![]() |
வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன |
முன்னுரை:
இன்றைய சூழலில் பெரும்பான்மையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொருளாதாரம் சம்மந்தமான பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவைகள் மாணவர்களுக்கு புரியும் வண்ணமோ அல்லது மாணவர்களின் வாழ்வியலோடு கலந்தோ கற்பிக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்திற்குறிய உண்மையாகும்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான பேராசிரியர்களே வியாபாரத்தின் அடிப்படை கூறுகளை சரியாக புரியாததுதான் அவ்வாறு நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன்.
எனவே இந்த கட்டுரையில் வியாபாரத்தின் சில தத்துவங்களை சுட்டிக்காட்டுவதின் மூலம் வியாபாரம் என்றால் என்ன என்பதையும் அவைகள் எதனையெல்லாம் அடைப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது போன்ற முக்கிய அடிப்படை விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இது வியாபரத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.
வியாபாரம் என்றால் என்ன?
இதற்கு பொருளாதார கோட்பாட்டு புத்தகங்களில் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டிருந்தாலும் இயல்பான வியாபார விதியை குறிப்பிடவே நான் விரும்புகின்றேன்.அதாவது."இரு நபர்கள் தங்களின் மனப்பொறுத்தத்துடன் ஒப்புதல் பெற்று தங்களுக்குள் ஒன்றை பரிமாறிக்கொல்வதற்கே இயல்பு வாழ்வில் வியாபாரம் என்று சொல்லப்படுகின்றது."
வியாபாரம் ஏன் உறுவானது?
இரு மனிதர்கள் தங்களின் வேறுபட்ட தேவையை பரிமாரிக் கொள்வதற்காகவே வியாபாரம் என்ற முறை உறுவானது.இது பண்டைய காலம் தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.அன்றைய வியாபாரம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.ஆனால் இன்று அந்த வியாபாரம் பல்வேறு பரினாம வளர்ச்சி கண்டு வியாபாரம் இல்லையெனில் மனித வாழ்வு இல்லை என்றளவிற்கு மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக உறுமாறி இருக்கின்றது.எனவே இங்கு இன்றைய வியாபாரம் எத்தகைய நோக்கங்களுகெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாக அறிந்து வைத்துக்கொள்ள நாம் கட்டாயம் கடமைபட்டிருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
இன்றைய வியாபாரத்தின் நோக்கங்கள் யாவை?
1.தனி மனித தேவையை பூர்த்தி செய்தல்.
2.சமூக தேவையை பூர்த்தி செய்தல்.
3.நாட்டின் வளத்தை பெறுக்குதல்.
4.குறிப்பிட்ட நபர்களின் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்தல்.
இந்த நான்கு நோக்கங்களே பெரும்பான்மையான வியாபாரத்தில் காணப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேருக்குநேர் சந்தித்து வியாபாரம் செய்து வந்ததால் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் பொருட்களை பண்டமாற்றம் செய்து தங்களின் வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.அதன்பிறகே பொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற வழக்கம் தோன்றியது.அது எப்பது தோன்றியது என்பதை பார்த்துவிடுவோம் வாருங்கள்.
சந்தைப்படுத்தல் முறை எப்படி உறுவானது?
பண்டமாற்றுமுறை கடினமாக இருப்பதை உணர்ந்து அதை எளிமையாக்க ஒரு காலத்தில் கொடுக்கள் வாங்களை சந்தைபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதாவது தங்களுக்கு தேவையானதை கொடுக்கல் வாங்கள் செய்துகொள்ள (வியாபாரத்திற்கென்று) ஒரு தனி இடத்தை நிர்னயித்து அங்குதான் வியாபாரம் நடக்கும் என்றும்,அங்கு வந்தே மக்கள் விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்றும் அங்கு நிர்ணயிக்கப்படுவதுதான் விலை என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தங்களுக்கு தாங்களே மக்கள் வகுத்துக்கொண்டனர்.