சனி, 7 ஆகஸ்ட், 2021

கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)

கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)
கற்கும் பழக்கமே என்னை கோடிஸ்வரனாக்கியது(Warren Buffett)


உலகின் பத்து பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபேட் தன் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய உரையாடல் :"உலகில் ஒரு மனிதன்  முதலீடு செய்வதிலேயே மிகச்சிறந்த முதலீடு தன்மீது செய்யும் முதலீடுதான். நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பம் செய்தால் அது என்றேனும் நஷ்டமடையலாம்.அவ்வாறே பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அவையும் ஒருநாள் அழிந்துபோகலாம்.ஆனால் நீங்கள் உங்கள் மீது மேற்கொள்ளும் முதலீடு மரணம் வரை நீடித்து நிற்கக்கூடியது.அதை உங்களிடமிருந்து எவராலும் பறித்து விடவும் முடியாது."ஒருவன் மழுங்கிய கோடாரியை வைத்துக் கொண்டு ஒரு மரத்தை வெட்ட முயற்சி செய்வதும்,கல்வி அறிவின்றி வியாபாரம் செய்ய வருவதும் ஒன்றுதான் என்றே நான் கருதுகின்றேன்.

அவன் பல ஆயிரமுறை மலுங்கிய கோடாரியால் மரத்தை வெட்டினாலும் அவனால் அதனை சரிவர வெட்டிவிட முடியாது.ஆனால் அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு சிறிது நேரம் அவன் கொடுத்தால் அவனுடைய வேலை மிக துரிதமாகவும் அவன் விரும்பியவாரும் நடந்தேறிவிடும்.அக்கோடாரியை கூர்மையாக்குவதற்கு தனக்கு நேரமில்லை என்றோ அல்லது சோம்பேரித் தனமாகவோ அவன் இருந்துவிட்டால் அம்மரத்தை வெட்டுவதிலேயே தன் வாழ்வின் பெரும்பங்கை அவன் செலவளிக்க நேரிடும்.மேலும் அதனால் அவனுடைய ஆற்றலும் வீணடிக்கப்படும் என்பதே உண்மையாகும்.

இந்த உலகத்தில் பலகோடி மக்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே வெற்றியாளர்கள் ஆகின்றனர்.ஏனென்றால் அவர்கள் மட்டுமே தங்கள் மீது முதலீடு செய்கின்றனர்.தங்களின் பொன்னான நேரத்தை தங்களின் அறிவையும்,திறமையையும்,அனுபவங்களையும் திறம்பட ஆக்கிக் கொள்வதற்காகவே செலவழிக்கின்றனர்.வெற்றியாளர்கள் என்றும் மலுங்கிப்போன கோடாரியால் மரம் வெட்டமுயலுவதில்லை.அவர்கள் தங்கள் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களை தயார் செய்து கொள்கிறார்கள்.அதிகம் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

மேலும் அக்காரியம் குறித்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். அதிகம் பொறுமையோடு முயல்கின்றார்கள்.இறுதியில் அதில் வெற்றியும் காண்கிறார்கள்.ஆகவே நீங்களும் வெற்றியாளராக ஆசித்தால்"கற்றுக் கொள்வதை எந்நாளும் நிறுத்தாதீர்கள்" நான் தினமும் ஆறு மணி நேரம் புத்தகங்கள் வாசிக்கின்றேன்.அந்த ஒரு வழக்கம் மட்டுமே இன்று உலகின் தலைசிறந்த முதலீட்டாளனாக என்னை ஆக்கிஇருக்கின்றது.வாசிப்புகளின் மூலமே என் முழு சாம்ராஜ்யத்தையும் இன்று நான் கட்டி எழுப்பியுள்ளேன்.

எனவே உங்கள் வாழ்வில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதை விட்டுவிடாதீர்கள்.உங்கள் அறிவை கூர்மையாக்குவதை நிறுத்திவிடாதீர்கள். ஏனென்றால் உங்களிடம் எவ்வளவு அறிவும்,அனுபவமும் இருக்குமோ அவ்வளவு எளிதாக உங்களால் மிக அதிக பணத்தை பெற்றுவிட முடியும்.இந்த அறிவாள்தான் என் வாழ்வில் பலநூறு பில்லியன் டாலர்களை நான் சம்பாரித்து இருக்கின்றேன்.நீங்களும் உயர்ந்த வெற்றியாளராக வேண்டுமானால் "இப்பொழுதிலிருந்தே உங்கள் மீது நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். அத்தகைய முதலீட்டால் மட்டுமே பணம்,புகழ்,ஆளுமை இவை அனைத்தையும் உங்களால் பெற முடியும்...!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)

எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)
எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)

 

உங்களுக்குத் தெரியுமா என்னுடைய கார் உற்பத்தி தொழிற்சாலைதான் நான் என்னுடைய அதிகமான நேரத்தை செலவிட்ட இடமாகும்.மேலும் நான் தூங்கும் இடமும் அதுதான்.அங்கு ஒரு மூலையில் சாய்ந்தவாரே நான் தூங்கிய சமயத்தை விட மிக வலிநிறைந்த சமயம் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.பெரும்பாலும் என் வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பே அற்றுப்போனேன்.உண்மையில் நான் வெற்றிக்காக போராடியது என்பது என்னுடைய கால்முறிந்துபோனதை விட கொடுமையானதாகவே நான் கருதுகின்றேன்.இப்பொழுது நான் வெற்றி பெற்றவனா இல்லையா என்று நான் அறியமாட்டேன்.ஆனால் எல்லா வெற்றியாளர்களும் ஆரம்பத்தில் மிகப்பெரும் தோல்வியாளர்களே என்பதை நான் மறுக்கமாட்டேன்.

உண்மையான வெற்றியாளர்கள் தங்களின் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு எழுந்து வந்துவிடுகின்றார்கள்.ஆனால் தோல்வியாளர்களோ தன் தவறுகளை தட்டிக்கழித்துவிட்டு ஆணவத்தோடு தோற்றுப்போகின்றார்கள். நான் இயற்பியலை நன்றாக படித்ததால் ஒரு தவறிலிருந்து எப்படி திரும்பி வரவேண்டும் என்பதை நன்றாக அறிவேன்.இயற்பியல் எனக்கு கற்பித்த முதல் விஷயம் "இந்த உலகில் சரி, தவறு என்பதெல்லாம் கிடையாது" என்பதுதான். மேலும் அனுபவங்களே இந்த உலகம் என்பதை நான் நன்றாக அறிவேன். எனவே அதுவே எனக்கு போதும்.

தோல்வி என்ற வார்த்தையை நான் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. ஏனென்றால் தவறுகள் என்பதே அடுத்த கட்டத்திற்கான முதல் படி என்றே நான் நம்புகின்றேன்.அதை சீர் செய்து விட்டு செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கின்றது.எனவே புதிதாக ஒன்றை நீங்கள் செய்ய துணிந்தால் தாராலமாக தவறு செய்யுங்கள்.பிறகு அதனை விரைந்து சீர் செய்துவிடுங்கள். உண்மையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது தவறே இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் கிடைத்துவிடாது.மாறாக நடைபெறும் தவறை விரைவாக சீர் செய்வதின் மூலமே ஒரு நிறுவனம் வெற்றியடைகின்றது.

என்னுடைய நிறுவனத்தில் புதிதாக செயல்படும் நபர்களையே இணைத்துக் கொள்கின்றேன்.ஆதலால் எங்கள் உற்பத்தி மிக புதுமை நிறைந்ததாக இருக்கின்றது.மேலும் தரமானதாகவும் இருக்கின்றது.எங்களுடைய காரிற்கு நாங்கள் விளம்பரம் ஏதும் கொடுப்பதில்லை அதன் தொகையை தரத்திற்காக  செலவழிக்கின்றோம்.ஆகையால் இன்று எங்கள் உற்பத்திகள் அதிக அளவில் விற்பனையாகின்றது.எனவே புதிதாக எதையேனும் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தைரியமாக செய்யுங்கள்.என் நிறுவனம் 2008 -ல் தோல்வியுற்றுவிட்டது என்று மக்களில் சிலர் பரப்பி சந்தோஷமடைந்தார்கள். அதனால் கிறிஸ்மஸ்சை கூட நான் சந்தோஷமாக கொண்டாடவில்லை.

உண்மையில் அந்த மக்கள் நான் என்ன செய்கின்றேன் என்றும்,என் திட்டத்தின் நோக்கம் என்ன என்றும் கூட தெறியாமலே என்னை அவர்கள் விமர்சித்தார்கள்.அதனால் நான் மிகப்பெரும் வேதணை அடைந்தேன்.ஆனால் இன்று நான் என் இலட்சியத்தை அடைந்துவிட்டேன் என்றே நினைக்கின்றேன்.ஆகவே என் வாலிப நண்பர்களே ..!உங்கள் இளமையை பார்த்து நான் பொறாமைபடுகின்றேன்.ஏனென்றால் அது மிக விலைமதிக்க முடியாதது.

எது எப்படியோ நீங்கள் படியுங்கள்,அல்லது வேலை செய்யுங்கள் அது உங்களுடைய விருப்பம்.ஆனால் ஏதேனும் ஒரு இலட்சியத்தோடு அதனை செய்யுங்கள்.நன்றாக நினைவில் கொள்ளுங்கள் பணம் அதனை எங்கிருந்தாலும் சம்பாரித்துவிடலாம்,ஆனால் இலட்சியம் என்பது அவ்வாறல்ல.இங்கு அதிகமானோர் தோற்பதை பயப்படுகின்றார்கள்.அந்த பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.எங்கு தோல்வியும் ,கடினமும் இல்லையோ அங்கு ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

அலிபாபாவின் அற்புத உபதேசங்கள்.(Jack Ma Alibaba)

அலிபாபாவின் அற்புத உபதேசங்கள்.
அலிபாபாவின் அற்புத உபதேசங்கள்.

1995-ல் நான் என்னுடைய தொழிலை தொடங்கியபோது மிகப்பெரும் கஷ்டத்தில் இருந்தேன்.என் குடியிருப்பில் இருந்த 24 நண்பர்களிடமும் ஏதாவது தொழில் செய்யலாம் என்று அழைத்தேன்.ஆனால் யாருக்கும் அந்த வாய்ப்பு அமையவில்லை.பிறகு அமெரிக்காவிற்கு முதலாவதாக பயணம் செய்தேன். அப்பொழுது வரை நான் கணிணியை தொட்டதுகூட இல்லை.ஏனென்றால் அன்றய தினம் எனக்கு அது மிக விலை உயர்ந்த பொருளாக இருந்தது.ஆனால் சரியாக இரண்டு வருடம் கழித்து அந்த கணிணியில் நான் என்ன செய்ய இருக்கின்றேன் என்பதை விளக்க ஆரம்பித்தேன்.

என் நண்பர்களிடம் என் திட்டத்தை கூறினேன்.அவர்களில் 23 பேர் இது வெல்லாம் உனக்கு சரிபட்டுவராது எனவே இதை மறந்துவிடு என்றார்கள். மேலும் இங்கு இருப்பவர்களுக்கு கணிணி என்றால் என்னவென்றே தெரியாது, இவர்களிடம் சென்று எப்படி இதை விளக்குவாய் என்றும் கேலி செய்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் ஜாக் நீ எதையாவது புதிதாக முயற்சிக்கின்றாய் என்றால் தாராலமாக முயற்சிசெய்.எதுவானாலும் என்னை அழை நான் வருகின்றேன்.ஆனாலும் எனக்கும் இது தவறாகவேபடுகின்றது என்றார்.

அன்று இரவு முழுவதும் என் திட்டத்தை யோசித்துக்கொண்டே இருந்தேன். நம்மில் பலரும் பல விஷயங்களை செய்யவேண்டும் என்று யோசிப்போம், ஆனால் காலையில் எழுந்த பிறகு நாம் எப்பொழுதும் எந்த வேலைக்கு செல்வோமோ அதே வேலையை தொடர சென்றுவிடுவோம்.ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.என்னுடைய திட்டத்தை நிறைவேற்ற 2000 டாலர்களை என் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் கடனாக பெற்று என் தொழிலை தொடங்கினேன்.அத்தருனம் எனக்கு ஒரு குறுடன் குறுட்டு புலிகளுக்கு முன்னால் ஓடுவதைபோன்று இருந்தது.

அச்சமயத்தில் குதிரையின் மீது சகவாசமாக பயணித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் கீழே விழுந்தார்கள்.நானும் விழுந்தேன்.ஆனால் மீண்டும் எழுந்தேன்.உண்மையில் அத்தோல்வியின் போது நான் மீண்டும் எழும்பவேமாட்டேன் என்றே நினைத்தேன்.ஆனாலும் லட்சியவெறி என்னை புதிய மனிதனாக மீண்டும் பிறக்கச்செய்தது.

பிறகு என் தொழிலை சைனாவின் முக்கிய தொழிலாக பதிய முயற்சித்தேன். அதற்காக நான் அவ்வலுவலகத்திற்கு சென்று என் கம்பெனியின் பெயரை கூறினேன்.அப்பொழுது அவ்வலுவலக அதிகாரி என்னிடம் ஆங்கில அகராதியை கொடுத்துவிட்டு இதில் இன்டர்னெட் என்றொரு வார்த்தையே இல்லை.இதை எப்படி உங்கள் தொழிலின் பெயராக வைக்கப்போகின்றீர்கள் என்றார்.உடனே நான் என் பத்திரிக்கை நன்பரை என் வீட்டிற்கு அழைத்து அவற்றை விளக்கி காணொளி தயாரித்து நிறூபித்ததுதான் என் வாழ் நாளில் மிகக் கடினமான நாளாக இருந்தது.

முதல் மூன்று வருடங்களில் என் தொழிலிள் ஒரு பைசாகூட எனக்கு கிடைக்கவில்லை.ஆனால் இன்று என்னுடைய கூட்டாளர்கள் மட்டுமே 60 ஆயிரம் நபர்கள்.மேலும் இன்று என்னுடைய வருமானம் கிட்டதட்ட 550 பில்லியன் டாலர்கள் ஆகும்.நான் பல சமயங்களில் என் குழுவிடம் சொல்வதுண்டு.நாம் ஒரு கம்பெனியல்ல மாறாக நாம்தான் முழு பொருளாதாரமும் என்பேன்.மேலும் 2036 -ல் நாங்கள்தான் உலகின் 5 வது பணக்காரர்களாக இருப்போம் என்றும் நான் நம்புகின்றேன்.

அன்றே என் நண்பர்களிடம் நான் கூறினேன் "இந்த உலகின் பத்து பணக்காரர்களில் நானும் ஒருவனாக வருவேன் என்று..!இன்று நான் அதனை செய்துவிட்டேன்.ஆகவே இன்று நீங்கள் கஷ்டப்படுகின்றீர்கள் என்பதற்காக வருந்தாதீர்கள்.முதலில் நூறு மீட்டர் ஓட கற்றுக்கொள்ளுங்கள்.பிறகு படிப்படியாக உயர முயலுங்கள்.யாரையும் உங்களுடைய போட்டியாளராக கருதாதீர்கள்.உங்கள் பாதையை நோக்கி நீங்கள் நடந்துகொண்டே இருங்கள்.

இங்கு ஓய்வு என்பது மிக எளிதில் கிடைத்துவிடாது என்பதை மறந்து விடாதீர்கள்.ஏனென்றால் நான் என் நாற்பது வயதிலேயே ஓய்வெடுக்க முடிவெடுத்தேன்!முடியவில்லை.பிறகு நாற்பத்தி ஐந்தாம் வயதில் முயற்சித்தேன்!முடியவில்லை.என் நண்பர்கள் நான் பில்கேட்சை தோற்கடிக்க முயற்சிக்கின்றேன் என்று நினைத்தார்கள்.உண்மை என்னவெனில் பில்கேட்சை என்னால் போட்டியாளராககூட பார்க்க முடியாது.ஏனெனில் அவர்தான் உலகிலேயே மிக விரைவாக ஓய்வு பெற்றவர் என்றாலும் நிச்சயமாக "நான் என் அலுவலகத்திலேயே இறக்கமாட்டேன்.மாறாக கற்பிக்கும் ஆசிரியனாக ஏதாவதொரு கடற்கரையின் ஓரமே நான் இறப்பேன்.

ஏனென்றால் சாஃட்வேர் என்றால் என்ன என்பதையும் அது என்ன செய்யும் என்பதையும் நான் நன்றாக அறிவேன்.நான் என் மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியனாக இருந்து விட்டு செல்வேன்.அன்பர்களே இறுதியாக ஒன்றை கூறிக்கொள்கின்றேன்.இன்று உங்களை நீங்கள் ஒரு முதலாளியாக நினைத்து செயல்பட்டால் கட்டாயம் அது ஒரு ஐந்து வருடம் தொடரலாம்.ஆனால் அதுவே உங்களை நிங்கள் ஒரு நல்ல உழைப்பாளியாக எண்ணி செயல்பட்டால் இன்று கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

அவ்வளவு ஏன் நாளை அதை விட கடினமாககூட இருக்கலாம்.ஆனால் நாளை மறு நாள் என்பது நிச்சயம் இன்பகரமானதாக அமையும்.ஆனாலும் நம்மில் பலரும் அடுத்த நாளின் இரவிலேயே இறந்து போய்விடுகின்றோம் என்பது கைசேதத்துக்குறியதாகும்.எனவே கடுமையாக உழையுங்கள்,நன்கு கற்றுக் கொள்ளுங்கள்,உங்கள் குழுவிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து விட்டு செல்லுங்கள்.!

புதன், 4 ஆகஸ்ட், 2021

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.(Capitalism, Socialism, Communism)

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.
அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.
 

முன்னுரை:

ஒரு நாட்டில் ஒரு அரசு எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்கின்றதோ அதனை பொருத்தே அந்நாட்டின் பொருளாதார வளர்சியும் அமைகின்றது என்பது நிதர்சனமாகும்.எனவே நாட்டின் பொருளாதார வளர்சியை கருத்தில்கொண்டு இன்றைய உலகில் மூன்று விதமான பொருளாதார கொள்கைகளே அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அம்மூன்று பொருளாதார கொள்கைகளையும் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணமாக மிக எளிய உதாரணங்களால் என்னால் முடிந்தளவு விவரிக்க முயலுகின்றேன்.

பொருளாதாரக் கொள்கைகள்:

1.கம்யூனிச பொருளாதாரக் கொள்கை.

2.கேப்பிடலிச பொருளாதாரக் கொள்கை.

3.சோசியலிச பொருளாதாரக் கொள்கை.

1.கம்யூனிச பொருளாதார கொள்கை என்றால் என்ன ?

கம்யூனிச பொருதார கொள்கை என்பது நாட்டில் கிடைக்கப் பெறும் பொருளை அனைவரும் சரிசமமாக பிரித்துக் கொள்வதற்கு சொல்லப்படும். உதாரணமாக கூறினால் பண்டைய காலத்தில் உணவிற்காக வேட்டையாடும் பொருளை அனைவரும் பங்கு பிறித்து எடுத்துக் கொள்வதை போன்றதாகும்.

2.கேப்பிடலிச பொருளாதார கொள்கை என்றால் என்ன?

 நாட்டில் கிடைக்கப் பெரும் பொருளை யார் எடுத்தாரோ அவரே அதற்கு முழு உரிமை பெறுவார் என்பதாகும்.இதற்கு உதாரணம் யார் உணவை வேட்டையாடினாரோ அவரே அதனை வைத்துக்கொள்ளலாம் என்பதை போன்றதாகும்.

3.சோசியலிசம் என்றால் என்ன.?

நாட்டில் கிடைக்கப்பெறும் பொருளை மக்களின் தேவைக்கு ஏற்பவாறு அரசே பங்கிட்டு கொடுப்பதற்கு சொல்லப்படும்.உதாரணமாக வேட்டையாடிய பொருளை அரசு தன் கையில் எடுத்து அதனை அவரவரின் தேவைக்கேற்ப வழங்குவதை போன்றதாகும்.இவற்றில் ரஷ்யா,சீனா போன்ற பெரும் நாடுகள் கம்யூனிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும், அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் கேப்பிடலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும்,இந்தியா போன்ற சில நாடுகள் சோசியலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றது.

இப்பொழுது இம்மூன்று கொள்கைகளில் எக்கொள்கை மக்களின் பொருளாதார வளர்சிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை என்னுடைய கண்ணோட்டத்தில் விவரிக்க விரும்புகின்றேன்.

எது சிறந்த கொள்கை?

என்னைப்பொருத்தமட்டில் இம்மூன்று கொள்கைகளையும் வரம்பு மீறாமல் கடைபிடிப்பதே ஒரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்சிக்கு காரணமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.நாட்டில் ஒருவன் அதிகம் உழைக்கின்றான் எனில் அவனுக்கு அப்பொருளில் கூடுதல் உரிமை கொடுப்பதில் தவறேதும் கிடையாது என்பதே எனது கண்ணோட்டமாகும். இதனடிப்படையில் கேப்பிடலிசம் என்பதும் ஒரு நாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய சிறந்த பொருளாதார கொள்கையாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் ஒருவன் மட்டும் உழைத்து பலரும் சரிசமமாக பிறித்துக்கொள்வது என்பது ஒரு காலத்தில் மிகப்பெரும் அடக்குமுறைக்கு காரணமாகவும் அமையலாம் என்பதும் எனது கருத்தாகும்.

அவ்வாறே இல்லாத ஒருவனுக்கு பகிர்ந்து அளிப்பது என்பதும் மிகச்சிறந்த செயலேயாகும்.ஏனெனில் ஏதுமில்லாத ஒருவனுக்கு ஏதேனும் சில பொருட்களை கொடுத்து உதவுவது என்பது அவனுக்கு புதிய வாழ்வை அமைத்து கொடுப்பதைப்போன்றதுதானே.!இதனடிப்படையில் கம்யூனிசம் என்பதும் ஒவ்வொரு நாட்டிற்குமான சிறந்த பொருளாதார கொள்கையாகவே காணப்பட வேண்டும் என்பதும் எனது கண்ணோட்டமாகும்.

அவ்வாறே அத்தியாவசிய பொருட்களை அரசே பொறுப்பேற்று அதை சீராக பங்கிடுவதும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையேயாகும்.ஏனெனில் அத்தியாவசிய பொருட்களை முதலாளிகளின் கையில் கொடுத்துவிடுவதோ அல்லது மக்களின் கைகளிலேயே விட்டுவிடுவதோ பொருளாதார தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடலாம்.எனவே இதனடிப்படையில் சோசியலிசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான சிறந்த பொருளாதார கொள்கையாகவே இருக்கின்றது.

(குறிப்பு)இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில் எப்பொழுது இவை மூன்றிலும் வரம்பு மீறப்படுமோ அப்பொழுதே அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் சீர்கெட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy)

ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy)
ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy)


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமே இவ்வுலகின் மிகச் சிறந்த செல்வம் என்பதாகவே இவ்வுலகில் உள்ள அத்துனை மதங்களும் அதன் தலைவர்களும் போதித்துவிட்டு சென்றுயிருப்பதை நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.ஆம் காந்தி ஜீ: "இந்த உலகில் தங்கம்,வெள்ளியை விட உண்மையான செல்வம் அது ஆரோக்கியம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார்.அவ்வாறே நபிகள் நாயகம்:"இந்த உலகில் இறைவனிடம் கேட்க வேண்டிய முதல் செல்வம் அது ஆரோக்கியமே "என்பதாக கற்றுக் கொடுத்ததாகவே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.

இவ்வாறே புத்தரும் "உடல் ஆரோக்கியமே உலகின் மிகச்சிறந்த செல்வம்' என்பதாக போதித்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது.இப்படி உடல் ஆரோக்கியத்தின் மேன்மையை உணர்ந்த அந்த மஹான்கள் எல்லோரும் இந்த உலகில் ஒரு முழுமைபெற்ற மனிதர்களாகவே தங்களை நிலைநாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

உண்மையில் இந்த உலகில் மனிதர்களை இரண்டே வகையில் நாம் உள்ளடக்கிவிடலாம்.ஒன்று நோய்வாய்பட்டு தன்னுடைய ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக போராடும் ஒரு சாரார்கள்,மற்றொன்று தன்னுடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றொறு சாரார்கள்.இவ்விரண்டு சாரார்களில் நீங்கள் எந்த சாரார்களில் இருக்கின்றீர்கள் என்பதை ஒரு கனம் சீர் தூக்கிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக ஆரோக்கியத்தை எப்பது பாதுகாப்பது என்பது சம்மந்தமாக பார்ப்பதற்கு முன்பாக முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம்..!

ஆரோக்கியம் என்றால் என்ன.?

"நாம் விரும்பியவாறு சுதந்திரமாக செயல்படும் நிலைக்குத்தான் ஆரோக்கியம் என்று சொல்லப்படும்.ஆம் உடல் ரீதியாக நாம் சுதந்திரமாக செயல்படும் அந்த காலம்தான் நம் வாழ்வில் கிடைக்கப்பெற்ற வசந்த காலம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அதிகப்படியாக ஆசிப்பது இந்த சுதந்திர காலத்தைத்தான்.தான் விரும்பிய எதனையும் எவ்வித தங்குதடையுமின்றி சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் தனிப்பட்ட பேராசையாகும்.பெரும்பாலான மனிதர்களுக்கு அது வெறும் பேராசையாகவே கடந்து சென்றுவிடுகின்றது.

இந்த கட்டுரையில் நான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டாலும் அவற்றைவிட உங்களிடம் நான் வேண்ட நினைப்பதெல்லாம் ஒன்றுதான் "உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை  நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்பதேயாகும்.ஆம்..!உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு சமயமும் ஒருவர் உங்களுக்கு போதித்துக் கொண்டே இருக்கும் நிலையை தயவுகூர்ந்து  நீங்கள் அடைந்துவிடாதீர்கள். உண்மையில் அதைக்காட்டிலும் துரதிஷ்டமான  நிலை வேறெதுவுமில்லை.

ஆகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதே உங்கள் வாழ்வின் முதல் இலட்சியமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் உடல் ஆரோக்கியமற்றுப்போகும்பொழுது நீங்கள் உங்களுடைய சுதந்திரத்தை இழப்பது மட்டுமின்றி உங்களை சுற்றியிருப்பவர்களின் சுதந்திரத்தையும் இழக்கச்செய்துவிடுவீர்கள்.இதற்கு நல்ல உதாரணம் குருடர்கள்தான்.அவர்கள் எல்லா காலமும் மற்றொரு மனிதரின் பக்கம் தேவையுற்றவர்ளாகவே ஆகிவிடுகின்றனர்.மேலும் இந்த அற்புதமான உலகின் பரந்து விரிந்த பாலைகளையும்,சோழைகளையும் பார்த்து ரசிக்கும் பாக்கியமற்று தனித்து விடப்பட்ட, இருண்ட உலகில் தத்தளிக்கும் வெற்று சடலங்களாக மாறிவிடுகின்றனர்.ஆக அந்த குருடர்களின் நிலையே ஆரோக்கியத்தின் உண்மை பொருளையும்,அவசியத்தையும் மிகத்தெளிவாக விளக்குகின்றது என்பதால் இந்த சிறு உதாரணத்துடனே இக்கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு நான் செல்கின்றேன்.

உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது..?

உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு நாம் எல்லா காலங்களிலும் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஆரோக்கியத்தை காப்பதற்கான வழிகள்:

1.Having Food -உணவு முறை

2.Having Rest -ஓய்வு எடுத்தல்

3.Doing exercise -உடற்பயிற்சி செய்தல்

4.Beeing cleanliness -தூய்மை கடைபிடித்தல்.

1.நம் உடல்நலனை பேணிப்பாதுகாக்க முதல் காரணியாக இருப்பது நம் உணவு சார்ந்த பழக்கவழக்கமாகவே இருக்கின்றது.ஆகவே அவற்றைப்பற்றியே  இங்கு நான் முதலில் விளக்குவதற்கு விரும்புகின்றேன். உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை நாம் இங்கு இரண்டு பகுதிகளாக பிறித்துக்கொள்ளலாம்.

1.நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய உணவு.

2.நாம் நம்மைவிட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு.

நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உணவு நாம் உண்ணுவதற்கு தகுதியானதுதானா என்பதை எல்லா சமயங்களிலும் ஒன்றிற்கு பலமுறை சோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அது எவ்வாறு சோதித்துப்பார்ப்பது? என்பதாக நீங்கள் கேட்டால்..!அதற்கான இரு பொது விதிகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

1.அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்.

2.அவை சுவையானதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்ட உணவுகளை எப்பொழுதும் தவிர்த்துவிடுவதே நம் ஆரோக்கியத்தை பேணிக்கொள்வதற்கான ரகசிய சூட்சமமாகும்.ஆம் ..!சுத்தமற்ற உணவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை தாக்கும் முதல் எதிரி என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.குறிப்பாக வயிற்றுப்போக்கு,வாந்தி பேதி போன்ற நோய்கள் ஏற்பட சுகாதாரமற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளே முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறே தெருக்களின் ஓரமாக திறந்த வெளிகளில் விற்கப்படும் தின்பண்டங்களாலேயே காலரா,மற்றும் டைஃபாய்டு,போன்ற வைரஸ் காய்ச்சல்களும் பரவுகின்றது என்பதாகவே மருத்துவர்கள் நமக்கு எச்சரிக்கின்றனர்.ஆகவே உங்களால் முடிந்த அளவு சுகாதாரமான உணவுகளையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக சுவையான உணவை நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது.நம்மில் பலரும் விலையுயர்ந்த உணவு பொருட்களை அதிக தொகைகொடுத்து வாங்க தயாராகவே இருக்கின்றோம்.ஆனால் அவை நம்முடைய உடல்நலத்தை காக்கும் சுவைமிக்கதுதானா.?என்பதை கவனிக்க பல சமயங்களில் தவறிவிடுகின்றோம்.

வெறும் அயல் நாட்டு உணவு என்ற பெயரிற்காகவே அதனுடைய சுவை மற்றும் அதன் விளைவு போன்றவற்றை மறந்துவிட்டு அதிக விலை கொடுத்து உண்ணுகின்றோம்.அவை மிக காரம் நிறைந்து,நம் மனதிற்கு பிடிக்காத சுவையில் இருந்தாலும் அவற்றை பற்களை கடித்துக் கொண்டு விழுங்கி விடுகின்றோம்.இவற்றிற்கு மாறாக நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை மிக சுவையாக சமைத்து உண்ணுவதையே நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கான  மிகச்சிறந்த வழி என்பதாக நான் முழுமையாக நம்புகின்றேன்.

மேலும் மற்றொரு விஷயத்தையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு கடமைபட்டிருக்கின்றேன்.அதாவது நம்மில் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டுமானால்,பாதி அவியல் கொண்ட சுவையற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மை என்னவெனில் பாதி அவியலான உணவு அதிக சத்துக்களை கொண்டதாக கருதப்பட்டாலும் அவற்றை முறையாக,முழுமையாக சமைத்து உண்ணும்பொழுது அதனுடைய முழு சக்தியும் கிடைக்கவே செய்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிட்டுகாட்டுகின்றனர்.

ஆகவே சுத்தமான மேலும் சுவையான உணவை உங்கள் மனதிற்கு பிடித்த வகையில் உண்டு மகிழுங்கள்.மேலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்புடையவர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.

2.தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்.

உண்ணக்கூடாத உணவு என்பது அசுத்தம் நிறைந்த பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றுகின்ற அனைத்து விதமான உணவுகளையும் முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.குறிப்பாக போதை தரும் பொருட்களில் எதுவாக இருந்தாலும் அவற்றை முற்றிலுமாக தூரமாக்கிவிடுங்கள்.அவ்வாறே அசுத்தமான கால்நடைகளின் இறைச்சிகளையும் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.அவை மிக உயர்ந்த சுவையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரியே.மது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை உறிந்து குடித்துவிடும் மிக மோசமான எதிரி என்பதை எக்காலமும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வின் எச்சந்தர்ப்பங்களிலும் அவை இடம் பிடித்துவிடாதபடி உங்களைச் சுற்றி ஒரு அரண் அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் நீடித்து இருக்கும் என்பதை நான் வாக்குறுதி அளிக்கின்றேன். இவற்றைப் போன்று நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை  "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற எனது புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவற்றை கட்டாயம் வாசியுங்கள்.உங்களை முழுமை பெற்ற மனிதராக ஆக்கிக் கொள்ளுங்கள்.