![]() |
வாழ்வில் முன்னேற வேண்டுமா |
முன்னுரை:
இந்த உலகில் வளர்ச்சிபெற்ற ஒரு நபராக ஆகவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்படும் இந்த நான்கு விதிகளையும் கடைபிடித்தால் நிச்சயம் தங்கள் வாழ்வில் முன்னேறிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.எனவே வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் கட்டாயம் கடைபிடித்து வாருங்கள் இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கலாம்.
முதல் விதி: 1.குறைவாக பேசுங்கள்.
நீங்கள் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதிகம் பேசுவதை நிறுத்தி அதிகம் செயல்படத்தொடங்கிவிடுங்கள்.இதனைத்தான் இங்கு குறைவாக பேசுவது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.நம்மில் பலரும் பல்வேறு அற்புதத் திட்டங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அற்புத கருத்துக்கள் கொண்டவர்களாகவோ இருந்துவிடுகின்றோம்.ஆனால் அதனை செயல்படுத்துவதைவிட்டுவிட்டு அல்லது அதனை செயல்படுத்தும் வழியில் பொராடுவதை விட்டுவிட்டு சொற்காளால் மட்டுமே வெள்ளப்போவதாக கூறித்திறிவது மிக குறைமதியாளர்களின் பண்பாகவே நான் காண்கின்றேன்.
இரண்டாம் விதி: 2.அதிகம் கவனியுங்கள்:
இந்த உலகில் நீங்கள் கவனிக்காமல் எதுஒன்றையும் கற்றுவிட முடியாது என்பதையும் மேலும் உங்களால் கற்காமல் எதிலும் முன்னேற முடியாது என்பதையும் நீங்கள் உணராத வரை உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை உங்கள் ஆழ்மனதில் எப்படியாவது ஆழப்பதிய செய்துவிடுங்கள்.ஏனெனில் கூர்ந்து கவனித்தல் என்ற பன்பே உங்களை முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு அழைத்துச்செல்லும் அற்புத பண்பாக இருக்கின்றது.அவ்வாறே யார் கவனித்தலை விட்டுவிடுகின்றார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இந்த உலகில் பலநூறு நலவுகளைவிட்டும் தூரமாக்கப்பட்டும் விடுகின்றனர்.எனவே இந்த உலகில் ஒவ்வொன்றையும் கற்கும் ஆவலோடு உற்றுநோக்குங்கள்.நிச்சயம் உங்களை அது முன்னேற்றத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.
மூன்றாம் விதி:3.குறைவாக எதிர்வினையாற்றுங்கள்:
உங்களிடம் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களுடைய எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்.சிறிய சிறிய வியங்களுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி வயப்படக்கூடியவராக இருந்தால் நிச்சயம் உங்களால் முன்னேறவே முடியாது என்பதையும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த உலகம் போட்டி நிறைந்தது.எனவே அது உங்களின் உணர்வுகளை உங்களுக்கு எதிரான ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி உங்களை முன்னேறு வதிலிருந்தும் வெகு தூரத்தில் தள்ளிவிட முயற்சிக்கும்.அச்சமயங்களில் நீங்கள் எதிர்வினை ஆற்றுவதை தவிர்த்துவிட்டு நிதானத்தோடு செயல்படத் தொடங்கிவிடுவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேறிவிடலாம்.
நான்காம் விதி:4.அதிகம் உள்வாங்குங்கள்.
இந்த உலகை உற்று நோக்குவதின் மூலம் நாம் எந்தளவிற்கு உள்வாங்குகின்றோமோ அந்தளவிற்கு நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்.நம்மில் பலரும் அவசரக்காரர்களாகவும் அல்லது எல்லாம் தெரிந்தவர்களாகவும் நம்மை காட்டிக்கொள்ள விரும்புவதால் பெரும்பாலும் பல்வேறு விஷயங்களை நாம் உள்வாங்க தவறிவிடுகின்றோம்.ஆனால் யார் (Observe)உள்வாங்குதல் என்ற பண்பைக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இந்த உலகில் மகத்தான விஷயங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடும் ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வது நிதர்சனமாக இருக்கின்றது.எனவே இந்த உலகை உங்களால் முடிந்தளவு உள்வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் உள்வாங்கும் பண்பே நிச்சயம் உங்களை உயரத்தில் நிறுத்தும்.!