வியாழன், 26 ஆகஸ்ட், 2021

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

யார் உண்மையான அறிவாளி?(Intelligent)
யார் உண்மையான அறிவாளி?(Intelligent)

முன்னுரை:

இந்த உலகத்தில் அறிவாளியாக வேண்டும் என்று பலரும் சொல்வதை நான் கேள்விபட்டிருக்கின்றேன்.சிலர் தாங்கள்தான் பெரும் அறிவாளி என்பதாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.இவற்றிற்கு மத்தியில் ஒரு ஜென் துறவி யார் அறிவாளி என்பதை விளக்குவதை நாமெல்லாம் அறிந்து வைத்திருப்பது நமக்கு மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே அந்த நிகழ்வை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

ஜென் துறவியின் கதை:

"அந்த ஜென் துறவி வில்வித்தையில் மிக கைத்தேர்ந்தவராக இருந்தார்.அவர் மாலை நேரத்தில் ஊரிற்குள் சற்று உலாவிவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.ஒருநாள் வழக்கம்போல் ஊரின் தெருவில் நடந்து கொண்டிருந்த போது சிலர் அவரை பிடித்து வில் வித்தையில் நீங்கள் மிக கைதேர்ந்தவர் என்று கேள்விபட்டோமே.!எங்கே உங்களிடம் வில்லும் இல்லை அம்பும் இல்லையே என்று ஏழனமாக கேள்வி எழுப்பினர் ?

அதற்கு அந்த துறவியோ "செயலின் உச்ச கட்டம் செயலின்மைதான் என்றும், பேச்சின் உச்சகட்டம் மௌனம்தான் என்றும், வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை எய்தாமலிருப்பதுதான் என்றும் புன்னகைத்துக்கொண்டே பதிலளித்துவிட்டு அவ்விடத்தைவிட்டும் நகர்ந்து சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வு ஒரு அறிவாளிக்கான உண்மையான இலக்கணத்தை மிகத்தெளிவாக எடுத்துறைக்கக்கூடியதாக இருக்கின்றது.ஓர் செயலின் உச்சநிலை என்பது அதில் செயலற்று இருப்பதுதான் என்பதை ஜென் தத்துவம் எல்லா இடங்களிலும் மிக அதிகமாக வலியுறுத்துவதை நம்மால் காண முடிகின்றது."ஒரு அறிவுள்ள மனிதன் தன்னுடைய அறிவாற்றலை தேவையின்றி பறைசாட்டுவதை விடுத்துவிட்டு அதனை தன்னிடம் பாதுகாப்பாக தக்கவைத்துக்கொள்ளவே நினைப்பான் என்கிறது ஜென் தத்துவம்.

மேலும் பல்ஹீனமானவனே தன்னுடைய ஆற்றலை பெரிதாக காட்டிக்கொள்ள விரும்பி இறுதியில் ஆற்றல் அற்றவனாகவே ஆகிவிடுகின்றான் என்பதாகவும் அது மிக வெளிப்படையாக பேசுகின்றது.எனவே அறிவு என்பது அறிவு இன்மையிலிருந்தே பிறக்கின்றது என்பதையும் ஜென் தத்துவம் மிக அற்புதமாக போதிக்கின்றது.யார் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது என்று கூறுவாரோ அவரே அதில் பெரும் ஏமாற்றமும் காண்கிறார் என்பதையும் அது குறிப்பிடுகின்றது.

ஆகவே அண்பர்களே...!

அறிவு என்பது அது பெறப்பட வேண்டியது அதனை நாம் நிரப்பிக் கொண்டோம் என்று நினைத்துவிட்டால் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு எதனையும் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த பரந்து விரிந்த உலகில் நாம் கற்பதற்கு பல ஆயிரம் கலைகள் உண்டு என்பதை உணர்ந்து அவற்றை கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால் அவற்றை கற்றுவிட்டோம் என்பதற்காக நாங்கள்தான் பெரும் அறிவாளிகள் என்று பரைசாட்டித்திரியாதீர்கள். அமைதியோடு அதனை அனைவருக்கும் உதவும் விதமாக பிரயோஜனப்படுத்திக்கொண்டே வாருங்கள்.அதுதான் உண்மையான அறிவாளியின் அடையாளமாகவும் இருக்கின்றது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)

முன்னுரை:

இன்றய உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப்பிசோஸ் ஒரு நிகழ்சியில் இளைஞர்களுக்கு வியாபார ஆலோசனையாக பகிர்ந்த விஷயங்களை இங்கு நான் பதிவிடுகின்றேன்.நிச்சயம் தொழில் முனைபவர்களுக்கு இது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

ஜெஃப்பிசோசின் உரை:

"மக்கள் எல்லோரும் உயர் நிலையில் இருப்பதையே விரும்புகின்றனர். அதனையே தங்கள் பணியிலும் விரும்புகின்றனர்.சிலருக்கு அது கிடைத்து விடுகின்றது.அதாவது அவர்களின் வேலையே அவர்களுக்கு பாதி மகிழ்ச்சியை கொடுப்பதாக அமைந்துவிடுகின்றது.உண்மையில் அது மிக அற்புதமான விஷயமேயாகும்.ஆனால் உண்மையென்னவெனில் எல்லாவற்றிலும் சில கடினங்கள் என்பது இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக நீங்கள் சுப்ரிம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் அதிலும் உங்களுக்கு பிடிக்காத சில காரியங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றிலும் சில கடினமான பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது.இப்படி இந்த உலகில் உள்ள எல்லா வேலைகலிலும் நம் மனதுக்கு பிடிக்காத பக்கங்கள் என்பது கட்டாயம் இருக்கவே செய்யும்.

அவை கடினமாக இருக்கின்றது என்பதற்காக விட்டுவிட்டு மற்றொன்றை தேடிச்செல்வதை தவிர்த்துவிட்டு அதனை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையே நான் உங்களுக்கு ஆலோசனையாக கூறுகின்றேன். பெரும்பான்மையான மக்கள் தங்களின் பிடிவாதங்களையும்,கட்டுப்பாடற்ற தன்மையையும் போக்குவதற்கு விரும்பாமல் கடின உழைப்பை முற்றிலுமாக வெறுக்கின்றனர்.இதுவெல்லாம் நான் வாலிபனாக இருந்த காலத்திலும் நடந்த தவறுகள்தான்.அப்பொழுது பல்வேறு நிகழ்சிகளை நான் பொறுபேற்க வேண்டியிருந்தது.அதனால் ஓய்வை விரும்பினேன்.அதனால் வரும் கஷ்டத்தை வெறுத்தேன்.ஆனால் அந்த கடினம்தான் என்னை உயர்வுக்கு கொண்டுவந்தது.

நம் எல்லோருக்கும் ஒரே நேரம் தான் இந்த உலகில் வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கு யாருக்கும் யாரைவிடவும் அதிகமான நேரமெல்லாம் வழங்கப்படவில்லை.நீங்கள் வெற்றியாளராக ஆக விரும்பினால் பல பொறுப்புக்களை ஏற்க தயாராகிக்கொள்ளுங்கள்.நீங்கள் வாலிபர்களாக இருக்கும்பொழுதே உங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்க ஆரம்பியுங்கள்.யாரையும் கவரவேண்டும் என்றோ அல்லது உங்கள் பாதையை யாருக்கும் விளக்கவேண்டுமென்றோ எந்த அவசியமும் கிடையாது.நீங்கள் உங்கள் லட்சியப்பாதையில் வரும் கடினங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.அதனை நீங்கள் வெறுத்தால் நிச்சயம் உங்களால் ஒரு உயர்ந்த மனிதராக உறுவாக முடியாது.

வாலிபர்களுக்கு மிக முக்கியமான ஒன்றையும் நான் கூறவிரும்புகின்றேன். அதாவது நீங்கள் உங்கள் இலக்கை நிர்னயிப்பதற்கு முன்பே நீங்கள் எதனை தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்பதில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.இந்த உலகில் நம் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட அருள் வழங்கப்பட்டு இருக்கின்றது.அது சிலருக்கு அழகாக இருக்கலாம்,அல்லது திறனாக இருக்கலாம்,அல்லது சிந்தனையாக இருக்கலாம்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இவைகள் அனைத்தும் நமக்கு வழங்கப்பட்ட அருட்கள் மட்டுமே.இவற்றை கொண்டு நாம் பெருமை கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றில் எதுவும் நாம் சம்பாரித்ததல்ல.ஆனால் நாம் பெருமைபட மிகத்தகுதியானது என்பது நாம் கடினமாக உழைக்க முடிவெடுப்பதே என்றே நான் கருதுகின்றேன்.

நான் என் பள்ளி பருவத்தில் மிகச்சிறந்த மாணவனாக திகழ்ந்தேன். "A"தரத்தில்தான் என் மதிப்பெண்கள் இருந்தது.கணக்குப்பாடத்தில் மிக ஆர்வம் கொண்டிருந்தேன்.அவைகள்தான் மிகப்பெரிய சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அவை எதுவும் உண்மையல்ல என்றே இன்று நான் உணருகின்றேன்.ஏனென்றால் கடின உழைப்பை தவிர மிகப்பெரும் சாதனை வேறெதுவுமில்லை என்றே இன்று நான் கருதுகின்றேன். என்னுடைய கடின உழைப்பையே எனக்கு கிடைத்த மிகப்பெரும் அருளாக நான் பார்க்கின்றேன்.எனக்கு இறைவன் கொடுத்த அனைத்து அருட்களையும் எனக்கான சவால்களில் செலவழிக்க ஆரம்பித்தேன்.

எதுவெல்லாம் என்னால் முடியாது என்று நினைத்தேனோ அவற்றையெல்லாம் இன்று நான் செய்து முடித்துவிட்டதை இன்று என்னாலே நம்பமுடியவில்லை. இன்று நான்தான் உலகில் முதல் பணக்காரனாக இருக்கின்றேன்.எனவே வாலிப நண்பர்களே..!உங்கள் வாழ்க்கை பயணத்தில் கடினமான பாதையையும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்! இலகுவான பாதையையும் தேர்ந்தெடுக்க முடியும்.ஆனால் நீங்கள் தொண்ணூறு வயதில் இருக்கும் பொழுது எது உங்களை திருப்திபடுத்தும் என்பதை இப்பொழுதே யோசித்துக் கொள்ளுங்கள்.

நான் அனைத்து தொழில் முனைவோருக்கும் சொல்வது இதுதான்.நீங்கள் உங்கள் தொழிலில் மிக கவனமாக இருங்கள்.என்னுடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாளராக இருப்பதை நினைத்து பெருமை அடைவதை விட்டுவிட்டு நீங்களே ஒரு நிறுவனத்தை உறுவாக்குங்கள்.அப்படி உறுவாக்கி உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதுதான் மிக உயர்ந்த செயல் என்பதாகவே என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு நான் கூறிவருகின்றேன்.

புதன், 25 ஆகஸ்ட், 2021

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)
வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice)

இன்றைக்கு வெற்றியாளர்களாக பார்க்கப்படும் அனைவரும் தங்களின் வெற்றிக்கான ரகசியமாக என்ன செய்கின்றார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுன்டா..? அல்லது அவர்கள் தங்கள் துறையில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்ததற்கு என்ன காரணம் என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா..?இந்த உலகில் வெற்றிபெற்றவர்களின் வரலாறுகள் அனைத்தையும் புரட்டிப்பாருங்கள்! அவர்கள் அனைவரும் தன் வாழ்வில் எதை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்களோ அதில் அளவுகடந்து பயிற்சி எடுத்தார்கள் என்பதை மட்டுமே பெற்றுக்கொள்வீர்கள்...!

ஆம் அண்பர்களே!பயிற்சியாள் மட்டுமே முடியாதது என்ற ஒன்றே இல்லை என்று நிறூபிக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.ஒரு செயலை முதல்முறை செய்யும்பொழுது அதில் நாம் தயங்களாம்.அதனை மறுமுறை செய்யும்பொழுது சற்று அதில் தெளிவைபெறலாம்.பிறகு அதனை திரும்ப திரும்ப செய்யும்பொழுது நாம் அந்த காரியத்தில் வல்லுனர்களாக இயற்கையாகவே மாற்றிவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இத்தகைய நிலையைத்தான் நான் பயிற்சி என்றும் பெயரிட விரும்புகின்றேன். நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் என்னால் அது முடியாது இது முடியாது என்றே முறையிடுவார்கள்.ஆனால் சிறிது காலத்திலேயே பயிற்சியின் மூலம் அவர்களை நான் பொய்பித்துவிடுவேன்.

ஆம் அண்பர்களே ..!

பயிற்சியின் மூலம் நீங்களே உங்களை பொய்பிக்கமுடியும் என்பதும் எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.உண்மையில் பயிற்சியே மனிதனை திறம்படச்செய்கின்றது என்பதற்கு மனிதனின் இயல்பு வாழ்க்கையிலேயே ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன.உதாரணமாக இன்று மிடுக்காக நடக்கும் நாம் சிறுபிராயத்தில் தவழுவதற்கே விழுந்து விழுந்து பயிற்சி எடுத்ததை நம்மால் மறுக்கமுடியுமா?இன்றைக்கு பலநூறு மீட்டர்கள் அதிவேகத்தில் சீரான ஒரு நேர்கோட்டுகுள் ஓட முடிந்த நாம் எழுந்து நிற்பதற்கே தத்தித்ததும்பிநின்றோம் என்பதை மறந்துவிட முடியுமா. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு ஒற்றை பதில்தான்.

அது தான் பயிற்சி..!

போராட்டம் என்னும் பயிற்சியின் மூலமே ஒரு மனிதன் தன்னை உயர்த்தி நிறுத்த முடியும் என்பதை சிறுபிராயத்திலிருந்தே இயற்கை நிர்னயித்து இருக்கின்றது என்ற பெருண்மையை பெரும்பாலானோர் உணர முடியாமல்  இருப்பது மிகப்பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.எனக்குத் தெரிந்து வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.வெற்றியாளார்கள் ஒன்றை செய்து பார்த்துவிடவேண்டும் என்று தானே முன்வருவார்கள்.தோல்வியாளர்கள் நம்மால் இவையெல்லாம் முடியாது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.இவ்வளாவுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடு.

கடலில் நீச்சல் அடிப்பது கடினம்தான்.ஆனால் அது எவ்வளவு இன்பகரமானது என்பதை அங்கு நீந்தி விளையாடும் நீச்சல் வீரர்களிடம் கேட்டுப்பாருங்கள். அது எத்துனை இன்பகரமான விளையாட்டு என்பதை புரிந்து கொள்வீர்கள். மலையில் ஏறுவது கடினம்தான்.ஆனால் அதில் ஏறி சாகசம் செய்யும் தோழர்களிடம் கேட்டுப்பாருங்கள் அது எத்துனை அற்புதமான அனுபவம் என்பதை புரிந்து கொள்வீர்கள்..!

வாகனங்களை இயக்குவது கடினம்தான்.ஆனால் அதில் கை தேர்ந்தவர்களை கேட்டுப்பாருங்கள் அது எத்துனை பிரயோஜனம்மிக்கது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.ஆக அண்பர்களே இறுதியாக ஒன்றை நினைவூட்டிக் கொள்கின்றேன்.நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்...!

இந்த உலகிலுள்ள அனைத்தும் கடினமானதுதான் அதனை நீங்கள் உங்கள் வயப்படுத்தும்வரை.உங்கள் விடாபயிற்சியாள் எதனை நீங்கள் உங்கள் வயப்படுத்திவிடுவீர்களோ அதுதான் இந்த உலகிலேயே மிக இலகுவான காரியம் என்று நீங்களே பிறகு சாட்சிகூறுவீர்கள்.எனவே உங்களுக்கான எல்லையை முதலில் நீங்கள் உடையுங்கள்..!அயராது பயிற்சி மேற்கொள்ளுங்கள்...!சாதனை என்பது உங்கள் காலடியில் தவளும் பொம்மையாகிவிடும் என்பதை நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்(Credit card's pro and con)

கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்
கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்

கடன் அட்டை வாழ்விற்கு அவசியமா?

இன்றைக்கு நம் வாழ்வில் கடன்அட்டை என்பது ஒரு முக்கிய அங்கமாக இடம்பிடித்துவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். சாதாரண கூழித்தொழிலாளி தொடங்கி அனைத்து கோடீஸ்வரர்களும் இந்த கடன் அட்டைக்கு அடிமைதான் என்றால் அது ஒருபொழுதும் மிகையாகாது. கடன் அட்டையின் வட்டியை செலுத்துவதற்காகவே இங்கு பெரும்பாலானோர் ஓடாய் உழைக்கின்றனர் என்பதும் நான் நிகழ் உலகில் பார்க்கும் உண்மையாக இருக்கின்றது.முன்பெல்லாம் வாழ்வாதாரத்திற்காக உழைத்த மக்கள் இன்று இந்த கடன் அட்டைக்காகவே உழைத்து உயிர் வாழ்வது மிகப்பெரும் சாபக்கேடாகும்.

இன்றைக்கு வங்கிகளும் சில நிறுவனங்களும் தங்களின் வியாபாரத்தை செழிப்பாக்கிக்கொள்ள உறுவாக்கிய திட்டமே கடன்அட்டை என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் ஆசைகளின் அடிவருடிகளாக இருப்பவர்களே இதற்கு நல்ல வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.இதனைப்பற்றி மிக எளிய முறையில் சொல்வதானால் உனக்கு சொந்தமான பொருளையே நீ வட்டிக்கு வாங்குவதை போன்றதாகும்.அதாவது ஒரு பொருள் எப்படியானாலும் தன்னுடையதாகத்தான் ஆகப்போகின்றது என்று தெரிந்தும் அதனை இப்பொழுதே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் கூடுதல் விலைக்கு வட்டியுடன் வாங்குவதைப்போன்றதாகும்.இதுதான் இருப்பதிலேயே மிகப்பெரும் ஊதாரித்தனம் என்று பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு ஒரு பிரபல்யமான பொருளாதர கொள்கை கொண்ட பல்கலை கழகத்தால் சிறிய சோதனை ஒன்றும் நடத்தப்பட்டது.அதாவது அதில் சில குழந்தைகளின் கைகளில் இணிப்புத்துண்டு ஒன்றை கொடுத்து இதனை இப்பொழுதே வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம் என்றும் ஆனால் அதனை 10 நிமிடத்திற்கு பிறகு சாப்பிட்டால் மற்றொரு இணிப்புத்துண்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

சில குழந்தைகள் மட்டுமே அவ்வாறு 10 நிமிடம் காத்திருந்து இரண்டு இனிப்புத்துண்டுகளை பெற்று சாப்பிட்டதாகவும் பல குழந்தைகள் அதனை கொடுத்த உடனே சாப்பிட்டுவிட்டன என்றுமே அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.மேலும் எந்த குழந்தைகள் காத்திருந்து சாப்பிட்டனவோ அந்த குழந்தைகளே பிற்காலத்தில் மிகவும் பொருளாதார பொறுப்புள்ள குழந்தைகளாக வந்தன என்றும் அவ்வாய்வின் மூலம் நிறூபனமும் ஆனது என்பதாக சொல்லப்படுகின்றது.எனவே நாளைக்கு எனக்கே சொந்தமாகப்போகும் ஒரு பொருளை இன்றே கடன் அட்டை மூலம் அதிக பணம் கொடுத்து பெறுவது நம்முடைய வாழ்விற்கு அவசியம்தானா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்..

கடன் அட்டையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

1.கடன் அட்டைக்கு 36 % வட்டி வசூலிக்கப்படுகின்றது என்பதே இதன் மிகப்பெரும் ஆபத்தாகும்.ஒரு நாள் நீங்கள் அதற்கான தொகையை கட்டத்தவறினாலும் உங்கள் உழைப்பில் பெரும்பகுதியை நீங்கள் வட்டியாக கட்ட தயாராகிக்கொள்ள வேண்டும்.இது கந்துவட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் சொல்லக்கூடிய வட்டி முறையைவிட மிக மோசமான வட்டி என்பதாகவே நான் கருதுகின்றேன்.

2.கடன்அட்டை என்பது பெரும்பாலும் நம்மிடம் பொருளாதார மேலான்மையை கெடுத்துவிடும் என்பதும் இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாக நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இன்று நம் கையில் அட்டை இருக்கின்றது என்பதற்காக தேவையேயற்ற பொருளையும் கூட நாம் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாராகிவிடுகின்றோம் என்பது உலவியல் ரீதியான உண்மையாகும்.

உதாரணமாக  15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க நீனைக்கும் கை பேசியை 25 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு இந்த அட்டைகள் நம்மை தூண்டுகின்றது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும்.இதனால் நம்முடைய பொருளாதாரம் சார்ந்த மேலான்மை முற்றிலும் கெட்டு நாம் நம்முடைய ஆசைக்காக எதனையும் வாங்கும் நபர்களாக மாறிவிடுவோம்.

3.நம்முடைய சேமிக்கும் பழக்கத்தை கடன்அட்டை பாழாக்கிவிடும் என்பது நான் அறிந்த உண்மையாகும்.என்னைப்பொறுத்தமட்டில் சேமிப்பு என்பதே நம்முடைய பொருளாதாரத்தின் மிகப்பெரும் பலமாக கருதுகின்றேன்.கடன் அட்டைகள் என்பது நிச்சயமாக அதனை கலவாடிச்சென்றுவிடும் காரணியாக இருக்கின்றது என்பதாகவே கருதுகின்றேன்.எனவே கடன்அட்டை என்பது நம்முடைய சேமிப்பிற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே நான் கருதுகின்றேன்.

4.டெபிட்கார்டைக்காட்டிலும் க்ரெடிட் கார்டுகளில் மோசடி நிகழ்வது அதிகம் என்ற ஆபத்து உள்ளது.க்ரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை மிக இலகுவாக கண்டறிய முடிகின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.எனவே அது போன்ற பண மோசடிகளை தவிர்க்க க்ரெடிட் கார்டுகளை தவிர்ப்பதே நல்லது.

கடன் அட்டையாள் ஏற்படும் சாதகங்கள் என்ன ?

1.கடினமான சூழலை தவிர்ப்பதற்காக கடன் அட்டையை பெறலாம். உதாரணமாக அவசியத்தேவை என்று நினைக்கும் பொருள் இப்பொழுது வாங்கவில்லையானால் பிறகு எப்பொழுதும் கிடைக்கவே கிடைக்காது என்ற சூழல் இருந்தால் அப்பொழுது கடன் அட்டை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.அதுவும் அக்கடனை மிக விரைவிலேயே கட்டிவிடும் திட்டத்தோடே அதனை பெறுவதும் மிக அவசியமானது என்றே நான் கருதுகின்றேன்.

2.இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள் (no cost EMI) என்ற சலுகையை பயன்படுத்துவதற்காகவும் கடன் அட்டையை பயன்படுத்துவது சிறந்ததாகும். எந்தவித வட்டியுமில்லாத கடனாகவே அது பார்க்கப்படுவதால் அது நமக்கு எந்த பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தாது என்றே நான் கருதுகின்றேன்.

3.வெளிநாட்டு கொடுக்கல் வாங்கள் வைத்திருப்பவர்கள் கடன் அட்டை பயன்படுத்துவது இயல்பேயாகும்.ஏனெனில் டெபிட் கார்டுகள் உலக அளவில் பயன்படுத்த முடியாது என்பதால் வெளி நாட்டில் வர்த்தக தொடர்புடையவர்கள் க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்:

Dr.S.Dhana priya

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.(monarchy)

உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.
உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.

பிளேட்டோவின் ஆறு ஆட்சி முறைகள்:

கிரேக்க நாகரீகத்தின் தந்தையாக போற்றப்படும் பிளேட்டோ இந்த உலகில் மக்களை ஆட்சி செய்வதற்கு  ஆறு வழிகள் இருப்பதாக தன்னுடைய (ரிபப்ளிக்)குடியரசு என்ற புத்தகத்தில் வரையறுத்துக்கூறியுள்ளார்.அவற்றை முதலில் நாம் அறிந்து கொண்டால் அரசியல் ஆட்சி சம்மந்தமான சரியான புரிந்துணர்வை நமக்கு ஏற்படுத்த அது மிக உதவியாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவற்றை முதலில் இங்கு நான் குறிப்பிட்டுவிடுகின்றேன்.

1.ஒருவர் மட்டும் ஆட்சி செய்வது.

2.அறிஞர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

3.செல்வந்தர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

4.இரானுவ வீரர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

5.சட்டங்களை தொகுத்து அதன்படி குறிப்பிட்ட ஒரு சாரார்கள் ஆட்சி செய்வது.

6.மக்களே தன் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களே ஆட்சி செய்வது.

இந்த ஆறு வழிமுறைகளில் மட்டுமே ஒரு நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாகவே பிளாட்டோ வரையறுத்து சென்றிருப்பது அறிவு உலகில் மிகப்பெரும் சாதனையாக போற்றப்படுகின்றது.ஏனெனில் இந்த ஆறு முறைகளில்தான் இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யப்பட்டும்வருகின்றது.இந்த ஆறு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் பிளேட்டோ இவற்றில் ஆறாவது வழிமுறையே மக்களுக்கு சிறந்தது என்றும் அதற்குத்தான் முறையான குடியரசு ஆட்சி என்றும் அவர் பெயரிடுகின்றார்.மேலும் இந்த ஆட்சியானது முற்றிலும் நீதி என்ற ஒற்றை வார்த்தைக்குள்ளே அடங்கி இருக்கவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.

இந்த குடியரசை நிலைநாட்டவே முதலாம் உலகப்போர் தொடர்ந்து பல்வேறு யுத்தங்கள் நடைபெற்றதாகவும் சில வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு விவரிக்கின்றன.பின்வரும் கட்டுரைகளில் குடியரசு என்பதைப்பற்றியும் மக்களாட்சி பற்றியும் விவரிக்கின்றேன்.இப்பொழுது இந்த கட்டுரையில் மன்னராட்சி என்றால் என்ன ?என்பது சம்மந்தமாகவும் அது எப்படி கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது சம்மந்தமாகவும் மேலும் அது இன்று எவ்வாறு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாகவும் விவரிக்கின்றேன்.

மன்னராட்சி என்பது என்ன.?

ஆரம்ப காலகட்டங்களில் மன்னர் ஆட்சியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்ததாக நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனை தமிழில் முடியாட்சி என்று அழைத்து வந்துள்ளனர்.இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான மொனார்சி(monarchy)என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.இந்த முடியாட்சி என்பது ஒரு நபரிடமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து கொடுத்துவிட்டு மக்களுக்கும் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை கடைபிடிக்கச் செய்யும் ஒரு முறையாகவே கடைபிடிக்கப்படுவதாகும்.இவற்றில் அரசரின் வாரிசு மட்டுமே அரசராக முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.

மேலும் அவ்வரசர் தானாக இறக்கும் வரையிலும் அல்லது தானாகவே எனக்கு இந்த மன்னர் பதவி வேண்டாம் என்று விலகும் வரையிலும் அவரே பதவியில் இருப்பார் என்பது மன்னராட்சியில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. மேலும் ஒரு நாட்டின் அரசன் எவ்வித சட்டதிட்டதிற்கும் உட்படாத ஒருவனாகவே பார்க்கப்பட்டுவந்தான்.இதனால் பெரும்பாலான நாடுகளில் அரசனே அம்மக்களால் கடவுளாக வணங்கப்பட்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இன்றைக்கும் சீனா ஜப்பான் நேப்பால் போன்ற நாடுகளில் அவர்களின் அரசரையே அவர்கள் கடவுளாக வணங்கி வருவது இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

இன்றைக்கும் மன்னராட்சி கடைபிடிக்கப்படுகின்றதா.?

21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும் கிட்ட தட்ட 47 நாடுகளில் மன்னர் ஆட்சியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அவற்றில் குறிப்பிட தக்க சில நாட்டின் பெயர்களை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஜப்பான்,மலேசியா,சுவேசர்லாந்து,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மொராக்கோ போன்ற பெரும் நாடுகளில் இன்று வரை மன்னராட்சியே நடைபெற்று வருகின்றது.

மன்னராட்சியின் விளைவுகள் என்ன?

1.மேலே நான் குறிப்பிட்டதுபோல் மன்னராட்சி என்பது மக்களை முற்றிலுமாக அரசு அதிகாரத்திற்குள் விடாத அரசுமுறையாக இருக்கின்றது என்பதால் மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகள் இதனை முற்றிலும் எதிர்த்தன. இதற்காக பல யுத்தங்களும் நடத்தப்பட்டே இன்று மக்களின் குடியாட்சி அல்லது மக்களாட்சி என்பது தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

2.சர்வாதிகாரத்திற்கான முழு வாய்ப்பும் இந்த மன்னராட்சியில் இருப்பதாலும் முந்தய கால மக்கள் அவ்வாறு அடக்கி ஆளப்பட்டதாலும் இந்த மன்னராட்சியை இன்றைய மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

3.ஒரே நபரிடம் அதிகாரம் முழுவதையும் இந்த மன்னராட்சிமுறை கொடுத்துவிடுவதால் அவரின் தனிப்பட்ட முடிவுகளால் ஒட்டு மொத்த  மக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கவேண்டிய சூழழுக்கு தள்ளப்படுகின்றனர்.இதனாலேயே முந்தைய ஐரோப்ப நாடுகளில் பல சமயங்களில் மிகப்பெரும் புரட்சிகள் வெடித்தாகவும் நம்மால் காண முடிகின்றது.

தொடர்ந்து பார்ப்போம்..!