![]() |
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos) |
முன்னுரை:
இன்றய உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப்பிசோஸ் ஒரு நிகழ்சியில் இளைஞர்களுக்கு வியாபார ஆலோசனையாக பகிர்ந்த விஷயங்களை இங்கு நான் பதிவிடுகின்றேன்.நிச்சயம் தொழில் முனைபவர்களுக்கு இது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.
ஜெஃப்பிசோசின் உரை:
"மக்கள் எல்லோரும் உயர் நிலையில் இருப்பதையே விரும்புகின்றனர். அதனையே தங்கள் பணியிலும் விரும்புகின்றனர்.சிலருக்கு அது கிடைத்து விடுகின்றது.அதாவது அவர்களின் வேலையே அவர்களுக்கு பாதி மகிழ்ச்சியை கொடுப்பதாக அமைந்துவிடுகின்றது.உண்மையில் அது மிக அற்புதமான விஷயமேயாகும்.ஆனால் உண்மையென்னவெனில் எல்லாவற்றிலும் சில கடினங்கள் என்பது இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக நீங்கள் சுப்ரிம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் அதிலும் உங்களுக்கு பிடிக்காத சில காரியங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றிலும் சில கடினமான பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது.இப்படி இந்த உலகில் உள்ள எல்லா வேலைகலிலும் நம் மனதுக்கு பிடிக்காத பக்கங்கள் என்பது கட்டாயம் இருக்கவே செய்யும்.
அவை கடினமாக இருக்கின்றது என்பதற்காக விட்டுவிட்டு மற்றொன்றை தேடிச்செல்வதை தவிர்த்துவிட்டு அதனை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையே நான் உங்களுக்கு ஆலோசனையாக கூறுகின்றேன். பெரும்பான்மையான மக்கள் தங்களின் பிடிவாதங்களையும்,கட்டுப்பாடற்ற தன்மையையும் போக்குவதற்கு விரும்பாமல் கடின உழைப்பை முற்றிலுமாக வெறுக்கின்றனர்.இதுவெல்லாம் நான் வாலிபனாக இருந்த காலத்திலும் நடந்த தவறுகள்தான்.அப்பொழுது பல்வேறு நிகழ்சிகளை நான் பொறுபேற்க வேண்டியிருந்தது.அதனால் ஓய்வை விரும்பினேன்.அதனால் வரும் கஷ்டத்தை வெறுத்தேன்.ஆனால் அந்த கடினம்தான் என்னை உயர்வுக்கு கொண்டுவந்தது.
நம் எல்லோருக்கும் ஒரே நேரம் தான் இந்த உலகில் வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கு யாருக்கும் யாரைவிடவும் அதிகமான நேரமெல்லாம் வழங்கப்படவில்லை.நீங்கள் வெற்றியாளராக ஆக விரும்பினால் பல பொறுப்புக்களை ஏற்க தயாராகிக்கொள்ளுங்கள்.நீங்கள் வாலிபர்களாக இருக்கும்பொழுதே உங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்க ஆரம்பியுங்கள்.யாரையும் கவரவேண்டும் என்றோ அல்லது உங்கள் பாதையை யாருக்கும் விளக்கவேண்டுமென்றோ எந்த அவசியமும் கிடையாது.நீங்கள் உங்கள் லட்சியப்பாதையில் வரும் கடினங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.அதனை நீங்கள் வெறுத்தால் நிச்சயம் உங்களால் ஒரு உயர்ந்த மனிதராக உறுவாக முடியாது.
வாலிபர்களுக்கு மிக முக்கியமான ஒன்றையும் நான் கூறவிரும்புகின்றேன். அதாவது நீங்கள் உங்கள் இலக்கை நிர்னயிப்பதற்கு முன்பே நீங்கள் எதனை தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்பதில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.இந்த உலகில் நம் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட அருள் வழங்கப்பட்டு இருக்கின்றது.அது சிலருக்கு அழகாக இருக்கலாம்,அல்லது திறனாக இருக்கலாம்,அல்லது சிந்தனையாக இருக்கலாம்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இவைகள் அனைத்தும் நமக்கு வழங்கப்பட்ட அருட்கள் மட்டுமே.இவற்றை கொண்டு நாம் பெருமை கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றில் எதுவும் நாம் சம்பாரித்ததல்ல.ஆனால் நாம் பெருமைபட மிகத்தகுதியானது என்பது நாம் கடினமாக உழைக்க முடிவெடுப்பதே என்றே நான் கருதுகின்றேன்.
நான் என் பள்ளி பருவத்தில் மிகச்சிறந்த மாணவனாக திகழ்ந்தேன். "A"தரத்தில்தான் என் மதிப்பெண்கள் இருந்தது.கணக்குப்பாடத்தில் மிக ஆர்வம் கொண்டிருந்தேன்.அவைகள்தான் மிகப்பெரிய சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அவை எதுவும் உண்மையல்ல என்றே இன்று நான் உணருகின்றேன்.ஏனென்றால் கடின உழைப்பை தவிர மிகப்பெரும் சாதனை வேறெதுவுமில்லை என்றே இன்று நான் கருதுகின்றேன். என்னுடைய கடின உழைப்பையே எனக்கு கிடைத்த மிகப்பெரும் அருளாக நான் பார்க்கின்றேன்.எனக்கு இறைவன் கொடுத்த அனைத்து அருட்களையும் எனக்கான சவால்களில் செலவழிக்க ஆரம்பித்தேன்.
எதுவெல்லாம் என்னால் முடியாது என்று நினைத்தேனோ அவற்றையெல்லாம் இன்று நான் செய்து முடித்துவிட்டதை இன்று என்னாலே நம்பமுடியவில்லை. இன்று நான்தான் உலகில் முதல் பணக்காரனாக இருக்கின்றேன்.எனவே வாலிப நண்பர்களே..!உங்கள் வாழ்க்கை பயணத்தில் கடினமான பாதையையும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்! இலகுவான பாதையையும் தேர்ந்தெடுக்க முடியும்.ஆனால் நீங்கள் தொண்ணூறு வயதில் இருக்கும் பொழுது எது உங்களை திருப்திபடுத்தும் என்பதை இப்பொழுதே யோசித்துக் கொள்ளுங்கள்.
நான் அனைத்து தொழில் முனைவோருக்கும் சொல்வது இதுதான்.நீங்கள் உங்கள் தொழிலில் மிக கவனமாக இருங்கள்.என்னுடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாளராக இருப்பதை நினைத்து பெருமை அடைவதை விட்டுவிட்டு நீங்களே ஒரு நிறுவனத்தை உறுவாக்குங்கள்.அப்படி உறுவாக்கி உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதுதான் மிக உயர்ந்த செயல் என்பதாகவே என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு நான் கூறிவருகின்றேன்.