வெள்ளி, 15 அக்டோபர், 2021

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்


முன்னுரை:

இந்த கட்டுரையை இந்த மனித சமூகத்தை உண்மையாகவே நேசிக்கும் நல்உள்ளங்களுக்கும்,வரும்கால சமூகத்தை அழிவின் பாதையிலிருந்து காப்பதற்கு ஆசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அற்பனிக்கின்றேன். குறிப்பாக இந்த உலகையும் இந்த உலகில் கொஞ்சி மகிழப்பட வேண்டிய இயற்கையையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த கட்டுரையை அற்பனம் செய்கின்றேன்.

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறையே தீர்வு.

இன்றைக்கு மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கும் மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பதே கல்விதான் என்பதை அறிந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கும் நிலையை உறுவாக்கி இருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னேற்பாடு என்பதில் அனைவரும் திருப்திகொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.ஏனெனில் கல்வியற்ற சமூகம் என்பது இந்த மனித சமூகத்தையே பேரழிவில் தள்ளிவிடச்செய்துவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை முந்தைய வரலாறுகளின் மூலம் நம்மால் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.என்றாலும் இன்றைய கல்விமுறையை அடிப்படையாகக்கொண்ட தற்போதைய சமூகம் இந்த மனித சமூகத்தை இன்னும் விரைவாக அழிவில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. ஏனெனில் இன்றைய கல்விமுறையே அத்தகைய சூழலை உறுவாக்கி கொடுப்பதாக உணர முடிகின்றது.

அதாவது இன்றைக்கு குழந்தைகளுக்கு இயந்திரத்தனமான பொருளை தேடுவதற்கான கல்வியை மட்டுமே கட்டாய கல்வியாக தினிக்கப்படுவது என்பது ஒரு கட்டத்தில் இந்த மனித சமூகம் தன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் ,தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் இயற்கைகளை மறந்து பாழ்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துவிடும் என்பதையே இங்கு நான் அவ்வாறு கூறுகின்றேன்.இன்றைக்கு பல்வேறு நாடுகளும் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டது என்றும் இந்த பூமி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் கூப்பாடுபோடுவதோடு மனிதர்கள் இந்த இயற்கையை காக்கத்தவறுகின்றனர் என்பதாக குற்றமும் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள்தான் அத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர் என்பதை இங்கு நான் வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.

அதாவது இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படும் பெரும்பான்மையான கல்விகள் மனித வாழ்வை மெறுகூட்டும் கலைகள் என்பதை கடந்து பணத்தையும் பொருளாதாரத்தயும் அடைவதற்கான வழிகளாக அரசே அமைத்து வைத்துவிட்டு பிறகு நாட்டில் மனிதவளத்தையும் இயற்கை வளத்தையும் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு பெறிய அறியாமை என்பதை இன்றைய அரசுகள் உணர வேண்டும்.

மேலும் மனிதர்கள் இந்த உலகில் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத்தான் கல்வி,பொருளாதாரம்,நாட்டின் வளங்கள் என்பவையெல்லாம் அரசே மனிதர்களுக்கு  மறக்கடித்துவிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் பின்னால் அவர்களை ஓடவும் விட்டுவிட்டு, இன்றைய மனித சமூகம் இந்த உலகை சூரையாடுகின்றது என்று கூப்பாடு போடுவது என்பது வடிகட்டிய மடமையன்றி வேறென்ன..?மனிதர்களின் வாழ்வியலை சீர்கெடுக்கும் அத்துனை வழிகளையும் நாமே திறந்து வைத்துவிட்டு மனிதர்கள் அதில் சென்று அழிகின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய அறியாமை..?

எனவே இந்த மனித சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்தத் துடிப்பவர்களும்,இந்த உலகின் இயற்கையை காக்கத்துடிப்பவர்களும் ஆரம்பம் முதலே இந்த மனிதனுக்கு அடிப்படை கல்வியாக இந்த உலகில் யாருக்கும் தொல்லையின்றி மகிழ்ச்சியாக தன்னை நேசிக்கவும் தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிக்கவும் மேலும் இந்த எழில் கொஞ்சும் இயற்கையை நேசிக்கவும் போதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையே என்னுடைய தாழ்வான வேண்டுகோளாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

மேலும் மனிதவாழ்விற்கு பல்வேறு திருப்திகளை தரும் கலைகளை அற்ப வியாபாரம் ஆக்குவதை விடுத்துவிட்டு அதை மனிதர்களை மேம்படுத்தும் கலைகளாகவும்,மனிதர்களை உற்சாகமூட்டும் திறன்கலாகவும் போற்றப்படுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக இந்த உலகில் மனித வாழ்வில் பெருந்துன்பங்களும், குற்றங்கலும்,இயற்கை சீரழிவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர இவ்வுலகில் எவ்வித முன்னேற்றங்களும் நடந்தேறிவிடாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு கட்டுரையின் முடிவுக்கு வருகின்றேன்.

முடிவுரை:

இன்றைக்கு கல்வி என்ற பெயரில் மனித வாழ்விற்கு பெரிதும் பயன்தரக்கூடிய பல்வேறு கலைகள் வியாபாரமாக்கப்பட்டிருப்பது நாமெல்லாம் அறிந்த உண்மையே ஆகும்.அவ்வாறே மனிதர்களுக்கு எக்காலமும் பயன்தரக்கூடிய இந்த உலகின் இயற்கைகளும் மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.அதன் விளைவாக இன்றைக்கு உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்தித்துவருவதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.

இதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நம்முடைய கல்விமுறையை வியாபார நோக்கமாக மட்டும் ஆக்குவதை விடுத்துவிட்டு மகிழ்ச்சியான மனித வாழ்வை போதிப்பதற்கானதாக ஆக்கவேண்டும்.அல்லது பொருளாதார கல்வியை போதிப்பதோடு மனித வாழ்வியலை மகிழ்வாக்கிக் கொள்ளுவதற்கும் மேலும் இயற்கையை நேசிப்பதற்குமான ஒரு பாடத்திட்டத்தையேனும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்யவில்லையெனில் இந்த மனித சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை மிக வருத்தத்தோடு இங்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.

நன்றி

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதனைகளெனும் ஏமாற்று வித்தை

முன்னுரை:

இன்றைக்கு குழந்தைகளுக்கும் சரி வாலிபர்களுக்கும் சரி சாதனை என்பதாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது மூன்றே மூன்று விஷயங்கள்தான் என்பதாகவே நான் காண்கின்றேன்.அவற்றைத்தவிர்த்து இந்த உலகில் மனிதன் பெரிதாக சாதிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பதைப்போன்ற கட்டமைப்பையே இந்த உலகம் உறுவாக்கி வைத்திருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அந்த மூன்றும் என்ன என்பதையும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்குவதே எனது இந்த கட்டுரையின் நோக்கமாக கொண்டுள்ளேன்.வாருங்கள் அவற்றைப்பார்த்துவிடுவோம்.

அவைகள்:

முதலாவது : செல்வம் சேர்ப்பது.

இரண்டாவது:பிரபல்யமாவது:

மூன்றாவது:அதிகாரத்தில் அமர்வது:

1.செல்வம் சேர்ப்பது சாதனையா?

செல்வம் சேர்ப்பதை இன்றைய மனிதர்கள் மகத்தான சாதனை என்று எல்லா சமயயங்களிலும் வலியுறுத்துவதை பார்க்கமுடிகின்றது.எனவே செல்வம் உடையவர்களையே இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக வரும் கால சமூகத்திற்கு முன்வைக்கப்படுகின்றது.உண்மையில் என்னைப் பொறுத்த மட்டில் இது மிகப்பெரும் ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றேன்.

ஏனெனில் மனிதனின் தேவைகளில் ஒன்றான இந்த உலக செல்வம் என்பது மனிதனுக்கு அவசியம்தான் என்றாலும் அதனை காகித செல்வமாகவும் பொருள் செல்வமாகவும் மாற்றி அவைகள் அனைத்தையும் எவன் அடைந்துகொள்வானோ அவன்தான் மிகச்சிறந்தவன் என்று கூறி அவன் இந்த உலகில் ரசிக்க வேண்டிய அனைத்தையும் பிடிங்கிக்கொண்டு உலகம் தனக்குத்தேவையான அத்துனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்வதே இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படை நோக்கமாக நான் காண்கின்றேன்.

இங்கு நான் ஏதோ தமிப்பட்ட ஆன்மிகத்தையோ அல்லது துறவறத்தையோ வலியுறுத்த விரும்புவதாக தயவுகூர்ந்து எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் அதுவும் இதுபோன்றே வேறுவிதமான மனித சுரண்டலுக்கு ஆளாக்கும் முக்கியமான ஒன்றுதான் எனபதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது இந்த உலகில் வியாபார நோக்கோடு உறுவாக்கப்பட்ட அத்துனை செல்வத்தையும் அடைவதுதான் ஒரு மனிதனின் மகத்தான நிலை என்றும் மெலும் அதுதான் அவன் வாழ்வின் மிகப்பெரும் சாதனை என்றும் சித்தரிக்கத் துடிப்பது மிகப்பெரும் ஏமாற்று வித்தை என்பதை இங்கு புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.

எனவே இந்த உலகில் மனிதர்கள் வியாபார நோக்கோடு உறுவாக்கிய அல்லது சுய நலனிற்காக மட்டும் உறுவாக்கிய பொருட் செல்வங்களையோ அல்லது பணக்காகிதங்களையோ ஒருவன் அதிகம் அடைந்துவிட்டான் என்பதற்காக அவன் சாதனையாளனாக பார்க்கப்படுவது என்பது என்னைப் பொறுத்தமட்டில் மகத்தான ஏமாற்றாகும்.இன்னும் சொல்லப்போனால் அவன்தான் இந்த உலகின் மிகச்சிறந்த அடிமை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாமல் போகலாம்.அல்லது பொருட்களும் பணக்காகிதமும் மட்டுமே உலகம் என்று உறுவாக்கப்பட்ட இன்றைய பொருளாதார அமைப்பின் ஆதிக்கம் உங்கள் கண்களை மறைக்கலாம்.ஆனால் மனிதனை இயந்திரத்தனமாகவும் அடிமையாகவும் மாற்றுவதற்கான கருவியே இந்த உலகமயமாக்கப்பட்ட பொருட் செல்வங்கள்தான் என்பதை பொருளாதாரத்தின் அடிப்படைவிதிகளே விளக்குவதை காணும்பொழுது இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதைப்பற்றி நான் கவலைபடப்போவதில்லை.

இன்றைய பொருளாதர கோட்பாடே மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனை பல்வேறு கட்டாயத்திற்குள் அடிமைப்படுத்தும் மிகப்பெரும் சதி என்பதே எனது தெளிவான கண்ணோட்டமாக நான் கருதுகின்றேன்.எனவே மிகப்பெரும் செல்வம சேர்ப்பது என்பது ஒருபோதும் பெரும் சாதனையாக பார்க்கப்பட முடியாது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாரெல்லாம் செல்வம் சேர்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஓடுகின்றார்களோ அவர்களுக்கு அது ஒரு வேளை சிற்றின்பம் அல்லது மனமகிழ்வை கொடுத்தாலும் உண்மையில் அது இந்த உலகில் அவர்கள் அடைந்துவிட்ட மகத்தான சாதனையாக பார்க்க எவ்வித தகுதியுமற்றதே என்பதை சுட்டிக்காண்பித்துக்கொண்டு அடுத்தபடியாக பிரபல்யமாவது இந்த உலகின் மகத்தான சாதனையா? என்பது சம்மந்தமாக பார்ப்போம் வாருங்கள்.!


2.பிரபல்யமாவது சாதனையா?

இன்றைக்கு எல்லோரும் தன்னை இந்த உலகமே நேசிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை பாராட்ட வேண்டும் என்றோ ஆசிக்கும் நிலை பரவலாகிவிட்டது.பிற மனிதர்களின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அல்லது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவுமே மட்டும் இங்கு பலரும் மஹா யுத்தமே புரிகின்றனர் என்றாலும் அது மிகையாகாது.

ஆம்...!

மக்களிடம் பிரபல்யம் ஆவது என்பது ஒரு பெரும் சாதனை என்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு இங்கு செயல்படும் மனிதர்களின் அட்டகாசம் சொல்லிலடங்காதது என்றே நான் கருதுகின்றேன்.தங்களையும் தங்களின் வாழ்வையும் மறந்துவிட்ட அம்மனிதர்கள் மக்கள் என்ன ஆடை அணிந்தாள் விரும்புவார்கள் என்றும் என்ன பேசினால் விரும்புவார்கள் என்றும் என்ன காட்டினால் விரும்புவார்கள் என்றும் அங்குளம் அங்குளமாக தரவுகள் தயாரித்து வைத்துக்கொண்டு அதற்கு தக்கவாறு தங்களையும் வெளிக்காட்டுவதின் மூலம் மக்களிற்கு மிக பிடித்தமானவர்களாக ஆவதற்கு போராடி வருகின்றனர்.

மேலும் சிலசமயங்களில் அவர்கள் தங்களின் குறூற கருத்தாக்கங்களான போதை பொருள் பாவித்தல் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் கொலை கொள்ளையை ஊக்குவித்தல் மற்றும் சமூக வெறுப்பை தூண்டுதல் போன்ற மானக்கேடான செயல்களையும் பரப்புவதற்கு இந்த பிரபல்யத்தையே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் இன்றைய பிரபல்யங்களில் பெரும்பாலானோர் மக்கள் தங்களின் காட்சியை பார்த்துவிட்டாலே போதுமானது அது தன் சாதனைக்கான அங்கிகாரம் என்பதாக தவறாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் மக்கள் பிரபலங்களை பார்க்கின்றார்கள்,ரசிக்கின்றார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வெறும் பிரபல்யத்தை மட்டும் ஒருவரின் உயர் சாதனையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

ஏனெனில் இந்த உலகில் யானைகள்,நாய்கள்,ஓநாய்களும் கூட காட்சிபடுத்தப்படுவதால் மிக பிரபல்யமாகிவிடுகின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.எனவே பிரபல்யம் என்பது ஒரு பெரும் சாதனை என்பது ஒரு போலியான ஏமாற்று வித்தை என்பதாகவே நான் கூற விரும்புகின்றேன்.இத்தகைய வித்தையை வியாபார நோக்கோடு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊக்குவிக்குகின்றதே தவிர மற்றபடி மக்கள் பிரபல்யங்களை கொண்டாடுகிறார்கள் என்பது பொய்யான பிம்பமேயாகும்.

இங்கு ஒரு முக்கியமான அடிப்படையையும் விளக்கிவிட விரும்புகின்றேன். அதாவது மக்களுக்கு பெரிதும் உபயோகப்படும் காரியங்களை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக பிரபல்யப்படுத்தவேண்டியது கட்டாயம்தான் என்றாலும் இன்று தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கே சில நற்காரியங்களை செய்து மக்களிடம் அங்கிகாரமும் பாராட்டும் தேடும் நிலை முன்பில்லாததை விட இப்பொழுது மிகவும் அதிகரித்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.

இதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைக்கு வியாபார நோக்கம்கொண்ட சில சுய விளம்பர விரும்பிகள் தங்களின் சுயநலனுக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதையும்,மேலும் அவர்கள் தங்களை இந்த உலகிற்கு பெரும் சாதனையாளர்களாக காட்டிக்கொள்வதையும் கண் ஊடாக காணமுடிகின்றது.ஆகவே அண்பர்களே நீங்கள் உங்களையோ அல்லது உங்களுடைய செயலையோ வெறும் மக்களின் அங்கிகாரத்திற்காவோ அல்லது பாராட்டிற்காகவோ மட்டும் விரும்பி பிரபல்யப்படுத்த விரும்பினால் அதைவிட மிக அறிவீனம் வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அது ஒரு ஏமாற்று வித்தைதானே தவிர வேறொன்றுமில்லை.மேலும் அது உங்கள் வாழ்வில் பிரயோஜனங்களை இழுத்து வருவதைவிட நிறைய பிரச்சனைகளையே கொண்டு வரும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் பிரபல்யம் என்பது சாதனை என்பதை தாண்டி அது ஒரு பெரும் சோதனை என்பதாகவே கருதுகின்றேன். 


3.அதிகாரத்தில் அமர்வது சாதனையா?

உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கு பாடுபட்டதைபோல் அவனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் இந்த மனிதசமூகம் இரண்டாயிரம் ஆண்டிற்கான முன்னேற்றத்தை இன்றே பெற்று இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இந்த மனித சமூகத்தின் வாழ்வு அடக்குமுறைகளாளும் அதிகார வெறியாலும் கபலிகரம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதையே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்....!

குடும்பத்தில் யார் தலைவராக இருந்து முடிவெடுப்பது என்பதில் தொடங்கி பணி செய்யும் வேலை இடங்களை கடந்து அரசு ஆட்சி வரை அத்தனையிலும் அதிகார வெறி அன்றிலிருந்து இன்றுவரை கோரத்தாண்டவம் ஆடுவதையும் அதை பெறுவதற்காக மனிதர்கள் போடும் நாடகங்களையும்,ஜாலங்களையும் காணும் போழுது அதிகாரத்தில் அமர்வதுதான் மாபெரும் சாதனை என்றே நம்மில் பலரும் எண்ணலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல..!

மனிதர்களை அச்சுறுத்தி அடக்கியாளுவதற்கு மட்டுமான  அதிகாரம் இந்த மனித சமூகத்திற்கான சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.இன்றைய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் போலியான மதிப்பை சம்பாரித்து தரும் அடக்குமுறைக்குட்பட்ட அதிகாரத்தில் அமர்வது தான் சாதனை என்பதாக ஊக்குவிப்பது இந்த மனித இனத்தை மீட்ட முடியாத இழப்பில் தள்ளிவிடுவதைப் போன்றே என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் ஒரு அவளமானநிலை எப்படி ஒரு சிறந்த சாதனையாக போற்றப்பட முடியும் என்பதே எனது கேள்வியாகும்?அவ்வாறே மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து தன்னை உண்மையாக அற்பனிக்கும் ஒருவனுக்கு முன்னால் இத்தகைய போலியான அதிகாரத்தால் மக்களை அடக்கியாள துடிப்பவன் எப்படி சாதனையாளனாக பார்க்கப்படமுடியும்??அங்கு தான் அதிகாரவர்க்கங்களின் கோர முகம் ஒழிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஆம்..!

இந்த மனித சமூகத்தை அடக்கியாள்பவர்களே மக்களில் உயர்ந்தவர்கள் என்றும் சாதனையாளர்கள் என்றும் மரியாதைக்குறியவர்கள் என்றும் ஒரு போலிபிம்பத்தை மக்களை அடக்கியாளத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தினர் சமூகத்தில் மிக ஆழமாக தோற்றுவித்துவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தை வழங்கிய அந்த மக்களே அவர்களை வியந்து காணும் அளவிற்கு அதிகார பீடத்தை போலி மரியாதைகளாலும் சுகபோகங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரித்து ஒரு ஏமாற்று வித்தையை உறுவாக்கிவிட்டனர்.

அதுவே இன்று மக்களில் பெரும்பாலோர் அதிகாரத்தில் அமர்வதுதான் சாதனை என்று எண்ணுவதற்கான அடிப்படை காரணியாகவும் அமைந்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரத்தில் அமர்வது என்பது ஒருபோதும் சாதனையல்ல. மாறாக அது வெறுமனே அதிகாரம் செலுத்துவதற்கான இடமாக மட்டும் இருந்தால் அது மக்களுக்கும் அனைவருக்கும் சாபமே என்றே நான் கருதுகின்றேன்.

இங்கு ஒரு முக்கிய அடிப்படையையும் விளக்கவிரும்புகின்றேன்.அதாவது ஆட்சி அதிகாரம் செலுத்தும் இடமானது மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு நிறைந்த இடம் என்பதாக அது பார்க்கப்பட வேண்டுமே தவிர அது தனி மனித புகழைத்தேடும் சாதனைக்கான இடமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே யார் அதில் அமர்ந்து உண்மையிலேயே மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து உதவி புரிகின்றார்களோ அவர்கள் மக்களால் சிறப்பு மிக்கவர்களாக போற்றப்படுவது எனபது வரவேற்கதக்கதேயாகும்.

ஆனால் இவற்றிற்கு மாறாக வெறுமனே அதிகாரத்தில் அமர்வதை மட்டும் சாதனையாக ஊக்குவிப்பது என்பது இந்த மனித சமூகத்தை இன்னும் இரட்டிப்பான அடக்குமுறைக்கு வழிவகுக்குமே தவிர எவ்வித மனித முன்னேற்றத்தையும் தந்துவிடாது என்பதே எனது கருத்தாகும்.


முடிவுரை:

இந்த உலகில் மனிதர்கள் தங்கள் செயலை ஆக்கப்பூர்வமாக மென்மேலும் செயல்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுவது என்பது ஒரு சிறந்த செயல்தான் என்றாலும் இன்று சாதனை என்ற பெயரில் சுயலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் மனிதர்களை கண்கட்டிய குதிரைகளாக உறுவாக்க விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை தொகுத்தேன்.

மேலும் இன்று சாதனைகளாக போற்றப்படும் பல்வேறு விஷயங்கள் வெறும் சுயலாபத்திற்கான ஏமாற்று வித்தைகளே என்பதையும் தோலுறித்துக்காட்ட வேண்டும் என்றும் விரும்பினேன்.ஆக வாலிப அண்பர்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலை போலியான சாதனை போதைக்கு அடிமையாக்கிவிடக்கூடாது என்பதே எனது இந்த கட்டுரையின் முக்கிய  நோக்கமாகவும் கொண்டிருக்கின்றேன்.எனவே இதனை முடிந்தளவு என்னுடைய கண்ணோட்டத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் இது உங்களுக்கு பயனலிக்கும் என்றே நான் கருதுகின்றேன்..!

(அடுத்த கட்டுரையில் எது சாதனை?என்பதை இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.)

நன்றி:

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது
கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது

1939 ஆங்கிலேயே காலம் தொட்டு இந்திய குடியரசு அமைத்த பின்பும் கல்வி மாநில ஆட்சியின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.ஆனால் 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உள்நாட்டு பிரச்சனைகளால்  நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி நாடு முழுவதும் அவசர சட்டத்தை அறிவித்தார்.அச்சமயம் பல்வேறு அரசியல் சட்டரீதியான உரிமைமீரல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அந்த உரிமைமீரல்களில் ஒன்றுதான் கல்வி உரிமையை ஒன்றிய அரசு தன் அதிகாரத்திலேயே வைத்துக்கொண்டதும் என்பதாக நம்மால் கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கும் பொழுது அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய துணை குடியரசு தலைவரான வெங்கைய நாயுடு அந்த அவசர சட்டத்திற்கு வேறொரு காரணத்தையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டு காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது இந்திரா காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினருக்கான வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அறிவித்ததே இந்த அவசரநிலை சட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

எது எப்படியோ.!

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1977 லிலேயே அவசர சட்டம் நீக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசு அரசியல்சாசன சட்டத்தின்படி கல்வியில் மாநிலத்திற்கான சுய உரிமையை வழங்கமறுத்துவிட்டதே மாநில ஆட்சிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.மாநில அரசிடம் கல்வியை வழங்காமல் போனதற்கான பொய் காரணத்தையும் ஒன்றிய அரசு அன்றே முன் வைத்தது.அதாவது தரமான சீரான ஒரேமாதிரியான கல்வியை ஒன்றிய அரசே வகுத்து வழங்கும் என்பதுதான் அந்த மாநில உரிமையை பறித்துக் கொள்வதற்கான பொய்யான வாக்குறுதி.

வாக்குறுதியை வழங்கிய அரசு அதில் உண்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.தரமான கல்வி என்ற பெயரில்  பல்வேறு மாநிலங்களிலும் மாநில மொழியை புறக்கணித்து விட்டு இந்தியை புகுத்த நினைத்ததும், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பாடுபட்டதுமே வெளிச்சத்திற்கு வந்தது.அது அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறிக்கும் படியான நீட் போன்ற தேவையற்ற தேர்வுகளையும் தானே முன்னெடுத்து நிறுத்துவதின் மூலம் தனக்கு சாதகமான குறிப்பிட்ட சாரார்களை மட்டும் குறிப்பிட்ட துறைகளில் ஆக்கிரமிப்பு செய்யவே வழி வகை செய்துகொண்டது.

(குறிப்பு: இன்றைய இரயில்வே துறையிலிருந்து,தபால் துறை வரை இந்தியின் ஆதிக்கமும் வடவர்களின் பங்களிப்புமே அதிகம் காணப்படுவது மத்திய அரசின் வஞ்சகத்திற்கு பெரும் உதாரணமாகும்.)இதையெல்லாம் கேள்வி கேட்க எந்த மாநிலங்களும் துணியாத நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி உரிமையை கோரியிருப்பதும்,நீட் போன்ற போலியான தேர்வுகள் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் உயர்கல்வியை பறிப்பதை எதிர்ப்பதும் தமிழக மக்களுக்கான விடியாலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.!

திங்கள், 13 செப்டம்பர், 2021

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது?

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது
ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது

முன்னுரை:

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்று கேட்கும் அனைவரிடமும்"நீங்கள் ஏன் புத்தகம் படிக்கபோகின்றீர்கள் என்று கேட்பது என்னுடைய வழக்கமாகும்.ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது எப்படி என்பது அவரவர்களின் நோக்கங்களை பொறுத்தே அமைகின்றது என்பதாக கருதுகின்றேன்.மேலும் இன்றைய புத்தக வாசிப்பாளர்களை பல வகையினராக பிறிக்க முடியும் என்றாலும் அவர்களில் சில வகையினரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாசிப்பாளர்களின் வகைகள்:

1.நல்ல நண்பனாக நினைத்து படிப்பவர்கள்.

இந்த வகையினரில் நிச்சயமாக நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை முதலில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொண்டு இந்த சாரார்கள்தான் புத்தகமே தேடும் நபர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இவர்கள் புத்தக காதலர்கள் என்பதால் எத்தகைய புத்தகங்களை நீங்கள் இவர்கள் கையில் கொடுத்தாலும் அதை ஒரு சில மனித்துளிகளில் அதனுடைய மொத்த சாராம்சத்தையும் விளக்கிவிடுவார்கள்.

இவர்களுக்கு புத்தகத்தை படிப்பதற்கான எந்த வறைமுறையும் அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இவர்கள் இருளிலும் படிப்பார்கள், வெளிச்சத்திலும் படிப்பார்கள்.தனிமையிலும் படிப்பார்கள், கூட்டத்திலும் படிப்பார்கள்.ஆகவே இவர்களுக்கு படிப்பதை கற்றுக்கொடுக்க எந்த தேவையும் இல்லை என்பதால் நாம் அடுத்த வகையினரை பார்ப்பதே சிறந்தது என்று கருதுகின்றேன்.

2.அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட உங்கள் துறை சார்ந்த புத்தகங்களை படிப்பதே மேலானதாகும். உதாரணமாக நீங்கள் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அறிவியல் சார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.அதைவிடுத்துவிட்டு வரலாறோ அல்லது புவியியலையோ படிப்பீர்களேயானால் உங்களுடைய புத்தகம் படிக்கும் ஆசை உங்களைவிட்டும் மிக விரைவில் சென்றுவிடும் என்பதே நிதர்சனமான உலவியல் சார்ந்த உண்மையாகும்.

"அப்படியானால் வெவ்வேறு துறைகளின் புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்று கேட்பீர்களேயானால் அங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்க விரும்புகின்றேன்.அதாவது உங்களுடைய அறிவுத்தேட்டம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துத்தான் உங்களுடைய புத்தக வாசிப்பும் தொடரும் என்பது எனது கருத்தாகும்.உங்களால் பல் துறைகளின் புத்தகங்களை நிச்சயமாக வாசித்துவிட முடியும் என்றாலும் அதில் உங்களுடைய அறிவு தேடல் என்பது எவ்வளவு இருக்கின்றது என்பதை பொறுத்தும் நீங்கள் அத்துறையில் முன்பே எவ்வளவு அடிப்படையாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துமே உங்களுடைய வாசிப்பிற்கான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

எனவே அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் புத்தகம் வாசித்தால் முடிந்தளவு நீங்கள் உங்கள் துறை சார்ந்த புத்தகத்தை வாசியுங்கள்.அல்லது நீங்கள் படிக்கும் அப்புத்தகம் ஒரு துறையின் அடிப்படையான அறிவை போதிக்கும் புத்தகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் புத்தகம் வாசிப்பதைவிட அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கின்றோம் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிப்பதால் பெரும்பாலும் அமைதியான இடங்களை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு  சிறந்ததாகும். ஏனெனில் புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது அதனை சிந்தனையில் செலுத்தும்பொழுதோ வேறு சில இடையூறுகள் இருந்தால் அது நம்மை ஆரோக்கியமாக புரிந்து கொள்வதை விட்டும் தடுத்துவிட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.எனவே சிந்தித்து உணர வேண்டிய புத்தகங்களை பெரும்பாலும் தனிமையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறே குறிப்பிட சில பக்கங்களை படித்துவிட்டால் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி படிப்பதற்கு ஓய்வுவிடுங்கள்.அச்சமயம் அமைதியாக அமர்ந்து அது சம்மந்தமாக சிந்தித்துப்பாருங்கள்.அது உங்களுக்கு புதிய பல தீர்வுகளை அளிக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கையாகும்.

3.ஆழமான ஞானம் பெறுவதற்காகவோ அல்லது மன அமைதிக்காகவோ படிப்பவர்கள்.

நீங்கள் ஆழ்ந்த ஞானம் படைக்க வேண்டுமெறோ அல்லது உங்கள் மனதை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்றோ நினைத்தால் நீங்கள் பைபிள்,அல்லது குரான்,அல்லது பகவத் கீதை போன்ற புனித நூல்களை வாசிப்பது சிறந்ததாகும்.ஏனெனில் பெரும்பாலும் மத நூல்கள் பல்வேறு வாழ்வியல் நெறிகளை மிக அற்புதமாக போதிக்கின்றது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அவ்வாறே அந்த புத்தகங்களை உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒன்றாக அமர்ந்து வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஒருவர் வாசித்து அனைவரும் செவிமடுப்பது அதனை புரிந்து கொள்வதற்கும் மேலும் வாழ்வில் அனைவரும் கடைபிடிப்பதற்கும் மிக இலகுவானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.இத்தகைய முறையயே நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் கடைபிடித்துவருகின்றோம் என்பதால் அதனையே உங்களுக்கும் நான் முன்மொழிகின்றேன்.

4.ஒரு மொழியை கற்பதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் ஒரு மொழியை கற்பதற்காக புத்தகங்களை படிப்பவராக இருந்தால் இன்று பல்வேறு மொழிப்புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.மேலும் அவற்றை ஒரு சில நாட்களிலேயே கற்றுவிடும் அளவிற்கு கூட மிக எளிய வடிவில் தொகுக்கப்படுகின்றன.எனவே நீங்கள் மொழியை கற்பதற்காக படிப்பவராக இருந்தால் இரண்டு அடிப்படையான புத்தகங்களை நீங்கள் நிச்சயம் வாசித்தாக வேண்டும்.

ஒன்று அந்த மொழி சார்ந்த இலக்கண இலக்கிய சட்டங்கள் பொதிந்த புத்தகங்கள்.இரண்டாவது அந்த மொழியின் வார்த்தைகள் தொகுக்கப்பட்ட அகராதிகள்.இவை இரண்டையும் நீங்கள் தொடந்து வாசித்து வந்தால் மட்டுமே ஒரு மொழியில் உங்களால் தேர்ச்சி பெறமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறே இதனை மிக ஓர்மனதோடு மனதில் பதியவைக்கவேண்டிய அவசியம் இருப்பதால் காலை பொழுதுகளில் அமைதியான சூழலில் கற்பது சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

5.வாசிப்பது நல்ல பழக்கம் என்பதற்காக வாசிப்பவர்கள்.

வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் அதனை உங்கள் வாழ்விலும் அமைத்துக் கொள்வதற்காக நீங்கள் புத்தகங்கள் வாசிப்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் நீங்கள் மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் அல்லது தினசெய்தித்தாள்கள் வாசிப்பதே போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அப்படி அதுவும் போதவில்லையானால் வெற்றியாளர்களின் வரலாறுகள் அல்லது பொதுவான ஏதேனும் கதைகளை வாசிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனது பரிந்துரையாகும்.

வாசிப்பதை வெறும் பழக்கமாக மட்டுமே ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.ஏனெனில் வெறும் சடங்கிற்காக படிக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு மிக கவனம் என்பது அவசியமில்லை.

6.பொழுது போக்கிற்காக படிப்பவர்கள்.

பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் த்ரில்லர் புத்தகங்கள் அல்லது தொடர் கதைகள் படிப்பது மிக பிரயோஜனமாக இருக்கும்.ஏனென்றால் அவைகள் நம்முடைய மூளைக்கு பல சுவாரஸ்யங்களையும்,எதிர்பார்ப்புகளையும் கூட்டி ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதாரணமாக பயணத்தில் செல்லும் பொழுது பேருந்திலோ அல்லது ரயிலிலோ புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  நாவல் அல்லது த்ரில்லர் கதைகளை படிப்பதே சிறந்தது என்பதாக நான் கருதுகின்றேன்.அவ்வாறே அதனை உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.

ஆக இந்த ஆறு வகையான புத்தக வாசிப்பாளர்களையே நம்மால் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.அடுத்தபடியாக ஒரு புத்தகத்தை நாம் எவ்வாறு அணுகுவது என்பதையும் சுறுக்கமாக விளக்கிவிட விரும்புகின்றேன்.

 ஒரு புத்தகத்தை எவ்வாறு அணுகுவது.?

1.புத்தகங்கள் வாசிப்பதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முடிந்தளவு அடிப்படை உங்களுக்கு முன்பே கொஞ்சம் தெரிந்த விஷயத்தையே ஒரு புத்தகத்தில் படிக்க முயலுங்கள்.அது உங்களுடைய புத்தக வாசிப்பின் ஆர்வத்தை போக்கிவிடாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.அப்படி ஒரு வேளை அத்துறையை படித்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் முதலில் அது சம்மந்தமான அடிப்படை விஷயங்களை கொண்ட புத்தகங்களை வாசியுங்கள்.பிறகு ஆய்வு புத்தகங்களை வாசிப்பது மிக இலகுவாகிவிடும். 

2.புரிவதற்கு மிக கடினமான நீண்ட ஆய்வு புத்தகங்களை எந்த அடிப்படையும் தெறியாமல் வாசிக்காதீர்கள்.ஏனெனில் அது உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

3.ஒரு மொழியை கற்பதற்காக ஒரு மொழியில் உள்ள மிகக்கடினமான ஆய்வு புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பல குழப்பங்களையே கொடுக்கும்.

4.ஒரு துறையில் நீங்கள் மிக அனுபவம் மிக்கவராக இருந்து கொண்டு அத்துறை சார்ந்த ஆரம்ப அடிப்படைகள் சார்ந்த புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அதுவும் உங்களுடைய நேர வீணடிப்பாகவே அமையும் என்றே நான் கருதுகின்றேன்.இதுவே ஒரு நல்ல புத்தக வாசிப்பாளர் ஒரு புத்தகத்தை அணுகும் சிறந்த முறையாக நான் கருதுகின்றேன்.முடிந்தால் நீங்களும் கடைபிடியுங்கள்..!தொடர்ந்து வாசிக்க அமேசானில் எனது புத்தகம் இடம்பெற்றுள்ளது.அதனை பெற்று வாசித்து பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி:

புதன், 1 செப்டம்பர், 2021

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?timing-management

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது-timing-management
நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது

முன்னுரை:

நம்மில் பலருக்கும் நம் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்திருக்கும்.அவ்வாறே எதை எப்பொழுது செய்வது என்பதிலும் மிகப்பெரும் சிக்கல்களும் இருந்திருக்கும்.அவற்றையெல்லாம் போக்கவே நேரமேலான்மை அறிஞர்களில் சிலர் ஒரு அற்புதமான அட்டவனையை உறுவாக்கினார்கள்.அவர்கள் உறுவாக்கிய அந்த அட்டவணையானது நம்மில் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு நான் அவற்றை பதிவு செய்கின்றேன். கட்டாயம் நீங்களும் அதனை கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் நேரம் உங்கள் கைவசமிருக்கும்.

நேரத்தை எப்படி பாதுகாப்பது?

முதலில் நாம் நம்முடைய நேரத்தை பாதுகாக்க நம்முடைய காரியத்தை 4 வகையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதாவது..!

1. உடனே செய்ய வேண்டியதும்,மிக அவசியமானதும்.

2. உடனே செய்ய வேண்டியதல்ல,ஆனால் மிக அவசியமானது.

3. உடனே செய்ய வேண்டியது,ஆனால் அவசியமற்றது.

4. உடனே செய்ய வேண்டியதுமல்ல,மிக அவசியமானதுமல்ல.

இப்படி நம் வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய காரியங்களை நான்கு வகையாக பிறித்துப்பார்த்தால் இப்பொழுதே செய்தாக வேண்டும் என்ற காரியங்கள் மிக குறைவாகவே இருக்கும்.அவற்றில் முதலில் எதனை செய்தால் தொல்லை நீங்குமோ அத்தகைய காரியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.இதனைத்தான் காலையில் எழுந்தவுடனே ஒரு பெரிய தவலையை விழுங்கி விடுங்கள் என்று ஒரு புத்தக ஆசிரியர் அற்புதமாக கூறுகின்றார். அதாவது அன்றைய அட்டவனையில் உங்களுக்கு மிக முக்கியமான காரியம் என்று எதனை நினைக்கின்றீர்களோ அதனையே முதலாவதாக செய்து முடித்துவிடுங்கள் என்கிறார்.அதனால் உங்களுடைய மனதில் இருக்கும் பெரும் பாரம் குறைந்து அன்றைய நாள் மிக மகிழ்சிக்குறிய நாளாக ஆரம்பத்திலேயே இருக்கும் என்பதாகவும் விளக்கமளிக்கின்றார்.

இங்கு எதனை முதலில் செய்வது என்பதில் குழப்பமுள்ளவர்களுக்கு நான் வாசித்த ஒரு துறவியின் உபதேசம் மிக பலனுள்ளதாக அமையும் என்பதால் அதனையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

"ஒரு ஊரில் ஒரு துறவி தன் மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு அந்த ஊரின் செல்வந்தார் மிக பதட்டமான சூழலில் ஓடிவந்தார்.துறவி என்னப்பா உனக்கு வேண்டும் என்றார்...!

"துறவியே! நான் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன்.ஒரு புறம் என் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அவள் படுத்த படுக்கையில் இருக்கிறால்,மற்றொரு புறம் என் வியாபாரத்தை பார்த்துக்கொள்ள யாருமே இல்லை.எனவே நான் என்ன செய்வது என்று தெறியாமல் இரண்டு மூன்று நாட்களாக தவிக்கின்றேன் என்று கூறினார்.

ஓஹ் அப்படியா,,?அதுதான் உன்னுடைய பிரச்சனையா?என்று பொறுமையாக கேட்ட துறவி தன் பையில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையையும் ஒரு சில கற்களையும் கையில் கொடுத்து இந்த கண்ணாடி குடுவையை இந்த கற்களால் நிரப்பி வை இதோ வருகின்றேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.இதனைக் கேட்ட அந்த செல்வந்தனுக்கு மிக கோபம் வந்துவிட்டது.நான் பிரச்சனை என்று ஒன்றை கேட்க வந்தால் இந்த துறவி சம்மந்தமே இல்லாமல் கற்களை பாட்டிலுக்குள் நிரப்ப சொல்கின்றானே என்று மனதோடு புழம்பிக்கொண்டு ஒவ்வொரு கற்களாக நிரப்பத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த துறவியிடம் அச்செல்வந்தன் ஐயா இந்தாங்கள் உங்கள் கண்ணாடி குடுவை அதில் கற்களை நான் நிரப்பிவிட்டேன் என்று கையில் கொடுத்தார்.அதனை தன் கையில் பெற்ற துறவி அடடே.!அழகாய் நிரப்பி இருக்கின்றாயே..!நான் உன்னிடம் பெரிய கற்களும் சிறிய கற்களுமாகவல்லவா கொடுதேன் அதை எப்படி பிறித்து இவ்வளவு அழகாக பாட்டிலுக்குள் அடைத்தாய் என்று கேட்டார்..?தொடர்ந்து வாசிக்க என்னுடைய "நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது" என்ற புத்தகத்தை வாசியுங்கள்.அதில் இன்னும் பல அற்புதமான சிந்தைகளையும் அட்டவனைகளையும் இணைத்துள்ளேன்.நிச்சயமாக அவைகள் உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்(Self confidence)

கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்
கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்


தன்னம்பிக்கையே வெற்றி தரும்.

இந்த உலகில் பிறந்து விட்ட ஒவ்வொரு மனிதனிடமும் காணப்பட வேண்டிய மிகச்சிறந்த ஆற்றல் தன்னம்பிக்கை.அதாவது ஒரு விஷயத்தை தன்னாலும் செய்யமுடியும் என்று நம்புவது என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் அல்லது தன்மீது எச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.இந்த உலகில் சிலர் மட்டும் தங்கள் வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று என்னிடம் கேட்கப்படும் சமயங்களிலெல்லாம் நான் கூறும் ஒற்றை பதில் தன்னம்பிக்கையால்தான் என்பதே..!

ஏனெனில் எந்த மனிதன் தன்மீது நம்பிக்கை வைத்துவிடுவானோ அவன் ஆயிரம்முறை தோற்றாலும் நிச்சயமாக அவன் அவன்மீது வைத்த அந்த நம்பிக்கை அவனை ஒரு காலமும் வீணடித்துவிடாது என்பதே எனது ஆழமான நம்பிக்கையாகும்.மேலும் என்றேனும் ஒரு நாள் அவன் ஜெயித்தே தீருவான் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கின்றது என்பதையும் நான் நிதர்சனமாக கருதுகின்றேன்.

அவ்வாறே எந்த மனிதன் தன் மீதே சந்தேகம்கொள்வானோ அவன் எத்தகைய உச்சியில் இருந்தாலும் என்றேனும் ஒரு நாள் மிகப்பெரும் இழப்பை சந்திப்பான் என்பதையும் நிதர்சனமான உண்மையாகவே நான் காண்கின்றேன்.ஆம் அன்பர்களே..!நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை கவனித்தே நாம் வெற்றியாளராவதும் தோல்வியாளராவதும் முடிவு செய்யப்படுகின்றது என்பதை தயவுகூர்ந்து என்றாவது ஒருநாள் புரிந்துகொண்டுவிடுங்கள்.

அப்படி ஒருவேளை உங்களால் உங்களை நம்பவேமுடியவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு வழிமுறையை இங்கு நான் குறிப்பிடுகின்றேன் அதனை கட்டாயம் கடைபிடித்து வாருங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வழி

1.சற்று தனிமையில் அமர்ந்து உங்கள் மனதோடு பேசுங்கள்.அது ஏன் உங்களை நம்பமறுக்கின்றது என்பதை பொறுமையாக அதனிடம் கேழுங்கள்.நீங்கள் சாதிப்பதற்கு உங்களிடம் திறமையில்லை என்று அது கூறுகின்றதா?அல்லது உங்களுக்கு அதற்கான சக்தியில்லை என்கிறதா?அல்லது அதையெல்லாம் நீங்கள் ஆசிக்கவேகூடாது என்கிறதா?என்ற மூன்று கேள்விகளையும் அவற்றைப்பார்த்து கேளுங்கள்.

முதல் இரண்டு கேள்விகளுக்கும் அவை ஆம் என்றால் உங்களை நீங்கள் செதுக்கிக்கொள்ள தயாராகுங்கள்.ஏனென்றால் திறமையும்,ஆற்றலுமில்லாத தன்னம்பிக்கை வெறும் ஆணவமாகவே பார்க்கப்படும்.அது நம்மிடம் நலவுகளை தருவதைவிட பெரும் தீங்குகளையும் இழுத்துவந்துவிடும்.எனவே திறனை வளர்த்துக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள்.இந்த உலகில் எந்த மனிதனும் தனித்திறனோடே பிறக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இங்கு கற்றலாலும்,பயிற்சியாலும் நம்மை செதுக்கிவிடலாம் என்பதை மலையளவு நம்புங்கள்.பணிவன்புடன் கற்கத்தொடருங்கள்,போராட்டம்தான் உங்களை செம்மைபடுத்தும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இப்படி உங்கள் திறமையை நீங்கள் வளர்த்துவிட்டால் உங்களை ஆசைபடாதே என்று சொல்வதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள்.குறிப்பாக உங்கள் குரங்கு மனதையும்தான்.உங்களை அது குறைத்து மதிப்பிட தொடங்கும் பொழுதெல்லாம் அதனை தலையில் தட்டி அமரவையுங்கள்.அவ்வாறே உங்கள் திறனையும்,ஆற்றலையும் உங்களுக்கு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டவேண்டும் என்று ஆசிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவர்களை உங்களைவிட்டும் சற்று தூரமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.அவர்களின் கருத்துக்களுக்கோ கண்ணோட்டத்திற்கோ ஒருபொழுதும் முக்கியத்துவம் வழங்காதீர்கள்.

ஏனெனில் இந்த உலகையே நீங்கள் அவர்கள் கையில் கொடுத்தாலும் உங்களை அவர்கள் குறைத்து பேசுவதை விடமாட்டார்கள்.அது ஒரு விதமான மனநோய் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு உங்கள் சக்தியையும் திறனையும் உங்களை உயர்த்தும் செயலில் செலுத்திக்கொண்டே இருப்பதுதான் சாலச்சிறந்ததாகும்.

இறுதியாக ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படாதீர்கள்.தெரியாததை தெரியாது என்று தைரியமாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.ஒருவேளை அது உங்கள் வாழ்விற்கு மிக அவசியமானதாக இருந்தால் அதனை கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.அண்பர்களே..!இந்த உலகில் எல்லாம் தெரிந்த மனிதனும் கிடையாது எதுவும் தெரியாத மனிதனும் கிடையாது என்ற பொது விதியை புரிந்து கொண்டு கற்றலை தொடருங்கள்.கற்றலை விட உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் ஒரு ஆற்றல் மிகுந்த செயல் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே கற்றுக்கொள்ளுங்கள்..!

தன்னம்பிக்கை வையுங்கள்..!ஆற்றல் பெறுங்கள்..!வெற்றியடையுங்கள்..!

நன்றி:

சனி, 28 ஆகஸ்ட், 2021

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்(Elon musk)

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்
ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்

முன்னுரை:

இன்றைக்கு நம் குழந்தைகளில் பலருக்கும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியளராக வேண்டும் என்ற கனவு அதிகம் இருப்பதை என்னால் அதிகம் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.ஆனால் அதற்கான அறிவை எப்படி தேடுவது என்பதில் மிகப்பெரும் குழப்பமும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பது அதைக்காட்டிலும் பேருண்மையாக இருக்கின்றது.எனவே ஆராய்ச்சி தளத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எத்தகைய புத்தகங்களை ஆராய்ச்சிக்காக மக்களுக்கு பரிசிலிக்கின்றார் என்று நான் தேடிப்பார்த்ததில் இன்றைய வாலிபர்களுக்கு மிகப்பெரும் கதாநாயகனாக திகழும் எலான் மாஸ்க் அவர்கள் அது சம்மந்தமான அற்புத வழிகாட்டுதலை கொடுத்திருப்பதை என்னால் பெற முடிந்தது.

அவர் ஒரு விண்வெளி ஆய்வாளர் கண்டிப்பாக இந்த 15 புத்தகங்களையும் படித்தே ஆகவேண்டும் என்று அவைகளின் பெயர்களையும் தன்னுடைய சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்ட அந்த பதினைந்து புத்தகங்களையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன். நீங்களும் விண் வெளித்துறையில் சாதிக்கத்துடிப்பவராக இருந்தால் நிச்சயமாக இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

15 புத்தகங்கள்:

1.Book Name: The Hitchhiker's guide to the galaxy.

Author name: Douglas Adams.

இது பால்வெளி அண்டத்தைப்பற்றி மிக விரிவாக பெசும் நல்ல புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

2.Book Name: "Structure " or why things don't fall down.?

Author Name: J.E. Gardon 

இது வடிவமைப்பு சம்மந்தமான பல்வேறு விஷயங்களை தெளிவாக விளக்கக் கூடிய புத்தகம் என்றும் இன்னும் இது ராக்கேட் வடிவியல் சார்ந்த பொறியியளாலர்களுக்கு மிக சிறப்பான புத்தகம் என்றும் எலான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

3.Book Name: "Super Intelligence"

Author Name: Nick Bostrom

இது இந்த உலகில் இயந்திரத்துவத்தின் சாதக பாதகங்களையும் சுற்றுச்சூழலின் அதீத பங்கைப்பற்றியும் விரிவாக பேசும் அற்புதமான புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

4.Book Name: "Our final Intention"

Author Name: James Barret.

இது இயந்திர வாழ்வையும்,மனித வாழ்வையும் ஒப்பிட்டுக்காட்டும் சிறந்த புத்தகம் என்கிறார். அதாவது இயந்திரத்தில் மனித நேயங்களை தேட முடியாது என்பதை பல்வேறு இயந்திர செயல்பாட்டையும் மனித செயல்பாட்டையும் பிறித்துக்காட்டும் ஒரு நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார். 

5.Book Name: "Ignition. An informal history of liquid rocket Propellents"

Author Name: John D. Clark"

இது ராக்கெட்டின் வரலாறுகள் குறித்த ஒரு அற்புதமான தொகுப்பாக இருக்கின்றது என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.

6.Book Name: The Foundation Trilogy.

Author Name: Isaac Asimov

இது பூமியை தவிர்த்து வேறு கிரகங்களைப் பற்றி மிக சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் பேசும் நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

7.Book Name :"Life 3.O being human in the age of artificial intelligence "

Author Name : By Max Tegmark.

வாழ்வின் பல செயல்களுக்கு இது தான் பொருள் என்று கூறும் மிகச் சிறந்த புத்தகம் என்கிறார் எல்லான் .

8.Book Name : The moon is a harsh Misterss"

Author Name: Robert Heinlein .

நிலவு சம்மந்தமான பல்வேறு இரகசியங்களைப்பற்றி பேசும் ஒரு அற்புதமான புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

9.Book Name : Merchants of Doubt"

Author Name :Naomi oreskes and Erik. M. Conway

இரண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவியளாலர்கள் பொதுவாக தவறும் இடங்கள் சம்மந்தமாக எழுதிய புத்தகம் என்றும் இதை கட்டாயம் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் படிக்க வேண்டும் என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

10.Book Name :" Einstein his life and universe"

Author Name: Walter Isaacson

ஒரு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை ஐன்ஸ்டீனிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.மேலும் ஐன்ஸ்டீனீன் கண்டுபிடிப்புகள்தான் இந்த உலகிற்கு பல நலவுகளை கொண்டு வர காரணமாக இருந்தது என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

11.Book Name: "Howard hughes his life and madness"

Author Name: Donald L. Barlett and James B.Steele

ஹாவேர்ட் ஹியூஜஸ் என்பவர் வாழ்வியலுக்கு மிக முன் உதாரணமானவர் என்பதாக எல்லான் குறிப்பிடுகின்றார்.ஏனெனில் அவர் தன் வாழ்வில் எல்லாம் இருந்தும் மிக எளிமையாகவே செயல்பட்டார் என்றும்,மேலும் ஆராய்ச்சி துறையில் மிகப்பெரும் ஆளுமை என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

12.Book Name: "The culture series"

Author  Name: Iain M.Banks

இந்த புத்தகம் தன்னை மிகவும் கவர்ந்த புத்தகம் என்றும் இதில் உலகின் பல கலாச்சார முறைகள் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருப்பதாகவும் எல்லான்  கூறுகின்றார்.

13.Book Name :"Zero to one "Notes on startups, or how to build the future "

Author Name: Peter Thiel

இது எல்லான் மாஸ்கும் அவருடைய நண்பரும் முதல் முதலில் ஆரம்பித்த பேபால் என்ற மென்பொருளின் வெற்றியை பற்றிய புத்தகமாகும்.இதை உறுவாக்கும் பொழுது எல்லான் மாஸ்க்கிடம் எந்த பணமும் இல்லை என்பதை கருத்தாக மையப்படுத்தியே இதற்கு 0 விலிருந்து 1 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

14.Book Name: "The lord of the rings"

Author Name : J.R.R. Tolkin.

இது அமெரிக்காவிலுள்ள பழங்கதைகளை உள்ளடக்கிய புத்தகமாகும்.இதனை எல்லான் அவ்வப்பொழுது ரசித்து வாசித்து வந்ததாகவும்.இதில் பல்வேறு சிறந்த கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

15.Book Name :"Banjamin franklin".

Author Name: Walter Isaacson.

பெஞ்சமின் அமெரிக்காவின் சட்டத்துறையின் தந்தையாக போற்றப்படும் மிகப்பெரும் அறிஞர் ஆவார்.அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் படிக்கவேண்டும் என்று எல்லான் மாஸ்க் கூறுகின்றார்.ஏனென்றால் எதுவுமே இல்லாத ஒரு மனிதராக தொடங்கி பிறகு சிறிய வியாபாரியாக இருந்து பிறகு சட்ட மாமேதையான அவரின் வரலாறு சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார் எலான் மாஸ்க்.மேலும் பெண்ஜமின்தான் தன்னுடைய முன்னோடி என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)
யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

முன்னுரை:

இந்த உலகத்தில் அறிவாளியாக வேண்டும் என்று பலரும் சொல்வதை நான் கேள்விபட்டிருக்கின்றேன்.சிலர் தாங்கள்தான் பெரும் அறிவாளி என்பதாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.இவற்றிற்கு மத்தியில் ஒரு ஜென் துறவி யார் அறிவாளி என்பதை விளக்குவதை நாமெல்லாம் அறிந்து வைத்திருப்பது நமக்கு மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே அந்த நிகழ்வை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

ஜென் துறவியின் கதை:

"அந்த ஜென் துறவி வில்வித்தையில் மிக கைத்தேர்ந்தவராக இருந்தார்.அவர் மாலை நேரத்தில் ஊரிற்குள் சற்று உலாவிவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.ஒருநாள் வழக்கம்போல் ஊரின் தெருவில் நடந்து கொண்டிருந்த போது சிலர் அவரை பிடித்து வில் வித்தையில் நீங்கள் மிக கைதேர்ந்தவர் என்று கேள்விபட்டோமே.!எங்கே உங்களிடம் வில்லும் இல்லை அம்பும் இல்லையே என்று ஏழனமாக கேள்வி எழுப்பினர் ?

அதற்கு அந்த துறவியோ "செயலின் உச்ச கட்டம் செயலின்மைதான் என்றும், பேச்சின் உச்சகட்டம் மௌனம்தான் என்றும், வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான் என்றும் புன்னகைத்துக்கொண்டே பதிலளித்துவிட்டு அவ்விடத்தைவிட்டும் நகர்ந்து சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வு ஒரு அறிவாளிக்கான உண்மையான இலக்கணத்தை மிகத்தெளிவாக எடுத்துறைக்கக்கூடியதாக இருக்கின்றது.ஓர் செயலின் உச்சநிலை என்பது அதில் செயலற்று இருப்பதுதான் என்பதை ஜென் தத்துவம் எல்லா இடங்களிலும் மிக அதிகமாக வலியுறுத்துவதை நம்மால் காண முடிகின்றது."ஒரு அறிவுள்ள மனிதன் தன்னுடைய அறிவாற்றலை தேவையின்றி பறைசாட்டுவதை விடுத்துவிட்டு அதனை தன்னிடம் பாதுகாப்பாக தக்கவைத்துக்கொள்ளவே நினைப்பான் என்கிறது ஜென் தத்துவம்.

மேலும் பல்ஹீனமானவனே தன்னுடைய ஆற்றலை பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பி இறுதியில் ஆற்றல் அற்றவனாகவே ஆகிவிடுகின்றான் என்பதாகவும் அது மிக வெளிப்படையாக பேசுகின்றது.எனவே அறிவு என்பது அறிவு இன்மையிலிருந்தே பிறக்கின்றது என்பதையும் ஜென் தத்துவம் மிக அற்புதமாக போதிக்கின்றது.யார் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது என்று கூறுவாரோ அவரே அதில் பெரும் ஏமாற்றமும் காண்கிறார் என்பதையும் அது குறிப்பிடுகின்றது.

ஆகவே அண்பர்களே...!

அறிவு என்பது அது பெறப்பட வேண்டியது அதனை நாம் நிரப்பிக் கொண்டோம் என்று நினைத்துவிட்டால் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு எதனையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த பரந்து விரிந்த உலகில் நாம் கற்பதற்கு பல ஆயிரம் கலைகள் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் அவற்றை கற்றுவிட்டோம் என்பதற்காக நாங்கள்தான் பெரும் அறிவாளிகள் என்று பரைசாட்டித்திரியாதீர்கள். அமைதியோடு அதனை அனைவருக்கும் உதவும் விதமாக பிரயோஜனப்படுத்திக்கொண்டே வாருங்கள்.அதுதான் உண்மையான அறிவாளியின் அடையாளமாகவும் இருக்கின்றது.

புதன், 25 ஆகஸ்ட், 2021

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)
வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

இன்றைக்கு வெற்றியாளர்களாக பார்க்கப்படும் அனைவரும் தங்களின் வெற்றிக்கான ரகசியமாக என்ன செய்கின்றார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுன்டா..? அல்லது அவர்கள் தங்கள் துறையில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்ததற்கு என்ன காரணம் என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா..?இந்த உலகில் வெற்றிபெற்றவர்களின் வரலாறுகள் அனைத்தையும் புரட்டிப்பாருங்கள்! அவர்கள் அனைவரும் தன் வாழ்வில் எதை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்களோ அதில் அளவுகடந்து பயிற்சி எடுத்தார்கள் என்பதை மட்டுமே பெற்றுக்கொள்வீர்கள்...!

ஆம் அண்பர்களே!பயிற்சியாள் மட்டுமே முடியாதது என்ற ஒன்றே இல்லை என்று நிறூபிக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.ஒரு செயலை முதல்முறை செய்யும்பொழுது அதில் நாம் தயங்களாம்.அதனை மறுமுறை செய்யும்பொழுது சற்று அதில் தெளிவைபெறலாம்.பிறகு அதனை திரும்ப திரும்ப செய்யும்பொழுது நாம் அந்த காரியத்தில் வல்லுனர்களாக இயற்கையாகவே மாற்றிவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய நிலையைத்தான் நான் பயிற்சி என்றும் பெயரிட விரும்புகின்றேன். நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் என்னால் அது முடியாது இது முடியாது என்றே முறையிடுவார்கள்.ஆனால் சிறிது காலத்திலேயே பயிற்சியின் மூலம் அவர்களை நான் பொய்பித்துவிடுவேன்.

ஆம் அண்பர்களே ..!

பயிற்சியின் மூலம் நீங்களே உங்களை பொய்பிக்கமுடியும் என்பதும் எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.உண்மையில் பயிற்சியே மனிதனை திறம்படச்செய்கின்றது என்பதற்கு மனிதனின் இயல்பு வாழ்க்கையிலேயே ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன.உதாரணமாக இன்று மிடுக்காக நடக்கும் நாம் சிறுபிராயத்தில் தவழுவதற்கே விழுந்து விழுந்து பயிற்சி எடுத்ததை நம்மால் மறுக்கமுடியுமா?இன்றைக்கு பலநூறு மீட்டர்கள் அதிவேகத்தில் சீரான ஒரு நேர்கோட்டுகுள் ஓட முடிந்த நாம் எழுந்து நிற்பதற்கே தத்தித்ததும்பிநின்றோம் என்பதை மறந்துவிட முடியுமா. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு ஒற்றை பதில்தான்.

அது தான் பயிற்சி..!

போராட்டம் என்னும் பயிற்சியின் மூலமே ஒரு மனிதன் தன்னை உயர்த்தி நிறுத்த முடியும் என்பதை சிறுபிராயத்திலிருந்தே இயற்கை நிர்னயித்து இருக்கின்றது என்ற பெருண்மையை பெரும்பாலானோர் உணர முடியாமல்  இருப்பது மிகப்பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.எனக்குத் தெரிந்து வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.வெற்றியாளார்கள் ஒன்றை செய்து பார்த்துவிடவேண்டும் என்று தானே முன்வருவார்கள்.தோல்வியாளர்கள் நம்மால் இவையெல்லாம் முடியாது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.இவ்வளாவுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடு.

கடலில் நீச்சல் அடிப்பது கடினம்தான்.ஆனால் அது எவ்வளவு இன்பகரமானது என்பதை அங்கு நீந்தி விளையாடும் நீச்சல் வீரர்களிடம் கேட்டுப்பாருங்கள். அது எத்துனை இன்பகரமான விளையாட்டு என்பதை புரிந்து கொள்வீர்கள். மலையில் ஏறுவது கடினம்தான்.ஆனால் அதில் ஏறி சாகசம் செய்யும் தோழர்களிடம் கேட்டுப்பாருங்கள் அது எத்துனை அற்புதமான அனுபவம் என்பதை புரிந்து கொள்வீர்கள்..!

வாகனங்களை இயக்குவது கடினம்தான்.ஆனால் அதில் கை தேர்ந்தவர்களை கேட்டுப்பாருங்கள் அது எத்துனை பிரயோஜனம்மிக்கது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.ஆக அண்பர்களே இறுதியாக ஒன்றை நினைவூட்டிக் கொள்கின்றேன்.நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்...!

இந்த உலகிலுள்ள அனைத்தும் கடினமானதுதான் அதனை நீங்கள் உங்கள் வயப்படுத்தும்வரை.உங்கள் விடாபயிற்சியாள் எதனை நீங்கள் உங்கள் வயப்படுத்திவிடுவீர்களோ அதுதான் இந்த உலகிலேயே மிக இலகுவான காரியம் என்று நீங்களே பிறகு சாட்சிகூறுவீர்கள்.எனவே உங்களுக்கான எல்லையை முதலில் நீங்கள் உடையுங்கள்..!அயராது பயிற்சி மேற்கொள்ளுங்கள்...!சாதனை என்பது உங்கள் காலடியில் தவளும் பொம்மையாகிவிடும் என்பதை நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

மூளையை எவ்வாறு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது?(Brain freshness)

மூளையை எவ்வாறு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது
மூளையை எவ்வாறு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது

நம்மை பார்த்து நம் பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ என்றாவது ஒரு நாள் உனக்கு மூளையே இல்லையா? என்றோ அல்லது ஆள்தான் வளர்ந்திருக்கின்றாய் ஆனால் மூளை வளரவே இல்லை என்றோ திட்டிய அனுபவம் கட்டாயம் இருந்திருக்களாம் .அப்பொழுது மூளை வளருமா..?என்றும் கூட நாம் யோசித்திருக்களாம்.ஆம் அண்பர்களே தலையில் காணப்படும் மூளை என்பது வளரும் தன்மைமிக்கதே என்றே பல்வேறு ஆராய்ச்சியாளார்களும் குறிப்பிடுகின்றனர்.மேலும் அது சிறப்பாக வளர்வதற்கென்று சில பயிற்சிகளும் உண்டு என்றும் குறிப்பிடுகின்றனர்.

அப்பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு மூளையின் வளர்ச்சியை எதன் அடிப்படையில் அளவிடப்படுகின்றது என்பதைப்பற்றியும் அறிந்து கொள்வோம்.ஒருவரின் மூளையின் வளர்ச்சி என்பது அவருடைய சிந்தனையையும்,கவனத்தையும் வைத்தே அளவிடப்படுகின்றது.ஏனெனில் ஒருவரின் மூளை வளர்வதற்கு ஒரு பொருளின் உண்மைத் தன்மையை சிந்திப்பதும்,சிந்தித்த அதனை விளக்கி சொல்வதும் மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.

யாருக்கு ஒரு பொருளை இன்ன பொருள் என்று அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லையோ அவருடைய மூளை வளர்ச்சிபற்றாத மூளை என்பதாகவே அறிவியல் உலகில் கருதப்படுகின்றது.எனவே நம் மூளை வளர்வதற்கு நம்முடைய சிந்தனையே முதல் அடிப்படை காரணியாக இருக்கின்றது என்பதால் அதனையே நம்முடைய மூளையின் வளர்சிக்கான அளவுகோளாக பார்க்கப்படுகின்றது.

2. ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்துவதும் நம் மூளையின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோளாகும்.யாருக்கு ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்த முடியவில்லையோ அவரும் அறிவியளாலர்களால் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே பார்க்கப்படுகின்றார். ஏனெனில் ஒரு பொருளை இன்னது என்று அறிவதற்கு முதலில் அப்பொருளில் கவனம் செலுத்தும் தன்மை அதிகமாக இருக்க வேண்டும்.அது இல்லையெனில் அவர் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே கருதப்படுவார் என்றே மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர்.

ஆக ஒரு மனிதனின் சிந்தனை மற்றும் கவனம் இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே ஒரு மனிதனின் மூளையின் வளர்ச்சி அளவிடப்படுகின்றது.இந்த இரண்டையும் சீராக்குவதற்கு பல்வேறு பயிற்சிகளை நம் அறிஞர்கள் கற்றுக் கொடுக்கின்றனர்.

அவற்றில் சிலவற்றை இப்பொழுது நாம் பார்ப்போம்.

மூளை வளர்ச்சிக்கான பயிற்சிகள்:

1. நாம் நம்முடைய கவனத்தையும்,சிந்தனையையும் சீராக்குவதற்கே வணக்க வழிபாடுகளும்,அதில் மொழியப்படும் மந்திரங்களும் உறுவாக்கப்பட்டது என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.இன்றைய பெரிய மதங்களாக பார்க்கப்படும் அனைத்து மதங்களும் அவற்றின் வணக்க வழிபாடாக பெரும்பாலும் சிந்தனையை ஓர் முகப்படுத்துவதையே கற்றுக்கொடுக்கின்றது என்பதும் நிதர்சனமான உண்மையேயாகும்.

எனவே நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் ஓர் முகப்படுத்த வணக்கங்களே மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கின்றது.அதனை நாம் தொடர்ந்து கடைபிடித்து வருவோமேயானால் நம்முடைய சிந்தனையும் கவனமும் நிச்சயமாக நம்முடைய கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ள முடியும்.

2. இரண்டாவதாக மூச்சு பயிற்சி செய்வதும் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்குகின்றது என்பதாகவே பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.உதாரணமாக இன்றைய யோகா போன்ற உடற்பயிற்சி கலையில் இந்த மூச்சுப்பயிற்சி என்பதும் வழங்கப்படுகின்றது.அதாவது மூச்சை நாம் கவனிப்பதின் மூலம் நம்முடைய கவனம் மற்ற விஷயங்களை விட்டும் தூரமாவதாகவும்,மேலும் அதனால் நம்முடைய எண்ண ஓட்டங்கள் சீராகுவதாகவும் கூறப்படுகின்றது.ஆக மூச்சு பயிற்சியின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனைகளையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.

3.அழகாக காணப்படும் இயற்கை இடங்களை அவ்வப்பொழுது சந்தித்து வருவதாலும் நம்முடைய சிந்தனை புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்றே அதிகமான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது புதுபுது இடங்களுக்கு நாம் செல்வதால் நம்முடைய மூளையில் புதிய ஹார்மோன்கள் சுரந்து அது நம்முடைய சிந்தனையை புத்துணர்வுமிக்கதாக ஆக்குகின்றது என்று அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே புதிய இடங்களுக்கு பயணம் செய்வதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக் கொள்ள முடியும்.

4.நல்ல வாசனை திறவியங்களின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது ஒரு நல்ல வாசனை நம்முடைய மூளையில் பல்வேறு புதிய ஹார்மோங்களை சுரக்கச்செய்கின்றது என்றும் அதனால் நம்முடைய மூளை மிக சுறுசுறுப்பாகின்றது என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நல்ல வாசனை திறவியங்களை பயன்படுத்துவதின் மூலம் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.

5.நல்ல ராகங்களை கேட்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்துணர்ச்சிமிக்கதாக ஆக்க முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது இனிமையான ராகங்கள் நம் மனதை வருடி பிறகு அது நமக்குள் பல்வேறு புதிய சிந்தனைகளை உறுவாக்குகின்றது என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்க நாம் நல்ல ராகங்களை கேட்பது மிகச்சிறந்த வழிமுறையாகும.

6.நல்ல புத்தகங்களை படிப்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது வாசிப்பு என்பது நாம் நம்முடைய மூளைக்கு போடும் தீணியைப்போன்றதாகும்.அதனை நம்முடைய மூளை எந்தளவிற்கு பெறுகின்றதோ அந்தளவிற்கு அது புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்பதாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்வதற்கு புத்தகங்கள் வாசிப்பது என்பது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

இந்த ஆறு வழிமுறைகளும் நாம் நம்முடைய சிந்தனையை சீராக வைத்துக்கொள்வதற்கும்,நம்முடைய கவனத்தை செம்மைபடுத்திக் கொள்வதற்கும் மிக உதவியாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.முடிந்தளவு நீங்களும் கடைபிடித்து வாருங்கள்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

யார் இந்த சாக்ரடீஸ்?(Socrates)

யார் இந்த சாக்ரடீஸ்
யார் இந்த சாக்ரடீஸ்

முன்னுரை:

சாக்ரடீஸ் அறிவியல் உலகில் அரிஸ்டாட்டிலை காட்டிலும் மிக பிரபல்யமான ஒரு நபராக கருதபடுகின்றார்.ஏனெனில் சாக்ரடிஸின் மாணவர் பிளேட்டோவின் மாணவர்தான் அரிஸ்டாட்டில் ஆவார்.ஆகவே இயற்பியலின் தந்தையாக அரிஸ்டாட்டில் போற்றப்பட்டாலும் அவருக்கெல்லாம் ஆசானாக திகழ்ந்த சாக்ரடீசே கிரேக்க நாகரீகத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.

இவர் தன்னுடைய வாழ்வில் எந்த புத்தகத்தையும் தொகுத்துக் கொடுக்கவில்லை என்பதால் இவருடைய மாணவர்களாளே இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.இவருடைய மாணவர் பிலேட்டோ (Great dialogue of plato)என்ற புத்தகத்தில் தன் ஆசிரியரின் பெருமைகள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கின்றார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்..!

சாக்ரடீஸ் என்பவர் ஆரம்ப காலத்தில் படைவீரராக இருந்துவந்தார் .
பிறகு வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்ளும் வேட்கையோடும் தன் நாட்டு இளைஞர்களை நல்முறைபடுத்தும் எண்ணத்திலும் அப்படையிலிருந்து விலகி தத்துவவியலை உறுவாக்கத்தொடங்கினார்.அதில் தேர்ச்சியும் பெற்றார்.
பிறகு அதனை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக முழு பிரச்சாரகராகவும் பணியாற்றத்தொடங்கினார்.இந்த உலகில் ஒவ்வொரு பொருளையும் பார்த்து ஏன்?எதற்கு?எப்படி?என்ற கேள்வியை ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டும் என்று போதித்தார்.கேள்வி கேட்பதற்கென்றே ஒரு தனி சபையையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்.

அங்கு வாலிபர்களின் கூட்டம் அலைமோதும் அளவிற்கு அவருடைய கேள்வியும் பதிலும் அமைந்திருக்கும்.இவருடைய பகுத்தறிவை கண்ட அத்துனை வாலிபர்களும் இவருக்கு உற்ற சீடர்களாக தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் தான் பிலேட்டோவும்.இன்னும் சொல்லப்போனால் இவருடைய அறிவு ஞானத்தை கண்ட ஒரு பெண் தானே முன்வந்து தன்னை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டதால் அவளையே சாக்ரடீஸ் திருமணம் முடித்துக் கொண்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.

ஆக அவருடைய அறிவாற்றலை போற்றும் மக்கள் ஒரு புறம் தோன்றினாலும் அந்த ஊரில் இருந்த செல்வந்தர்களுக்கும் ஆட்சியாளர்களில் சிலருக்கும் அவரை பிடிக்கவில்லை.அவருடைய அந்த போதனையை விட்டுவிட வேண்டும் என்று சாக்ரடீஸிற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.ஆனால் அதனை மறுத்துவிட்ட சாக்ரடீஸ் அவருடைய பிரச்சார்த்தை தொரர்ந்து செய்து வந்தார்.ஒரு கட்டத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செல்வந்தர்கள் அவரை கைதும்செய்தனர்.

அதாவது இளைஞர்களை கெடுப்பதாகவும்,பகுத்தறிவு என்ற பெயரில் தங்களின் கடவுள்களை அவமதிப்பதாகவும் சில ஊர் பெரியவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.வழக்கு பஞ்சாயத்தில் வைக்கப்பட்டது.அப்பொழுதும் சாக்ரடீஸிடம் நீங்கள் உங்கள் பிரச்சாரத்தை விட்டுவிடுங்கள்,அப்படி விட்டுவிட்டால் உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் சாக்ரடீஸ் தான் மக்களின் அறியாமையை போக்கவே பாடுபடுகின்றேன் என்றும் அது என்னுடைய பார்வையில் குற்றமல்ல என்றும் கூறி நான் இதை ஒருபோதும் விடப்போவதில்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

பிறகு கோபமடைந்த மக்களோ அவருக்கு மரண தண்டனையை விதித்தார்கள்.இறுதியில் அவருக்கு விஷம் கொடுத்து கொல்லவும்பட்டார் என்றே வரலாறு முடிகின்றது.சாக்ரடீஸின் வாழ்வில் நாம் படிப்பினை பெற மிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய வாழ்வை சுறுக்கமாக பதிவிட்டுள்ளேன்.அவர் இந்த உலகிற்கு சொல்ல வந்த முதல் விஷயம் அறிவு என்பது சுதந்திரமாக சிந்திப்பதில் தொடங்குவதுதான் என்பதேயாகும்.

அதாவது நாமே ஒன்றை நிர்னயித்து வைத்துக்கொண்டு அதைப்பற்றி எந்த கேள்வியும் எழுப்பக்கூடாது என்றோ அல்லது அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என்றோ அறிவை அடக்கி வைத்துவிடக்கூடாது என்பதை ஆழமாக அவர் தன் வாழ்வில் உணர்த்திவிட்டு சென்றுள்ளார்.இன்றைய உலகில் அதிகமான பெற்றோர்களும்,ஆசிரியர்களும் இந்த தவறை செய்வதை நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.அதாவது ஒரு குழந்தை கேள்வி எழுப்பினால் உடனே அதனைப்பார்த்து மக்கு உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா?என்று மட்டம் தட்டி அமர்த்திவிடவே முயற்சிக்கின்றோம்.

ஆனால் சாக்ரடீஸ் யார் கேள்வி எழுப்பமாட்டானோ அவன்தான் மிகப்பெரும் முட்டால் என்று விவரிக்கின்றார்.மேலும் அவன் ஒரு கோழை என்பதாகவும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆக அறிவு என்பது கேள்வியிலிருந்து பிறப்பதுதான். எனவே அனைவரையும் கேட்கவிடுங்கள் என்றே அவர் வலியுறுத்துகின்றார். மேலும்  மூடநம்பிக்கைகளை ஒழிக்க அதுவே தீர்வாக அமையும் என்பதையும் அவர் ஆழமாக நம்புகின்றார்.எனவே அண்பர்களே..!

உங்கள் குழந்தைகளோ அல்லது பணியாட்களோ அனைவரையும் கேள்வி எழுப்பவிடுங்கள்.உங்கள் கோபத்தாலோ அல்லது எறிச்சலாலோ அதனை தடுக்க முயற்சிக்காதீர்கள்.ஏனெனில் அங்கிருந்துதான் நல்அறிவும் நல்ல புரிந்துணர்வும்  ஆரம்பமாகின்றது.என்னைப்பார்த்து நீயெல்லாம் கேள்வி கேட்பதா?என்ற ஆணவத்தால் அறிவுக்கதவுகளை தயவுசெய்து அடைத்து விடாதீர்கள்..!அறிவே நலவு என்ற சாகரடீஸின் கருத்துக்கு ஒப்ப நம் வாழ்வையும் அமைத்து அற்புதமான ஒரு சமூகம் படைப்போமாக...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)
யார் இந்த அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டிலா..?யார் அவர்..?அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்றோ..?அல்லது பள்ளி பருவ காலத்தில் ஏதோ ஒரு பாட புத்தகத்தில் படித்த பெயராயிற்றே என்றும் யோசிப்பீர்களேயானால்..!தயவு கூர்ந்து இந்த கட்டுரையை முழுவதுமாக வாசியுங்கள்!ஏனெனில் அவர் நம் வாழ்வில் மிகவும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மிகச்சிறந்த நபராவார். 

நாமெல்லாம் இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வீரன் அலெக்சான்டரை நன்றாக அறிவோம்.அவர் இந்த உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் என்றும் படித்திருப்போம்.ஆனால் அவரை ஒப்பற்ற தலைவனாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டிலை அறிவு சார்ந்த துறையினரே மிகக்குறைவாகத்தான் அறிந்திருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஏனெனில் அரிஸ்டாட்டிலின் சேவை என்பது முற்றிலும் கல்விக்கான சேவையாக மட்டுமே இருந்தது.மக்களுக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பை மிக ஆழமாக ஆய்வுசெய்து அதற்கான தீர்வுகளை முன் வைப்பதிலேயே தன்னை அற்புதச் சுரங்கமாக அவர் வடிவமைத்துக் கொண்டார்.இதனால் பெரிதும் வெளிப்படாத அவர் பின் ஒரு காலத்தில் அலெக்சான்டர் என்ற மாபெரும் மன்னனுக்கு கல்வி போதிக்கும் ஆசானானார். அவரின் அந்த போதனையே பிற்காலத்தில் அலெக்சாண்டரை ஒரு தலை சிறந்த தலைவனாக்கியது.

தன் ஆசிரியரை என்றும் மறவாத அலெக்சான்டர் தான் வெற்றி கொண்ட இடங்களில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் மன்னனின் பரிசாக தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்கு அனுப்பி வந்ததாக வரலாற்றிலும் நம்மால் காண முடிகின்றது.அந்தளவிற்கு அரிஸ்டாட்டில் கல்வியின் மீது பேராவல் கொண்டவராக திகழ்ந்தார் என்பதை நம்மால் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நாம் நம்முடைய கல்விக்காலங்களில் வரலாற்று புத்தகங்களில் அரிஸ்டாட்டில் என்பவர் கிரேக்கத் தத்துவத்தின் தந்தை என்பதாக மட்டுமே படித்திருப்போம். ஆனால் உண்மையில் அவர் வானவியல் சார்ந்தும்,உயிரியல் சார்ந்தும், தர்க்கவியல் சார்ந்தும்,அறிவியல் சார்ந்தும் அவ்வளவு ஏன் இறையியல் சார்ந்தும்கூட பேசியிருப்பது அவருடைய தூர நோக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது.

அவ்வாறே அவருடைய வாழ்வில் பெரும்பங்கை பரந்துவிரிந்த சிந்தனையை மக்களுக்கு ஊட்டவேண்டும் என்ற பேரவலிலேயே அவர் கழித்திருக்கின்றார் என்றும்,மக்களிடம் புரையோடிப்போய் கிடந்த மூடநம்பிக்கையை நீக்கி சுதந்திரமாக சிந்திக்கும் பண்பையும் ஊக்குவித்துக்கொண்டே இருந்திருக்கின்றார் என்றும் வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.மேலும் இந்த உலகின் அறிவியல் எத்தகைய அளவுகோளுடையதாக இருக்க வேண்டும் என்பதை முதல் முதலில் வரையறுத்து கூறியவரும் அவறேயாவார்.

அதாவது ஒரு பொருளின் உண்மை தன்மை என்ன என்பதையும் அதன் அளவு என்ன என்பதையும்,அதன் பயன் என்ன என்பதையும்,மக்களால் அதை எப்படி எல்லாம் அனுக முடியும் என்பதையும் மிகத்தெளிவாக அன்றே  வரையறுத்து காண்பித்தார்.இந்த உலகில் நிகழும் அனைத்து காரியங்களுக்கு பின்பும் ஒரு காரணமுன்டு என்பதையும்,அது மிக முக்கியமான ஒரு நோக்கம் கொண்டது என்பதையும் மக்களிடம் பரப்புரை செய்து மக்கள் அனைவரையும் பகுத்தறிவின் பக்கம் திருப்பிப்போட்டார்.

அவருடைய ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்த உலகை படைத்த இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதேயாகும். ஆம் அவர் இந்த உலகம் யாரோ ஒரு மகா சக்தி படைத்தவரால் படைக்கப்பட்டதே என்று மிக உறுதியாக குறிப்பிடுகின்றார்.அதற்கு ஆதாரமாக அறிவியலையே முன்வைக்கவும் செய்கின்றார்.அதாவது இந்த உலகம் தானாக தோன்றும் சக்தியற்றது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.எனவே நிச்சயம் இதை உறுவாக்கிய ஒருவர் இருக்கத்தான் வேண்டும் என்பதோடே தன் கடவுள் கொள்கையை அவர் முடித்துக் கொள்ளவும் செய்கின்றார்.

மேலும் இன்று அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் அதிகமான சொற்களை உறுவாக்கியவரே அவர்தான் என்று அறிவியல் உலகம் இன்றும் அவரை போற்றிப்புகழ்வது அவருடைய மிகப்பெரும் தனிச்சிறப்பாகும். அவ்வாறே ஆட்சி அதிகாரங்கள் குறித்தும் பல்வேறு விதிகளை அவர் தொகுத்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. இப்படி கல்வி துறையில் அனைத்து கலைகளிலும் மிகப்பெரும் உச்சத்தை தொட்டவராகவே அவரை நம்மால் காணமுடிகின்றது.இங்கு அவருடைய ஒரு சில சேவையை நான் குறிப்பிடுவதின் மிக முக்கியமான நோக்கம் இன்றைய தலைமுறை சுதந்திரமாக பல்வேறு விஷயங்களை சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மேலும் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் எவ்வித தொலை தொடர்பு சாதனங்களுமின்றியே பல்வேறு விதிகளை வரையறுத்திருக்கும் பொழுது பல்வேறு நவீன உபகரனங்களை பெற்ற நாம் அறிவியளின் உச்சத்திற்கே செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவருடைய செயல் நமக்கு தருகின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய சிறப்புகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கின்றேன்.எனவே அண்பர்களே .. இந்த உலகை உற்று நோக்குவதற்கும்,அதன் உண்மைத்துவத்தை கண்டறிவதற்கும் உங்கள் வாழ்வில் சிறிது நேரத்தை இன்றிலிருந்தேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.மேலும் உங்கள் குழந்தைகளிடமும் சுதந்திரமாக சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கல்வியில் சிறந்த சமூகத்தை கட்டமைக்க நீங்களும் ஒரு காரணமாக அமையுங்கள்..!

சனி, 7 ஆகஸ்ட், 2021

கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)

கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)
கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)


உலகின் பத்து பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபேட் தன் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய உரையாடல் :"உலகில் ஒரு மனிதன்  முதலீடு செய்வதிலேயே மிகச்சிறந்த முதலீடு தன்மீது செய்யும் முதலீடுதான். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பம் செய்தால் அது என்றேனும் நஷ்டமடையலாம்.அவ்வாறே பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அவையும் ஒருநாள் அழிந்துபோகலாம்.ஆனால் நீங்கள் உங்கள் மீது மேற்கொள்ளும் முதலீடு மரணம் வரை நீடித்து நிற்கக்கூடியது.அதை உங்களிடமிருந்து எவராலும் பறித்து விடவும் முடியாது."ஒருவன் மழுங்கிய கோடாரியை வைத்துக் கொண்டு ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்வதும்,கல்வி அறிவின்றி வியாபாரம் செய்ய வருவதும் ஒன்றுதான் என்றே நான் கருதுகின்றேன்.

அவன் பல ஆயிரமுறை மலுங்கிய கோடாரியால் மரத்தை வெட்டினாலும் அவனால் அதனை சரிவர வெட்டிவிட முடியாது.ஆனால் அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு சிறிது நேரம் அவன் கொடுத்தால் அவனுடைய வேலை மிக துரிதமாகவும் அவன் விரும்பியவாரும் நடந்தேறிவிடும்.அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு தனக்கு நேரமில்லை என்றோ அல்லது சோம்பேரித் தனமாகவோ அவன் இருந்துவிட்டால் அம்மரத்தை வெட்டுவதிலேயே தன் வாழ்வின் பெரும்பங்கை அவன் செலவளிக்க நேரிடும்.மேலும் அதனால் அவனுடைய ஆற்றலும் வீணடிக்கப்படும் என்பதே உண்மையாகும்.

இந்த உலகத்தில் பலகோடி மக்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே வெற்றியாளர்கள் ஆகின்றனர்.ஏனென்றால் அவர்கள் மட்டுமே தங்கள் மீது முதலீடு செய்கின்றனர்.தங்களின் பொன்னான நேரத்தை தங்களின் அறிவையும்,திறமையையும்,அனுபவங்களையும் திறம்பட ஆக்கிக் கொள்வதற்காகவே செலவழிக்கின்றனர்.வெற்றியாளர்கள் என்றும் மலுங்கிப்போன கோடாரியால் மரம் வெட்டமுயலுவதில்லை.அவர்கள் தங்கள் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.அதிகம் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

மேலும் அக்காரியம் குறித்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். அதிகம் பொறுமையோடு முயல்கின்றார்கள்.இறுதியில் அதில் வெற்றியும் காண்கிறார்கள்.ஆகவே நீங்களும் வெற்றியாளராக ஆசித்தால்"கற்றுக் கொள்வதை எந்நாளும் நிறுத்தாதீர்கள்" நான் தினமும் ஆறு மணி நேரம் புத்தகங்கள் வாசிக்கின்றேன்.அந்த ஒரு வழக்கம் மட்டுமே இன்று உலகின் தலைசிறந்த முதலீட்டாளனாக என்னை ஆக்கிஇருக்கின்றது.வாசிப்புகளின் மூலமே என் முழு சாம்ராஜ்யத்தையும் இன்று நான் கட்டி எழுப்பியுள்ளேன்.

எனவே உங்கள் வாழ்வில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதை விட்டுவிடாதீர்கள்.உங்கள் அறிவை கூர்மையாக்குவதை நிறுத்திவிடாதீர்கள். ஏனென்றால் உங்களிடம் எவ்வளவு அறிவும்,அனுபவமும் இருக்குமோ அவ்வளவு எளிதாக உங்களால் மிக அதிக பணத்தை பெற்றுவிட முடியும்.இந்த அறிவாள்தான் என் வாழ்வில் பலநூறு பில்லியன் டாலர்களை நான் சம்பாரித்து இருக்கின்றேன்.நீங்களும் உயர்ந்த வெற்றியாளராக வேண்டுமானால் "இப்பொழுதிலிருந்தே உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். அத்தகைய முதலீட்டால் மட்டுமே பணம்,புகழ்,ஆளுமை இவை அனைத்தையும் உங்களால் பெற முடியும்...!

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)

வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)
வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)

 

வாசிப்பு ஒருவன் தன்னை செம்மைபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.யார் வாசிப்பை தொடர்ந்து கடைபிடித்து வருவாரோ அவரை வெள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்றே நான் கருதுகின்றேன்.வெளிப்படையாக கூற வேண்டுமானால் இன்றைய தலைவர்கள் அனைவரும் நேற்றைய வாசிப்பாளர்களே.ஆம்..!புத்தகங்களை வாசிப்பதின் மூலம் மட்டுமே சமூகத்தில் ஒரு சிறந்த மனிதன் உறுவெடுக்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.ஏனென்றால் புத்தகங்கள்தான் முந்தைய வரலாறுகளையும் அனுபவங்களையும் சுமந்து வந்து  பிந்தைய சமூகத்திற்கு அழகுற படிப்பினையை போதிக்கும் அற்புத கருவியாக இருக்கின்றது.

யார் அவற்றின் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்களே தன் சமூகத்திற்கான சிறந்த தலைவர்களாக தங்களை உறுவாக்கி கொள்ளவும் செய்கின்றனர்.யார் அவற்றை உதாசினப்படுத்துகின்றார்களோ அவர்கள் சமூகத்தில் மூடர்களாகவே வலம்வர விரும்புகின்றனர்.புத்தக வாசிப்பு என்பது உண்மையிலேயே ஒரு தனி உலகமாகும்.அது அறிவும், சிந்தனையும்,அனுபவங்களும் மட்டுமே பூத்துக்குழுங்கும் ஒரு அற்புத சோழையாகும்.அதற்குள் நுழைந்துவிட்டால் வண்ண வண்ண பூக்களும், அருசுவை மிகுந்த கனிகளும் நம்மை திக்குமுக்காட செய்துவிடும்.

இதனால் அதற்குள் நுழைந்துவிட்டவர்களால் மிக எளிதில் அதனைவிட்டும் வெளியேறிவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.ஏனெனில் அறிவு தாகம் என்பது அணைபோட முடியாத பேரழையாக இருக்கின்றதல்லவா. லட்சோப லட்ச புத்தக வடிவங்களில் வைரமும்,வைடூரியங்களும் நம் கண்களுக்கு முன்பே கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் நம்மில் பலரும் வீண் வேடிக்கையெனும் கூலாங்கற்களையே நமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது வேதணையான விஷயமாகும்.

எனக்கு தெரிந்து மிக அற்புதமான (டைம் பாஸ்) நேர கழிப்பு என்பது புத்தக வாசித்தலாகவே இருக்கின்றது என்றே நான் கூறுவேன்.ஏனெனில் நம் நேரமும் பயனுள்ள முறையில் கழிந்துவிடுகின்றது.மேலும் நம் ஆன்மாவிற்கு அறிவூட்டிய கடமையும் நமக்கு நீங்கிவிடுகின்றது.அண்பர்களே சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.!வாசிப்பு என்பது நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை தரக்கூடியதுதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

வாசிப்பின் பலன்கள். 

1.சிறந்த வழித்துணையாக இருக்கும்.

2.சிந்தைனையை சுறுசுறுப்பாக்கி வைக்கும்.

3.மனதை உத்வேகப்படுத்தும்.

4.கற்பனைத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

5.மொழி புலமையை அதிகரிக்கச் செய்யும்.

6.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

7.மன அமைதியை தரும்.

8.கவனச் சிதறல்களைவிட்டும் பாதுகாக்கும்.

9.மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

10.அன்றாட நிகழ்வுகளை அறியச் செய்யும்.

மேற்கூறிய இந்த பத்து காரணங்களில் எக்காரணத்திற்காக வேண்டுமானாலும் நீங்கள் புத்தகங்களை வாசியுங்கள்.ஏனெனில் அனைத்தும் நம் வாழ்கைக்கு அவசியமானதே என்றே நான் நம்புகின்றேன். இறுதியாக ஒன்றை நான் கூறிக்கொள்கின்றேன்.இயந்திரத்தனமான உங்கள் உடலுக்கான வாழ்வை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் ஆன்மாவிற்கும் வாசிப்பு என்னும் வரப்பிரசாதத்தை சற்று விருந்தளியுங்கள்.!

இக்கட்டுரையின் விரிவு கருதி இத்தோடு இக்கட்டுரையை முடித்துக் கொண்டு பின்வரும் கட்டுரையில் புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது என்பது குறித்தும் அதனால் நம்மிடம் ஏற்படும் பலன்கள் குறித்தும் விவரிக்கின்றேன்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கல்வி அறிவும் மனித வாழ்வும் (Education and Human's life)

கல்வி அறிவும் மனித வாழ்வும்
கல்வி அறிவும் மனித வாழ்வும்

கல்வியின் முக்கியத்துவம்.

கல்வி அறிவே இந்த உலகின் பல்லாயிரம் உயிரனங்களுக்கு மத்தியில் மனிதனை வேறுபடுத்திக்காட்டும் அற்புத சக்தியாக இருக்கின்றது.மேலும் இதுவே ஒரு மனிதனை தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டும் மகத்தான அடையாளச் சின்னமாகவும் இருக்கின்றது.ஒரு மனிதனிடம் காணப்படும் கல்வி என்பது ஒரு காலியான பாத்திரத்தில் நிறம்பி இருக்கும் அருசுவை பானத்தைப் போன்றதாகும்.அல்லது வரட்சியான ஒரு தரிசு நிலத்தில் பூத்துக் குழுங்கும் மலர்ச் சோழையைப் போன்றதாகும்.

அவற்றால் அம்மனிதர் பலனடைவதோடு அவரை சுற்றியுள்ளோரையும் அவரால் பலனடையச் செய்துவிட முடியும்.இன்னும் இத்தகைய மனிதரால் இந்த உலகை பூஞ்சோழையாக மாற்றியமைக்கவும் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.இதற்கு அற்புதமான முன் உதாரணம் நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே.அவர் தன்வாழ்வில் கல்வியின் கேந்திரமாக திகழ்ந்தார்.எனவே சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும்  அடைமொழியிற்கும் சொந்தக்காரரானார்.

மேலும் இந்த உலகில் அற்புதமான சக்திகளை உறுவாக்கும் திறன் கல்வியாளர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை மிக ஆனித்தரமாக வலியுறுத்தியும் சென்றார்.அவ்வாறே கல்வியின் சிறப்பு குறித்து பேசியபோது "நீங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று விரும்பினால் உங்கள் சந்ததியினருக்கு கல்வியை போதியுங்கள்"என்று மஹாத்மா காந்தி அவர்களும் போதித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அவற்றைப் போன்றே இந்த உலகை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் அது கல்வி மட்டுமே என்று நெல்சன் மன்டேலா அவர்கள் கல்வியின் அவசியத்தை விவரித்திருப்பதையும் இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.ஆக அன்பர்களே!கல்வியால் மட்டுமே உங்களை நீங்கள் ஒரு அற்புத மனிதராக கட்டியமைத்துக் கொள்ள முடியும் என்பதையும்,இந்த கல்வியால் மட்டுமே ஒரு அற்புதமான சுற்றுச்சூழலையும் உங்களால் கட்டியமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் ஆழமாக உணர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் உடலை கட்டுடலாக அமைத்துக்கொள்ள எப்படி பல்வேறு கடினங்களை ஏற்க தயாராகின்றீர்களோ அதனைப் போன்றே உங்கள் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். உங்களுடைய கல்வி அறிவையே தனித்துவமிக்க உங்கள் அடையாளமாக இவ்வுலகிற்கு நீங்கள் விட்டுச்செல்லவேண்டும் என்ற வேட்கையோடு வாழ்வை நகர்த்துவதற்கு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.நம்மில் சிறியவர் பெரியவர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி பெரும்பாலானோர் அடிப்படை கல்வியையும் கூட கற்றுக்கொள்ள விரும்பாமல் இருப்பது மிகப் பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.

வீண் கேளிக்கைகளிலும்,வேடிக்கைகளிலும் அதிகமான நேரத்தை கழிக்கும் நாம் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வழிகளை அமைத்துக் கொள்வதற்கான திட்டங்களை யோசித்துப்பார்ப்பதே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது.நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கோ,நற்சிந்தனையை தூண்டுவதற்கோ,நல்ல உரையாடல்களை கேட்பதற்கோ,கல்வியாளர்களை சந்திப்பதற்கோ நேரமில்லை என்று கூறும் நாம்தான் பலமணி நேரங்கள் எவ்வித நோக்கமுமின்றி தொலைக்காட்சியின் முன்பும்,தொலைபேசியின் முன்பும் அமர்ந்து நேரத்தை வீணடிக்கின்றோம் என்பதை மனசாட்சியோடு சற்று யோசித்துப்பார்க்க கடமை பட்டிருக்கின்றோம்.

அண்பர்களே இறுதியாக ஒன்றை கூறிக்கொள்கின்றேன்."உங்கள் கல்வியின் தரமே உங்களின் தரம்" என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்,"தயவு கூர்ந்து இன்றிலிருந்து கற்பதை தொடருங்கள்!உங்கள் வாழ்வை மெறுகூட்டிக் கொண்டே செல்லுங்கள்.!அடுத்தபடியாக நாம் அரசால் எப்படி கல்வியூட்டப்படுகின்றோம் என்பதை குறித்து ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.

அடிப்படை கல்வியும் அரசும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆரம்பத்தில் இன்னபொருள் இது வென்றுகூட அறியமுடியாதவனாகவே பிறக்கின்றான்.பிறகு வாழ்வின் நேரடி அனுபவங்களால் நெருப்பு என்பது சுடும் என்றும்,பனி என்பது குளிரும் என்றும் கற்கத்தொடங்கினான்.இப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் கல்வியறிவும் அவனுக்குள் தொடக்கமாகியது என்பதை நாமெல்லாம் நன்றாக அறிந்திருப்போம்.இந்த கல்வி அறிவு என்பது ஒவ்வொரு மனிதனின் அனுபவம், மற்றும் சுற்றுச்சூழைலை பொறுத்து மாறுபட்டும் காணப்படுகின்றது.

ஆம் இந்த கல்வி அறிவு என்பது எல்லோருக்கும் ஒரே அளவுகோளில் இருப்பது கிடையாது.ஒவ்வொரு மனிதனின் அணுகுமுறைக்கும்,அவனுடைய செயல்பாட்டிற்கும் தகுந்தவாறு அது மாறுபட்டுக்கொண்டே செல்கின்றது.ஆக மனித கல்வி அறிவு என்பது எல்லோராலும் அடைந்து கொள்ள முடிந்த பலதரப்பட்ட அனுபச்சிதறல்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெனில் இந்த உலகில் எத்துனை வகையான பொருட்கள் உள்ளதோ அத்துனை வகையான அனுபவங்களையும் கல்வியையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இதன் அடிப்படையில்தான் இன்றைய அரசும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான படிநிலைகளை மட்டும் பாடதிட்டமாக வகுத்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது.மேலும் அவற்றில் மொழி சார்ந்த இலக்கண இலக்கிய பாடங்களையும்,கணிதம் சார்ந்த எண்ணிக்கை பாடங்களையும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பாடங்களையும்,வரலாறு சார்ந்த மனித வாழ்வியல் பாடங்களையும் மொத்த தொகுப்பாக தொகுத்து பாட புத்தகங்களாக அச்சடித்து கற்பித்துக்கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் ஒரு மனிதன் கற்பதின் மூலம் தன் வாழ்வின் பெரும்பங்கை தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களால் அல்லாமல் முந்தய அனுபவங்களின் புத்தக தொகுப்புகளாலேயே மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என்ற நோக்கத்தில் அரசு இவ்வாறு செய்து வருகின்றது.என்னைப் பொருத்தமட்டில் இத்தைகைய கல்விமுறை என்பது மிக அவசியமான எல்லோருக்குமான அடிப்படை கல்வி முறை என்றே பார்க்கின்றேன். இத்தைகைய கல்வியை அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியாக கொடுப்பது மிகப்பெரும் வரப்பிரசாதமேயாகும்.

மேலும் இத்தகைய கல்வியை அனைத்து மாணவர்களும் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காகவே அரசு பல்வேறு சலுகைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என்பது மகத்தான செயலாகவே நான் கருதுகின்றேன்.ஆகவே கல்வியை கொடுப்பதில் அரசு நல்ல பல திட்டங்களையே நடைமுறை படுத்துகின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.இது விஷயத்தில் அரசை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரங்களும் கிடையாது என்பதே எனது வாதமுமாகும்.

ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத மக்களே நம்மில் அதிகம் காணப்படுகின்றனர் என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்.இன்றைய தலைமுறையே இதற்கு மிகப்பெரும் எடுத்துக் காட்டாக இருக்கின்றது என்பதாகவும் நான் கருதுகின்றேன்.கட்டுரையின் விரிவு கருதி இக்கட்டுரையை இத்தோடு முடித்துக் கொள்கின்றேன்.பின்வரும் கட்டுரையில் இன்றைய மாணவர்கள் கல்வியை கற்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும், இன்றைய மாணவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்தும் விவரிக்கின்றேன்.