செவ்வாய், 28 செப்டம்பர், 2021

திருந்துவதற்கு வாய்ப்பளியுங்கள்

வாழ்வில் பல்வேறு ஏமாற்றங்களுக்கு ஆளான ஒருவன் தன் கண்ணில் படும் 1000 நபர்களின் தலையை கொய்துவிடப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான்.இதனை கேள்விபட்ட மக்கள் அவனை தூரத்தில் கண்டாலே ஓடி ஒழிந்துவிடுவார்கள்.அப்படி இவனை தெரியாத யாராவது இவன் அருகில் வந்துவிட்டால் அவர்களின் தலையை வெட்டிவிடுவான்.மேலும் எத்தனை நபர்களை கொலைசெய்திருக்கின்றான் என்ற கணக்கிற்காக அவர்களின் கட்டை விரலையும் வெட்டி அதனை ஒரு மாலையாக செய்து கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டான்.

இதனாலேயே மக்கள் அவனுக்கு "உங்லி மால்""விரல் மாலைக்காரன்"என்று பெயரும் வைத்திருந்தனர்.உங்லிமால் ஊருக்குள் வருகின்றான் என்று கேள்விபட்டால் அந்த ஊரில் யாரும் வெளியே தலை நீட்டமாட்டார்கள் என்ற நிலை இருந்தது.அரசனும் கூட அவனுக்கு பயந்து பெரும்பாலும் வெளியே வராமல் இருந்தார் என்றே மக்களிடம் பேசப்பட்டது.உங்லிமால் தன்னுடைய சபத்தத்தை நிறைவேற்றுவதில் இறுதி கட்டத்தை அடைந்திருந்தான்.அதாவது 999 தலைகளை வெற்றிகரமாக கொய்து இருந்தான்.ஆனால் இன்னும் ஒரு தலைக்காக அவன் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் பாதையில் அமர்ந்து ஆவலோடு காத்திருந்தான்.அவனுக்கு கிடைத்ததோ மிகப்பெரும் ஆச்சர்யம்.
ஆம்...!

அவ்வழியாக எதார்த்தமாக புத்தபெருமான் தன் சிஷியர்களுடன் அரசரை சந்திக்கவந்தார்.தூரத்தில் அமர்ந்திருந்த உங்லிமாலுக்கு மிகப்பெரும் சந்தோஷம்,தன்னுடைய சபதத்தை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது என்று வெகுதூரத்திலிருந்து தன்னை நோக்கி வந்த சிறிய கூட்டத்தைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டான்.இடைபட்ட நேரத்தில் அவ்வூரின் சில முக்கியஸ்தர்கள் புத்தரின் சீடர்களிடம் விஷயத்தை சொன்னவுடன். சிஷியர்களும் பதறியடித்துக் கொண்டு விஷயத்தை புத்தரிடம் கூறினார்கள்.

புத்தர் அவ்விஷயங்களுக்கு காதுதாழ்த்திவிட்டு தொடர்ந்து உங்லிமால் இருந்த வழியிலேயே நடந்துகொண்டிருந்தார்.சீடர்களோ வெளவெளத்துப்போய் வேறு வழியில் நாம் சென்றுவிடலாமே என்று புத்தரிடம் வேண்டினார்கள்.ஆனால் புத்தரோ உங்லிமால் ஒரே ஒரு தலைக்காகத்தான் காத்திருக்கின்றான் என்பதை என்னிடம் நீங்கள் கூறாமல் இருந்திருந்தால் நான் உங்களோடு வந்திருப்பேன்.ஆனால் இப்பொழுது என்னால் அப்படி வரமுடியாது என்று கூறிவிட்டார்.வேறு வழியின்றி சீடர்களும் தங்களின் மகத்தான குருவை தனியாக விடமுடியாதே என்ற கட்டாயத்தில் புத்தருடனே நடக்கத் தொடங்கினார்கள்.

புத்தர் உங்லிமாலின் அருகில்வர ஆரம்பித்தார்.உங்லிமாலும் தன் வாலை உறுவிநின்றான்.ஆனால் புத்தர் அருகில் வரவர புத்தருடைய சலனமில்லா நடையும் அவரின் மலர்ந்த முகமும் ஒளிகள் வீசும்பார்வையும் 999 தலைகளை இறக்கமின்றி கொய்த அந்த கல்நெஞ்சக்கார உங்லிமாலையும் ஒரு கனம் செயலற்று சிந்திக்க வைத்தது.இத்துனை அமைதியான சாந்தம் நிறைந்த ஒரு முகத்தை இது நாள் வரை நான் கண்டதில்லையே.

இதை எப்படி என்னால் கொய்யமுடியும் என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருந்த உங்லிமால் புத்தரை நோக்கி அங்கேயே நில் என்றான். ஆனால் புத்தர் அதனை கண்டுகொள்ளாமல் அவனை நோக்கி நடந்து கொண்டே சென்றார்.மீண்டும் உங்லிமால் "இதோ பார் உன்னை பார்த்தால் எனக்கு மிகப்பரிதாபமாக இருக்கின்றது"எனவே உன்னை நான் உயிரோடு விட்டுவிடுகின்றேன்.இத்தோடு வேறு வழியில் திரும்பி சென்றுவிடு என்று கர்ஜித்தான்.

ஆனால் புத்தரோ அதனை பொருட்படுத்தவே இல்லாமல் அவன் வால் அருகில் சென்று "உங்லிமாலே நானும் உன் மீது பரிதாபப்பட்டுதான் வந்திருக்கின்றேன்.உன்னுடைய சபதத்தை தீர்ப்பதற்கு இன்னும் ஒரே ஒரு தலை தான் மிச்சம் இருக்கின்றதாமே அதற்காக நீ பல வருடமாக காத்திருக்கின்றாய் என்றும் நான் கேள்விபட்டேன்.எனவே பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட,மேலும் எதற்கும் உதவாத என் தலையை நீ எடுத்துக்கொள் என்றார்.

அதனை கேட்ட உங்லிமால் நீர் வசீகரம்மிக்க மனிதராக இருப்பதோடு சற்று பைத்தியக்காரராகவும் இருப்பீர்போலையே என்று கூறி தன் வாலின் கூர்மையை காட்டி இது உன் தலையை துண்டித்துவிடும் என்பதை நீ அஞ்சவில்லையா..?என்றான்.எவ்வித ஆசைகளுமற்ற ஒரு மனிதனாக நான் என்று மாறினேனோ அன்றிலிருந்து நான் எதற்கும் அஞ்சுவதில்லை.ஆனால் நான் இறக்க இருக்கும் இத்தருனத்தில்  என் மனதில் இப்படி ஒரு ஆசை உதிக்கின்றது அதனை நீ நிறைவேற்றி வைப்பாயா என்றார் புத்தர்..!

உடனே உங்லிமாலும் என்ன ஆசை என்று சொல் என்னால் நிறைவேற்ற முடிகின்றதா என்று பார்க்கின்றேன் என்றான்.புத்தரோ "இதோ இந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார்.உடனே தன் கூர்மையான வாளால் அக்கிளையை வெட்டி புத்தரின் கையில் கொடுத்துவிட்டு ..!நீ உண்மையில் பைத்தியக்காரர்தான் என்பதை உன்னுடைய இந்த ஆசையே கூறுகின்றது என்றான்.உடனே புத்தர் இல்லை இது என் ஆசையின் ஒரு பகுதிதான் அதை நீ நிறைவேற்றிவிட்டாய் ஆனால் இந்த கிளையை நீ மீண்டும் அது இருந்த இடத்தில் ஒட்டி நீ என் முழு ஆசையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றார்.

உடனே உங்லிமால் அட பைத்தியாகரனே இதை எப்படி திரும்பவும் ஒட்ட முடியும் என்றான்.அப்பொழுது புத்தர் ஆம்...!உன்னால் அதனை ஒட்ட முடியாதெனில் அதனை வெட்டவும் உனக்கு உரிமை இல்லைதானே என்றார்..?வெட்டுவதால் நீ வீரன் என்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றாயா...? அதனை குழந்தையும் கூட செய்யுமே என்று கூறி நீ உண்மையான வீரனாக இருந்தால் இதோ இந்த கிளையை ஒட்ட வை என்றார்.உங்லிமால் அது முடியாத காரியம் என்றார்.

உடனே புத்தர் அப்படியானால் உன்னுடைய இந்த விரல் மாலைகளையும், வாலையும் தூக்கி எறிந்துவிடு.இவைகள் ஒரு வீரமான நபருக்கு அழகல்ல. இவைகள் கோழைகள் தங்கள் கோழைத்தனத்தை மறைத்துக் கொள்வதற்காக வைத்திருப்பவைகள் என்று கூறி நீ என்னோடு வா நான் உன்னை உண்மையான வீரனாக்குகின்றேன் என்றார்.என்னால் உங்கள் உயர்ந்த நன்நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது.உண்மையில் நான் பார்த்த நபர்களிலேயே மிக துனிச்சலான வீரர் நீங்கள்தான் தயவு கூர்ந்து என்னையும் உங்கள் சீடனாக்கிக் கொள்லுங்கள் என்று மன்றாடினான். புத்தரும் தன்னுடன் அவரை அழைத்துக் கொண்டு அரசவைக்கு சென்றார்.

அந்த மக்களிடமெல்லாம் உங்லிமால் புத்தருடன் அரசவைக்கு சென்றிருப்பதாக செய்தி பரவியது.அரசரும் செய்தியை கேள்விபட்டு திடுக்கிட்டுப்போனார்.புத்தர் அரசைவியின் முக்கிய பகுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது அரசர் உங்லிமாலுக்கு பயந்து வாலுடன் வருகை தந்தார்.இதனை கண்ட புத்தர் இங்கு வால் ஏதும் தேவை இல்லையே என்றார். அரசர் புத்தரிடம் நலம் விசாரித்து விட்டு இங்கு யார் அந்த உங்லிமால் என்று சற்று பதட்டத்துடன் கேட்டார்.

அப்பொழுது புத்தரோ அவன் இப்பொழுது ஒரு அப்பாவியான துறவி.இனி அவன் யாரையும் துன்புறுத்தமாட்டான் என்றார்.ஆனாலும் அரசர் யார் அவன் எனக்கு அவனை காண்பியுங்கள் அவனுடைய பெயரே மிக அபாயகரமானதாக உள்ளதே என்று வாளை வெளியில் உறுவி படபடத்துநின்றார்.புத்தர் புன்னகைத்துக் கொண்டே தன் அருகில் சாந்தமாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனை சுட்டிக்காண்பித்து இதோ இவன் தான் உங்லிமால் என்றார்.அரசர் அவனை சண்டைக்கு அழைப்பதுபோல் எல்லோரையும் வெட்டிவிடுவாயா நீ? என்று வாளை அவனிடம் நீட்டினார்.

அப்பொழுது உங்லிமாலோ சிறித்துக் கொண்டே நீ மாபெரும் வாள்வீரனாக இருந்திருந்தால் நான் உங்லிமாலாக இருந்தபோது என்னிடம் நீ வந்திருக்க வேண்டும்.இப்பொழுது நான் யாருடைய உயிறையும் பறிப்பவன் அல்ல,பல மனிதருக்கு அதனை வழங்க ஆசிப்பவன் என்று கூறி நீ  உன் வாளை உன் உறைக்குள் வை என்றான்.அரசனும் அவ்வாறே செய்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்...!

 நீதி:

  • வாழ்வில் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை சீர்செய்ய ஒரு வாய்ப்பையேனும் வழங்க வேண்டும்..!
Previous Post
Next Post