புதன், 29 ஜூன், 2022

உறக்கமும் உடல் ஆரோக்கியமும்-healthy-sleeping


உறக்கம் ஒரு உன்னத செயல்.

இந்த உலகை சம்பாரிப்பதற்காக ஓடும் பலரும் உறக்கம் என்பது நம் உடலை செயலற்ற நிலைக்குத் தள்ளும் தேவையற்ற ஒன்று என்பதாகவே நினைத்துக் கொள்கின்றனர்.அவ்வாறே அவர்கள் உறக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான செயல்தான் என்பதை கூட ஏற்க தயாராகவும் இல்லை.ஏனோ மனிதன் அவ்வப்பொழுது அதனை கட்டாயத்தின் அடிப்படையில் வேறு வழியின்றி ஒவ்வொரு நாளும் சடங்காக செய்வதற்கு ஆட்படுத்தப்பட்டு விட்டான் என்பதாகவே எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் உண்மையென்ன வெனில் மனிதனின் செயல்பாட்டிலேயே மிக உன்னதமான செயல் உறக்கம் தான் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

ஆம் ..!மனிதன் எந்தளவிற்கு தன் உடலாலும் அசைவுகளாலும் செயல்புரிகின்றானோ அதே அளவிற்கு தன் உடலையும் அசைவுகளையும் செயலற்ற செயலில் வைப்பது மிக அவசியமாகும்.அது மனிதன் செய்யும் ஏதோ ஒரு சடங்கோ அல்லது சம்பரதாயமோ அல்ல,மாறாக அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மீட்சி ஆகும்.இதனைத்தான் ஆன்மீக குருக்கள் உறக்கம் என்பது சிறிய இறப்பு என்பதாக குறிப்பிடுகின்றனர்.
அதாவது மனிதன் உறக்கத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் இறந்து எழுகின்றான் என்பதாக கூறுகின்றனர்.இதனை அறிவியல் ஆய்வாளர்களும் உண்மைபடுத்தவே செய்கின்றனர்.அதாவது ஒரு மனிதன் தூங்கி எழுந்த பிறகு அவனுடைய உடலாலும் சிந்தனையாலும் கடந்த காலத்தை கடந்துவிடுகின்றான் என்பதாகவும் அதனால் அவன் பெரும்பாலும் புதியதொரு மனிதனாகவே இவ்வுலகில் தோன்றுகின்றான் என்பதாகவுமே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆக உறக்கம் என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் தாக்கத்தை உண்டு செய்யும் ஒரு அற்புத இயக்கம் அல்லது உண்ணத செயல் என்பதுதானே தவிர அது நம் வாழ்வியலை செயலற்றதாக்கும் ஏதோ ஒரு வெற்று சடங்கல்ல என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனபதையே இங்கு நான் முதற்கண் வேண்டிக்கொள்கின்றேன்.அடுத்தபடியாக மனிதன் உறங்குவதால் எத்தகைய ஆரோக்கிய நிலைகளையெல்லாம் பெற்றுக்கொள்கின்றான் என்பது சம்மந்தமாக ஒரு சில முக்கிய பலன்களை பார்ப்போம் வாருங்கள்..!


உறக்கத்தின் பலன்கள்.

1.மூலைக்கு நியாபக சக்தியையும்,புத்துணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

பொதுவாகவே மனிதனின் மூலை பெரும்பாலும் அதிகம் செயல்பட்டுக் கொண்டே இருப்பதாகும்.ஆனால் மனிதன் எப்பொழுது தூங்குவானோ அப்பொழுது மூலை அதனுடைய வெளிசெயல்களை நிறுத்திவிட்டு முன்பு எதையெல்லாம் பதிவிட்டதோ அவற்றையெல்லாம் மீண்டும் மீட்டிப்பார்த்து அவற்றில் எது மிக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதனை மட்டும் 
உள்பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு மீதியை வெளியே தூக்கி எறிந்துவிடுகின்றது.இதன் மூலம் ஒரு மனிதன் 50 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்த ஒன்றையும் ஒரு நொடியில் அடையாளம் கண்டுவிடலாம் என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.மேலும் இத்தகைய மகத்தான திறனை தூக்கம்தான் ஏற்படுத்துகின்றது என்பதையும் மிகத்துள்ளியமாக குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.


2.இதயத்தை சீராக துடிக்கச் செய்கின்றது.

மனிதன் வெளியில் செயல்படும் சமயம் பல்வேறு விதங்களில் துடிக்கும் இதயம் தூங்கும் சமயம் அவற்றின் தாக்கங்களை விட்டும் தன்னை தற்காத்துக்கொண்டு அவை தன்னுடைய இயல்பு நிலைக்கு வருகின்றது. இதனால் பெரும்பாலும் நம் இரத்த ஓட்டம் சீராகி இதய நோய்களிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுகின்றோம் என்பதாக மருத்துவர்களில் பலரும் விவரிக்கின்றனர்.அவ்வாறே இதயம் தன்னிடம் வரும் இரத்தத்தை உடனே சுத்திகரித்துதான் அனுப்புகின்றது என்றாலும் குறிப்பாக உறக்கத்தின் போதே இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையை இதயத்தால் மிக சீராக செய்ய முடிகின்றது என்பதாகவும் கூறுகின்றனர்.


3.கவணிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றது.

உறக்கத்தின் மூலம் பழைய காட்சிகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் அடிமனதிற்கு சென்றுவிடுவதால் ஒருவர் நன்றாக தூங்கி எழுந்து விடுவாரேயானால் அவருடைய கவனிக்கும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் மிக புத்துணர்வோடு செயல்படுகின்றது என்பதாகவே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மாணவர்களுக்கும் உறங்கி எழுந்த பிறகுள்ள நேரத்தையே படிப்பதற்காக பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.ஏனெனில் வாசிப்பு அல்லது கற்றல் என்பது கவனத்தை அடிப்படையாகக்கொண்டது என்பதால் பெரும்பாலும் தூங்கி எழும் ஒரு நபரால் அதனை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.


4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.

ஒருவர் நன்றாக உறங்குவதால் அவருடைய உடலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்கும் செல்கள் இடம்பெறுகின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் குறிப்பிடுகின்றனர்.இதனால் தான் நோய்வாய் பெற்றவர்களுக்கு அவ்வப்பொழுது தூக்கத்தையும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றது என்பதாகவும் விளக்கமளிக்கின்றனர்.


5.உடலை புத்துணர்வூட்டுகின்றது.

மனிதன் விழித்திருக்கும் நிலையில் உடலால் அதிகம் செயல்படுவதால் இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சோர்வை சந்தித்தித்து விடுகின்றான்.அச்சமயங்களில் மனிதன் உறங்குவதை தவிர அதற்கான சிறந்த நிவாரணி எதுவொன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகவே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மனிதன் தன் உடல் சோர்வை நீக்கவும்,தன்னை மீண்டும் மீண்டும் மீட்டி புத்துணர்வுமிக்கவனாக ஆக்கிக்கொள்ளவும் உறக்கம் மட்டுமே இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரும் வரமாக இருக்கின்றது என்றால் நிச்சயம் அது மிகையாகாது.

ஆக உறங்குவதின் பலன்கள் மேற்கூறப்பட்டவை தவிர்த்து இன்னும் ஏறாலமாக இருக்கின்றது என்றாலும் அவை அனைத்தையும் இங்கு நான்  சுட்டிக்காட்டுவதின் மூலம் உங்களுடைய வாசிப்பை சலிப்படைய செய்துவிடுவேனோ என்று அஞ்சுகின்றேன்.எனவே உறக்கம் என்பது ஏதோ நாம் நம்முடைய கலைப்பை ஆற்றிக்கொள்ளும் ஒரு சிறிய சடங்கு மட்டுமே என்று எண்ணி உறங்குவதை நிறுத்துவிட்டு அதனால் நம் வாழ்வின் பல்வேறு பகுதிகள் செழிப்பாகின்றது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள் என்பதை மட்டும் இங்கு நான் பணிவன்போடு கேட்டுக்கொண்டு அடுத்தபடியாக உறங்காமல் போவதால் எப்படிப்பட்ட பாதிப்புகளை யெல்லாம் நாம் சந்திப்போம் என்பது குறித்து சில விளக்கங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்..!


உறங்காமல் போவதன் பாதிப்புகள் என்ன.?

1.இதய நோய் ஏற்படுத்துகின்றது.

பெரும்பான்மையான இதய நோய்கள் சீறான உறக்கமின்மையால் மட்டுமே ஏற்படுகின்றது என்பதாக மருத்துவர்கள் மிக உறுதியாக குறிப்பிடுகின்றனர்.அதிலும் குறிப்பாக யார் சரிவர உறங்குவதில்லையோ அவர்கள் கட்டாயம் இரத்த அழுத்த நோயிற்கோ அல்லது சர்க்கரை நோயிற்கோ ஆலாகின்றார்கள் என்பதாகவும் கூறுகின்றனர்.


2.உடற் பருமனை அதிகரிக்க அல்லது மெலியச் செய்கின்றது.

சீறான உறக்கமின்மை என்பது நம்முடைய உடற்பருமனை மிக வேகமாக அதிகரிக்கச் செய்துவிடும் என்றும், சிலருக்கு அது உடலை மிக மோசமாக மெலியச் செய்துவிடும் என்றும் பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.


3.தோள் நோய்களை ஏற்படுத்தும்.

சீறான உறக்கமின்மை என்பது உடலில் தோள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு மிக நெருக்கமான காரணியாக இருக்கின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.


4.மூலையில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகின்றது.

சீறான உறக்கமின்மையால் மூலையின் செயற்பாடுகள் முழுவதுமாக வழுவிழந்து மந்தமாக செயலபடத்தொடங்கிவிடுகின்றது.இதனால் மனிதனுடைய சிந்திக்கும் திறன் மற்றும் அவனுடைய கவனிக்கும் ஆற்றல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பல சமயங்களில் புத்தி பேதலிப்பதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் எச்சரிக்கின்றனர்.ஆக இது போன்று உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரியான உறக்கமின்மையால் ஒருவர் அடைவதற்கு அதிகம் சாத்தியம் இருக்கின்றது.இவை ஒருபுறமிருக்க ஒருவர் மொத்தமாகவே உறங்குவதில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.அதாவது சராசரியாக ஒரு மனிதன் 3 அல்லது 4 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை உறக்கமே இன்றி வாழ முடியும் என்றும் அதையும் ஒரு மனிதன் தாண்டிவிட்டால் அதிகபட்சம் அவன் இறந்துவிடுவான் அல்லது முற்றிலுமாக அவனுடைய உடல் செயல் இழந்துவிடும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே முற்றிலுமாக உறக்கமின்மை என்பதை ஒருகாலமும் உங்கள் வாழ்வில் நினைத்துப்பார்த்துவிடாதீர்கள்.குறிப்பாக இரவு பணியாற்றுபவர்களுக்கு இந்த பிரச்சணை இருப்பதாகவே நான் காண்கின்றேன்.அதாவது இரவில் பணியாற்றிவிட்டு பகலிலும் உறக்கமின்றி இருந்துவிடுகின்றனர்.இது உங்கள் உடலை மிகப்பெரும் ஆபத்தில் நீங்களே தள்ளிவிடும் மாபாதக செயல் என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதை அன்போடு வேண்டுகின்றேன்.சரி இதுவரை உறங்காமல் போவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சில விளக்கங்களை பார்த்தோம் இப்பொழுது அதிகம் உறங்குவதால் எத்தகைய பாதிப்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் என்பது குறித்தும் சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.


அதிகம் உறங்கலாமா..?

அதிகம் உறங்கலாமா? என்பது குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு அதிகம் உறங்குவது என்றால் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.அவ்வாறே அதிகம் உறங்குவதை நாம் அறிந்து கொள்ள ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரம் உறங்கினால் அவனுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது குறித்து அறிந்துகொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.எனவே வாருங்கள் முதலில் ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வோம்.


ஒரு மனிதனின் சராசரி உறக்க நேரம் என்ன?

3 லிருந்து 5 வயதுடையோர்                    =   10 லிருந்து 13 மணி நேரம்.

6 லிருந்து 12 வயதுடையோர்                  =   9 லிருந்து 12 மணி நேரம்.

13 லிருந்து 18 வயதுடையோர்                =   8 லிருந்து 10 மணி நேரம்.

19 லிருந்து 60 வயதுடையோர்                =   7 லிருந்து 8 மணி நேரம்.

இவற்றில் எந்த வயதுடையவரானாலும் சரி நோய்வாய்பட்டிருந்தால் அப்பொழுது அவர் மருத்துவத்தின் அடிப்படையில் 14 லிருந்து 18 மணி நேரம் வரை தூங்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அவ்வாறே பிறந்த குழந்தைகளும் 16 லிருந்து 18 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியம் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.ஆக யார் எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை ஓரளவு விளங்கியிருப்பீர்கள் என்றே கருதுகின்றேன்.எனவே அடுத்தபடியாக வாருங்கள் அதிகம் உறங்குவது என்றால் என்ன ?அவ்வாறு உறங்கலாமா என்பது சம்மந்தமாக சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.


அதிகம் உறங்கலாமா?

மேற்கூறப்பட்டவர்களில் மேற்கூறப்பட்ட நேரத்தை தாண்டி உறங்குவது கட்டாயம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அதிலும் குறிப்பாக 19 லிருந்து 60 வயதுடையோர்கள் 14 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் கட்டாயம் அவர்களுக்கு ஹைபர் சோமேனியா என்ற நோய் ஏற்படும் என்பதாக எச்சரிக்கின்றனர்.அதனால் அவர்கள் எப்பொழுதும் தூக்க கலக்கித்திலேயே காணப்படுவார்கள் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.அது ஒரு மனிதனை உறிஞ்சக்கூடிய மிகக்கொடிய நோய் என்பதாகவும் எச்சரிக்கின்றனர்.எனவே அதிகம் உறங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் விவரிக்கின்றனர் என்பதை எல்லா சமயங்களிலும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக சிலர் குறிப்பிட்ட நேரத்தில் துங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கவே செய்கின்றோம் ஆனால் உறக்கம் நீங்கள் குறிப்பிட்ட சராசரி மணி நேரம் வருவதில்லையே என்று கேட்கின்றனர்.எனவே சராசரியான உறக்கத்திற்கான சில வழிமுறைகளையும் கீழே நான் பதிவு செய்கின்றேன். முடிந்தால் அவற்றையும் கடைபிடித்துப்பாருங்கள்.நிச்சயம் பலன் கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.


சராசரி உறக்கத்திற்கான வழிமுறைகள்.!

  1. தினமும் உறங்க செலவதற்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  2. உறங்கும் அறையை உறங்குவதுற்கு உகந்ததாக மிதமான குளிராக்கிக்கொள்ளுங்கள்.
  3. இன்னும் உறங்கும் அறையை பெரும்பாலும் மிதமான இருளாக்கிக் கொள்ளுங்கள்.
  4. உறக்கத்தை கெடுக்கும்படியான எப்பொருளையும் அறையில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
  5. மெல்லிய ஆடைகளை உறக்கத்திற்காக பெரும்பாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  6. மிருதுவான படுக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  7. உறங்க செல்வதற்கு முன்பு சற்று அமைதியாக பிரார்த்தணையின் மூலமோ அல்லது புத்தகம் வாசிப்பின் மூலமோ உடலை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
  8. காலை சூரிய ஒளி உங்கள் மிது படும்படியான இடத்தில் முடிந்தளவு உறங்குங்கள்.
மேற்கூறியவாறு நீங்கள் உறங்க முயற்சியுங்கள் கட்டாயம் உங்களால் சராசரி உறக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.
Previous Post
Next Post