 |
காரல் மார்க்சும் அவருடைய அரசியல் பார்வையும்-Karl Marx |
முன்னுரை:
இந்த கட்டுரையில் கார்ல்மார்க்சின் அரசியல் சார்ந்த அடிப்படை கண்ணோட்டத்தை மேலோட்டமாக பதிவு செய்திருக்கின்றேன்.ஏனெனில் இன்றைக்கு அரசியல்,அதிகாரம் என்ற பெயரில் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் புள்ளுருவிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை காரல் மார்க்சின் சில அடிப்படை தத்துவங்கள் தோழுறித்துக் காட்டக்கூடியதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் இங்கு அவருடைய அரசியல் சார்ந்த சில கண்ணோட்டத்தை விவரிக்கின்றேன்.
அரசியலின் அடிப்படை தத்துவமென்ன என்பதையும் அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையும் மிகச்சரியாக நாம் விளங்கிக் கொள்ளவில்லையெனில் வலியவன் நம்மை ஆளவும் எளியவனாகவே நாம் துவளவும் பழகிப்போய்விடுவோம்.அத்தகைய இழிநிலையை ஒழிக்கவே பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாட்கள் முழுவதும் போராடினார்கள்.அத்தகைய போராளிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் ஒரு சில கருத்துக்களை உங்களின் கண்ணோட்டத்திற்கு விடுகின்றேன்.இதனை கட்டாயம் வாசியுங்கள்..!ஏனைய வாலிப நண்பர்களுக்கும் இதனை எத்திவையுங்கள்..
கார்ல் மார்க்சிடம் அரசியல் அல்லது அரசு என்பதற்கு பொருள் என்னவென்றால் அதிகாரத்தை தன் கையில் மட்டும் குவித்துக்கொண்டு தனக்கு இனக்கமானவர்களுக்கு சேவகம் செய்வதும் தனக்கு தேவையற்றவர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதும்தான் என்று தன்னுடைய பெரும்பான்மையான பேச்சுகளில் வெளிப்படுத்துகின்றார்.வெளிப்படையாக கூறவேண்டுமெனில் முதலாளித்துவம் ஒழிந்துகொள்வதற்கும் அவற்றின் மூலம் பாட்டாளி மக்களை உறிஞ்சி குடிப்பதற்கும் துணைநிற்கும் ஒரு அமைப்புதான் அரசு என்று மிக ஆணித்தரமாக குறிப்பிடுகின்றார்.ஆக அவருடைய பார்வையில் அரசு என்பதற்கான அடைமொழி என்னவென்றால்..!
"முதலாளிகளால் முதலாளிகளுக்காக முதலாளிகளே உறுவாக்கிய அரசுதான் அரசியல் என்று முகத்தில் அறைந்தார் போல் விளக்கம் தருகின்றார்.அரசு அரசியல் என்பதெல்லாம் தேவையே இல்லாதவை என்பதிலிருந்தே அவரின் அரசியல் கண்ணோட்டம் துவங்குகின்றது.மக்கள் தங்களுக்கு தாங்களே சீராகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டாலே போதுமானது என்றே அவர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.அப்படியே ஒரு வேலை தங்களுக்கு மத்தியில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை அவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தீர்வு கூறுகின்றார்.
மேலும் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அரசு, அரசாங்கம் என்பவையெல்லாம் இல்லாமலே வாழ்ந்துதானிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆனால் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மக்களுக்கு மத்தியில் தீர்க்க முடியாத வர்க்க பிரச்சனைகள் தோன்றியதால்தான் இந்த அரசு,அரசாங்கம் என்ற நடுவன் மன்றங்களெல்லாம் உறுவானது என்று குறிப்பிடுகின்றார்.இன்னும் சொல்லப்போனால் தங்களை தனித்தனி வர்க்கங்களாக பிறித்துப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில் இணங்க முடியாத வர்க்க பிரச்சனையை தோற்றுவித்ததே இந்த அரசியல் அரசு புள்ளுருவிகள்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றார்.
மேலும் இந்த வர்க்க பிரச்சனைகள் இல்லாவிடில் அரசு என்பதே இல்லாமல் போய்விடும் என்பதே அவருடைய ஆழமான கருத்தாகவும் இருக்கின்றது.இந்த வர்க்க பிரச்சனையை மக்களிடம் அவ்வப்பொழுது தூண்டிவிட்டு தனக்கான அதிகார பலத்தை அவ்வப்பொழுது மெருகூட்டிக் கொண்டே இருப்பதுதான் அரசு என்ற ஒன்று நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்பதையும் அவர் மிகத்தெளிவாக விவரிக்கின்றார்.மேலும் அவரிடம் அரசு என்பதற்கும் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அவரின் கருத்தை ஆழமாக வாசிக்கும்பொழுது நன்றாக புரிந்துகொள்ளலாம்.
அவரை பொறுத்தமட்டில் முதலாளித்துவத்தையும்,அரசியலையும் ஒரே தட்டில் வைத்தே அளவிடுகின்றார்.ஏனெனில் முதலாளித்துவமும்,அடிமை அரசும் ஒன்று சேர்ந்தால்தான் உழைக்கும் எளிய மக்களின் இரத்தங்களை உறிஞ்ச முடியும் என்பதையும் அவர் வெளிப்படையாகவே விவரிக்கின்றார்.மேலும் அவர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக செய்யும் அட்டூழியங்களையும் பட்டியலிடுகிறார்.பிறகு அவற்றை ஒழித்துக்கட்ட அவரே முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு அரசியலையும் முன் வைக்கின்றார்.
அதற்கு பெயர் தான் "பாட்டாளி மக்கள் கட்சி".என்பதாகும்.அவ்வாறே கார்ல் மார்க்ஸ் அரசியலுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரானவர் என்றும் முடிவெடுத்துவிட முடியாது என்பதே எனது கருத்தாகும்.ஏனென்றால் அவரின் "பாட்டாளி மக்களுக்கான அதிகாரம் வேண்டும் என்ற உரிமை முழக்கமே பறைசாட்டுகின்றது அவர் அரசியலுக்கு எதிரானவர் அல்ல என்று. இன்னும்சொல்லப்போனால் இங்குள்ள எல்லோருக்கும் அரசியல் தேவை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.ஆனால் அந்த அரசு யாருக்கானதாகவும்,எப்படிப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் நேரடியாகவே உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டித்திண்க நினைக்கும் முதலாளி வர்க்கத்தோடு முரன்பட்டு நின்றார்.
மேலும் அரசு என்ற பெயரில் ஏதோ ஒரு வர்க்கத்தை நசுக்கி சிற்றின்பம் கண்டுகொண்டு தன் அதிகார பலத்தை ஏனைய மக்களிடம் காட்டிக் கொள்ளத்துடிக்கும் புள்ளுறுவிகளுக்கு எதிராக விவேகத்தோடு கோள் ஓச்சினார்.எளிய மக்களை சுரண்டித்திண்ணும் பெரிச்சாலிகளை விட்டு விட்டு எளிய சிறுபான்மையினரை தன் அதிகாரத்தால் அடக்கி வைத்திருப்பதாக பெருமைகொள்ளும் இழிவான அரசை நேரடியாகவே எதிர்த்து நின்றார். இறுதியாக முதலாளித்துவதின் அடக்குமுறைக்கும் அதற்கு துணை நிற்கும் அடிமை அரசுக்கும் எதிராக வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று தூண்டி வெற்றியும் கண்டார்.
உழைக்கும் மக்களுக்கென்று தனி அதிகாரம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் கொள்கை வகுத்தார்.இன்றைக்கு பல்வேறு நாடுகளிலும் அவர் காட்டித்தந்த வழிமுறைகள்தான் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.அவ்வாறே "உழைக்கும் மக்களிடமே ஆட்சியும் அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதை தன் அரசியல் முழக்கத்தின் மூலம் நிறூபித்தும் காண்பித்துவிட்டு சென்றுள்ளார்.
ஆக அன்பர்களே...!கார்ல் மார்க்ஸ் அடிமை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சில தீர்வுகளோடு விவரித்து இருக்கின்றார்.அவை முழுவதையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பது இயலாத விஷயமாகும்.எனவே அவருடைய அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தை மட்டும் என்னால் முடிந்தளாவு புரிந்துகொண்டு மிக வட்டுறுக்கமாக உங்களின் பார்வைக்கு தந்திருக்கின்றேன்.முடிந்தால் இன்றைய அரசியலோடு நீங்களே அவருடைய அரசியல் நிலைப்பாட்டை முன்நிறுத்திப்பாருங்கள்.அவர் முதலாளிகளுக்கோ முதலாளித்துவத்துக்கோ எதிரானவர் அல்ல,மாறாக மக்களை அதிகாரத்தாலும்,பொருள் பலத்தாலும் அடக்கி ஆளத்துடிக்கும் புள்ளுருவிகளுக்கே அவர் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார் என்பதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளலாம் என்று நான் நம்புகின்றேன்.
கார்ல் மர்க்ஸ் எழுதிய அல்லது அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் உங்களில் யாருக்கேனும் வேண்டுமெனில் இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மெயிலிற்கு உங்களின் குறுஞ்ச் செய்தியை அனுப்புங்கள்.அவை இலவசமாக PDF வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.