![]() |
உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர் |
முன்னுரை:
இந்த உலகிலேயே அதிகம் மகிழ்சியாக வாழும் மக்களைப்பற்றிய ஆய்வை கொலம்பியாவின் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஜஃப்ரே சாச்சஸ் மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது இந்த உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் (Finland)பின்லாந்த் நாட்டைச் சார்ந்தவர்களே என்று குறிப்பிடுகின்றார்.கிட்டதட்ட 5 (மில்லியன்) அதாவது 50 லட்சம் மக்கள் வாழும் அந்நாட்டிலேயே மக்கள் அதிகம் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதாக குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் சந்தோஷம் என்பதற்கு மக்களின் மனதிருப்தியையே அளவுகோளாகவும் குறிப்பிடுகின்றார்.அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிக திருப்தியுற்றிருப்பதாகவும் மேலும் வாழ்வில் மிக மகிழ்சியாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.அங்குள்ள மக்களிடம் அவர் கருத்துக்கேட்டு சென்றபோது அம்மக்கள் என்ன கூறினார்கள் என்பதையும் அவர் பதிவுசெய்துள்ளார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.
ஃபின்லாந்து மக்களின் கருத்து:
"இங்குள்ள அரசே எங்களுடைய தேவையை பெரும்பாலும் தீர்த்து வைத்துவிடுகின்றது.அதனால் இங்கு எங்களுக்கு எங்களுடைய வாழ்வாதாரம் பற்றிய எந்த கவலையும் இல்லை.எங்கள் நாடு உலகிலேயே மிக வளம்நிறைந்த நாடாக இல்லை என்றாலும் எங்கள் வாழ்க்கையை மிக திருப்தியாக கழிப்பதற்கான எல்லா சுதந்திரங்களும் எங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் தங்களின் உற்பத்தி மற்றும் தொழில் துறையை வைத்தே தங்களை வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளாக காட்டிக்கொள்ள விரும்புகின்றன.ஆனால் எங்கள் நாட்டில் உற்பத்தித்துறை,ஆரோக்கியமான வாழ்வு,சமூக சுதந்திரம்,சுற்றியிருப்பவர்களின் அரவனைப்பு,அநீதி இழைப்பதை விட்டும் பாதுகாப்பு என்பதிலெல்லாம் மிகச்சிறந்த நாடாக நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மேலும் இங்குள்ள மக்கள் சந்தோஷம் என்பது திருப்திகரமான வாழ்க்கைதான் என்பதை மிக ஆழமாக நம்புகின்றார்கள்.எனவே அவர்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒருவரை ஒருவர் பொருந்திக்கொண்டு வாழ்கின்றனர்.
உண்மையில் எங்கள் நாட்டில் ஒரு குழந்தை பிறப்பதை மிகப்பெரும் வரமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.ஏனெனில் இங்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கான மூன்று மாத அனைத்து தேவைகளையும் அரசே கொடுத்துவிடுகின்றது.மேலும் அக்குழந்தையை நன்கு பராமரிப்பதற்காக தாயிற்கு 9 மாதங்கள் விடுப்பும் வழங்குகின்றது.அவ்வாறே இங்கு அதிக வரி என்பதெல்லாம் கிடையாது.கல்வியும்,மருத்துவமும் முற்றிலும் இலவசமாகும்.
இங்கு பெரும்பாலும் திருட்டு ,கொலை,கொள்ளை என்பதெற்கெல்லாம் இடமே கிடையாது,ஏனெனில் இங்குள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.மேலும் எல்லோரும் அவரவர்கள் விரும்பிய நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். அதன் காரணமாக இங்குள்ள மக்களில் யாரும் யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பதும் கிடையாது.ஆகவே இங்கு எல்லோரும் ஏழ்மையை விட்டும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.மிக குறிப்பாக இங்கு தற்கொலைகள் என்பதற்கும் இடம் கிடையாது.ஏனெனில் இங்குள்ள மக்கள் தங்களுக்கான அனைத்து அங்கிகாரங்களையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்.
இதுவே இங்குள்ள மக்கள் மிக திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்பதற்கு போதுமான அளவுகொளாக இருக்கின்றது.இவ்வாறு இன்னும் பல அற்புதமான மகிழ்சி பொங்கும் பல தருனங்களை தங்கள் நாடு வழங்குவது குறித்தும் அம்மக்கள் அடுக்கிக்கொண்டே செல்வதாக தனது ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.
படிப்பினை:
உண்மையில் பின்லான்ட் நாட்டு அரசிடம் ஒவ்வொரு நாடும் பாடம் படிக்கவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் உலகில் ஒவ்வொரு நாடும் தங்களின் நாட்டு மக்களின் திருப்தியை குறிக்கோளாக கொண்டு செயல்பட ஆரம்பித்தால் அனைத்து நாட்டு மக்களும் மிக மகிழ்சி நிறைந்த மக்களாக வாழ முடியும் என்றே நான் நம்புகின்றேன்.