செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி?(so excitement)

பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி
பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி

முன்னுரை:

இன்றைய உலகில் எதை எடுத்தாலும் பரபரப்பு..!எங்கு பார்த்தாலும் பரபரப்பு..!ஏன் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களையும் நம்மால் காணமுடிகின்றது.  அவ்வளவு ஏன் நிற்க நேரமில்லை,நடக்க நேரமில்லை,பேச நேரமில்லை என்று கால் தரையில் படாமல் பரந்துகொண்டே வாழ்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.மேலும் இன்றைய உலகும் நிற்காதே ஓடு ஓடு என்று நாலாபுறமும் நின்றுகொண்டு நம் செவிகளை செவிடாக்கி கொண்டிருக்கும் கொடுமையும் ஒரு புறம் அரங்கேரி வருவது சொல்லிலடங்கா கொடுமையாகும்.அன்பர்களே.!

நீங்களும் இந்த பிரச்சனையை சந்தித்துவருகின்றீர்களா..?அப்படியானால் உங்களை இவற்றைவிட்டும் பாதுகாத்துக்கொள்ள நான் கடைபிடித்து வரும் ஒரு சில வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.அதனை நீங்களும் கடைபிடித்தால் நீச்சயம் சாந்தமான ஒரு நிதானமிக்க வாழ்வை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

பரபரப்பில்லாமல் இருப்பதற்கான வழிகள்:

1.முதலாவதாக நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் "உங்களுடைய நேரத்திற்கு மிஞ்சிய நிகழ்சிகளை திட்டமிடாதீர்கள்.அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு காரியங்களை செய்துமுடித்திட வேண்டும் என்று தயவுகூர்ந்து திட்டமிடாதீர்கள்.இதனால் பெரும்பாலும் உங்களுடைய நிம்மதியும் இழந்து; நீங்கள் திட்டமிட்ட நிகழ்சியையும் இழந்து; பெரும் துன்பத்திற்கு ஆலாக்கப்படுவீர்கள்.

எனவே எத்தகைய காரியமானாலும் சரி அதற்கான ஒரு தாராளமான நேரத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.அதற்கு பிறகே அதனை நிறைவேற்றச் செல்லுங்கள்.அவ்வாறே உங்களிடம் வரும் அனைவரின் தேவைகளையும் பூர்த்திசெய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் உங்களை நீங்களே போட்டுக்கொள்ளாதீர்கள்.உங்கள் நேரத்திற்கு அப்பாற்பட்ட விஷயத்தை வேறொரு நேரத்தில் செய்து கொடுப்பதாக வெளிப்படையாகவே சொல்லிப்பழகுங்கள்.இதனால் பெரும்பாலும் உங்கள் அமைதியை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

2.உங்களுக்கான ஓய்வு நேரம் என்ற ஒன்றை நீங்களே நிர்னயுங்கள். உதாரணமாக இரவு தூங்கும் நேரத்தில் ஓய்வை தவிர்த்துவிட்டு  தொலைக் காட்சியில் அமர்ந்து நேரத்தை கழிக்க வேண்டும் என்றோ அல்லது தொலை பேசியின் மூலம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடவேண்டும் என்றோ எண்ணாதீர்கள்.ஏனெனில் தொலைக்காட்சியையும்,தொலைபேசியையும் விட நம் இயல்பு வாழ்வை நிலைகுழையச் செய்யும் ஒரு ஆபத்தான கருவி வேறு ஒன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.பெரும்பாலும் அது உங்களுடைய பொன்னான நேரங்களை அழித்தொழித்துவிடும் என்பதே நிதர்சனமாகும். எனவே உங்களுக்கான ஓய்வு நேரங்களில் தயவுகூர்ந்து இது போன்ற சாதனங்களை பயன்படுத்துவதைவிட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள் அதனால் உங்கள் அமைதி பாதுகாக்கப்படலாம்.

3.வாரத்தில் ஒருமுறை உங்கள் வேலையை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு நன்பர்களுடனோ அல்லது உறவினருடனோ நேரத்தை செலவழியுங்கள். அல்லது எங்காவது புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்.இதனால் நிச்சயமாக உங்களின் மனோநிலையையும் சிந்தனையையும் ஓர்முகப்படுத்தி புத்துணர்வாக வைத்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

4.தேவையில்லாதது என்று நினைப்பதை அப்பொழுதே தூக்கி எறிந்துவிடுங்கள்.அதாவது பழைய ஆடைகளாகட்டும்,அல்லது கிழிந்த ஆடையாகட்டும் அனைத்தையும் அவற்றை பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் அதனை அப்பொழுதே தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையானல் அது என்றாவது ஒரு நாள் உங்களை நிம்மதி இழக்கச் செய்துவிடும்.அதாவது என்றாவது நீங்கள் அதை மறந்து அணிந்துவிடலாம். அதனால் பெரும் தர்ம சங்கடத்தை நீங்கள் அடையவேண்டிய நிலைக்கும் தள்ளப்படலாம்.எனவே தேவையற்றதை அப்பொழுதே தூரமாக்கும் வழக்கத்தை கடைபிடியுங்கள்.இதனால் நிம்மதியுற்ற ஒரு மனநிலையை உங்கள் செயலில் நிச்சயமாக நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.

5.தனிமையில் சற்று அமர்ந்து உங்கள் எண்ண ஓட்டங்களை உற்று நோக்க கற்றுக்கொள்ளுங்கள்.அவை தன் இஷ்டத்திற்கு ஓடுகின்றதா ?இல்லை அதை உங்கள் கட்டுக்கோப்பில் வைத்திருக்கின்றீர்களா? என்பதை சோதித்துப் பாருங்கள்.இவ்வாறு நீங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவீர்களேயானால் நிச்சயம் ஒரு சாந்தமான நிலையை உங்கள் செயலில் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

ஆக மேற்கூறிய இந்த ஐந்து விஷயங்களையும் உங்களால் முடிந்தளவு கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் செயலில் நிதானம் ஏற்படும் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம்.

Previous Post
Next Post