![]() |
பயம் நல்லதாகெட்டதா(Fearness) |
நம்மில் எல்லோருக்கும் கண்டிப்பாக எதிர்காலம் குறித்த பயம் இருக்கும். அல்லது இறப்பு குறித்த பயம் இருக்கும்.அல்லது நோய்வாய்பட்டுவிடுவோமோ என்ற பயமிருக்கும்.ஒரு சிலருக்கு இருட்டைப் பார்த்தால் பயமாக இருக்கும். வேறு சிலருக்கோ சிறிய பூச்சுகளை பார்த்தாலும்கூட பயமாக இருக்கும். இப்படி பயம் என்ற ஒன்று நம் வாழ்வோடு பின்னி பிணைந்துவிட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது எனபதை நம்மில் எவறும் மறுக்க முடியாது.பயமில்லை என்று ஒருவர் கூறிக்கொள்ளலாம்.அல்லது காட்டிக் கொள்ளலாம்.ஆனால் மனதில் தோன்றி மறையும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நிகழக் கூடிய ஒரு அதிஷயமான நிகழ்வாகவே இருக்கின்றது.
என்னைப் பொருத்தமட்டில் பயம் என்பது நல்லதுதான் என்றே நான் கூறுவேன். ஏனென்றால் ஒன்றைப்பற்றிய பயம்தான் நம்மை அது விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்துகொள்ளும்படி தூண்டுகின்றது.அதனால் பெரும்பாலும் அப்பொருளினால் ஏற்படவிருக்கும் ஆபத்திலிருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.
இதன் அடிப்படையிலேயே மனோ தத்துவ நிபுனர்களும் பயம் என்பது மனிதன் தன்னை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வதற்கு தூண்டும் ஒரு நல்ல உணர்வுதான் என்பதாக குறிப்பிடுகின்றனர்.அவ்வாறே இத்தகைய பயம் என்பது நல்லதுதான் என்றும் குறிப்பிடுகின்றனர்.ஆனால் வரம்பு மீறிய பயம் என்பது மனிதனின் வாழ்வையே அழித்துவிடும் ஆபத்தாக இருக்கின்றது என்பதாகவும் எச்சரிக்கின்றனர்.அது என்ன வரம்புமீறிய பயம் ?என்று கேட்பீர்களேயானால் அதற்கும் மிகத்தெளிவாக அவர்கள் பதிலளிக்கின்றனர்.
அதாவது உயர்ந்த நோக்கத்தை சற்றுமுயன்றால் அதனை அடைந்துவிடலாம் என்றிருக்கும் பொழுதும்கூட பயத்தால் அதை அடையாமல் விட்டுவிடுவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.இத்தகைய பயம்தான் கெட்ட பயமாகும்.இது நம் வாழ்வின் முன்னேற்றங்களை முறியடித்துவிடும் பயமாகும்.இதுவே நம் வாழ்வில் முற்றிலும் விட்டொழிக்க வேண்டிய பயமாகும்.
உதாரணமாக சாலையில் கவனமின்றி வாகனம் ஓட்டினால் நிச்சயம் விபத்து ஏற்படும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாகும். ஆனால் அதற்காக சாலையில் வாகனம் ஓட்டினாலே விபத்து ஏற்படத்தான் செய்யும் என்று ஒருவர் வாகனம் ஓட்ட கற்காமலேயே இருந்துவிட்டால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதாவது உண்டா..?ஏனெனில் வாகனம் என்பது நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிந்த ஒன்று.அதனை நாம் எவ்வாறு இயக்குகின்றோமோ அதற்கு தக்கவாறே அது இயங்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம்.அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை பார்த்து பயப்படுகின்றார் என்றால் அந்த பயத்தைத்தான் வரம்புமீறிய பயம் என்று நான் கூறுகின்றேன்.
இந்த வரம்புமீறிய பயம்கொண்டவர்கள் தங்களின் உயிர் மீதோ அல்லது உடல் மீதோ உள்ள அதீத பயத்தாள் வாகனங்களை மிக ஆபத்தானதாக காண்கின்றனர்.அதன் காரணத்தால் அதனை கற்று பலனடைந்துகொள்வதை விட்டும் ஒதுங்கியும்கொள்கின்றனர்.பயத்துக்கும் துணிவிற்குமான வித்தியாசத்தை புலப்படுத்த மேற்குறிப்பிட்ட இந்த ஒற்றை உதாரணமே போதுமானது என்றே நான் நம்புகின்றேன்.நம்மில் பலரும் நம்மால் முடிந்த ஒன்றையும்கூட முயல்வதற்கு துணிவதில்லை என்பது மிக வருந்தத்தக்க விஷயமாகும்.
உண்மையாக கூறப்போனால் இந்த உலகில் இன்று நாம் பார்க்கும் பல்வேறு இயந்திரங்களும்,பிரம்மாண்ட படைப்புகளும் பயமின்றி துணிந்ததால் மட்டுமே தோன்றியது என்பதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றை செய்தால் எங்கே தோற்றுப்போய்விடுவோமோ என்றோ அல்லது அது தவறாகிவிடுமோ என்றோ பயந்துகொண்டே இருந்துவிடக்கூடாது.ஒன்றை செய்வதற்கு முடிவு செய்துவிட்டால் அதனை துணிவோடு செய்துமுடிக்க வேண்டும்.
பயத்தினால் இயலாமையை மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அவற்றிற்கு எதிராக துனிவு என்பதால் மனிதனால் நினைத்துப்பார்க்க முடியாததையும் கொண்டு வந்துவிட முடியும் என்றும் டாக்டர் அப்துல் கலாம் கூறிப்பிட்டு காண்பித்திருப்பதை நினைத்துப்பாருங்கள்.அவர் ராக்கெட்களையும் அதிநவீன விண்வெளி கருவிகளையும் செய்வதற்கு பயந்து செயபடாமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரும் பிண்ணடைவில் இருந்திருக்கும்.
ஆகவே ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்பே இது என்னால் முடியாது என்று பயந்து உங்களுக்கு நீங்களே முட்டுக்கட்டையை போட்டுக் கொள்ளாதீர்கள்.ஏனெனில் அந்த பயமே உங்களை அதை நோக்கி செயல்படவிடாமல் தடுத்துவிடும் முதல் காரணியாக அமைந்துவிடும். அன்பர்களே..!எதற்கும் பயப்படாதீர்கள்...1இந்த உலகில் எதனையும் சமாலிக்கும் திறனோடுதான் நீங்கள் அனைவரும் படைக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை ஆழமாக நம்புங்கள்.துணிந்து நில்லுங்கள்...!தேவையற்ற பயத்தை வெல்லுங்கள்..!
நன்றி: