது பார்க்கப்படுவதால் அது நமக்கு எந்த பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தாது என்றே நான் கருதுகின்றேன்.
3.வெளிநாட்டு கொடுக்கல் வாங்கள் வைத்திருப்பவர்கள் கடன் அட்டை பயன்படுத்துவது இயல்பேயாகும்.ஏனெனில் டெபிட் கார்டுகள் உலக அளவில் பயன்படுத்த முடியாது என்பதால் வெளி நாட்டில் வர்த்தக தொடர்புடையவர்கள் க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளலாம்.
எழுத்தாளர்:
Dr.S.Dhana priya