![]() |
விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன |
முன்னுரை:
உணவு உற்பத்தியே ஒரு நாட்டின் மக்களை பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றக்கூடியது என்பதால் விவசாயமே ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் எந்நாட்டில் உணவு உற்பத்தி என்பது வளமிக்கதாக இருக்கின்றதோ அந்நாடே உலகில் மிக செளிப்பான நாடாகவும் போற்றப்படுகின்றது.இந்தியா என்பது எவ்வாறு மக்கள் தொகையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுவிட்ட நாடாக ஏனைய நாடுகளால் கருதப்படுகின்றதோ அதே அளவிற்கு இயற்கை வழங்களாலும் நிறைந்த நாடாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இதனைத்தான் மஹாத்மா காந்தி ஜி அவர்கள்
"இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று குறிப்பிட்டார்."
இந்தியாவில் வேளாண்உற்பத்தி பொருட்கள் 85 % உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மீதி 15 % வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருவது பெருமைக்குறிய விஷயமேயாகும் என்றாலும் குறிப்பிட்ட சில வருடங்களாக வேளாண்உற்பத்தித்துறையில் இந்தியா மிகப்பெரும் வீழ்சியையே சந்தித்து வருவதாக புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன.இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும்? ஏன் வேளாண்துறை மிகப்பெரும் வீழ்சியை சந்தித்து வருகின்றது என்பது குறித்தும், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் இந்த கட்டுரையில் வட்டுறுக்கமாக விவரிக்க முயலுகின்றேன்.
வேளாண் துறையின் வீழ்சிக்கு காரணம் என்ன?
இன்றைய வேளாண்துறை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே அரசு தன் விவசாய மக்களை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என்பதை என்னால் மிக உறுதியாக கூற முடியும்.ஆம்..!விவசாயிகளே இல்லாத நாட்டை உறுவாக்க நினைக்கும் அரசுதான் இதற்கு முக்கிய காரணம் என்று நான் உறுதியாக கூறுகின்றேன்.நாட்டின் பொருளாதார முதல் மதிப்பீடான விவசாயம் செய்யும் மக்களை வழுக்கட்டாயமாக வேறு தொழில்களை நோக்கி விரட்டத்தூண்டும் அரசின் சில நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று என்னால் வெளிப்படையாகவே கூறமுடியும்.இன்றைக்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் புதிய தலைமுறையினரோ விவசாயத்தைவிட்டும் நெடு தூரம் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் சொல்லப்போனால் வயல்களையும்,வெளிகளையும் அவர்கள் அதிசயமாக பார்க்கும் அளவிற்கு வேற்றுகிரகவாசிகளாக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமாகும்.அத்தகைய நிலையில் வேளாண் துறையை நாம் காக்கவேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும் என்பதையே அதற்கான தீர்வாக நான் காண்கிறேன். அவர்களை காப்பதற்கு அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது குறித்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன்.
எனவே விவசாயிகள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது சம்மந்தமாக ஒரு சில விஷயங்களை இங்கு நான் விவரிக்க விரும்புகின்றேன். விவசாயத்தில் இரவு பகல் பாராத அதிக உழைப்பும்,உறுதியற்ற வருமானமும் இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்வதை விட்டுவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆம் மக்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லையெனில் எவ்வாறு அவர்கள் அத்துறையில் நிலைத்திருப்பார்கள்?
எனவே அவர்கள் பணம் எங்கு அதிகம் கிடைக்கின்றதோ அந்த துறைகளை நோக்கி சப்தமின்றி நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாகும்.அவ்வாறே அவர்கள் கடனுக்கும் வட்டியிற்கும் பணம் பெற்று அதனை முதலீடு செய்யும் விவசாயம் அவ்வப்பொழுது இயற்கை சீற்றங்களால் முற்றிலும் நாசமடைந்து போகும்பொழுது அவர்கள் நிர்கதியற்று நிற்க வைக்கப்படுகின்றனர்.இதனால் ஏன் இந்த தலைவலி பிடித்த தொழிலை கட்டி மாரடிக்கவேண்டும் என்று விவசாயத்தை வெளிப்படையாகவே தூக்கி எறிந்துவிட முற்படுகின்றனர்.
என்னை பொருத்தமட்டில் அவர்களின் எண்ணம் தவறானதல்ல என்றே நான் கூறுவேன்.ஏனென்றால் இரவு பகலாக ஓடாய் உழைக்கும் ஒரு மனிதனுக்கு எவ்வித பலனுமே கிடைக்கவில்லையெனில் அவன் அத்தொழிலிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசிப்பது எவ்வாறு நியாயமாகும்..?எனவே அவனுடைய உழைப்பிற்கான உறுதியான ஒரு பலனை அரசு உறுதி செய்வது மட்டுமே அவன் விவசாயத்தில் நீடிப்பதற்கான தீர்வாக அமையும் என்பது எனது கண்ணோட்டமாகும்.
நூறு நாட்கள் தாண்டியும் இன்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத் திற்கான உறுதியை வேண்டி டெல்லியில் போராடிக்கொண்டு தானிருக்கின்றனர்.ஆனால் அவர்களின் விஷயத்தில் அரசு திரும்பிப் பார்ப்பதற்குகூட தயாராக இல்லை என்பது எத்துணை பெரிய அவளம் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.இத்தகைய அரசைத்தான் முதலாளித்துவ அடிமை அரசு என்று மார்க்ஸ் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
ஏனெனில் பணம் என்பது உழைப்பாளர்களின் உற்பத்தி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது.அதனை உழைப்பாளிகளை சுரண்டிப்பிளைக்க நினைக்கும் அற்பர்களிடம் அச்சடித்து கொடுத்துவிட்டு ஏழை விவசாயிகளை அந்த பணத்தை நோக்கி ஓடவிடுவது என்பது மிகப் பெரும் அனாகரீகம் என்றே நான் பார்க்கின்றேன்.நாட்டின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கின்றது என்று நாடாலுமன்றங்களில் கூக்குரல் இடும் இந்த கயவர்கள் ஏன் விவசாயிகளுக்கென்ற வாழ்வாதார உறுதியை கொடுக்க மறுக்கின்றனர் என்று யோசிப்பீர்களேயானால் அங்குதான் முதலாளித்துவ அடிமை சேவகம் ஒழிந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
ஏற்பிடித்து கழப்பை பிடித்து உழைக்கும் ஒருவனின் வியர்வைக்கு தகுந்த வருமானத்தை அரசு உறுதிசெய்யவில்லையெனில் அந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்..?அதுமட்டுமல்லாது இரவு பகலாக பயிரிட்ட அவனது பயிற்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அமோக லாபம் பெறத்துடிக்கும் முதலாளிகளின் கைகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி கட்டவிழ்த்துவிட்டு விட்டு நாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது,எனவே விலவாசி உயர்ந்துவிட்டது என்று ஓழமிடுவது எத்துனை பெறிய பித்தலாட்டம்.. இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கின்றேன்..!விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு..!அவர்களை முறித்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தை எதிர்பார்த்தால் இந்நாடு கூன் விழுந்த கிழவியாகவே நாதியற்று இறந்து போகும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்..!