வியாழன், 19 டிசம்பர், 2024

இந்திய சாதிய கட்டமைப்பின் வரலாறு- Indian casting system


முன்னுரை:

ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை, நேபால்,பங்கலாதேஷ் போன்ற நாடுகளில் சாதி (Caste) என்னும் அடையாள அடைமொழி குறிப்பாக இந்து மதத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் ஒட்டிக்கொண்டே பிறந்துவிடுகின்ற, இன்னும் பிரித்துப் பார்க்கவே முடியாத, ஒன்றர கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத ஒட்டுண்ணியாகவே காணப்படுகின்றது.அவ்வாறே ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தந்தை பெயரை கூட குறிப்பிடாமல் தன் தாயின் பெயரை கூறினாலே போதுமானது என்று நீதிமன்றங்களே இன்று ஒருபுறம் கூறினாலும் மற்றொருபுறம் தங்களின் வாழ்வியலோடு பிறிக்கவே முடியாத ஒரு அங்கமாக இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் வாழும் பெரும் திரலான மக்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள தங்களின் குல மற்றும் சமூக அடையாளமாக இந்த சாதியையும் தங்களோடு ஒட்டிக்கொள்ளவோ அல்லது அதனை பிறர் மீது ஒட்டிவிடவோ எக்காலமும் காத்துக்கிடப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.

அது மட்டுமின்றி தனக்கென்று எவ்வித சிறப்பும் தனித்திறனும் இல்லை என்றாலும் இந்த சாதிய இழிகுறிகளால் தங்களை அடையாளப்படுத்துவதின் மூலம் தங்களுக்கு மிகப் பெரும் சிறப்பிருப்பதாக எண்ணிக்கொண்டு தங்களுக்கு தாங்களே புலங்காகிதம் அடைந்து கொள்ளும் ஏராளமான நபர்களையும் நம்மால் காண முடிகிறது.இப்படி ஒவ்வொரு மனிதனின் மனங்களிலும் அல்லது வாழ்விலும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த ஒட்டுன்னி எவ்வாறு தோன்றியது? யார் இதனை தோற்றுவித்தார்?இது எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?இப்பொழுது இதனுடைய தாக்கம் சமூகத்தில் எப்படி இருக்கின்றது? என்பதுபற்றியெல்லாம் வரலாற்று சான்றுகளுடன் வருங்கால சந்ததியினருக்கு விரிவாக விவரிக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட விளக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை தொகுத்து வருகின்றேன்.

இப்பொழுது அவற்றில் உள்ள மிக அவசியமான கருத்துக்களின் மூலம் நம்மில் ஒவ்வொருவரும் பயன்பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இந்த கட்டுரையில் அவற்றில் சிலவற்றை மட்டும் பதிவும் செய்திருக்கின்றேன். நிச்சயம் இந்த கட்டுரை சாதியின் அடிப்படைகளையும் இன்னும் அதன் நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன். நீங்களும் வாசித்து பயன் பெறுவதோடு உங்கள் நெருக்கம் பெற்றவர்களையும் பயன்பெறச்செய்யுங்கள் என்று பேரன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.முதலில் சாதியைப்பற்றி விரிவாக நாம் பார்ப்பதற்கு முன்பு சாதி(Caste) என்ற அடைமொழிக்கு அகராதியிலும் இன்னும் நிதர்சன வாழ்வியலில் சமூகம் சார்ந்தும் என்ன பொருள் கொள்ளப்படுகின்றது என்பது குறித்து பார்ப்பதே மிகச்சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்.எனவே சாதி சம்மந்தமான அகராதி பொருளை முதலில் சுறுக்கமாக பார்த்துவிடுவோம் வாருங்கள்..!

அகராதியில் சாதி(Caste) என்பதன் பொருள் என்ன.?

சாதி என்ற சொல் இந்திய மொழியை சேர்ந்த சொல் அல்ல.மாறாக அது "ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது கோத்திரத்தை அடையாளப்படுத்திக் காட்டுவதற்கான போர்ச்சிக்கீசிய சொல்லாகும் என்றே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஆங்கில அகராதியான Oxford Dictionary கூறுகின்றது.ஆக சாதி என்ற சொல் குறிப்பிட்ட சில காலம் இந்திய குறு நிலங்களை ஆட்சி செய்த போர்ச்சுகீஸியர்களாலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒருசிலர் குறிப்பிடுகின்றனர் என்றாலும் இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு முன்பே கிட்டதட்ட கி.மு.200 ற்கு முன்பே சாதி என்ற சொல் வழக்கத்தில் இல்லாமல் அது செயல் வடிவம் பெற்று ஆட்சி முறையாகவுமே கடைபிடிக்கப்பட்டு வந்ததாகவும் அவற்றையே போர்ச்சிக்கீஸியர்கள் தங்களின் சாதி என்ற சொல்லால் அடையாளப்படுத்தியதாகவும் நம்மால் காண முடிகின்றது.இதுவே சாதி என்பதற்கான அகராதி பொருளாக நம்மால் காண முடிகிறது.

ஆக இந்தியாவில் சாதிய கட்டமைப்பு மற்றும் அதன் பரினாம தோற்றம் என்பது குறித்து நாம் கட்டுரையின் கருப்பகுதியிலேயே பார்க்க இருகின்றோம் என்பதால் தற்பொழுது இந்த சாதி என்ற தனி மனித அல்லது சமூக  அடைமொழியானது இந்தியாவை தவிர்த்து ஏனைய நாடுகளிலும் நடைமுறையில் இருந்ததா அல்லது இப்பொழுதும் நடைமுறையில் இருக்கின்றதா?என்ற மிக அவசியமான சாதி குறித்த உலகலவிலான சமூக நிலைப்பாட்டையும் இங்கு நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கின்றது என்பதால் அது குறித்தும் ஒரு சில விளக்கங்களைப் பதிவு செய்ய நான் விரும்புகின்றேன்.எனவே அது குறித்தும் சில விளக்கங்களை பார்த்துவிடுவோம் வாருங்கள்..!


உலகளவிலான சமூகத்தில் சாதிய நிலைப்பாடு என்ன?

மேற்கூறிய அகராதியின் அடிப்படையிலான இன மற்றும் குலம் சார்ந்த அடையாளமாக காணப்படும் சாதிய கண்ணோட்டம் இந்திய ஆசிய கண்டம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் காணப்படும் ஒரு அடிப்படைவாத செயல்பாடாகவே இடம்பெற்றிருப்பதாக நம்மால் தற்போதைய சமூக நிலையிலும் காண முடிகின்றது.ஆனால் அவை சில நாடுகளில் இடங்கள் மற்றும் கால நிலைகளுக்கேற்ப பல்வேறு பரிணாமங்களை அடைந்திருப்பதாகவும் என்னால் உணர முடிகிறது.உதாரணமாக ஆரம்ப காலகட்டங்களில் தங்கள் மூதாதையர்கள் அல்லது சமூகத்தவர்கள் செய்த ஏதோ ஒரு செயலை தங்களுக்கான அடைமொழியாக பயன்படுத்திக்கொள்ளும் முறை இன்றைக்கும் எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில மக்களால் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது.


அரபுகளிடம் சாதி இருந்ததா?

இவற்றில் குறிப்பாக அரபு நாடுகளில் வாழும் அரபுகளிடம் நபிகள் நாயகம் இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்பு மிகப்பெரும் குலப்பெருமை இருந்து வந்ததாகவும் பிறகு இஸ்லாமிய சகோதரத்துவ போதனையால் அந்த மக்களிடம் இத்தகைய மனிதர்களை பேதமைப்படுத்தும் குலப்பெருமை என்பது அறியாமையின் அடையாளம் என்பதாக போதிக்கப்பட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாகவும் வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. மேலும் உலகிலேயே மக்களுக்கு மத்தியில் உடல் உறுப்பால் ஊணமுற்றவர்கள் மேலும் நிறத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மேலும் குலப்பெருமையின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவ போதனையால் மட்டுமே பெரிதும் பயன்பெற்றதாக வரலாற்றில் நம்மால் அறிய முடிகின்றது.மேலும் அத்தகைய போதனையே உலக மக்களிடம் நபிகள் நாயகத்தால் போதிக்கப்பட்ட இஸ்லாத்திற்கு மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றுந்தந்ததாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இதனையே நம் நாட்டின் மீது அக்கரை கொண்ட மக்களால் பெரிதும் போற்றப்பட்ட துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1900 -பிப்ரவரி-3யில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அகில உலக மத கூட்டமைப்பின் சார்பாக "The great teach of the world" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போது இப்படி கூறிக்காட்டுகின்றார்.

"How could Mohammedanism have lived, had there been nothing good in its teaching.? There is much good. Mohammed was the Prophet of equality of the brotherhood of man' and the brotherhood of all Muslims. "Mohammed by his life showed that amongst Muslims there should be perfect equality and brotherhood. There was no question of race, caste, creed, colour, or sex.

தமிழாக்கம்:முஹம்மது அவர்கள் போதனையில் எவ்வித நலவும் இல்லை என்றால் இன்றளவில் முஹம்மதியம் எப்படி இன்றும் உயிர் பெற்றிருக்கின்றது.?உண்மையில் அவற்றில் அதிகம் நன்மைகள் இருக்கின்றது.முஹம்மது மனித சமூகத்தின் சகோதரத்துவத்தை சமமாக நிலை நாட்டிய இறைத்தூதராக இருந்திருக்கின்றார்.மேலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மகத்தான சகோதரத்துவத்திற்கு சொந்தக்காரராகவும் இருந்திருக்கின்றார்.தன்னுடைய வாழ்வியல் மூலமாகவே இஸ்லாமியர்களுக்கு மிகச்சிறந்த சமத்துவமிகுந்த சகோதரத்துவத்தை காட்டியிருக்கின்றார்.அங்கு நிற வேற்றுமை,குல வேற்றுமை,பாலின வேற்றுமை,சமூக வேற்றுமை போன்ற பேச்சுக்கே இடமில்லை.

இவை மட்டுமின்றி ஒரு துருக்கிய அரசன் ஆப்ரிக்காவில் ஒரு கருப்பு இனத்தவரை இன்று அடிமையாக விலைக்கு வாங்கி அவரை சங்கிலியால் கட்டி தன் நாட்டிற்கு இழுத்துச் செல்லலாம்.ஆனால் அதுவே அந்த அடிமை முஹம்மது அவர்கள் போதித்த இஸ்லாத்தை ஏறுவிட்டால் அவன் அந்த அரசனின் மகளையும் திருமணம் செய்துகொள்ளும் தகுதி பெற்றுவிடுகின்றான் என்பதே முஹம்மது நபியின் போதனையின் மிகப்பெரும் சாதனை என்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவ்வுரையில் குறிப்பாக இந்து மத போதகர்கள் தங்கள் மதம் சார்ந்து குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதால் தங்களின் போதனை எவ்வித பலனுமற்றதாக ஆகிக்கொண்டிருக்கின்றது என்பது குறித்தும் இன்னும் பல்வேறு கருத்துக்களை மிக துள்ளியமாகவும் பதிவு செய்திருக்கின்றார். அவை அனைத்தையும் இங்கு பதிவு செய்வதால் கட்டுரை மிக நெடியதாகிவிடும் என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது என்பதையும் வறுத்ததோடு இங்கு நான் பதிவுசெய்து கொள்கின்றேன்.இவை மட்டுமின்றி இன்னும் பல்வேறு சொற்பொழிவுகளிலும் திரு சுவாமி விவேகானந்தர் அவர்கள் "முஹம்மதியம் வாலால் பரவியது என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அது தன்னுடைய சகோதரத்துவ அரவனைப்பால் மட்டுமே உலகம் முழுவதும் பரவியது என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றார் என்பதனையும் உங்களின் மேலான கவனத்திற்கு தர நான் கடமைபட்டிருக்கின்றேன்.


ஆங்கிலேயே நாடுகளில் சாதி இருந்ததா?

ஆக சாதிய பேதமை என்பதில் அரபு தேசத்தின் நிலைப்பாடு இவ்வாறிருக்க இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் மேலைய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா,ஜெர்மன்,லன்டன் போன்ற நாடுகளில் இதே சாதியம் என்பது சில இடங்களில் குலப்பெருமை அல்லது உடல் தோற்ற பாகுபாடு என்ற பழமைவாதத்தோடும் பல இடங்களில் நிறப்பாகுபாடு என்ற புதுமை வாதத்தோடும் நிலைப்பெற்றிருப்பதாகவே என்னால் காண முடிகின்றது. இதனால் மிகப்பெரும் மனித முன்னேற்றம் கண்டுவிட்டதாக கூறிக்கொள்ளும் மேலை நாடுகளிலும் பல்வேறு மனித உரிமை மீறல்களும் அடக்குமுறைகளும் மலிந்துகிடப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.

ஆக சாதி (Caste) என்பதன் அகராதி பொருளையும் இன்னும் அதனுடைய உலகளவிலான தற்போதைய சமூக நிலைப்பாட்டையும் மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நான் நம்பிக்கை வைக்கின்றேன்.ஆகவே அடுத்தபடியாக இந்த கட்டுரையின் கருவான "இந்தியாவில் சாதிய அமைப்பு எவ்வாறு தோன்றியது"? என்பது குறித்தும் இன்னும் அது எத்தகைய பரினாமங்களையெல்லாம் அடைந்திருக்கின்றது என்பது குறித்தும் பார்த்துவிடுவோம் வாருங்கள்.


இந்தியாவில் சாதிய கட்டமைப்பு எவ்வாறு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

நான் மேற்கூறியவாறே இந்தியா மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் மனிதர்களுக்கு மத்தியில் வேறுபடுத்திக்காட்டும் வண்ணம் கட்டமைக்கப்பட்ட சாதிய அமைப்புகள் பல்வேறு பரினாமங்கள் பெற்று கடைபிடிக்கப்பட்டாலும் அவை இந்தியாவில் மட்டுமே ஆட்சி நடைமுறையால் அங்கிகாரம் பெற்று இன்னும் அவ்வாறு மனிதர்களுக்கு மத்தியில் பேதமை காட்டுவதே இறைவனின் புறத்திலிருந்தும் வந்த வேத பண்பாடாகும் என்றும் கூறி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை நம்மால் காணமுடிகின்றது. 

அதாவது இந்தியாவில் தங்களை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்திற்கு சொந்தக்காரர்களாக வெளிப்படுத்திக்கொண்ட இன்னும் தற்போது தங்களை இந்துக்கள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பிராமண ஆட்சியினர்களாலேயே கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பாக இந்தியா முழுவதையும் ஆட்சி செய்து வந்த மௌரிய ஆட்சியாளர்கள்,வஞ்சகமும்,சூழ்ச்சியும் நிறைந்த போர்களை கண்டு சலிப்படைந்த போது இனி போர் செய்யப்போவதில்லை என்றும் இன்னும் மத மூட நம்பிக்கைகளெல்லாம் வேண்டாம் என்றும் கூறி பவுத்த மதத்தை ஏற்று மூட நம்பிக்கைகளைவிட்டும் ஒதுங்கிய பொழுது அவர்களை சூழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்ற பிராமண ஆட்சியாளர்கள் பவுத்த மதத்தை ஏற்று செயல்படுபவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்துவதற்காக உறுவாக்கிய நடைமுறையே இன்றைய பிறப்பு அடிப்படையிலான சாதிய கட்டமைப்பாகும்.அவ்வாறே அத்தகைய பௌத்த மற்றும் சமண முனிவர்களை அடிமைபடுத்தி வைத்துக் கொள்வதற்காக குறுகிய காலத்தில் பிராமண ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட வேதமே இன்றைய சாதிய கொடுமையை போதிக்கும் மனுஸ்மிருதி என்ற சட்ட நூலுமாகும்.

இந்த மனுஸ்மிருதியே இன்றைக்கு இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களால் ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாக குறிப்பாக இன்றைய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வரை சட்ட புத்தகமாக கடைபிடிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனையே இந்தியாவில் மீண்டும் சட்ட நூலாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சிலரால் தற்போது வரை வலியுறுத்தப்பட்டுக் கொண்டு வருவதையும் நம்மால் காண முடிகின்றது.ஆக இதுவே இன்றைய இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் உயர் சாதியினர் மற்றும் கீழ் சாதியினர் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய கட்டமைப்பாக நம்மால் அறிய முடிகின்றது.இன்னும் இவற்றிற்கு இடைப்பட்ட இந்திய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் இவற்றிற்குள் உள்ளாக்கபடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.அவை குறித்து தனிக்கட்டுரையில் முழு விளக்கம் தர இருப்பதால் அதனை இங்கு நான் பதிவு செய்வதை தவிர்த்திவிடுகின்றேன்.

மேலும் இங்கு வரலாற்றை புரட்டிப்பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வியும் எழ வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.அதாவது சாதிய கட்டமைப்பை பற்றி அலசி ஆராய்ந்த சட்ட மாமேதை அம்பேத்கரே அத்தகைய கேள்வியை எழுப்பி அதற்கான மேலோட்டமான விடையையும் தனது "பண்டைய இந்தியாவில் புரட்சியும்,எதிர் புரட்சியும்"என்ற புத்தகத்தில் தந்துவிட்டு சென்றிருப்பதாகவே என்னால் காணமுடிகின்றது. அக்கேள்வி என்னவென்றால் "இன்றைக்கு பிறப்பின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும் சாதிய கட்டமைப்பானது முந்தைய வேதச்சுவடிகளில் சொல்லப்படவில்லை என்று கூறப்படுகின்றதே அதன் நிலை என்ன என்பதே அக்கேள்வியாகும்.

இதற்கு எனது சுருக்கமான பதில் என்னவென்றால் "பிராமணர்களால் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதிக்கு முன்பு வழங்கப்பட்ட வேதச்சுவடிகளில் மேற்கூறப்பட்ட அடிமைத்தனத்தை போதிக்கும் பிறப்பு அடிப்படையிலான சாதிய கட்டமைப்பானது கூறப்படவில்லை என்பதே உண்மையாகும். இதனையே சட்ட மாமேதை அம்பேத்கரும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் கூறுகின்றனர்.அதாவது மனுஸ்மிருதி என்று சொல்லப்படும் சட்ட வேத நூல் பிராமணர்களால் எழுதப்படுவதற்கு முன்பு வாழ்ந்த இங்குள்ள ரிஷிகளால் வழங்கப்பட்ட வேதச்சுவடிகளில் மேற்கூறப்பட்டது போல் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை அடிமைபடுத்தி அவர்களை அடக்கி ஆளுவதற்கான சாதிய கட்டமைப்பு பற்றிய எவ்வித கருத்துக்களும் கூறப்படவில்லை என்பதே அம்பேத்கர் உட்பட அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒன்றுபட்டு கூறும் கருத்தாக இருக்கின்றது.

அப்படியானால் இந்த பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பு எப்படி வந்தது என்று நீங்கள் மீண்டும் என்னைப்பார்த்து கேட்கலாம்.அதற்கு என்னுடைய வட்டுறுக்கமான பதில் என்னவென்றால் நான் மேற்கூறிய மனுஸ்மிருதியின் வரலாற்றை நீங்கள் ஆழமாக உற்று கவனிக்க வேண்டும் என்பதேயாகும்.ஏனெனில் பிராமணர்கள் என்பவர்கள் நன்னெறிகளை போதித்த புத்த அல்லது சமண அல்லது முனிவர்களைப்போன்று வேதங்களை ஏற்ற வேதக்காரர்கள் அல்ல என்பதாகவே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.

ஆம் நீங்கள் மனுஸ்மிருதியின் ஆரம்ப கால வரலாற்றை உற்று நோக்கினால் முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த அனைத்து நன்னெறி வேதங்கள் மற்றும் போதனைகள் அனைத்தையும் அவர்கள் மாற்றி அமைப்பதற்கு பதிலாக தாங்களே உறுவாக்கிய மனுஸ்மிருதி கூறும் கருத்துக்களையே அவற்றிற்கு மேலான இறை கருத்துக்களாகவும் இன்னும் இதுவே மக்களால் தற்போது கடைபிடிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனித வேதம் என்பதாகவும் மக்களிடம் வழுக்கட்டாயமாக புகுத்தியிருக்கின்றனர் என்பதை நிச்சயம் கண்டு கொள்ள முடியும்.இன்னும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படுவதே தங்கள் ராஜியத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தர்மம் என்பதாக அவர்கள் போதித்திருப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.அதன் அடிப்படையிலேயே மனுதர்மம் என்பது மக்களுக்கான உயர்ந்த சட்ட வேதம் என்பதாக மக்கள் முற்றிலும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கண்டு கொள்ள முடியும்.

மேலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுதப்பட்ட மனுஸ்மிருதியை குறிப்பாக பிராமணர்களை தவிர வேறு யாரும் படிக்கக்கூடாது என்று அவர்கள் கட்டளையிட்டதற்கும் இதுவே அடிப்படை காரணம் என்பதையும் உங்களால் கண்டுகொள்ள முடியும்.இன்னும் இந்த உலகில் சக மனிதர்களின் மீது அதிகாரம் செலுத்துவது மட்டுமே தங்களின் பிறப்புரிமை என்பதாக சட்டம் இயற்றிய அவர்கள் தங்களின் மொழியையும் யாரும் கற்கக்கூடாது என்று தடைவிதித்திருப்பதையும் உங்களால் கண்டு கொள்ள முடியும்.ஏனெனில் அவற்றை படித்துவிட்டால் அவற்றில் இருக்கும் மனித விரோத செயல்பாட்டு சட்டங்களை மக்கள் அறிந்துவிடுவார்கள் என்பதாலேயே முற்றிலுமாக அதனை பிராமணர்கள் அல்லாதோர் படிப்பதை  தடைவிதித்தார்கள் என்றே பல்வேறு வரலாற்று ஆசிரியர்களாலும் கூறப்படுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் அவ்வேதத்தை படிக்க நினைப்பதே பெறும் குற்றம் என்றும் அவ்வாறு யாராவது படித்துவிட்டால் அவர்களின் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும் என்றும் கண்கள் பிடுங்கப்பட வேண்டும் என்றும் இன்னும் பல்வேறு கொடூர தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் அதே மனுதர்மத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டதும் முற்றிலுமாக அன்றைய பிராமண ஆட்சியாளர்களின் தனிப்பட்ட செயலேயன்றி முந்தைய வேதங்களுக்கோ அல்லது ஆட்சியாளர்களுக்கோ எவ்வித சம்மந்தமும் இல்லை என்றே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.

ஆனால் காலப்போக்கில் குறிப்பாக திராவிடர்கள் என்று வரலாற்றில் அடையாளம் காணப்படும் தென் இந்திய மக்கள் நீண்ட நெடும் கால அடிமைத்தனத்திற்கு எதிராக மிகப்பெறும் புரட்சி செய்திருப்பதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இதனைத்தான் சட்ட மாமேதை அன்னல் அம்பேத்கர் அவர்கள் "பண்டைய இந்தியாவில் புரட்சியும் 'எதிர்புரட்சியும் "என்று குறிப்பிட்டிருப்பதாகவும் நம்மால் அறிய முடிகின்றது.அந்த புரட்சி எப்படி இருந்தது என்பது சம்மந்தமாக ஒரு சில விளக்கங்களை இங்கு நான் பதிவு செய்வது மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்று கருதுவதால் அது சம்மந்தமான ஒருசில கருத்துக்களையும் பார்த்துவிடுவோம் வாருங்கள்.


எப்படி மனுஸ்மிருதிக்கு எதிரான புரட்சி ஏற்பட்டது?

முதலில் மனுஸ்மிருதி போதிக்கும் மனித விரோத செயல்களை தென் இந்திய பிராமணர்களில் சிலரே ஏற்கவில்லை என்பதே எனது கருத்தாகும் என்பதை முதற்கண் இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.அதாவது பாரதி போன்ற சிறந்த கவிஞர்கள் கூட மனுஸ்மிருதி போதிக்கும் தீண்டாமை நோயான சாதியை மிக கடுமையாக விமர்சித்து இருப்பதாகவே என்னால் வரலாற்றில் காண முடிகின்றது.அவ்வாறே பெண் புலவர்களில் மிகப்பெரும் பெயர் பெற்ற நம் பெண் இனத்தின் அடையாளமான மூதாதை ஔவையார் அவர்களும் அயோத்திதாசர் போன்ற பெரும் மஹான்களும் சாதிய தீண்டாமையை எதிர்த்து வந்ததாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.மேலும் மனுஸ்மிருதிக்கு எதிராக ஆரம்ப காலம் தொட்டே கருத்தியல் எதிர்ப்பு இருந்தாலும் மேலும் அது அவ்வப்பொழுது வலுப்பெற்று மறைந்தாலும் குறிப்பாக இஸ்லாமிய ஆட்சியாளர்களின் காலத்திலும் இன்னும் ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் காலத்திலும் அது புரட்சியாகவே வெடித்தது.

ஏனெனில் அவர்கள் இந்து மக்கள் என்பதாக பிராமணர்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்களுக்கு மதநம்பிக்கைகளையும் வழிபாட்டு சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க முழு சுதந்திரம் அளித்திருந்தாலும் அவற்றை தாண்டி மனுஸ்மிருதி கூறும் மனித விரோத செயல்களை அந்த அப்பாவி மக்கள் மீது மதத்தின் பெயரால் திணிக்கப்படுவதை  அனுமதிக்கவில்லை என்றே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் அத்தகைய மனித விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் சட்டங்கள் இயற்றியதையும் நம்மால் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக அறிய முடிகின்றது.அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பாக இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக மதத்தின் பெயரால பிராமண அடிமைத்தனத்தின் இன்னல்களால் பாதிக்கப்பட்டு பொறுமை இழந்த அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற தென் இந்திய தலைவர்கள் தங்களின் மீதும் தங்களின் சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் மனித விரோத அடிமைத்தனமான சாதிய கொடுமைக்கு எதிராக மிகப்பெரும் போர்கொடி தூக்கியிருக்கின்றார்கள் என்பதை நம்மால் காணமுடிகின்றது.

அந்த புரட்சியின் ஒரு பங்காகவே முதல் முதலில் பிராமணர்களால் வழுக்கட்டாயமாக இந்துக்கள் என்று அடக்கியாளுவதற்காக உருவாக்கப்பட்ட  சட்ட நூலான மனுஸ்மிருதியை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் 1919 ஆம் ஆண்டு முத்துரங்க செட்டியார் என்பவர் திருவனந்தபுரம் கோமண்டூர் என்ற ஊரைச் சேர்ந்த இராமானுஜ ஆச்சாரி என்ற பார்ப்பனரின் மூலமாக  மொழிபெயர்த்து அதனை அதே ஆண்டே சென்னை மாகாணத்தின் பத்மநாப விலாச அச்சகத்தில் அச்சிட்டு ரூபாய் 2.50 பைசாவிற்கு விற்பனையும் செய்தார் என்பதாக நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.அதற்கு பிறகு தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகம் உட்பட பல்வேறு மாகாணங்களிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சி எழுத்து வடிவங்களிலும் செயல் மற்றும் போராட்ட வடிவங்களிலும் பரினாமம் பெற்றிருக்கின்றது.

இவற்றில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழகத்தில் தந்தை பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி அவர்கள் மிகப்பெரும் புரட்சி செய்திருப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.இந்திய மக்களுக்கு எதிரான இன்னும் மனித விரோத சாதிய கட்டமைப்பிற்கு எதிரான அவருடைய வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை என்னுடைய "தமிழர்களின் கதாநாயகன் பெரியார் "என்ற புத்தகத்தில் விரிவாக நான் விவரித்திருக்கின்றேன். விருப்பமுள்ளவர்கள் கட்டாயம் அதனை வாசியுங்கள்.அவற்றில் இந்திய குடிமக்கள் இந்து மதம் என்ற பெயரில் எவ்வாறெல்லாம் அடிமைப் படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதையும் இன்னும் பெரியார் அவற்றிலிருந்து குறிப்பாக தமிழக மக்களை விடுவிக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதையும் நிச்சயம் உங்களால் அறிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

இப்படி கலப்புரட்சி ஒருபுறமிருக்க மறுபுறம் அன்னல் அம்பேத்கர் இந்திய சாதிய கட்டமைப்பான மனுஸ்மிருதிக்கு எதிராக சட்ட புரட்சியில் முற்றிலுமாக தன்னை அற்பனித்தார் என்பதாகவே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது. அதன் விளைவாகவே இன்றைய அரசியல் அமைப்பு சட்டமும் உறுப்பெற்று அது இந்திய மக்கள் அனைவராலும் சாதி மதங்கள் கடந்து புனிதத்தோடு பார்க்கப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது என்றால் அது மிகையாகாது.

ஆக மேற்கூறியவாறே இந்தியாவினுடைய சாதிய கட்டமைப்பு தோன்றி அது பல்வேறு புரட்சிகளால் புதைக்கவும்பட்டு தற்பொழுது அது விசித்திரமான தோற்றம் பெற்று, பரினாமம் அடைந்து நிற்கின்றது என்பதே இந்தியாவின் சாதிய கட்டமைப்பின் தோற்றம் குறித்த எனது ஆழமான கண்ணோட்டமாகும்.அது என்ன தற்போதைய தோற்றம் என்பதாக நீங்கள் எண்ணலாம்.! அதற்கான விடையை காண வேண்டியது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமை என்பதால் அது குறித்தும் ஒரு சில விளக்கங்களை இங்கு நான் பதிவு செய்துவிட்டு இந்த கட்டுரையின் முடிவுரைக்கு வர விரும்புகின்றேன்.


இந்தியாவில் சாதிய கட்டமைப்பின் தற்போதைய தோற்றம் என்ன? 

அம்பேத்கர் மற்றும் பெரியார் மற்றும் காந்தியடிகள் போன்ற மஹான்களால் இந்நாட்டிற்காக அரும்பாடு பட்டு உறுவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமைபடுத்தி வந்த ஒரு சிறு குழுவினரை அடக்கி சாதிய கட்டமைப்பை ஒழித்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு அந்த மஹான்கள் தங்கள் கண்களை மூடியிருக்கலாம். ஆனால் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் அதே சாதிய கோரமுகம் வேறொரு பரிணாமம் பெற்று இந்நாட்டு மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையை அவர்களின் கல்லரைகள் கண்டாலும் இதற்காகவா எங்களின் வாழ்வு முழுவதையும் அற்பணித்தோம் என்று கதறி அழும் என்றே கருதுகின்றேன்.

ஆம் அந்த மஹான்கள் மனுவை ஒழித்து மக்களைக்காக்க உறுவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனமே இன்று தன்னை காக்க முடியா தருனத்தில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதையே நான் இப்படி கூறுகின்றேன்.இன்றைய அரசியல் சாசனத்தை காத்து நிலை நாட்டவேண்டிய நீதித்துறைகளோ எந்த கரை படிந்த கைகளிடமிருந்து விடுதலை தேடி ஓராயிரம் ஆண்டாக பல ஆயிரம் போராட்டங்கள் கண்டதோ அதே கரைபடிந்த கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.

உதாரணமாக உயர் சாதியினராக கருதப்படும் பிராமணர்கள் எத்தகைய குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவதில்லை.மாறாக கீழ் சாதியினராக கருதப்படும் ஒருவன் சிறு குற்றம் செய்தாலும் அவன் மிகக்கொடூரமாக பொது வெளியில் தண்டிக்கப்படும் அதே மனுவின் கோடூரம் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் இந்நாட்டில் அன்றாடம் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டே வருகின்றது.இவற்றிற்கான சான்றுகளையும் பல்வேறு உணமை நிகழ்வுகளையும் எனது "இந்திய சாதிய கட்டமைப்பின் வரலாறு"என்ற புத்தகத்தில் விரிவாக தொகுத்து இருக்கின்றேன்.

அவ்வாறே கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் உயர் சாதியினராக கூறிக்கொள்ளும் பிராமணர்களே முன்னுரிமை எடுத்துக்கொண்டு ஏனைய குடிமக்களை இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் இரண்டாம் தர குடிமக்களாகவே பாவித்து அவர்களை அடிமைப்படுத்தும் அதே மனுவின் சாதிய கொடூரம் தற்போது வரை அரங்கேற்றப்பட்டுக்கொண்டே வருகின்றது.இதற்கான பல்வேறு சான்றுகளையும் உண்மை நிகழ்வுகளையும் எனது புத்தகத்தில் தொகுத்து இருக்கின்றேன்.

இதனைப்போன்றே தனிமனித உரிமைகளான உணவு ,உடை,உறவு,இறை நம்பிக்கை,இறைவழிபாடு, கலாச்சாரம் போன்றவற்றிலும் உயர் சாதியினராக கருதப்படும் தங்களையே முற்படுத்தி கடைபிடிக்க வேண்டும் என்றும் தங்களின் விருப்பப்படியே அவைகளும் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்கு பிடிக்காததை எவரும் சுதந்திரமாக செய்யக்கூடாது என்றும் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் அதே மனுவின் அடிப்படையிலேயே கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இவற்றிற்கான பல்வேறு சான்றுகளையும் உண்மை நிகழ்வுகளையும் எனது புத்தகத்தில் பதிவு செய்து வருகின்றேன்.

இது மட்டுமின்றி நம் நாட்டில் இந்து மதமல்லாத வேறு மதங்களை கடைபிடிக்கும் மக்களும் இவர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும் என்றே தற்போது முயன்று வருகின்றனர்.அவை குறித்து ஒரு சில விளக்கங்களை முந்தய கட்டுரையான "இந்தியாவும் இந்து ராஷ்ட்ரியமும் "என்ற எனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்.அவை மட்டுமின்றி அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை மிக விரைவில் பதிவிடவும் இருக்கின்றேன்.

ஆக இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் அதே ஆதிக்க மனோபாவம் கொண்ட வஞ்சமும் சூழ்சியுமே வாழ்வின் வெற்றி என்று போதித்துக்கொண்டிருக்கும் கூட்டம் முந்தய அதே அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்ல துடித்துக்கொண்டிருக்கின்றது என்பதை மேற்கூறியவற்றின் மூலம் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள் என்றே கருதுகின்றேன்.எனவே தற்பொழுது இந்த கட்டுரையின் சுறுக்கம் கருதி இக்கட்டுரையின் சாராம்சமான முடிவுரைக்கு வருவதே சிறப்பு என்று கருதுகின்றேன்.வாருங்கள் அதனையும் வட்டுறுக்கமாக பார்த்துவிடுவோம்.


முடிவுரை:

இந்த உலகினால் புனிதமாக பார்க்கப்படும் அரசியல் நிலைப்பாடான ஜனநாய ஆட்சிமுறை கடைபிடிக்கப்படும் நாடுகளில் மிகப்பெரிய நாடாக இன்றைக்கு இந்தியா இருக்கின்றது என்று என்னைப்போன்ற பல்வேறு இந்தியர்களும் பெருமிதம் கொள்வது நிதர்சனமாக இருக்கின்றது என்றே கருகின்றேன்.ஆனால் ஜனநாயகம் கூறும் "மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி" முறைமையானது தற்போதைய இந்தியாவில் மிகப்பெரும் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதே எனது இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் இது பல நூறு ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட வஞ்சகர்களால் இந்நாட்டு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு எதிராக மானம் இழந்து மண்டியிட்டு பல்வேறு தியாகங்கள் செய்து சமீபத்தில் போராடி பெற்ற அரசியல் சாசனமானது முந்தய அதே ஆதிக்க வர்க்கத்தினரால் ஆபத்திற்கு ஆளாகியிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்காகவே எழுதப்பட்ட கட்டுரையுமாகும்.நிச்சயம் இக்கட்டுரை வரலாற்று ரீதியாக தங்களின் அடிமைத்தனத்தை உணர்ந்து தாங்கள் இனி அடிமைகளாக வாழப்போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ள விரும்பும் நல் உள்ளங்களுக்கும் இன்னும் தொழில் நுட்பம் நிறைந்த இக்காலத்திலும் சக மனிதனை தீண்டத்தகாதவன் என்றும் அவனுக்கு எவற்றிலும் சம உரிமை கிடையாது என்றும் நடைமுறைபடுத்தப்படுவதை வெறுக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இது மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.

குறிப்பாக இக்கட்டுரை தங்களை யாரெல்லாம் பிற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதியினராக எண்ணிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மிகப்பெரும் எரிச்சலையே தரும் என்பதையும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அவர்கள் செய்யும் மனித விரோத செயல்கள் பிற மனிதர்களுக்கு தரும் வேதணையைவிட என் கட்டுரையின் சுட்டிக்காட்டுதல் ஒன்றும் பெரிதல்ல என்பதால் இதற்காக என்னை அற்பணித்ததில் நான் பெருமிதமே அடைகின்றேன்.அத்தோடு ஆதிக்க சாதியினராக தங்களை எண்ணிக்கொள்ளும் நண்பர்கள் மனித நேயத்தையும் மனித மாண்பையும் எண்ணிப்பார்த்து பிற மனிதர்களோடு நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு கனம் எடை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி:

Author:A.Sadam husain hasani

வியாழன், 7 அக்டோபர், 2021

பெரியாரும் விவாகரத்துச் சட்டமும்

பெரியாரைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலராலும் பரப்பப்பட்டுவரும் நிலையிலும் அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பல்வேறு நலவுகளையும்,தொண்டுகளையும் நடுநிலை கண்ணோட்டத்துடன் என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன்.குறிப்பாக ஒரு சுதந்திரமான மனோநிலையில் மனிதர்களின் வாழ்வியலை போதிக்கும் ஒரு  சிறந்த ஆசானாகவே அவர் தன் வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பதை அவருடைய எழுத்துக்களும் பிரச்சாரங்களும் பிரதிபளிப்பதை காணும் பொழுது அத்தகைய சிறந்த மனிதரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

இந்த கட்டுரை முழுவதும் பெரியார் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையில் "விவாகரத்து சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி "கல்யாண விடுதலை"என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.இது நிச்சயம் எல்லோருக்கும் பயனலிப்பதாக இருக்கும் என்றே ஆதரவு வைத்து பதிவிடுகின்றேன்.

(குறிப்பு:இவற்றில் சில கருத்துக்களை புரிவதற்காக நானே எளிய சில வார்த்தைகளையும் சேர்த்து இருக்கின்றேன் என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு விட்டுவிடுகின்றேன்.)"ஆண்,பெண் கல்யாண விஷயத்தில் அதாவது கணவன் மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாண தத்துவத்தையெல்லாம் சுறுக்கமாக பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாக்கிக்கொள்வதை தவிர வேறொன்றுமே அதில் இல்லை.அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கிறோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடு மட்டுமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும் ,இயற்கைக்கு விரோதமான நிர்பந்தமும்படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது.ஆனால் நம் நாடு இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாடுகளையும் விட மிக மோசமானதாகவே இருந்து வருகின்றது. 

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டிற்குள்ளாக கல்யாணம் என்பதும் ,உறவு முறை என்பதும் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கொடுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வருகின்றனர்.ஆனால் நம் நாடு மாத்திரம் குரங்குபிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது.ஆகவே முறையாக நமது நாட்டில் பெண்களின் ஒரு கிளர்ச்சி ஏற்பட வேண்டிய அவசியமிருக்கின்றது.

சென்ற வருடம் செங்கல் பட்டு மாநாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடன் மேலும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடன் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுபவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு பிறகு இந்தியாவிலேயே பல இடங்களில் கல்யாண ரத்து சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரஷ்யாவில் கல்யாணம் என்பது ஒரு நாள் ஒப்பந்தமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.ஜெர்மனியில் கணவன் மனைவிக்கு விருப்பமில்லையானால் காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தினரும் கல்யாண ரத்துக்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள்.மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் நடைமுறையில் இருந்துதான் வருகின்றது.ஆனால் நமது நாட்டில் மட்டும் இவ்விஷயத்தில் சட்டம் கொண்டுவராமல் இருப்பது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும்.

சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக கனவர்கள் தங்களது மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்வதாக தினம் தினம் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம். சில சமயங்களில் மனைவிகளின் நடத்தையில் சந்தேகத்தின் காரணமாகவே பல்வேறு கொலைகள் நடப்பதையும் பார்க்கின்றோம்.ஆனால் இந்த சீர்திருத்தவாதிகளான பிடிவாதக்காரர்களிடம் தெய்வீகம் சார்ந்த இந்த கல்யாணம் இப்படி கொலைகளில் முடிகின்றதே என்று கவலைப்பட எவ்வித புத்தியும் இன்னும் தென்படவில்லை.

"பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அவ்வாறே ஆண்களுக்கும் திருப்தியும் ,இன்பமும் ,உண்மையான காதலும்,ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமான காரியமாகும்.அப்படி இல்லாதவரை ஆண்,பெண் இருவருக்கும் சுதந்திரமான வாழ்க்கை என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

இங்கு தங்களை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து நாம் ஒன்று கேட்கவும் விரும்புகின்றோம்."கல்யாணம் என்பது மனிதனின் இன்பத்திற்கும் திருப்திக்குமா.?அல்லது வெறுமனே சடங்கிற்காக மட்டுமா..?என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

அது அவர்களால் முடியாது...!

எனவே தெய்வீகம் எங்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பமே இல்லாமலும் எவ்வித அறிமுகமும் இல்லாத உறவில் நிலைத்திருக்கும் படியும் வற்புறுத்தப்படுவதால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பம் ஒழிக்கப்பட வேண்டும்.மனிதன் ஏன் பிறந்தான் ஏன் சாகின்றான் என்பது வேறு விஷயம்.அது ஒருபுறமிருக்க மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியும் தான்.அதற்கு ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாக இருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூரு இருக்குமானால் அதை முதலில் கலைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதனைத்தான் முதலில் செய்ய வேண்டும்.இதைவிடுத்து கல்யாணம் செய்துவிட்டோமே என்பதற்காக சகித்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்று கருதி துன்பத்தையும் ,அதிருப்தியையும் அனுபவிப்பதும்,அனுபவிக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் ,சுய மரியாதையுமற்ற தன்மையுமேயாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும்.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

இந்தியாவில் காட்டுமிராண்டிகளின் பிறப்பிடமாகும் அரசியல்

அரசு மற்றும் அரசியல் என்பது மக்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒப்பற்ற புனிதமிகு இடம் என்றே நாம் முன்னோர்கள் மூலமும் வேதங்களின் மூலமும் கேள்விபட்டிருப்போம்.ஆனால் அதுதான் இன்று மிருகங்களின் கூடாரமாக இருக்கின்றது என்பதை யாராவது நினைத்து பார்த்ததுண்டா..?சமீப காலமாக இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச அரசின் துணையோடு பல்வேறு மனித உரிமைமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டேஇருக்கின்றது.ஏனைய மக்களுக்கு வெறும் செய்தியாக மட்டும் அது பகிரப்பட்டும் வருவது உண்மையில் காலத்தின் சாபக்கேடாகவே நான் காண்கின்றேன்.

அவற்றையெல்லாம் தொடர்ந்து நேற்றய தினம் உ.பி யில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நொறுங்கச்செய்கின்றது.தங்களின் வாழ்வாதார பிரச்சனையை முன்னிட்டு பல நாட்களாக போராடி வந்த விவசாயிகளை எவ்வித ஈவுஇரக்கமுமின்றி மத்திய மந்திரியின் மகனின் வாகனம் அங்கிருந்தவர்களை மோதி தள்ளிவிட்டு செல்லும் அந்த காட்சி இன்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.அதிகார போதையில் ஆடிய அந்த கோரத்தாண்டவம் இந்திய மக்களையே திகைப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.


காணொளி

இந்த காணொளியை கண்ட பிறகும் இதனை சரிகாண்பவர்கள் உண்மையில் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் என்றே நான் கருதுகின்றேன்.அரசும் அதிகாரமும் எப்பொழுது மக்களை புழுப்பூச்சுக்களாக பார்க்க ஆரம்பித்து தங்களை கடவுளாக எண்ண ஆரம்பித்துவிடுமோ அன்றே அம்மக்களின் வாழ்வு நரகில் தூக்கி எறியப்பட்டுவிட்டது என்பதையே நான் தொடர்ந்து கூறிவருகின்றேன்.

இன்று அதனை நேரில் காண்கின்றேன்.மக்கள் அந்த காட்டுமிராண்டிகளுக்கு தங்களின் மக்கள் சக்தியை எடுத்தியம்பும் நேரமாகவே இதனை நான் கருதுகின்றேன்.எனவே மக்கள் இத்தகைய செயலுக்கு உ.பி.அரசை பொறுப்பேற்கச் செய்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றும் இத்தகைய மாபாதக செயலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கான கோரிக்கையை முன் நிறுத்தியே போராட்டங்களையும் தொடர வேண்டும் என்றும் எனது இந்த பதிவின் மூலம்  வேண்டிக்கொள்கின்றேன்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்?(Who is the Periyar E.V.Ramasamy?)

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்
யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்


தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு மகத்தான "கதாநாயகன்"தான் பெரியார் என்ற போற்றுதலுக்குறிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்கள் என்பதாகவே நான் காண்கின்றேன்.ஏனெனில் அவருடைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தையும் நான் உற்றுநோக்கிய சமயம் இந்த தமிழ் சமூகத்தை உயர்த்தி நிறுத்துவதிலேயே அவர் தன் வாழ்வு முழுவதையும் அற்பனித்து இருப்பதை என்னால் காண முடிந்தது.

இன்றைய நிகழ் உலகின் கதாநாயகர்கள் அனைவரும் மக்களுக்கு பண உதவி செய்தோ அல்லது ஏதேனும் பொருள் உதவி செய்தோ தன்னை கதா நாயகர்களாக நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.ஆனால் பெரியாரை என்னால் அப்படி காணமுடியவில்லை.மாறாக அவர் ஒரு சமூகத்திற்கான வாழ்வியல் விடியளுக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்திருப்பதை காணும்பொழுது எவ்வாறு நான் அவரை உண்மை கதாநாயகன் என்று கூறாமல் ஒரு எழுத்தாளனாக கடந்துவிட முடியும்.?

எனவேதான் பெரியாரின் வாழ்வியல் குறித்த அறிமுகமான என்னுடைய புத்தகத்திற்கு பெயரே "தமிழர்களின் கதாநாயகன் பெரியார்" என்று பெயரிட்டுள்ளேன்.உண்மையில் அவர் இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மிகப்பெரும் வில்லனாக திகழ்ந்தார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அடித்து, அடக்கி ஆழவும்,சுரண்டிப் பிழைக்கவும் நினைத்தவர்களுக்கே வில்லனாக இருந்தார் என்பதை கவனிக்கும் சமயம் அங்கும் அவர் உண்மை கதாநாயகன் என்ற பெருமையையே சேர்த்துக்கொண்டுவிட்டார் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

பெரியாருக்கான அறிமுக உரையான என்னுடைய சிறிய புத்தகத்தில் மூன்றே மூன்று பகுதிகளை மட்டுமே பதிவு செய்வது எனது நோக்கம் என்பதால் பெரியார் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் நான் தொகுக்கவில்லை என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுவிடுகின்றேன்.ஏனெனில் அந்த புத்தகத்தில் பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் உண்மை கதாநாயகனாக திகழ்ந்ததற்கான அடிப்படை காரணிகளை மட்டுமே தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.

அதாவது பெரியார் வாழ்ந்த சமயத்தில் இந்த தமிழ் சமூகம் எத்தகைய நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்பது சம்மந்தமாகவும் அதனை பெரியார் எப்படி கலைஎடுத்தார் என்பது சம்மந்தமாகவும் மேலும் தமிழர்களையும் தமிழ்மொழியையும் குறிவைத்து தாக்க நினைத்தபோது அதனை எவ்வாறு உயர்த்தி நிறுத்தினார் என்பது சம்மந்தமாகவும் மட்டுமே இந்த சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இறைவன் நாடினால் பெரியாரின் முழு வாழ்வியலையும் தனி ஒரு புத்தகமாக தொகுத்து வழங்குகின்றேன்.(அப்பணியை செய்து கொண்டும் இருக்கின்றேன்.)

பெரியார் தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கதாநாயகனாக ஆவதற்கு அன்றைய சமூக கட்டமைப்பே காரணமாக இருந்தது என்பதால் பெரியார் காலத்தில் அன்றைய சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பது சம்மந்தமாக நாம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கின்றது என்பதால் முதலில் அது சம்மந்தமாக இங்கு பார்ப்போம்.


பெரியார் காலத்தில் தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது.?

  • குறிப்பிட்ட சில மக்கள் சூத்திரர்கள் எனக்கூறி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தைவிட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
  • பார்ப்பனர்கள் என்று கூறப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மட்டும் உயர் சாதியினர் என்றும் அவர்களுக்கு சரி சமமாக ஏனைய எச்சமூகத்தை சார்ந்தவர்களும் இடம் பெறக்கூடாது என்ற சமூக அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.
  • கீழ் சாதியினராக பார்க்கப்படுவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது என்பது தான் கல்வி கொள்கையாக இருந்தது.
  • அரசு அலுவல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற சூழலே மிகைத்திருந்தது.
  • உயர் சாதியினராக பார்க்கப்படும் பார்ப்பனர்கள் புழங்கும் பொது இடங்களில் கீழ் சாதியினர் புழங்கக் கூடாது என்றும் இன்னும் அவர்களைப் போன்று செறுப்போ அல்லது தோளில் துணியோ அல்லது குடை பிடித்துக் கொண்டோ தெருவில் நடமாடக் கூடாது என்றும் வெளிப்படையாகவே தடை இருந்தது.
  • அவ்வாறே கீழ் சாதியினராக பார்க்கப்படுபவர்கள் பொது குழங்களிலோ அல்லது கிணருகளிலோ தண்ணீர் அருந்த முடியாது.
  • ஊரின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் தேனீர் கடையிலும் கீழ் சாதியினர் கொட்டங்குச்சியில் தேனீரை பெற்றே குடிக்க வேண்டும் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
  • அசிங்கமான வார்த்தைகளாலும் இழிவான பெயர்களாலும் உயர் சாதியை சார்ந்த சிரியவர்கள் அழைத்தாலும் கீழ் சாதியினர் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • உணவு விடுதிகள் ,குளிக்கும் அறைகள் மற்றும் கோவில்களுக்குள் உயர் சாதியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
  • மாட்டு வண்டிகளில் அமர்ந்து செல்லக் கூடாது,அதிலும் குறிப்பாக எதிரில் பார்ப்பனர் வந்துவிட்டால் ஓரமாக ஓடிச் சென்று கண்ணில் படாதவாறு நின்று கொள்ள வேண்டும்.
  • கீழ் சாதியினர் தங்க நகைகளை ஒரு பொழுதும் அணியக் கூடாது.
  • கீழ் சாதியினர் மண் சுவரால் ஆன ஓலை குடிசைகளில் மட்டுமே வாழ வேண்டும்.
  • கீழ் சாதியினர் உலோக பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
  • கீழ் சாதி பெண்கள் மாராப்புத் துணி அணியக்கூடாது என்றும் இன்னும் மேல் சட்டை அணியக் கூடாது என்றும் பனிக்கப்பட்டிருந்தனர்.
  • பெண்கள் என்றாலே இழி பிறவிகள் என்று பரவலாக கருதப்பட்டு வீட்டில் எடுபிடி வேலைக்கென்றே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இந்நாட்டை ஆண்ட சேரர்கள் ,மற்றும் சோழர்கள் ,மற்றும் பாண்டியர்கள், மற்றும் நவாப்கள் ஆகிய அனைவரின் ஆட்சி காலத்திலும் கொஞ்சமும் குறைவின்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தாரால் மட்டுமே அரங்கேறியதை வரலாற்றின் மூலம் அதிகாரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய மனித உரிமை மீறல்களையெல்லாம்  கலைவதற்கு பெரியார் கையாண்ட வழிமுறைகள்தான் அவரை தமிழ் மண்ணின் போற்றுதலுக்குறிய கதாநாயகனாக நிலைநிறுத்தியது என்பதாகவே நான் நம்புகின்றேன்.
எனவே அடுத்தபடியாக தமிழ் மக்களின் இந்த இழிவை துடைக்க பெரியார் எத்தகைய வழிமுறைகளை கையாண்டார் என்பதைக் குறித்து பார்ப்பதே இங்கு உசிதமாக இருக்கும் என்பதால் அவற்றைப்பற்றி பார்ப்போம்..!
பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை கலைய மூன்று முக்கிய ஆயுதங்களை மிக வீரியமாக பயன்படுத்தியதாக வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. 

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

2.எழுத்துப் பிரச்சாரம்.

3.தமிழுக்கான அரும்பணியும் அரசியல் பங்கும்.

பெரியார் இந்த மூன்று பெரும் ஆயுதங்களாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை துடைத்துவிடலாம் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணிக்க முன்வந்தார்.

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

தொடர்ந்து வாசிக்க என் புத்தகத்தை அமேசானில் பெற்று பெரியாரின் ஒப்பற்ற வாழ்வின் அந்த மூன்று அரும்பணிகளும் எவ்வாறு இருந்தது என்பதையும் அறிந்து பலனடைந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

புதன், 15 செப்டம்பர், 2021

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)
யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)


முன்னுரை

இன்று செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்றைய நன்நாளிலே அவரை இந்த தமிழக மக்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூற கடமைபட்டுள்ளனர்.ஏனெனில் இந்த தமிழ் சமூகத்தை பீடித்திருந்த அடக்குமுறைகளையும் அடிமைத்தனங்களையும் அரசியல் ரீதியாக தவிடு பொடியாக்கிக்காட்டிய ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்த மாமனிதர் அவர்.

அவருடைய வரலாற்றை சுறுக்கிக்கூறிவிட முடியாது என்பது எனக்குத் தெரிந்தும் வேறுவழியின்றி மிக வட்டுறுக்கமாக இந்த கட்டுரையில் அவரின் ஒப்பற்ற வாழ்வின் சிறு பகுதியை மட்டும் பதிவு செய்கின்றேன்.அவருடைய தமிழ் மண்ணிற்கான சேவையை தொகுத்து வந்து கொண்டிருக்கின்றேன். இறைவன் நாடினால் மிகவிரைவில் அவற்றை புத்தமாக வெளியிடுகின்றேன்.

இங்கு அறிஞர் அண்ணாவின் வாழ்வை மூன்று பகுதிகளாக பிரித்திருக்கின்றேன்.

 1.அவர் பெரியாரிடம் கற்ற சமூக அக்கரை மற்றும் விடுதலை.
 2.ஆசானுக்கே ஆசானான ஆச்சர்யமிகுந்த அவரது அரசியல்.
 3.சமூகத்திற்கு ஆற்றிய அவரது பணிகள் மற்றும் தொண்டுகள்.

1.பெரியாரிடம் கற்ற சமூக அக்கரையும் விடுதலை உணர்வும்.

அறிஞர் அண்ணாவின் வாழ்வை குறித்து பேசும் பொழுது அங்கு பெரியாரை விட்டுவிட்டு செல்லவே முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் பெரியாரோடே இரண்டற கலந்து அவரின் ஆழமான அனைத்து சமூக நீதிகளையும் மேலும் இந்த தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அங்குளம் அங்குளமாக அரிஞர் அண்ணா பாடம் படித்திருப்பதை வாரலாறு மிக வெளிப்படையாகவே எடுத்தியம்புகின்றது.

அவ்வளவு ஏன் பெரியாரின் வலது கையாகவோ அல்லது இடது கையாகவோ இல்லாமல் இரு கையாகவுமே திகழ்ந்தவர்தான் அறிஞர் அண்ணா என்று கூறினாலும் அது மிகையாகாது.உண்மையில் வரலாற்றை மிக ஆழமாக உற்றுநோக்கும் பொழுது அறிஞர் அண்ணா பெரியாரின் அலப்பரிய நம்பிக்கைக்கு முழு பாத்திரமான ஒரு செல்லப்பிள்ளை என்றும் கூட குறிப்பிடலாம்.அறிஞர் அண்ணா பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் துவங்கிய ஆரம்ப இடமே பெரியாரின் "விடுதலை" பத்திரிக்கையும் ,"குடியரசு" பத்திரிக்கையும் தான்.
ஆம்...!
அங்கிருந்து தான் அறிஞர் அண்ணாவின் நீண்ட நெடிய அரசியல் மற்றும் சமூக தொண்டுகள் போன்ற சிந்தனை ஓட்டங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பெரியாரின் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் திராவிட தத்துவார்த்தங்களையும்,கடவுளின் பெயராலும் சாதி,மதங்களின் பெயராலும் தன் இன மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குபவர்களின் உண்மை முகங்களையும் பெரியாரிடமிருந்து மிக சாதூர்யமாக அறிஞர் அண்ணா கற்றரிந்தார்.அதன் விளைவாகவே நேரடியாக சமூகத்தொன்டாட்ட அரசியலில் குதித்தார்.

2.ஆசானுக்கே ஆசானான அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல்.

அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணமும் பெரியாரிடமிருந்தே துவங்கியதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.ஆம்...!அறிஞர் அண்ணா முதல் முதலில் பெரியார் தலைமையில் காங்கிரசிற்கு எதிராக உறுவாக்கப்பட்ட நீதிக்கட்சியிலிருந்துதான் தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.தன்தமிழ் மக்களை சுரண்டிப்பிழைத்துக்கொண்டிருக்கும் காங்கிரசின் அரசியலில் முற்றிலும் நம்பிக்கை இழந்த ஆசானிற்கு மக்களுக்கான புதிய அரசால் தமிழ் சமூகத்தை காத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் முயற்சியில் அரசியல் கலமாடத் துவங்கினார்.

தன் சமூகத்தின் மீது தெலிக்கப்பட்டிருக்கும் இழிவை போக்குவதற்கு முதல் தடைக்கல்லாக இருப்பதே இந்த தரித்திரம் பிடித்த அரசியல்தான் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த பெரியார் தன் செல்லப் பிள்ளையான அண்ணாவின் நிலையும் மாறிவிடுமோ என்று அஞ்சினார்.ஆனால் அங்கு தான் அறிஞர் அண்ணா தன் ஒப்பற்ற ஆசானின் கனவுகளை காக்க வந்த பெரும் போராளி என்பதை நிறூபித்து காண்பித்து ஆசானுக்கே ஆசானாக உறுவெடுத்தார்.

அரசியலில் பயணித்துக்கொண்டே பெரியாரின் திராவிடக்கொள்கையை தன் எழுத்தாலும், நாடகங்களாலும், திரைப்படங்களாலும் எட்டுத்திக்கும் பரந்து விரியச்செய்தார்.தன் கட்சிக்கு பெயரே"திராவிட முன்னேற்ற கழகம்"என்று பெயர் சூட்டினார்.நாடாலுமன்றத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுக உரையிலேயே தன்னை திராவிடன் என்று அடையாளப் படுத்திக்கொண்டார்.இந்தியாவிலேயே காங்கிரஸிற்கு எதிராக முதல் முதலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் காண்பித்தார்.

3.அரிஞர் அண்ணாவின் அரும்பணிகள்.

  • இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நின்றார்.
  • மும்மொழிக் கொள்கையை முடக்கி இரு மொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார்.
  • இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வடவர்கள் நினைத்த போது நாடாளு மன்றத்தையே கேள்விக்கனைகளால் திக்குமுக்காடச் செய்தார்.
  • தமிழகத்தின் மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றினார்.
  • ஜமீன்தாரிகளின் நிலச்சுரண்டலையும் பிராமணத்தின் மனித உரிமை மீரல்களையும் "நல்ல தம்பி"மற்றும் "வேளைக்காரி" போன்ற திரைப்படங்களால் தோழுறித்து காண்பித்தார்.
  • ஆரிய மாயை என்ற புத்தகத்தை எழுதி ஆரியத்தின் கோர முகத்தை உலகறியச் செய்தார்.இதனால் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
  • "Home Land "என்ற ஆங்கில வார பத்திரிக்கையாலும் "திராவிடம்"என்ற தமிழ் இதழாலும் காங்கிரஸார்கள் மற்றும் பிராமணர்களின் கூடாரங்களை அசைத்துக் காண்பித்தார். 
  • இன்னும் இந்த தமிழ் மண்ணிற்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராலம் ஏராலம்...!அவைகள் அனைத்தையும் இந்த சிறிய கட்டுரையில் சுறுக்கிவிட முடியாது என்பதால் வருத்ததுடனே கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருகின்றேன்.
இறுதியில் அறிஞர் அண்ணா போயிலை உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் புற்று நோய்க்கு ஆளானார்.அது அவரின் உயிரையும் குடிக்கத் தவறவில்லை.எனவே அதே நோயால் காலமுமானார்.அவருடைய இறுதி ஊர்வலமோ இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாறாக மாறிப்போனது.
ஆம்...!
இந்த மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசித்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட 1 கோடியே 50 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கிண்ணஸ் புத்தகத்தில் இன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்த தமிழ் மக்களுக்காக போராடிய அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இன்று கிண்ணஸ் புத்தகங்களை எல்லாம் தாண்டி எக்காலமும் தமிழர்களின் நெஞ்சங்களில் கலந்துவிட்ட அன்பு அண்ணண் ஆறடி பள்ளத்தில் ஆழ்ந்த துயில் கொண்டாலும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் தமிழ் மக்களை காப்பதால் உயிர்ப்புடனே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அத்தகைய தமிழ் மண்ணின் நேசனை அவர் பிறந்த இன்று நினைவு கூறுவதில் தமிழ் மகன்களாக நம்மில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தேசியவாதமும் தனிமனித உரிமையும்(Bjp Nationalism)

 

தேசியவாதமும் தனிமனித உரிமையும்
தேசியவாதமும் தனிமனித உரிமையும்

ஒருவன் நாட்டை காக்கவேண்டும் என்றும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும்,நாட்டிற்காக பல தியாகங்கள் செய்யவேண்டும் என்பதே தேசியவாதம் என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம் என்றே நம்புகின்றேன். உண்மையில் இத்தகையத்தன்மை ஒவ்வொரு குடிமகனிடமும் காணப்பட வேண்டிய அற்புத பண்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது.ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்ற ஒரு அற்புதமான பண்பு அரசியல் செய்வதற்கான முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கமுடிகின்றது.

இதுவே நாட்டின் குடிமகனை அச்சுறுத்தும் காரணியாகவும் அவனை வேற்றுமைபடுத்திக்காட்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இது சமூகத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலையே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.மேலும் இதுவே இந்நாட்டு மக்களில் சிலரை வேண்டுமென்றே  அன்னியப்படுத்தவும்,பலிவாங்கவும் உகந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

உண்மையில் இன்றைய பாஜக அரசு தேசியவாதம் என்ற இந்த சொல்லை வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று நம்புகின்றது.அது உண்மையில் பொதுப்பார்வையில் மிகச்சரியானதாக இருந்தாலும் அது நாட்டின் பல்வேறு மக்களுக்கு மிகப்பெரும் இழப்பைத்தர காத்திருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் தேசியவாதம் என்ற பெயரில் நாடும் நாட்டின் பழமை கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை சொல்லித்திரிபவர்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதை சரியாக காண்பது மிகப்பெரும் அநீதியாகும்.

இந்திய அரசியல் சாசனம் எவ்வாறு நாட்டையும் நாட்டு உடமைகளையும் பாதுகாக்கும்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வலியுறுத்துகின்றதோ அதைவிட அதிகமாக நாட்டு மக்களுடன் சகோதரத்துவத்துடனும் தனிமனித சுதந்திரத்துடனும் செயல்பட வலியுறுத்துகின்றது.இன்றைக்கு நாட்டின் நாலாபுறங்களிலும் பாஜக என்ற குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் தன்னை தவிர்த்து ஏனையவர்களெல்லாம் நாட்டுப்பற்றற்றவர்கள் என்று காட்டிகொள்ளவே முயற்சிப்பது நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடாக நான் காண்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்பு  இசைஅமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இது சம்மந்தமாக ஒரு விஷயத்தை சமூகவலைதளத்தில் பதிந்து அது அனைவராலும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.அவர் தன்னுடைய முன்னுரிமையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.அதாவது எனக்கு முதலில் மொழிதான் அதற்கு பிறகே நாடு என்பதெல்லாம் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.உடனே அவரை தேசவிரோத சக்தி என்றளவிற்கு பலரும் விமர்சனம் செய்யத்துவங்கினர்.அவர்கள் வேறுயாருமில்லை நான் மேற்குறிப்பிட்ட அடிப்படை அரசியல் அறிவில்லாத பாஜக தொண்டர்களேயாவார்கள்.

இங்கு நான் ஒரு முக்கியமான அடிப்படையை விளக்க விரும்புகின்றேன். அதாவது நாட்டுப்பற்று என்பது எல்லோருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு பொதுவான அம்சமேயாகும்.நிச்சயமாக நாட்டில் வசிக்கும் ஒரு பிச்சைக்காரனும் கூட தான்வசிக்கும் நாட்டை நேசிக்கவே செய்வான். அவற்றில் அவனுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் தனக்கு நாட்டுபற்று இருக்கின்றது என்பதை மட்டுமே எப்பொழுதும் ஒருவன் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவனது சொந்த வாழ்வில் வேறு எதற்கும் விருப்பம் இருக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துவது மிகப்பெரும் சர்வாதிகார போக்கு என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே அண்பர்களே..!நாட்டு பற்றையும் அரசியல் ஆதாயம் தேடும் தேசிய வாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரையை எளிய வடிவில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் விதமாக வட்டுறுக்கமாக நான் எழுதியிருக்கின்றேன்.

இதனை நான் மதம் சார்ந்தோ அல்லது ஒரு கட்சி சார்ந்தோ தனிப்பட்ட வெறுப்பினால் பேசுவதாக நீங்கள் நீனைத்தால் தாராலமாக நினைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் என்னுடைய இந்த கட்டுரைக்கான நோக்கம் என் மக்கள் இது போன்ற ஏமாற்றுபேர்விளிகளிடம் சிக்கி (போலி) தேசியவாதம் என்ற பெயரில் தன் சொந்த மக்களையே எதிரியாக்கிவிடக்கூடாது என்ற தூய நோக்கத்திற்கானது மட்டுமே என்பதை தூய மனதுடன் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

நன்றி:

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.(monarchy)

உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.
உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.

பிளேட்டோவின் ஆறு ஆட்சி முறைகள்:

கிரேக்க நாகரீகத்தின் தந்தையாக போற்றப்படும் பிளேட்டோ இந்த உலகில் மக்களை ஆட்சி செய்வதற்கு  ஆறு வழிகள் இருப்பதாக தன்னுடைய (ரிபப்ளிக்)குடியரசு என்ற புத்தகத்தில் வரையறுத்துக்கூறியுள்ளார்.அவற்றை முதலில் நாம் அறிந்து கொண்டால் அரசியல் ஆட்சி சம்மந்தமான சரியான புரிந்துணர்வை நமக்கு ஏற்படுத்த அது மிக உதவியாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவற்றை முதலில் இங்கு நான் குறிப்பிட்டுவிடுகின்றேன்.

1.ஒருவர் மட்டும் ஆட்சி செய்வது.

2.அறிஞர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

3.செல்வந்தர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

4.இரானுவ வீரர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

5.சட்டங்களை தொகுத்து அதன்படி குறிப்பிட்ட ஒரு சாரார்கள் ஆட்சி செய்வது.

6.மக்களே தன் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களே ஆட்சி செய்வது.

இந்த ஆறு வழிமுறைகளில் மட்டுமே ஒரு நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாகவே பிளாட்டோ வரையறுத்து சென்றிருப்பது அறிவு உலகில் மிகப்பெரும் சாதனையாக போற்றப்படுகின்றது.ஏனெனில் இந்த ஆறு முறைகளில்தான் இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யப்பட்டும்வருகின்றது.இந்த ஆறு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் பிளேட்டோ இவற்றில் ஆறாவது வழிமுறையே மக்களுக்கு சிறந்தது என்றும் அதற்குத்தான் முறையான குடியரசு ஆட்சி என்றும் அவர் பெயரிடுகின்றார்.மேலும் இந்த ஆட்சியானது முற்றிலும் நீதி என்ற ஒற்றை வார்த்தைக்குள்ளே அடங்கி இருக்கவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.

இந்த குடியரசை நிலைநாட்டவே முதலாம் உலகப்போர் தொடர்ந்து பல்வேறு யுத்தங்கள் நடைபெற்றதாகவும் சில வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு விவரிக்கின்றன.பின்வரும் கட்டுரைகளில் குடியரசு என்பதைப்பற்றியும் மக்களாட்சி பற்றியும் விவரிக்கின்றேன்.இப்பொழுது இந்த கட்டுரையில் மன்னராட்சி என்றால் என்ன ?என்பது சம்மந்தமாகவும் அது எப்படி கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது சம்மந்தமாகவும் மேலும் அது இன்று எவ்வாறு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாகவும் விவரிக்கின்றேன்.

மன்னராட்சி என்பது என்ன.?

ஆரம்ப காலகட்டங்களில் மன்னர் ஆட்சியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்ததாக நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனை தமிழில் முடியாட்சி என்று அழைத்து வந்துள்ளனர்.இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான மொனார்சி(monarchy)என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.இந்த முடியாட்சி என்பது ஒரு நபரிடமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து கொடுத்துவிட்டு மக்களுக்கும் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை கடைபிடிக்கச் செய்யும் ஒரு முறையாகவே கடைபிடிக்கப்படுவதாகும்.இவற்றில் அரசரின் வாரிசு மட்டுமே அரசராக முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.

மேலும் அவ்வரசர் தானாக இறக்கும் வரையிலும் அல்லது தானாகவே எனக்கு இந்த மன்னர் பதவி வேண்டாம் என்று விலகும் வரையிலும் அவரே பதவியில் இருப்பார் என்பது மன்னராட்சியில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. மேலும் ஒரு நாட்டின் அரசன் எவ்வித சட்டதிட்டதிற்கும் உட்படாத ஒருவனாகவே பார்க்கப்பட்டுவந்தான்.இதனால் பெரும்பாலான நாடுகளில் அரசனே அம்மக்களால் கடவுளாக வணங்கப்பட்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இன்றைக்கும் சீனா ஜப்பான் நேப்பால் போன்ற நாடுகளில் அவர்களின் அரசரையே அவர்கள் கடவுளாக வணங்கி வருவது இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

இன்றைக்கும் மன்னராட்சி கடைபிடிக்கப்படுகின்றதா.?

21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும் கிட்ட தட்ட 47 நாடுகளில் மன்னர் ஆட்சியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அவற்றில் குறிப்பிட தக்க சில நாட்டின் பெயர்களை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஜப்பான்,மலேசியா,சுவேசர்லாந்து,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மொராக்கோ போன்ற பெரும் நாடுகளில் இன்று வரை மன்னராட்சியே நடைபெற்று வருகின்றது.

மன்னராட்சியின் விளைவுகள் என்ன?

1.மேலே நான் குறிப்பிட்டதுபோல் மன்னராட்சி என்பது மக்களை முற்றிலுமாக அரசு அதிகாரத்திற்குள் விடாத அரசுமுறையாக இருக்கின்றது என்பதால் மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகள் இதனை முற்றிலும் எதிர்த்தன. இதற்காக பல யுத்தங்களும் நடத்தப்பட்டே இன்று மக்களின் குடியாட்சி அல்லது மக்களாட்சி என்பது தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

2.சர்வாதிகாரத்திற்கான முழு வாய்ப்பும் இந்த மன்னராட்சியில் இருப்பதாலும் முந்தய கால மக்கள் அவ்வாறு அடக்கி ஆளப்பட்டதாலும் இந்த மன்னராட்சியை இன்றைய மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

3.ஒரே நபரிடம் அதிகாரம் முழுவதையும் இந்த மன்னராட்சிமுறை கொடுத்துவிடுவதால் அவரின் தனிப்பட்ட முடிவுகளால் ஒட்டு மொத்த  மக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கவேண்டிய சூழழுக்கு தள்ளப்படுகின்றனர்.இதனாலேயே முந்தைய ஐரோப்ப நாடுகளில் பல சமயங்களில் மிகப்பெரும் புரட்சிகள் வெடித்தாகவும் நம்மால் காண முடிகின்றது.

தொடர்ந்து பார்ப்போம்..!

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நீங்களும் தலைவனாகலாம்.(Leadership)

நீங்களும் தலைவனாகலாம்.
நீங்களும் தலைவனாகலாம்.

முன்னுரை:

இந்த உலகத்தில் எல்லோரும் தான் ஒரு பெரிய தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தோடே வாழ்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் தலைவனாகும் ஆசையில்லாத மனிதர்களே மிக அரிது என்றும் குறிப்பிடலாம்.அத்தகைய ஆசை உங்களுக்கும் இருந்தால் அது ஒன்றும் தவறில்லை.ஆனால் அவற்றை அடைவதற்கான சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்வது என்பது தலையாய கடமையாகும்.இந்த உலகில் எவரும் பிறக்கும் பொழுதே தலைவர்களாக பிறக்கவில்லை என்பதனால் நீங்களும் தலைவனாக முடியும் என்ற நம்பிக்கையோடு கீழே நான் குறிப்பிடும் ஒரு சில தகுதிகளை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் ஒரு நல்ல தலைவனாகலாம்..!

ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய முதல் தகுதி: 

1."உயர்ந்த சிந்தனை.".

ஏனென்றால் உயர்ந்த சிந்தனையே ஒரு மனிதனையும் அவனை நம்பியுள்ள மக்களையும் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்லும் அற்புத உந்து சக்தியாக இருக்கின்றது.இத்தகைய சக்தியில்லாதவர்களால் நிச்சயம் மக்களை சீராக வழி நடத்த முடியாது என்பதே அனைத்து மனோ தத்துவ நிபுனர்களின் ஏகோபித்த முடிவாகும்.எனவே நீங்கள் தலைவனாக வேண்டும் என்று விரும்பினால் உங்கள் சிந்தனை திறனை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள். 

அதற்கு நல்ல பல புத்தகங்களை வாசியுங்கள்.அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை கிரகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நேற்றைய வாசிப்பாளர்கள்தான் இன்றைய தலைவர்களாக இருக்கின்றார்கள்.அவ்வாறே நல்ல அறிஞர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.அவர்களோடு சிறிது நேரம் உரையாடுங்கள்.இதனால் நிச்சயம் உங்களுடைய சிந்தனை திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

இரண்டாவதாக ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி: 

2."பேச்சாற்றால்" 

அதாவது தான் கொண்ட கொள்கையை அல்லது சரியான பாதையை மக்களிடம் அழகிய முறையில் விளக்கிச்சொல்லும் அளவிற்கு ஒரு தலைவனிடம் நாவன்மை இருப்பது இன்றியமையாததாகும்.உங்கள் சிந்தனையிலும்,எண்ணத்திலும் எத்துனை பெரிய உண்மை பொதிந்திருந்தாலும் அதனை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி விளக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லையானால் நீங்கள் செய்யும் நற்காரியங்களும் கூட தீய நோக்கமுடையதாக சித்தரிக்கப்பட்டு உங்களுக்கு அதுவே பெரும் பிரச்சனையை தரக்கூடியதாக மாறிவிடும்.எனவே ஒரு நல்ல தலைவன் தன் நிலைப்பாட்டை மிகத்தெளிவாக மக்களுக்கு புரியச் செய்யும் ஒருவனாக இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததே..!

மூன்றாவதாக ஒரு தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:

 3.பொறுப்பேற்கும் திறன்" 

அதாவது தன்னை நம்பி வரும் மக்களுக்கு தானே முன்வந்து முழுவதுமாக பொறுப்பேற்கும் தகுதி ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க வேண்டும்.  குறிப்பாக நல்ல விஷயங்களில் மக்களை முன்நிற்கவிட்டுவிட்டு பிரச்சனை என்று வரும்பொழுது ஒரு தலைவனே முன் விரிசையில் வந்து நிற்க வேண்டும். இதுவே தலைமைத்துவத்தின் மிக அவசியமான பண்பாகும். பிரச்சணைகளை கண்டு ஒழிந்து கொள்வதோ அல்லது யாரோ செய்த ஒரு நல்ல காரியத்திற்கு தான் பெயர் வாங்க நினைப்பதோ ஒரு நல்ல தலைவனுக்கு ஒருபோதும் அழகாகாது.எனவே நீங்கள் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் மக்களின் குறை நிறைகளுக்கு பொறுப்பேற்க தயாராகிக்கொள்ளுங்கள்.

நான்காவதாக ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:

4."மக்களிடம் குறைகளை கேட்குமளவு பணிவு "

அதாவது மக்கள் சகஜமாக சந்தித்து தங்கள் குறையை சொல்லும் அளவிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.தான் தலைவன் என்ற கர்வத்தில் மக்களை தூரமாகவே வைத்து பாவிப்பது என்பது ஒரு நல்ல தலைவனின் செயலாகாது.அதனால் நிச்சயமாக மக்கள் அந்த தலைவனின் மீது அதிர்ப்தியே கொண்டிருப்பார்கள்.மேலும் அதனால் அந்த தலைவனும் கெட்டு மக்களும் கெட்டுப்போவதே முடிவாக அமையும்.

எனவே ஒரு நல்ல தலைவன் தன் மக்களை அவ்வப்பொழுது சந்தித்து அவர்களின் குறை நிறைகளுக்கு செவி சாய்க்கும் அளவு பணிவு கொண்டிருக்க வேண்டும்.நீங்களும் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலவில் கவனம் செலுத்துங்கள்.அவர்களின் இன்ப துன்பங்களில் அவ்வப்பொழுது பங்கெடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஐந்தாவதாக ஒரு தலைவனிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான தகுதி:

5.தனித்து நிற்கும் துணிவு "

தலைமைத்துவம் என்றாலே நிச்சயம் அதற்கு ஒரு எதிர் பகுதி இருக்கும். அத்தகைய எதிர்பகுதியை மிக சமயோஜிதமாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் செயல்படவிடாமல் தடுக்கும்பொழுதெல்லாம் துணிந்து செயல்பட வேண்டும்.மக்கள் ஏசுகின்றார்கள் என்பதற்காக தன் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு ஓடிவிடக்கூடாது.அச்சமயங்களில் தான்கொண்ட கொள்கையில் நிலையாக நின்று தன் துணிவை நிறூபிக்க வேண்டும்.ஏனெனில் மக்கள் குறைகூறுகின்றார்கள் என்பதற்காக ஓடி ஒழிந்துகொள்பவர் நிச்சயமாக ஒரு நல்ல தலைவனாக முடியாது.எனவே நீங்கள் நல்ல தலைவனாக விரும்பினால் மக்களிடமிருந்து வரும் அனைத்தையும் சந்திக்கும் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.தலைமைத்துவத்தில் பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்ப்பதென்பது முட்டாள்தனத்தின் உச்சம்.

ஆகவே மேற்கூறிய இந்த ஐந்து தகுதிகளையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கிய பண்பாக நான் பார்க்கின்றேன்.இது அல்லாமல் மேலும் பல பண்புகளும் உண்டு என்றாலும்,இந்த ஐந்து தகுதிகளுமே ஒரு நல்ல தலைவனுக்கு போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அவற்றையே இங்கு பதிவும் செய்திருக்கின்றேன்.முடிந்தளவு கடைபிடித்துப்பாருங்கள்.

அவ்வாறே ஒரு சமூகத்திற்குத்தான் நீங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.உங்களுக்கு நீங்களும் தலைவனாக இருக்க முடியும். மேலும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்.இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எந்தளவிற்கு பொறுப் பேற்கின்றீர்கள் என்பதை பொறுத்ததே உங்களுடைய தலைமைத்துவம் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் தலைமைத்துவம் என்பது அதிகாரம் தரும் ஒரு இடம் மட்டுமே என்று நீங்கள் எண்ணுபவராக இருந்தால் தயவுசெய்து அதை அடையும் கனவை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.ஏனெனில் அந்த இடம் தகுதியுள்ள ஒரு நபரால் நிரப்பப்பட வேண்டிய இடமாகும்.அதிகாரத்தை பெறுவதற்கோ அல்லது மக்களை அடக்கியாள்வதற்கோ தயவு செய்து அதனை அடையவிரும்பாதீர்கள்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்?(Happiest people)

உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்?(Happiest people)
உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்

முன்னுரை:

இந்த உலகிலேயே அதிகம் மகிழ்சியாக வாழும் மக்களைப்பற்றிய ஆய்வை கொலம்பியாவின் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஜஃப்ரே சாச்சஸ் மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது இந்த உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் (Finland)பின்லாந்த் நாட்டைச் சார்ந்தவர்களே என்று குறிப்பிடுகின்றார்.கிட்டதட்ட 5 (மில்லியன்) அதாவது 50 லட்சம் மக்கள் வாழும் அந்நாட்டிலேயே மக்கள் அதிகம் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதாக குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் சந்தோஷம் என்பதற்கு மக்களின் மனதிருப்தியையே அளவுகோளாகவும் குறிப்பிடுகின்றார்.அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிக திருப்தியுற்றிருப்பதாகவும் மேலும் வாழ்வில் மிக மகிழ்சியாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.அங்குள்ள மக்களிடம் அவர் கருத்துக்கேட்டு சென்றபோது அம்மக்கள் என்ன கூறினார்கள் என்பதையும் அவர் பதிவுசெய்துள்ளார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.

ஃபின்லாந்து மக்களின் கருத்து:

"இங்குள்ள அரசே எங்களுடைய தேவையை பெரும்பாலும் தீர்த்து வைத்துவிடுகின்றது.அதனால் இங்கு எங்களுக்கு எங்களுடைய வாழ்வாதாரம் பற்றிய எந்த கவலையும் இல்லை.எங்கள் நாடு உலகிலேயே மிக வளம்நிறைந்த நாடாக இல்லை என்றாலும் எங்கள் வாழ்க்கையை மிக திருப்தியாக கழிப்பதற்கான எல்லா சுதந்திரங்களும் எங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் தங்களின் உற்பத்தி மற்றும் தொழில் துறையை வைத்தே தங்களை வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளாக காட்டிக்கொள்ள விரும்புகின்றன.ஆனால் எங்கள் நாட்டில் உற்பத்தித்துறை,ஆரோக்கியமான வாழ்வு,சமூக சுதந்திரம்,சுற்றியிருப்பவர்களின் அரவனைப்பு,அநீதி இழைப்பதை விட்டும் பாதுகாப்பு என்பதிலெல்லாம் மிகச்சிறந்த நாடாக நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மேலும் இங்குள்ள மக்கள் சந்தோஷம் என்பது திருப்திகரமான வாழ்க்கைதான் என்பதை மிக ஆழமாக நம்புகின்றார்கள்.எனவே அவர்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒருவரை ஒருவர் பொருந்திக்கொண்டு வாழ்கின்றனர்.

உண்மையில் எங்கள் நாட்டில் ஒரு குழந்தை பிறப்பதை மிகப்பெரும் வரமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.ஏனெனில் இங்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கான மூன்று மாத அனைத்து தேவைகளையும் அரசே கொடுத்துவிடுகின்றது.மேலும் அக்குழந்தையை நன்கு பராமரிப்பதற்காக தாயிற்கு 9 மாதங்கள் விடுப்பும் வழங்குகின்றது.அவ்வாறே இங்கு அதிக வரி என்பதெல்லாம் கிடையாது.கல்வியும்,மருத்துவமும் முற்றிலும் இலவசமாகும்.

இங்கு பெரும்பாலும் திருட்டு ,கொலை,கொள்ளை என்பதெற்கெல்லாம் இடமே கிடையாது,ஏனெனில் இங்குள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.மேலும் எல்லோரும் அவரவர்கள் விரும்பிய நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். அதன் காரணமாக இங்குள்ள மக்களில் யாரும் யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பதும் கிடையாது.ஆகவே இங்கு எல்லோரும் ஏழ்மையை விட்டும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.மிக குறிப்பாக இங்கு தற்கொலைகள் என்பதற்கும் இடம் கிடையாது.ஏனெனில் இங்குள்ள மக்கள் தங்களுக்கான அனைத்து அங்கிகாரங்களையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்.

இதுவே இங்குள்ள மக்கள் மிக திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்பதற்கு போதுமான அளவுகொளாக இருக்கின்றது.இவ்வாறு இன்னும் பல அற்புதமான மகிழ்சி பொங்கும் பல தருனங்களை தங்கள் நாடு வழங்குவது குறித்தும் அம்மக்கள் அடுக்கிக்கொண்டே செல்வதாக தனது ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

படிப்பினை:

உண்மையில் பின்லான்ட் நாட்டு அரசிடம் ஒவ்வொரு நாடும் பாடம் படிக்கவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் உலகில் ஒவ்வொரு நாடும் தங்களின் நாட்டு மக்களின் திருப்தியை குறிக்கோளாக கொண்டு செயல்பட ஆரம்பித்தால் அனைத்து நாட்டு மக்களும் மிக மகிழ்சி நிறைந்த மக்களாக வாழ முடியும் என்றே நான் நம்புகின்றேன்.