வெள்ளி, 15 அக்டோபர், 2021

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்


முன்னுரை:

இந்த கட்டுரையை இந்த மனித சமூகத்தை உண்மையாகவே நேசிக்கும் நல்உள்ளங்களுக்கும்,வரும்கால சமூகத்தை அழிவின் பாதையிலிருந்து காப்பதற்கு ஆசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அற்பனிக்கின்றேன். குறிப்பாக இந்த உலகையும் இந்த உலகில் கொஞ்சி மகிழப்பட வேண்டிய இயற்கையையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த கட்டுரையை அற்பனம் செய்கின்றேன்.

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறையே தீர்வு.

இன்றைக்கு மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கும் மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பதே கல்விதான் என்பதை அறிந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கும் நிலையை உறுவாக்கி இருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னேற்பாடு என்பதில் அனைவரும் திருப்திகொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.ஏனெனில் கல்வியற்ற சமூகம் என்பது இந்த மனித சமூகத்தையே பேரழிவில் தள்ளிவிடச்செய்துவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை முந்தைய வரலாறுகளின் மூலம் நம்மால் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.என்றாலும் இன்றைய கல்விமுறையை அடிப்படையாகக்கொண்ட தற்போதைய சமூகம் இந்த மனித சமூகத்தை இன்னும் விரைவாக அழிவில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. ஏனெனில் இன்றைய கல்விமுறையே அத்தகைய சூழலை உறுவாக்கி கொடுப்பதாக உணர முடிகின்றது.

அதாவது இன்றைக்கு குழந்தைகளுக்கு இயந்திரத்தனமான பொருளை தேடுவதற்கான கல்வியை மட்டுமே கட்டாய கல்வியாக தினிக்கப்படுவது என்பது ஒரு கட்டத்தில் இந்த மனித சமூகம் தன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் ,தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் இயற்கைகளை மறந்து பாழ்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துவிடும் என்பதையே இங்கு நான் அவ்வாறு கூறுகின்றேன்.இன்றைக்கு பல்வேறு நாடுகளும் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டது என்றும் இந்த பூமி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் கூப்பாடுபோடுவதோடு மனிதர்கள் இந்த இயற்கையை காக்கத்தவறுகின்றனர் என்பதாக குற்றமும் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள்தான் அத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர் என்பதை இங்கு நான் வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.

அதாவது இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படும் பெரும்பான்மையான கல்விகள் மனித வாழ்வை மெறுகூட்டும் கலைகள் என்பதை கடந்து பணத்தையும் பொருளாதாரத்தயும் அடைவதற்கான வழிகளாக அரசே அமைத்து வைத்துவிட்டு பிறகு நாட்டில் மனிதவளத்தையும் இயற்கை வளத்தையும் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு பெறிய அறியாமை என்பதை இன்றைய அரசுகள் உணர வேண்டும்.

மேலும் மனிதர்கள் இந்த உலகில் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத்தான் கல்வி,பொருளாதாரம்,நாட்டின் வளங்கள் என்பவையெல்லாம் அரசே மனிதர்களுக்கு  மறக்கடித்துவிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் பின்னால் அவர்களை ஓடவும் விட்டுவிட்டு, இன்றைய மனித சமூகம் இந்த உலகை சூரையாடுகின்றது என்று கூப்பாடு போடுவது என்பது வடிகட்டிய மடமையன்றி வேறென்ன..?மனிதர்களின் வாழ்வியலை சீர்கெடுக்கும் அத்துனை வழிகளையும் நாமே திறந்து வைத்துவிட்டு மனிதர்கள் அதில் சென்று அழிகின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய அறியாமை..?

எனவே இந்த மனித சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்தத் துடிப்பவர்களும்,இந்த உலகின் இயற்கையை காக்கத்துடிப்பவர்களும் ஆரம்பம் முதலே இந்த மனிதனுக்கு அடிப்படை கல்வியாக இந்த உலகில் யாருக்கும் தொல்லையின்றி மகிழ்ச்சியாக தன்னை நேசிக்கவும் தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிக்கவும் மேலும் இந்த எழில் கொஞ்சும் இயற்கையை நேசிக்கவும் போதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையே என்னுடைய தாழ்வான வேண்டுகோளாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

மேலும் மனிதவாழ்விற்கு பல்வேறு திருப்திகளை தரும் கலைகளை அற்ப வியாபாரம் ஆக்குவதை விடுத்துவிட்டு அதை மனிதர்களை மேம்படுத்தும் கலைகளாகவும்,மனிதர்களை உற்சாகமூட்டும் திறன்கலாகவும் போற்றப்படுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக இந்த உலகில் மனித வாழ்வில் பெருந்துன்பங்களும், குற்றங்கலும்,இயற்கை சீரழிவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர இவ்வுலகில் எவ்வித முன்னேற்றங்களும் நடந்தேறிவிடாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு கட்டுரையின் முடிவுக்கு வருகின்றேன்.

முடிவுரை:

இன்றைக்கு கல்வி என்ற பெயரில் மனித வாழ்விற்கு பெரிதும் பயன்தரக்கூடிய பல்வேறு கலைகள் வியாபாரமாக்கப்பட்டிருப்பது நாமெல்லாம் அறிந்த உண்மையே ஆகும்.அவ்வாறே மனிதர்களுக்கு எக்காலமும் பயன்தரக்கூடிய இந்த உலகின் இயற்கைகளும் மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.அதன் விளைவாக இன்றைக்கு உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்தித்துவருவதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.

இதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நம்முடைய கல்விமுறையை வியாபார நோக்கமாக மட்டும் ஆக்குவதை விடுத்துவிட்டு மகிழ்ச்சியான மனித வாழ்வை போதிப்பதற்கானதாக ஆக்கவேண்டும்.அல்லது பொருளாதார கல்வியை போதிப்பதோடு மனித வாழ்வியலை மகிழ்வாக்கிக் கொள்ளுவதற்கும் மேலும் இயற்கையை நேசிப்பதற்குமான ஒரு பாடத்திட்டத்தையேனும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்யவில்லையெனில் இந்த மனித சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை மிக வருத்தத்தோடு இங்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.

நன்றி

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதனைகளெனும் ஏமாற்று வித்தை

முன்னுரை:

இன்றைக்கு குழந்தைகளுக்கும் சரி வாலிபர்களுக்கும் சரி சாதனை என்பதாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது மூன்றே மூன்று விஷயங்கள்தான் என்பதாகவே நான் காண்கின்றேன்.அவற்றைத்தவிர்த்து இந்த உலகில் மனிதன் பெரிதாக சாதிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பதைப்போன்ற கட்டமைப்பையே இந்த உலகம் உறுவாக்கி வைத்திருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அந்த மூன்றும் என்ன என்பதையும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்குவதே எனது இந்த கட்டுரையின் நோக்கமாக கொண்டுள்ளேன்.வாருங்கள் அவற்றைப்பார்த்துவிடுவோம்.

அவைகள்:

முதலாவது : செல்வம் சேர்ப்பது.

இரண்டாவது:பிரபல்யமாவது:

மூன்றாவது:அதிகாரத்தில் அமர்வது:

1.செல்வம் சேர்ப்பது சாதனையா?

செல்வம் சேர்ப்பதை இன்றைய மனிதர்கள் மகத்தான சாதனை என்று எல்லா சமயயங்களிலும் வலியுறுத்துவதை பார்க்கமுடிகின்றது.எனவே செல்வம் உடையவர்களையே இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக வரும் கால சமூகத்திற்கு முன்வைக்கப்படுகின்றது.உண்மையில் என்னைப் பொறுத்த மட்டில் இது மிகப்பெரும் ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றேன்.

ஏனெனில் மனிதனின் தேவைகளில் ஒன்றான இந்த உலக செல்வம் என்பது மனிதனுக்கு அவசியம்தான் என்றாலும் அதனை காகித செல்வமாகவும் பொருள் செல்வமாகவும் மாற்றி அவைகள் அனைத்தையும் எவன் அடைந்துகொள்வானோ அவன்தான் மிகச்சிறந்தவன் என்று கூறி அவன் இந்த உலகில் ரசிக்க வேண்டிய அனைத்தையும் பிடிங்கிக்கொண்டு உலகம் தனக்குத்தேவையான அத்துனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்வதே இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படை நோக்கமாக நான் காண்கின்றேன்.

இங்கு நான் ஏதோ தமிப்பட்ட ஆன்மிகத்தையோ அல்லது துறவறத்தையோ வலியுறுத்த விரும்புவதாக தயவுகூர்ந்து எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் அதுவும் இதுபோன்றே வேறுவிதமான மனித சுரண்டலுக்கு ஆளாக்கும் முக்கியமான ஒன்றுதான் எனபதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது இந்த உலகில் வியாபார நோக்கோடு உறுவாக்கப்பட்ட அத்துனை செல்வத்தையும் அடைவதுதான் ஒரு மனிதனின் மகத்தான நிலை என்றும் மெலும் அதுதான் அவன் வாழ்வின் மிகப்பெரும் சாதனை என்றும் சித்தரிக்கத் துடிப்பது மிகப்பெரும் ஏமாற்று வித்தை என்பதை இங்கு புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.

எனவே இந்த உலகில் மனிதர்கள் வியாபார நோக்கோடு உறுவாக்கிய அல்லது சுய நலனிற்காக மட்டும் உறுவாக்கிய பொருட் செல்வங்களையோ அல்லது பணக்காகிதங்களையோ ஒருவன் அதிகம் அடைந்துவிட்டான் என்பதற்காக அவன் சாதனையாளனாக பார்க்கப்படுவது என்பது என்னைப் பொறுத்தமட்டில் மகத்தான ஏமாற்றாகும்.இன்னும் சொல்லப்போனால் அவன்தான் இந்த உலகின் மிகச்சிறந்த அடிமை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாமல் போகலாம்.அல்லது பொருட்களும் பணக்காகிதமும் மட்டுமே உலகம் என்று உறுவாக்கப்பட்ட இன்றைய பொருளாதார அமைப்பின் ஆதிக்கம் உங்கள் கண்களை மறைக்கலாம்.ஆனால் மனிதனை இயந்திரத்தனமாகவும் அடிமையாகவும் மாற்றுவதற்கான கருவியே இந்த உலகமயமாக்கப்பட்ட பொருட் செல்வங்கள்தான் என்பதை பொருளாதாரத்தின் அடிப்படைவிதிகளே விளக்குவதை காணும்பொழுது இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதைப்பற்றி நான் கவலைபடப்போவதில்லை.

இன்றைய பொருளாதர கோட்பாடே மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனை பல்வேறு கட்டாயத்திற்குள் அடிமைப்படுத்தும் மிகப்பெரும் சதி என்பதே எனது தெளிவான கண்ணோட்டமாக நான் கருதுகின்றேன்.எனவே மிகப்பெரும் செல்வம சேர்ப்பது என்பது ஒருபோதும் பெரும் சாதனையாக பார்க்கப்பட முடியாது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாரெல்லாம் செல்வம் சேர்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஓடுகின்றார்களோ அவர்களுக்கு அது ஒரு வேளை சிற்றின்பம் அல்லது மனமகிழ்வை கொடுத்தாலும் உண்மையில் அது இந்த உலகில் அவர்கள் அடைந்துவிட்ட மகத்தான சாதனையாக பார்க்க எவ்வித தகுதியுமற்றதே என்பதை சுட்டிக்காண்பித்துக்கொண்டு அடுத்தபடியாக பிரபல்யமாவது இந்த உலகின் மகத்தான சாதனையா? என்பது சம்மந்தமாக பார்ப்போம் வாருங்கள்.!


2.பிரபல்யமாவது சாதனையா?

இன்றைக்கு எல்லோரும் தன்னை இந்த உலகமே நேசிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை பாராட்ட வேண்டும் என்றோ ஆசிக்கும் நிலை பரவலாகிவிட்டது.பிற மனிதர்களின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அல்லது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவுமே மட்டும் இங்கு பலரும் மஹா யுத்தமே புரிகின்றனர் என்றாலும் அது மிகையாகாது.

ஆம்...!

மக்களிடம் பிரபல்யம் ஆவது என்பது ஒரு பெரும் சாதனை என்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு இங்கு செயல்படும் மனிதர்களின் அட்டகாசம் சொல்லிலடங்காதது என்றே நான் கருதுகின்றேன்.தங்களையும் தங்களின் வாழ்வையும் மறந்துவிட்ட அம்மனிதர்கள் மக்கள் என்ன ஆடை அணிந்தாள் விரும்புவார்கள் என்றும் என்ன பேசினால் விரும்புவார்கள் என்றும் என்ன காட்டினால் விரும்புவார்கள் என்றும் அங்குளம் அங்குளமாக தரவுகள் தயாரித்து வைத்துக்கொண்டு அதற்கு தக்கவாறு தங்களையும் வெளிக்காட்டுவதின் மூலம் மக்களிற்கு மிக பிடித்தமானவர்களாக ஆவதற்கு போராடி வருகின்றனர்.

மேலும் சிலசமயங்களில் அவர்கள் தங்களின் குறூற கருத்தாக்கங்களான போதை பொருள் பாவித்தல் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் கொலை கொள்ளையை ஊக்குவித்தல் மற்றும் சமூக வெறுப்பை தூண்டுதல் போன்ற மானக்கேடான செயல்களையும் பரப்புவதற்கு இந்த பிரபல்யத்தையே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் இன்றைய பிரபல்யங்களில் பெரும்பாலானோர் மக்கள் தங்களின் காட்சியை பார்த்துவிட்டாலே போதுமானது அது தன் சாதனைக்கான அங்கிகாரம் என்பதாக தவறாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் மக்கள் பிரபலங்களை பார்க்கின்றார்கள்,ரசிக்கின்றார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வெறும் பிரபல்யத்தை மட்டும் ஒருவரின் உயர் சாதனையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

ஏனெனில் இந்த உலகில் யானைகள்,நாய்கள்,ஓநாய்களும் கூட காட்சிபடுத்தப்படுவதால் மிக பிரபல்யமாகிவிடுகின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.எனவே பிரபல்யம் என்பது ஒரு பெரும் சாதனை என்பது ஒரு போலியான ஏமாற்று வித்தை என்பதாகவே நான் கூற விரும்புகின்றேன்.இத்தகைய வித்தையை வியாபார நோக்கோடு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊக்குவிக்குகின்றதே தவிர மற்றபடி மக்கள் பிரபல்யங்களை கொண்டாடுகிறார்கள் என்பது பொய்யான பிம்பமேயாகும்.

இங்கு ஒரு முக்கியமான அடிப்படையையும் விளக்கிவிட விரும்புகின்றேன். அதாவது மக்களுக்கு பெரிதும் உபயோகப்படும் காரியங்களை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக பிரபல்யப்படுத்தவேண்டியது கட்டாயம்தான் என்றாலும் இன்று தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கே சில நற்காரியங்களை செய்து மக்களிடம் அங்கிகாரமும் பாராட்டும் தேடும் நிலை முன்பில்லாததை விட இப்பொழுது மிகவும் அதிகரித்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.

இதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைக்கு வியாபார நோக்கம்கொண்ட சில சுய விளம்பர விரும்பிகள் தங்களின் சுயநலனுக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதையும்,மேலும் அவர்கள் தங்களை இந்த உலகிற்கு பெரும் சாதனையாளர்களாக காட்டிக்கொள்வதையும் கண் ஊடாக காணமுடிகின்றது.ஆகவே அண்பர்களே நீங்கள் உங்களையோ அல்லது உங்களுடைய செயலையோ வெறும் மக்களின் அங்கிகாரத்திற்காவோ அல்லது பாராட்டிற்காகவோ மட்டும் விரும்பி பிரபல்யப்படுத்த விரும்பினால் அதைவிட மிக அறிவீனம் வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அது ஒரு ஏமாற்று வித்தைதானே தவிர வேறொன்றுமில்லை.மேலும் அது உங்கள் வாழ்வில் பிரயோஜனங்களை இழுத்து வருவதைவிட நிறைய பிரச்சனைகளையே கொண்டு வரும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் பிரபல்யம் என்பது சாதனை என்பதை தாண்டி அது ஒரு பெரும் சோதனை என்பதாகவே கருதுகின்றேன். 


3.அதிகாரத்தில் அமர்வது சாதனையா?

உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கு பாடுபட்டதைபோல் அவனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் இந்த மனிதசமூகம் இரண்டாயிரம் ஆண்டிற்கான முன்னேற்றத்தை இன்றே பெற்று இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இந்த மனித சமூகத்தின் வாழ்வு அடக்குமுறைகளாளும் அதிகார வெறியாலும் கபலிகரம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதையே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்....!

குடும்பத்தில் யார் தலைவராக இருந்து முடிவெடுப்பது என்பதில் தொடங்கி பணி செய்யும் வேலை இடங்களை கடந்து அரசு ஆட்சி வரை அத்தனையிலும் அதிகார வெறி அன்றிலிருந்து இன்றுவரை கோரத்தாண்டவம் ஆடுவதையும் அதை பெறுவதற்காக மனிதர்கள் போடும் நாடகங்களையும்,ஜாலங்களையும் காணும் போழுது அதிகாரத்தில் அமர்வதுதான் மாபெரும் சாதனை என்றே நம்மில் பலரும் எண்ணலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல..!

மனிதர்களை அச்சுறுத்தி அடக்கியாளுவதற்கு மட்டுமான  அதிகாரம் இந்த மனித சமூகத்திற்கான சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.இன்றைய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் போலியான மதிப்பை சம்பாரித்து தரும் அடக்குமுறைக்குட்பட்ட அதிகாரத்தில் அமர்வது தான் சாதனை என்பதாக ஊக்குவிப்பது இந்த மனித இனத்தை மீட்ட முடியாத இழப்பில் தள்ளிவிடுவதைப் போன்றே என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் ஒரு அவளமானநிலை எப்படி ஒரு சிறந்த சாதனையாக போற்றப்பட முடியும் என்பதே எனது கேள்வியாகும்?அவ்வாறே மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து தன்னை உண்மையாக அற்பனிக்கும் ஒருவனுக்கு முன்னால் இத்தகைய போலியான அதிகாரத்தால் மக்களை அடக்கியாள துடிப்பவன் எப்படி சாதனையாளனாக பார்க்கப்படமுடியும்??அங்கு தான் அதிகாரவர்க்கங்களின் கோர முகம் ஒழிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஆம்..!

இந்த மனித சமூகத்தை அடக்கியாள்பவர்களே மக்களில் உயர்ந்தவர்கள் என்றும் சாதனையாளர்கள் என்றும் மரியாதைக்குறியவர்கள் என்றும் ஒரு போலிபிம்பத்தை மக்களை அடக்கியாளத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தினர் சமூகத்தில் மிக ஆழமாக தோற்றுவித்துவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தை வழங்கிய அந்த மக்களே அவர்களை வியந்து காணும் அளவிற்கு அதிகார பீடத்தை போலி மரியாதைகளாலும் சுகபோகங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரித்து ஒரு ஏமாற்று வித்தையை உறுவாக்கிவிட்டனர்.

அதுவே இன்று மக்களில் பெரும்பாலோர் அதிகாரத்தில் அமர்வதுதான் சாதனை என்று எண்ணுவதற்கான அடிப்படை காரணியாகவும் அமைந்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரத்தில் அமர்வது என்பது ஒருபோதும் சாதனையல்ல. மாறாக அது வெறுமனே அதிகாரம் செலுத்துவதற்கான இடமாக மட்டும் இருந்தால் அது மக்களுக்கும் அனைவருக்கும் சாபமே என்றே நான் கருதுகின்றேன்.

இங்கு ஒரு முக்கிய அடிப்படையையும் விளக்கவிரும்புகின்றேன்.அதாவது ஆட்சி அதிகாரம் செலுத்தும் இடமானது மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு நிறைந்த இடம் என்பதாக அது பார்க்கப்பட வேண்டுமே தவிர அது தனி மனித புகழைத்தேடும் சாதனைக்கான இடமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே யார் அதில் அமர்ந்து உண்மையிலேயே மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து உதவி புரிகின்றார்களோ அவர்கள் மக்களால் சிறப்பு மிக்கவர்களாக போற்றப்படுவது எனபது வரவேற்கதக்கதேயாகும்.

ஆனால் இவற்றிற்கு மாறாக வெறுமனே அதிகாரத்தில் அமர்வதை மட்டும் சாதனையாக ஊக்குவிப்பது என்பது இந்த மனித சமூகத்தை இன்னும் இரட்டிப்பான அடக்குமுறைக்கு வழிவகுக்குமே தவிர எவ்வித மனித முன்னேற்றத்தையும் தந்துவிடாது என்பதே எனது கருத்தாகும்.


முடிவுரை:

இந்த உலகில் மனிதர்கள் தங்கள் செயலை ஆக்கப்பூர்வமாக மென்மேலும் செயல்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுவது என்பது ஒரு சிறந்த செயல்தான் என்றாலும் இன்று சாதனை என்ற பெயரில் சுயலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் மனிதர்களை கண்கட்டிய குதிரைகளாக உறுவாக்க விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை தொகுத்தேன்.

மேலும் இன்று சாதனைகளாக போற்றப்படும் பல்வேறு விஷயங்கள் வெறும் சுயலாபத்திற்கான ஏமாற்று வித்தைகளே என்பதையும் தோலுறித்துக்காட்ட வேண்டும் என்றும் விரும்பினேன்.ஆக வாலிப அண்பர்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலை போலியான சாதனை போதைக்கு அடிமையாக்கிவிடக்கூடாது என்பதே எனது இந்த கட்டுரையின் முக்கிய  நோக்கமாகவும் கொண்டிருக்கின்றேன்.எனவே இதனை முடிந்தளவு என்னுடைய கண்ணோட்டத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் இது உங்களுக்கு பயனலிக்கும் என்றே நான் கருதுகின்றேன்..!

(அடுத்த கட்டுரையில் எது சாதனை?என்பதை இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.)

நன்றி:

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது
கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது

1939 ஆங்கிலேயே காலம் தொட்டு இந்திய குடியரசு அமைத்த பின்பும் கல்வி மாநில ஆட்சியின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.ஆனால் 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உள்நாட்டு பிரச்சனைகளால்  நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி நாடு முழுவதும் அவசர சட்டத்தை அறிவித்தார்.அச்சமயம் பல்வேறு அரசியல் சட்டரீதியான உரிமைமீரல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அந்த உரிமைமீரல்களில் ஒன்றுதான் கல்வி உரிமையை ஒன்றிய அரசு தன் அதிகாரத்திலேயே வைத்துக்கொண்டதும் என்பதாக நம்மால் கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கும் பொழுது அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய துணை குடியரசு தலைவரான வெங்கைய நாயுடு அந்த அவசர சட்டத்திற்கு வேறொரு காரணத்தையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டு காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது இந்திரா காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினருக்கான வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அறிவித்ததே இந்த அவசரநிலை சட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

எது எப்படியோ.!

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1977 லிலேயே அவசர சட்டம் நீக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசு அரசியல்சாசன சட்டத்தின்படி கல்வியில் மாநிலத்திற்கான சுய உரிமையை வழங்கமறுத்துவிட்டதே மாநில ஆட்சிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.மாநில அரசிடம் கல்வியை வழங்காமல் போனதற்கான பொய் காரணத்தையும் ஒன்றிய அரசு அன்றே முன் வைத்தது.அதாவது தரமான சீரான ஒரேமாதிரியான கல்வியை ஒன்றிய அரசே வகுத்து வழங்கும் என்பதுதான் அந்த மாநில உரிமையை பறித்துக் கொள்வதற்கான பொய்யான வாக்குறுதி.

வாக்குறுதியை வழங்கிய அரசு அதில் உண்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.தரமான கல்வி என்ற பெயரில்  பல்வேறு மாநிலங்களிலும் மாநில மொழியை புறக்கணித்து விட்டு இந்தியை புகுத்த நினைத்ததும், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பாடுபட்டதுமே வெளிச்சத்திற்கு வந்தது.அது அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறிக்கும் படியான நீட் போன்ற தேவையற்ற தேர்வுகளையும் தானே முன்னெடுத்து நிறுத்துவதின் மூலம் தனக்கு சாதகமான குறிப்பிட்ட சாரார்களை மட்டும் குறிப்பிட்ட துறைகளில் ஆக்கிரமிப்பு செய்யவே வழி வகை செய்துகொண்டது.

(குறிப்பு: இன்றைய இரயில்வே துறையிலிருந்து,தபால் துறை வரை இந்தியின் ஆதிக்கமும் வடவர்களின் பங்களிப்புமே அதிகம் காணப்படுவது மத்திய அரசின் வஞ்சகத்திற்கு பெரும் உதாரணமாகும்.)இதையெல்லாம் கேள்வி கேட்க எந்த மாநிலங்களும் துணியாத நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி உரிமையை கோரியிருப்பதும்,நீட் போன்ற போலியான தேர்வுகள் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் உயர்கல்வியை பறிப்பதை எதிர்ப்பதும் தமிழக மக்களுக்கான விடியாலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.!

திங்கள், 13 செப்டம்பர், 2021

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது?

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது
ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது

முன்னுரை:

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்று கேட்கும் அனைவரிடமும்"நீங்கள் ஏன் புத்தகம் படிக்கபோகின்றீர்கள் என்று கேட்பது என்னுடைய வழக்கமாகும்.ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது எப்படி என்பது அவரவர்களின் நோக்கங்களை பொறுத்தே அமைகின்றது என்பதாக கருதுகின்றேன்.மேலும் இன்றைய புத்தக வாசிப்பாளர்களை பல வகையினராக பிறிக்க முடியும் என்றாலும் அவர்களில் சில வகையினரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாசிப்பாளர்களின் வகைகள்:

1.நல்ல நண்பனாக நினைத்து படிப்பவர்கள்.

இந்த வகையினரில் நிச்சயமாக நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை முதலில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொண்டு இந்த சாரார்கள்தான் புத்தகமே தேடும் நபர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இவர்கள் புத்தக காதலர்கள் என்பதால் எத்தகைய புத்தகங்களை நீங்கள் இவர்கள் கையில் கொடுத்தாலும் அதை ஒரு சில மனித்துளிகளில் அதனுடைய மொத்த சாராம்சத்தையும் விளக்கிவிடுவார்கள்.

இவர்களுக்கு புத்தகத்தை படிப்பதற்கான எந்த வறைமுறையும் அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இவர்கள் இருளிலும் படிப்பார்கள், வெளிச்சத்திலும் படிப்பார்கள்.தனிமையிலும் படிப்பார்கள், கூட்டத்திலும் படிப்பார்கள்.ஆகவே இவர்களுக்கு படிப்பதை கற்றுக்கொடுக்க எந்த தேவையும் இல்லை என்பதால் நாம் அடுத்த வகையினரை பார்ப்பதே சிறந்தது என்று கருதுகின்றேன்.

2.அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட உங்கள் துறை சார்ந்த புத்தகங்களை படிப்பதே மேலானதாகும். உதாரணமாக நீங்கள் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அறிவியல் சார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.அதைவிடுத்துவிட்டு வரலாறோ அல்லது புவியியலையோ படிப்பீர்களேயானால் உங்களுடைய புத்தகம் படிக்கும் ஆசை உங்களைவிட்டும் மிக விரைவில் சென்றுவிடும் என்பதே நிதர்சனமான உலவியல் சார்ந்த உண்மையாகும்.

"அப்படியானால் வெவ்வேறு துறைகளின் புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்று கேட்பீர்களேயானால் அங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்க விரும்புகின்றேன்.அதாவது உங்களுடைய அறிவுத்தேட்டம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துத்தான் உங்களுடைய புத்தக வாசிப்பும் தொடரும் என்பது எனது கருத்தாகும்.உங்களால் பல் துறைகளின் புத்தகங்களை நிச்சயமாக வாசித்துவிட முடியும் என்றாலும் அதில் உங்களுடைய அறிவு தேடல் என்பது எவ்வளவு இருக்கின்றது என்பதை பொறுத்தும் நீங்கள் அத்துறையில் முன்பே எவ்வளவு அடிப்படையாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துமே உங்களுடைய வாசிப்பிற்கான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

எனவே அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் புத்தகம் வாசித்தால் முடிந்தளவு நீங்கள் உங்கள் துறை சார்ந்த புத்தகத்தை வாசியுங்கள்.அல்லது நீங்கள் படிக்கும் அப்புத்தகம் ஒரு துறையின் அடிப்படையான அறிவை போதிக்கும் புத்தகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் புத்தகம் வாசிப்பதைவிட அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கின்றோம் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிப்பதால் பெரும்பாலும் அமைதியான இடங்களை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு  சிறந்ததாகும். ஏனெனில் புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது அதனை சிந்தனையில் செலுத்தும்பொழுதோ வேறு சில இடையூறுகள் இருந்தால் அது நம்மை ஆரோக்கியமாக புரிந்து கொள்வதை விட்டும் தடுத்துவிட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.எனவே சிந்தித்து உணர வேண்டிய புத்தகங்களை பெரும்பாலும் தனிமையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறே குறிப்பிட சில பக்கங்களை படித்துவிட்டால் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி படிப்பதற்கு ஓய்வுவிடுங்கள்.அச்சமயம் அமைதியாக அமர்ந்து அது சம்மந்தமாக சிந்தித்துப்பாருங்கள்.அது உங்களுக்கு புதிய பல தீர்வுகளை அளிக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கையாகும்.

3.ஆழமான ஞானம் பெறுவதற்காகவோ அல்லது மன அமைதிக்காகவோ படிப்பவர்கள்.

நீங்கள் ஆழ்ந்த ஞானம் படைக்க வேண்டுமெறோ அல்லது உங்கள் மனதை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்றோ நினைத்தால் நீங்கள் பைபிள்,அல்லது குரான்,அல்லது பகவத் கீதை போன்ற புனித நூல்களை வாசிப்பது சிறந்ததாகும்.ஏனெனில் பெரும்பாலும் மத நூல்கள் பல்வேறு வாழ்வியல் நெறிகளை மிக அற்புதமாக போதிக்கின்றது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அவ்வாறே அந்த புத்தகங்களை உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒன்றாக அமர்ந்து வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஒருவர் வாசித்து அனைவரும் செவிமடுப்பது அதனை புரிந்து கொள்வதற்கும் மேலும் வாழ்வில் அனைவரும் கடைபிடிப்பதற்கும் மிக இலகுவானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.இத்தகைய முறையயே நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் கடைபிடித்துவருகின்றோம் என்பதால் அதனையே உங்களுக்கும் நான் முன்மொழிகின்றேன்.

4.ஒரு மொழியை கற்பதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் ஒரு மொழியை கற்பதற்காக புத்தகங்களை படிப்பவராக இருந்தால் இன்று பல்வேறு மொழிப்புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.மேலும் அவற்றை ஒரு சில நாட்களிலேயே கற்றுவிடும் அளவிற்கு கூட மிக எளிய வடிவில் தொகுக்கப்படுகின்றன.எனவே நீங்கள் மொழியை கற்பதற்காக படிப்பவராக இருந்தால் இரண்டு அடிப்படையான புத்தகங்களை நீங்கள் நிச்சயம் வாசித்தாக வேண்டும்.

ஒன்று அந்த மொழி சார்ந்த இலக்கண இலக்கிய சட்டங்கள் பொதிந்த புத்தகங்கள்.இரண்டாவது அந்த மொழியின் வார்த்தைகள் தொகுக்கப்பட்ட அகராதிகள்.இவை இரண்டையும் நீங்கள் தொடந்து வாசித்து வந்தால் மட்டுமே ஒரு மொழியில் உங்களால் தேர்ச்சி பெறமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறே இதனை மிக ஓர்மனதோடு மனதில் பதியவைக்கவேண்டிய அவசியம் இருப்பதால் காலை பொழுதுகளில் அமைதியான சூழலில் கற்பது சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

5.வாசிப்பது நல்ல பழக்கம் என்பதற்காக வாசிப்பவர்கள்.

வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் அதனை உங்கள் வாழ்விலும் அமைத்துக் கொள்வதற்காக நீங்கள் புத்தகங்கள் வாசிப்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் நீங்கள் மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் அல்லது தினசெய்தித்தாள்கள் வாசிப்பதே போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அப்படி அதுவும் போதவில்லையானால் வெற்றியாளர்களின் வரலாறுகள் அல்லது பொதுவான ஏதேனும் கதைகளை வாசிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனது பரிந்துரையாகும்.

வாசிப்பதை வெறும் பழக்கமாக மட்டுமே ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.ஏனெனில் வெறும் சடங்கிற்காக படிக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு மிக கவனம் என்பது அவசியமில்லை.

6.பொழுது போக்கிற்காக படிப்பவர்கள்.

பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் த்ரில்லர் புத்தகங்கள் அல்லது தொடர் கதைகள் படிப்பது மிக பிரயோஜனமாக இருக்கும்.ஏனென்றால் அவைகள் நம்முடைய மூளைக்கு பல சுவாரஸ்யங்களையும்,எதிர்பார்ப்புகளையும் கூட்டி ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதாரணமாக பயணத்தில் செல்லும் பொழுது பேருந்திலோ அல்லது ரயிலிலோ புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  நாவல் அல்லது த்ரில்லர் கதைகளை படிப்பதே சிறந்தது என்பதாக நான் கருதுகின்றேன்.அவ்வாறே அதனை உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.

ஆக இந்த ஆறு வகையான புத்தக வாசிப்பாளர்களையே நம்மால் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.அடுத்தபடியாக ஒரு புத்தகத்தை நாம் எவ்வாறு அணுகுவது என்பதையும் சுறுக்கமாக விளக்கிவிட விரும்புகின்றேன்.

 ஒரு புத்தகத்தை எவ்வாறு அணுகுவது.?

1.புத்தகங்கள் வாசிப்பதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முடிந்தளவு அடிப்படை உங்களுக்கு முன்பே கொஞ்சம் தெரிந்த விஷயத்தையே ஒரு புத்தகத்தில் படிக்க முயலுங்கள்.அது உங்களுடைய புத்தக வாசிப்பின் ஆர்வத்தை போக்கிவிடாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.அப்படி ஒரு வேளை அத்துறையை படித்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் முதலில் அது சம்மந்தமான அடிப்படை விஷயங்களை கொண்ட புத்தகங்களை வாசியுங்கள்.பிறகு ஆய்வு புத்தகங்களை வாசிப்பது மிக இலகுவாகிவிடும். 

2.புரிவதற்கு மிக கடினமான நீண்ட ஆய்வு புத்தகங்களை எந்த அடிப்படையும் தெறியாமல் வாசிக்காதீர்கள்.ஏனெனில் அது உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

3.ஒரு மொழியை கற்பதற்காக ஒரு மொழியில் உள்ள மிகக்கடினமான ஆய்வு புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பல குழப்பங்களையே கொடுக்கும்.

4.ஒரு துறையில் நீங்கள் மிக அனுபவம் மிக்கவராக இருந்து கொண்டு அத்துறை சார்ந்த ஆரம்ப அடிப்படைகள் சார்ந்த புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அதுவும் உங்களுடைய நேர வீணடிப்பாகவே அமையும் என்றே நான் கருதுகின்றேன்.இதுவே ஒரு நல்ல புத்தக வாசிப்பாளர் ஒரு புத்தகத்தை அணுகும் சிறந்த முறையாக நான் கருதுகின்றேன்.முடிந்தால் நீங்களும் கடைபிடியுங்கள்..!தொடர்ந்து வாசிக்க அமேசானில் எனது புத்தகம் இடம்பெற்றுள்ளது.அதனை பெற்று வாசித்து பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி:

புதன், 1 செப்டம்பர், 2021

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?timing-management

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது-timing-management
நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது

முன்னுரை:

நம்மில் பலருக்கும் நம் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்திருக்கும்.அவ்வாறே எதை எப்பொழுது செய்வது என்பதிலும் மிகப்பெரும் சிக்கல்களும் இருந்திருக்கும்.அவற்றையெல்லாம் போக்கவே நேரமேலான்மை அறிஞர்களில் சிலர் ஒரு அற்புதமான அட்டவனையை உறுவாக்கினார்கள்.அவர்கள் உறுவாக்கிய அந்த அட்டவணையானது நம்மில் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு நான் அவற்றை பதிவு செய்கின்றேன். கட்டாயம் நீங்களும் அதனை கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் நேரம் உங்கள் கைவசமிருக்கும்.

நேரத்தை எப்படி பாதுகாப்பது?

முதலில் நாம் நம்முடைய நேரத்தை பாதுகாக்க நம்முடைய காரியத்தை 4 வகையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதாவது..!

1. உடனே செய்ய வேண்டியதும்,மிக அவசியமானதும்.

2. உடனே செய்ய வேண்டியதல்ல,ஆனால் மிக அவசியமானது.

3. உடனே செய்ய வேண்டியது,ஆனால் அவசியமற்றது.

4. உடனே செய்ய வேண்டியதுமல்ல,மிக அவசியமானதுமல்ல.

இப்படி நம் வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய காரியங்களை நான்கு வகையாக பிறித்துப்பார்த்தால் இப்பொழுதே செய்தாக வேண்டும் என்ற காரியங்கள் மிக குறைவாகவே இருக்கும்.அவற்றில் முதலில் எதனை செய்தால் தொல்லை நீங்குமோ அத்தகைய காரியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.இதனைத்தான் காலையில் எழுந்தவுடனே ஒரு பெரிய தவலையை விழுங்கி விடுங்கள் என்று ஒரு புத்தக ஆசிரியர் அற்புதமாக கூறுகின்றார். அதாவது அன்றைய அட்டவனையில் உங்களுக்கு மிக முக்கியமான காரியம் என்று எதனை நினைக்கின்றீர்களோ அதனையே முதலாவதாக செய்து முடித்துவிடுங்கள் என்கிறார்.அதனால் உங்களுடைய மனதில் இருக்கும் பெரும் பாரம் குறைந்து அன்றைய நாள் மிக மகிழ்சிக்குறிய நாளாக ஆரம்பத்திலேயே இருக்கும் என்பதாகவும் விளக்கமளிக்கின்றார்.

இங்கு எதனை முதலில் செய்வது என்பதில் குழப்பமுள்ளவர்களுக்கு நான் வாசித்த ஒரு துறவியின் உபதேசம் மிக பலனுள்ளதாக அமையும் என்பதால் அதனையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

"ஒரு ஊரில் ஒரு துறவி தன் மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு அந்த ஊரின் செல்வந்தார் மிக பதட்டமான சூழலில் ஓடிவந்தார்.துறவி என்னப்பா உனக்கு வேண்டும் என்றார்...!

"துறவியே! நான் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன்.ஒரு புறம் என் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அவள் படுத்த படுக்கையில் இருக்கிறால்,மற்றொரு புறம் என் வியாபாரத்தை பார்த்துக்கொள்ள யாருமே இல்லை.எனவே நான் என்ன செய்வது என்று தெறியாமல் இரண்டு மூன்று நாட்களாக தவிக்கின்றேன் என்று கூறினார்.

ஓஹ் அப்படியா,,?அதுதான் உன்னுடைய பிரச்சனையா?என்று பொறுமையாக கேட்ட துறவி தன் பையில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையையும் ஒரு சில கற்களையும் கையில் கொடுத்து இந்த கண்ணாடி குடுவையை இந்த கற்களால் நிரப்பி வை இதோ வருகின்றேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.இதனைக் கேட்ட அந்த செல்வந்தனுக்கு மிக கோபம் வந்துவிட்டது.நான் பிரச்சனை என்று ஒன்றை கேட்க வந்தால் இந்த துறவி சம்மந்தமே இல்லாமல் கற்களை பாட்டிலுக்குள் நிரப்ப சொல்கின்றானே என்று மனதோடு புழம்பிக்கொண்டு ஒவ்வொரு கற்களாக நிரப்பத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த துறவியிடம் அச்செல்வந்தன் ஐயா இந்தாங்கள் உங்கள் கண்ணாடி குடுவை அதில் கற்களை நான் நிரப்பிவிட்டேன் என்று கையில் கொடுத்தார்.அதனை தன் கையில் பெற்ற துறவி அடடே.!அழகாய் நிரப்பி இருக்கின்றாயே..!நான் உன்னிடம் பெரிய கற்களும் சிறிய கற்களுமாகவல்லவா கொடுதேன் அதை எப்படி பிறித்து இவ்வளவு அழகாக பாட்டிலுக்குள் அடைத்தாய் என்று கேட்டார்..?தொடர்ந்து வாசிக்க என்னுடைய "நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது" என்ற புத்தகத்தை வாசியுங்கள்.அதில் இன்னும் பல அற்புதமான சிந்தைகளையும் அட்டவனைகளையும் இணைத்துள்ளேன்.நிச்சயமாக அவைகள் உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.