புதன், 1 செப்டம்பர், 2021

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?timing-management

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது-timing-management
நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது

முன்னுரை:

நம்மில் பலருக்கும் நம் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்திருக்கும்.அவ்வாறே எதை எப்பொழுது செய்வது என்பதிலும் மிகப்பெரும் சிக்கல்களும் இருந்திருக்கும்.அவற்றையெல்லாம் போக்கவே நேரமேலான்மை அறிஞர்களில் சிலர் ஒரு அற்புதமான அட்டவனையை உறுவாக்கினார்கள்.அவர்கள் உறுவாக்கிய அந்த அட்டவணையானது நம்மில் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனம்மிக்கதாக இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு நான் அவற்றை பதிவு செய்கின்றேன். கட்டாயம் நீங்களும் அதனை கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் நேரம் உங்கள் கைவசமிருக்கும்.

நேரத்தை எப்படி பாதுகாப்பது?

முதலில் நாம் நம்முடைய நேரத்தை பாதுகாக்க நம்முடைய காரியத்தை 4 வகையாக பிரித்துக் கொள்ள வேண்டும்.அதாவது..!

1. உடனே செய்ய வேண்டியதும்,மிக அவசியமானதும்.

2. உடனே செய்ய வேண்டியதல்ல,ஆனால் மிக அவசியமானது.

3. உடனே செய்ய வேண்டியது,ஆனால் அவசியமற்றது.

4. உடனே செய்ய வேண்டியதுமல்ல,மிக அவசியமானதுமல்ல.

இப்படி நம் வாழ்வில் அன்றாடம் செய்ய வேண்டிய காரியங்களை நான்கு வகையாக பிறித்துப்பார்த்தால் இப்பொழுதே செய்தாக வேண்டும் என்ற காரியங்கள் மிக குறைவாகவே இருக்கும்.அவற்றில் முதலில் எதனை செய்தால் தொல்லை நீங்குமோ அத்தகைய காரியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.இதனைத்தான் காலையில் எழுந்தவுடனே ஒரு பெரிய தவலையை விழுங்கி விடுங்கள் என்று ஒரு புத்தக ஆசிரியர் அற்புதமாக கூறுகின்றார். அதாவது அன்றைய அட்டவனையில் உங்களுக்கு மிக முக்கியமான காரியம் என்று எதனை நினைக்கின்றீர்களோ அதனையே முதலாவதாக செய்து முடித்துவிடுங்கள் என்கிறார்.அதனால் உங்களுடைய மனதில் இருக்கும் பெரும் பாரம் குறைந்து அன்றைய நாள் மிக மகிழ்சிக்குறிய நாளாக ஆரம்பத்திலேயே இருக்கும் என்பதாகவும் விளக்கமளிக்கின்றார்.

இங்கு எதனை முதலில் செய்வது என்பதில் குழப்பமுள்ளவர்களுக்கு நான் வாசித்த ஒரு துறவியின் உபதேசம் மிக பலனுள்ளதாக அமையும் என்பதால் அதனையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

"ஒரு ஊரில் ஒரு துறவி தன் மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கு அந்த ஊரின் செல்வந்தார் மிக பதட்டமான சூழலில் ஓடிவந்தார்.துறவி என்னப்பா உனக்கு வேண்டும் என்றார்...!

"துறவியே! நான் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றேன்.ஒரு புறம் என் மனைவியின் உடல் நிலை சரியில்லாததால் அவள் படுத்த படுக்கையில் இருக்கிறால்,மற்றொரு புறம் என் வியாபாரத்தை பார்த்துக்கொள்ள யாருமே இல்லை.எனவே நான் என்ன செய்வது என்று தெறியாமல் இரண்டு மூன்று நாட்களாக தவிக்கின்றேன் என்று கூறினார்.

ஓஹ் அப்படியா,,?அதுதான் உன்னுடைய பிரச்சனையா?என்று பொறுமையாக கேட்ட துறவி தன் பையில் இருந்த ஒரு கண்ணாடி குடுவையையும் ஒரு சில கற்களையும் கையில் கொடுத்து இந்த கண்ணாடி குடுவையை இந்த கற்களால் நிரப்பி வை இதோ வருகின்றேன் என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.இதனைக் கேட்ட அந்த செல்வந்தனுக்கு மிக கோபம் வந்துவிட்டது.நான் பிரச்சனை என்று ஒன்றை கேட்க வந்தால் இந்த துறவி சம்மந்தமே இல்லாமல் கற்களை பாட்டிலுக்குள் நிரப்ப சொல்கின்றானே என்று மனதோடு புழம்பிக்கொண்டு ஒவ்வொரு கற்களாக நிரப்பத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த துறவியிடம் அச்செல்வந்தன் ஐயா இந்தாங்கள் உங்கள் கண்ணாடி குடுவை அதில் கற்களை நான் நிரப்பிவிட்டேன் என்று கையில் கொடுத்தார்.அதனை தன் கையில் பெற்ற துறவி அடடே.!அழகாய் நிரப்பி இருக்கின்றாயே..!நான் உன்னிடம் பெரிய கற்களும் சிறிய கற்களுமாகவல்லவா கொடுதேன் அதை எப்படி பிறித்து இவ்வளவு அழகாக பாட்டிலுக்குள் அடைத்தாய் என்று கேட்டார்..?தொடர்ந்து வாசிக்க என்னுடைய "நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது" என்ற புத்தகத்தை வாசியுங்கள்.அதில் இன்னும் பல அற்புதமான சிந்தைகளையும் அட்டவனைகளையும் இணைத்துள்ளேன்.நிச்சயமாக அவைகள் உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது?

பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது
பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது

பிரச்சனையில்லாத உலகமே இல்லை.

இந்த உலகில் எந்த மனிதனுடைய வாழ்விலும் பிரச்சனைகளுக்கு விதிவிலக்கு என்பதே கிடையாது.சிலருக்கு வாழ்வதே பிரச்சனையாக இருக்கின்றது. பலருக்கு வாழ்க்கையில் எங்குபோனாலும் பிரச்சனையாக இருக்கின்றது. சிலருக்கு பிரச்சனை எங்கிருந்தாவது வந்துவிடுமோ என்பதே பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.இப்படி பிரச்சனை என்பது மனிதனிடமிருந்து பிறிக்க முடியாத ஒரு அங்கமாகவே அது இடம் பெற்றுவிட்டது.ஆக பிரச்சனையில்லாத வாழ்வு அல்லது இடம் அல்லது மனம் வேண்டும் என்று இந்த உலகில் நீங்கள் விரும்பினால் நிச்சயம் நீங்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் தான் அதை தேட வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

எனவே நான் இந்த கட்டுரையில் பிரச்சனையில்லாமல் எப்படி வாழ்வது என்பதைப் பற்றி ஒருபோதும் பேசப்போவதில்லை.ஏனெனில் அது சாத்தியமற்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆனால் அந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றி ஒருசில வழிமுறைகளை இங்கு குறிப்பிடுகின்றேன்.அவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தால் நீங்களும் அதனை கடைபிடியுங்கள்.

பிரச்சனையை தீர்க்கும் வழிகள்.

1.முதலில் நீங்கள் பிரச்சனை என்றால் என்ன என்று அறிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இன்று எதுவெல்லாம் பிரச்சனை என்று பார்ப்பதிலேயே இங்கு பலருக்கு பிரச்சனையாக இருக்கின்றது என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே பிரச்சனை என்றால் என்ன என்பதை முதலில் இங்கு நான் விளக்கிவிடுகின்றேன்."ஒரு செயலால் நமக்கோ அல்லது நம்மை சுற்றியிருப்பவர்களுக்கோ அல்லது ஏதேனும் ஒரு பொருளுக்கோ மீட்ட முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்துவதையே பிரச்சனையாக நான் கருதுகின்றேன்."இதுவே பிரச்சனைக்கான சரியான பொருளாக இருக்கும் என்றும் நான் நம்புகின்றேன்.இன்னும் இங்கு "மீட்ட முடியாத பெரும் சேதத்தையே" பிரச்சனைக்கான பெரும் காரணமாகவும் நான் கருதுகின்றேன்.

இன்றைக்கு சிறிய விஷயத்திற்காகவெல்லாம் ஊரை இரண்டாக்கும் மனிதர்களுக்கு இதனை மிக அழுத்தமாக சொல்லவும் நான் விரும்புகின்றேன். உண்மையில் அத்தகைய பக்குவமற்ற மனிதர்களிடம் நாம் மாட்டிக்கொள்வது மிகப்பெரும் சாபம் என்றே நான் கருதுகின்றேன்.ஆக இங்கு நான் வலியுறுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் முதலில் பிரச்சனை என்றால் அது உங்களுக்கு பெரிய அளவில் மீட்ட முடியாத அளவிற்கு பாதிப்பை தருவதாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். ஏனென்றால் வாழ்வில் எந்த மாற்றங்களையும் தந்துவிடாத ஒரு காரியத்தை தன்னுடைய பிரச்சனையாக பார்ப்பவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

எனவே உங்கள் வாழ்வில் எதையெல்லாம் உங்கள் மன நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையாக இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அது உண்மையில் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை பாதிப்பதுதானா?என்று ஒரு கனம் சீர்தூக்கிப்பாருங்கள்.இல்லை என்ற பதில் கிடைத்தால் முதலில் அவற்றை உங்கள் மனதிலிருந்து பிடிங்கி எறியுங்கள்.இதுவே உங்களின் மனம் சார்ந்த அந்த பிரச்சனைக்கு முதல் தீர்வாகும்.அடுத்தபடியாக உண்மையிலேயே உங்கள் வாழ்வில் ஒரு விஷயம் பிரச்சனையாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதாவது உண்மையிலேயே அது உங்களுக்கு மனதளவிலோ அல்லது பொருளலவிலோ அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பை தந்தால் அப்பொழுது அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளை உங்களுக்கு இங்கு நான் பதிவுசெய்கின்றேன். அவற்றில் எது உங்களுக்கு சரியாகப்படுகின்றதோ அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

1. அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்களுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை ஒப்பீடு செய்துபாருங்கள்.அது உங்களுக்கு மிக அவசியமானதாகவோ அல்லது அது இல்லாமல் நீங்கள் பெரும் துன்பத்திற்குள் ஆளாவீர்கள் என்றோ நீங்கள் எண்ணினால் அந்த பிரச்சனையை உங்கள் ஆழ்மனதால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.அவற்றை சிறிது காலம் சகித்துக் கொண்டு கடந்துசெல்ல முடிவுசெய்யுங்கல்.உண்மையில் இதையும் ஒரு உண்ணதமான செயலாகவே நான் காண்கின்றேன்.

இத்தகைய சகிப்புத்தனமையைத்தான் அனைத்து மதங்களும் அதன் தலைவர்களும் உயர்ந்த செயலாக போதித்திருப்பதாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் இத்தகைய பொறுமையையே நம்முடைய நெருங்கிய உறவினர்களான தாய் தந்தையரிடமும் மனைவி மக்களிடமும் காட்டவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன்.நான் மேலே பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது என்று கூறியதை தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது என்றும் நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.எனவே இதனை ஒரு பொது விதியாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் கூறும் இந்த சகிப்புத்தன்மை நிச்சயமாக உங்களுக்கு பாரமாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.

நமக்கு ஏதோ ஒரு நிலையில் சில துன்பங்கள் தந்துவிட்டார்கள் என்பதற்காக ஒவ்வொருவரையும் நாம் தூக்கிஎறிந்துவிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஒரு கட்டத்தில் நம்மை நாமே நாம் வெறுக்க ஆரம்பித்துவிடுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆக உண்மையிலேயே உங்களுக்கு சில கஷ்டங்களை தரும் பிரச்சனை இருக்கின்றது என்றால் அது தூக்கி வீசிவிட தகுதியானதுதானா என்பதில் ஒன்றுக்கு நூறு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.அதனை சீர்செய்துவிட முடியும் என்றோ அல்லது அது உங்கள் வாழ்வையே இழக்கும் அளவிற்கான பிரச்சணையல்ல என்றோ எண்ணினால் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தொடருங்கள்.

அதற்காக வேண்டுமென்றே உங்களை எப்பொழுதும் மிக மோசமாக நடத்தப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று இங்கு நான் ஒருபோதும் கூறமாட்டேன்.ஆனால் இந்த உலகில் மிகச்சரியானது என்ற ஒன்று இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் என்பதை மட்டுமே இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.ஆக உங்கள் உண்மையான பிரச்சனைக்கு அதனை கொடுப்பவர்களை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்வதும் ஒரு சிறந்த தீர்வாகவே நான் காண்கின்றேன்.ஆனால் அதனை கட்டாயம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதில் எனக்கு எந்த உடன்பாடுகளும் கிடையாது என்பதையும் இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.

2. உங்களுக்கு அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்கள் உயிரிற்கோ அல்லது உடலுக்கோ அல்லது உங்களின் முக்கிய உடமைக்கோ பெரும் பிரச்சனையாக மாறிவிடும் என்று நினைத்தால்,அல்லது அதனை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது என்று எண்ணிணால் அதனை விட்டும் முடிந்தளவு தூரமாகிவிடுங்கள்.அல்லது அதனை தூரமாக்கிவிடுங்கள்.இவைகளுக்கு முடிந்தளவு சட்ட ரீதியிலான தீர்வுகளை காணவேமுற்படுங்கள்.ஆக இவற்றையே பெரும் பிரச்சனைகளுக்கான தீர்வாக நான் கருதுகின்றேன். அடுத்தபடியாக இந்த பெரும் பிரச்சனைகளை பெரும்பாலும் தவிர்த்துகொள்வதற்கு ஒரு சில வழிமுறைகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தளவு அவற்றையும் கடைபிடித்து வாருங்கள்.அவை பெரும்பாலும் உங்களை பிரச்சனையை விட்டும் காப்பாற்றலாம்.

  • உங்களுக்கும் உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் மிக நேர்மையாக இருங்கள்.
  • உங்கள் பொருளிலிருந்து அவ்வப்பொழுது தர்மம் செய்து வாருங்கள்.
  • அனைவருடனும் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
  • சமூகத்திற்கு பெரிய அளவில் தொல்லை தருபவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.
  • உங்கள் உடல் வலிமையையும் ,மனவலிமையும் வளர்ப்பதை கடைபிடியுங்கள்.
  • யாரைப் பார்த்தும் பயப்படாதீர்கள்.
இவ்வாறு நடந்து கொள்வதால் பிரச்சனைகள் வராது என்று சொல்ல முடியாது என்றாலும் நாம் பிரச்சனையை விட்டும் இலகுவாக வெளியில் வந்துவிடலாம் என்பதற்காகவே இதனை இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.இறுதியாக உறவுகளில் முறிவு ஏற்படும் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதையும் பார்த்துவிடுவோம்.

உறவு முறிவுக்கு தீர்வு உண்டா?

இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமே இருக்கின்றது.அதாவது இது அவரவரின் மனம் சார்ந்தது என்பதாலும் சம்மந்தப்பட்ட இருவர் மட்டுமே இதனை தீர்க்க முடியும் என்பதாலும் ஏனையோர்கள் இதில் தலையிடாமல் இருப்பதே இதற்கான அற்புத தீர்வாக அமையும் என்றே நான் கருதுகின்றேன்.
மேலும் உறவில் ஒருவருக்கு ஒருவரை பிடிக்கவில்லையானால் ஏன் பிடிக்கவில்லை?என்றோ அல்லது எதற்கு பிடிக்கவில்லை? என்றோ கூட கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதாகவே நான் கருதுகின்றேன். எனவே உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது அவரவரின் சுதந்திரமான உறவுமுறையை ஏற்றுக்கொள்வது மட்டுமேயாகும்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்(Self confidence)

கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்
கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும்


தன்னம்பிக்கையே வெற்றி தரும்.

இந்த உலகில் பிறந்து விட்ட ஒவ்வொரு மனிதனிடமும் காணப்பட வேண்டிய மிகச்சிறந்த ஆற்றல் தன்னம்பிக்கை.அதாவது ஒரு விஷயத்தை தன்னாலும் செய்யமுடியும் என்று நம்புவது என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் அல்லது தன்மீது எச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.இந்த உலகில் சிலர் மட்டும் தங்கள் வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று என்னிடம் கேட்கப்படும் சமயங்களிலெல்லாம் நான் கூறும் ஒற்றை பதில் தன்னம்பிக்கையால்தான் என்பதே..!

ஏனெனில் எந்த மனிதன் தன்மீது நம்பிக்கை வைத்துவிடுவானோ அவன் ஆயிரம்முறை தோற்றாலும் நிச்சயமாக அவன் அவன்மீது வைத்த அந்த நம்பிக்கை அவனை ஒரு காலமும் வீணடித்துவிடாது என்பதே எனது ஆழமான நம்பிக்கையாகும்.மேலும் என்றேனும் ஒரு நாள் அவன் ஜெயித்தே தீருவான் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கின்றது என்பதையும் நான் நிதர்சனமாக கருதுகின்றேன்.

அவ்வாறே எந்த மனிதன் தன் மீதே சந்தேகம்கொள்வானோ அவன் எத்தகைய உச்சியில் இருந்தாலும் என்றேனும் ஒரு நாள் மிகப்பெரும் இழப்பை சந்திப்பான் என்பதையும் நிதர்சனமான உண்மையாகவே நான் காண்கின்றேன்.ஆம் அன்பர்களே..!நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை கவனித்தே நாம் வெற்றியாளராவதும் தோல்வியாளராவதும் முடிவு செய்யப்படுகின்றது என்பதை தயவுகூர்ந்து என்றாவது ஒருநாள் புரிந்துகொண்டுவிடுங்கள்.

அப்படி ஒருவேளை உங்களால் உங்களை நம்பவேமுடியவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு வழிமுறையை இங்கு நான் குறிப்பிடுகின்றேன் அதனை கட்டாயம் கடைபிடித்து வாருங்கள்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வழி

1.சற்று தனிமையில் அமர்ந்து உங்கள் மனதோடு பேசுங்கள்.அது ஏன் உங்களை நம்பமறுக்கின்றது என்பதை பொறுமையாக அதனிடம் கேழுங்கள்.நீங்கள் சாதிப்பதற்கு உங்களிடம் திறமையில்லை என்று அது கூறுகின்றதா?அல்லது உங்களுக்கு அதற்கான சக்தியில்லை என்கிறதா?அல்லது அதையெல்லாம் நீங்கள் ஆசிக்கவேகூடாது என்கிறதா?என்ற மூன்று கேள்விகளையும் அவற்றைப்பார்த்து கேளுங்கள்.

முதல் இரண்டு கேள்விகளுக்கும் அவை ஆம் என்றால் உங்களை நீங்கள் செதுக்கிக்கொள்ள தயாராகுங்கள்.ஏனென்றால் திறமையும்,ஆற்றலுமில்லாத தன்னம்பிக்கை வெறும் ஆணவமாகவே பார்க்கப்படும்.அது நம்மிடம் நலவுகளை தருவதைவிட பெரும் தீங்குகளையும் இழுத்துவந்துவிடும்.எனவே திறனை வளர்த்துக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள்.இந்த உலகில் எந்த மனிதனும் தனித்திறனோடே பிறக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இங்கு கற்றலாலும்,பயிற்சியாலும் நம்மை செதுக்கிவிடலாம் என்பதை மலையளவு நம்புங்கள்.பணிவன்புடன் கற்கத்தொடருங்கள்,போராட்டம்தான் உங்களை செம்மைபடுத்தும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

இப்படி உங்கள் திறமையை நீங்கள் வளர்த்துவிட்டால் உங்களை ஆசைபடாதே என்று சொல்வதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள்.குறிப்பாக உங்கள் குரங்கு மனதையும்தான்.உங்களை அது குறைத்து மதிப்பிட தொடங்கும் பொழுதெல்லாம் அதனை தலையில் தட்டி அமரவையுங்கள்.அவ்வாறே உங்கள் திறனையும்,ஆற்றலையும் உங்களுக்கு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டவேண்டும் என்று ஆசிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவர்களை உங்களைவிட்டும் சற்று தூரமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.அவர்களின் கருத்துக்களுக்கோ கண்ணோட்டத்திற்கோ ஒருபொழுதும் முக்கியத்துவம் வழங்காதீர்கள்.

ஏனெனில் இந்த உலகையே நீங்கள் அவர்கள் கையில் கொடுத்தாலும் உங்களை அவர்கள் குறைத்து பேசுவதை விடமாட்டார்கள்.அது ஒரு விதமான மனநோய் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு உங்கள் சக்தியையும் திறனையும் உங்களை உயர்த்தும் செயலில் செலுத்திக்கொண்டே இருப்பதுதான் சாலச்சிறந்ததாகும்.

இறுதியாக ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படாதீர்கள்.தெரியாததை தெரியாது என்று தைரியமாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.ஒருவேளை அது உங்கள் வாழ்விற்கு மிக அவசியமானதாக இருந்தால் அதனை கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.அண்பர்களே..!இந்த உலகில் எல்லாம் தெரிந்த மனிதனும் கிடையாது எதுவும் தெரியாத மனிதனும் கிடையாது என்ற பொது விதியை புரிந்து கொண்டு கற்றலை தொடருங்கள்.கற்றலை விட உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் ஒரு ஆற்றல் மிகுந்த செயல் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே கற்றுக்கொள்ளுங்கள்..!

தன்னம்பிக்கை வையுங்கள்..!ஆற்றல் பெறுங்கள்..!வெற்றியடையுங்கள்..!

நன்றி:

சனி, 28 ஆகஸ்ட், 2021

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்(Elon musk)

ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்
ஒரு விண்வெளி ஆய்வாளர் கட்டாயம் படிக்க வேண்டிய 15 புத்தகங்கள்

முன்னுரை:

இன்றைக்கு நம் குழந்தைகளில் பலருக்கும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியளராக வேண்டும் என்ற கனவு அதிகம் இருப்பதை என்னால் அதிகம் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.ஆனால் அதற்கான அறிவை எப்படி தேடுவது என்பதில் மிகப்பெரும் குழப்பமும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் இருப்பது அதைக்காட்டிலும் பேருண்மையாக இருக்கின்றது.எனவே ஆராய்ச்சி தளத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எத்தகைய புத்தகங்களை ஆராய்ச்சிக்காக மக்களுக்கு பரிசிலிக்கின்றார் என்று நான் தேடிப்பார்த்ததில் இன்றைய வாலிபர்களுக்கு மிகப்பெரும் கதாநாயகனாக திகழும் எலான் மாஸ்க் அவர்கள் அது சம்மந்தமான அற்புத வழிகாட்டுதலை கொடுத்திருப்பதை என்னால் பெற முடிந்தது.

அவர் ஒரு விண்வெளி ஆய்வாளர் கண்டிப்பாக இந்த 15 புத்தகங்களையும் படித்தே ஆகவேண்டும் என்று அவைகளின் பெயர்களையும் தன்னுடைய சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்ட அந்த பதினைந்து புத்தகங்களையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன். நீங்களும் விண் வெளித்துறையில் சாதிக்கத்துடிப்பவராக இருந்தால் நிச்சயமாக இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

15 புத்தகங்கள்:

1.Book Name: The Hitchhiker's guide to the galaxy.

Author name: Douglas Adams.

இது பால்வெளி அண்டத்தைப்பற்றி மிக விரிவாக பெசும் நல்ல புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

2.Book Name: "Structure " or why things don't fall down.?

Author Name: J.E. Gardon 

இது வடிவமைப்பு சம்மந்தமான பல்வேறு விஷயங்களை தெளிவாக விளக்கக் கூடிய புத்தகம் என்றும் இன்னும் இது ராக்கேட் வடிவியல் சார்ந்த பொறியியளாலர்களுக்கு மிக சிறப்பான புத்தகம் என்றும் எலான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

3.Book Name: "Super Intelligence"

Author Name: Nick Bostrom

இது இந்த உலகில் இயந்திரத்துவத்தின் சாதக பாதகங்களையும் சுற்றுச்சூழலின் அதீத பங்கைப்பற்றியும் விரிவாக பேசும் அற்புதமான புத்தகம் என்பதாக எல்லான் மாஸ்க் குறிப்பிடுகின்றார்.

4.Book Name: "Our final Intention"

Author Name: James Barret.

இது இயந்திர வாழ்வையும்,மனித வாழ்வையும் ஒப்பிட்டுக்காட்டும் சிறந்த புத்தகம் என்கிறார். அதாவது இயந்திரத்தில் மனித நேயங்களை தேட முடியாது என்பதை பல்வேறு இயந்திர செயல்பாட்டையும் மனித செயல்பாட்டையும் பிறித்துக்காட்டும் ஒரு நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார். 

5.Book Name: "Ignition. An informal history of liquid rocket Propellents"

Author Name: John D. Clark"

இது ராக்கெட்டின் வரலாறுகள் குறித்த ஒரு அற்புதமான தொகுப்பாக இருக்கின்றது என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.

6.Book Name: The Foundation Trilogy.

Author Name: Isaac Asimov

இது பூமியை தவிர்த்து வேறு கிரகங்களைப் பற்றி மிக சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் பேசும் நல்ல புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

7.Book Name :"Life 3.O being human in the age of artificial intelligence "

Author Name : By Max Tegmark.

வாழ்வின் பல செயல்களுக்கு இது தான் பொருள் என்று கூறும் மிகச் சிறந்த புத்தகம் என்கிறார் எல்லான் .

8.Book Name : The moon is a harsh Misterss"

Author Name: Robert Heinlein .

நிலவு சம்மந்தமான பல்வேறு இரகசியங்களைப்பற்றி பேசும் ஒரு அற்புதமான புத்தகம் என்பதாக குறிப்பிடுகின்றார்.

9.Book Name : Merchants of Doubt"

Author Name :Naomi oreskes and Erik. M. Conway

இரண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவியளாலர்கள் பொதுவாக தவறும் இடங்கள் சம்மந்தமாக எழுதிய புத்தகம் என்றும் இதை கட்டாயம் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் படிக்க வேண்டும் என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

10.Book Name :" Einstein his life and universe"

Author Name: Walter Isaacson

ஒரு ஆராய்ச்சியாளர் தன் ஆய்வை ஐன்ஸ்டீனிலிருந்தே தொடங்க வேண்டும் என்று எல்லான் குறிப்பிடுகின்றார்.மேலும் ஐன்ஸ்டீனீன் கண்டுபிடிப்புகள்தான் இந்த உலகிற்கு பல நலவுகளை கொண்டு வர காரணமாக இருந்தது என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

11.Book Name: "Howard hughes his life and madness"

Author Name: Donald L. Barlett and James B.Steele

ஹாவேர்ட் ஹியூஜஸ் என்பவர் வாழ்வியலுக்கு மிக முன் உதாரணமானவர் என்பதாக எல்லான் குறிப்பிடுகின்றார்.ஏனெனில் அவர் தன் வாழ்வில் எல்லாம் இருந்தும் மிக எளிமையாகவே செயல்பட்டார் என்றும்,மேலும் ஆராய்ச்சி துறையில் மிகப்பெரும் ஆளுமை என்றும் எல்லான் குறிப்பிடுகின்றார்.

12.Book Name: "The culture series"

Author  Name: Iain M.Banks

இந்த புத்தகம் தன்னை மிகவும் கவர்ந்த புத்தகம் என்றும் இதில் உலகின் பல கலாச்சார முறைகள் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டிருப்பதாகவும் எல்லான்  கூறுகின்றார்.

13.Book Name :"Zero to one "Notes on startups, or how to build the future "

Author Name: Peter Thiel

இது எல்லான் மாஸ்கும் அவருடைய நண்பரும் முதல் முதலில் ஆரம்பித்த பேபால் என்ற மென்பொருளின் வெற்றியை பற்றிய புத்தகமாகும்.இதை உறுவாக்கும் பொழுது எல்லான் மாஸ்க்கிடம் எந்த பணமும் இல்லை என்பதை கருத்தாக மையப்படுத்தியே இதற்கு 0 விலிருந்து 1 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

14.Book Name: "The lord of the rings"

Author Name : J.R.R. Tolkin.

இது அமெரிக்காவிலுள்ள பழங்கதைகளை உள்ளடக்கிய புத்தகமாகும்.இதனை எல்லான் அவ்வப்பொழுது ரசித்து வாசித்து வந்ததாகவும்.இதில் பல்வேறு சிறந்த கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

15.Book Name :"Banjamin franklin".

Author Name: Walter Isaacson.

பெஞ்சமின் அமெரிக்காவின் சட்டத்துறையின் தந்தையாக போற்றப்படும் மிகப்பெரும் அறிஞர் ஆவார்.அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் படிக்கவேண்டும் என்று எல்லான் மாஸ்க் கூறுகின்றார்.ஏனென்றால் எதுவுமே இல்லாத ஒரு மனிதராக தொடங்கி பிறகு சிறிய வியாபாரியாக இருந்து பிறகு சட்ட மாமேதையான அவரின் வரலாறு சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார் எலான் மாஸ்க்.மேலும் பெண்ஜமின்தான் தன்னுடைய முன்னோடி என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தேசியவாதமும் தனிமனித உரிமையும்(Bjp Nationalism)

 

தேசியவாதமும் தனிமனித உரிமையும்
தேசியவாதமும் தனிமனித உரிமையும்

ஒருவன் நாட்டை காக்கவேண்டும் என்றும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும்,நாட்டிற்காக பல தியாகங்கள் செய்யவேண்டும் என்பதே தேசியவாதம் என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம் என்றே நம்புகின்றேன். உண்மையில் இத்தகையத்தன்மை ஒவ்வொரு குடிமகனிடமும் காணப்பட வேண்டிய அற்புத பண்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது.ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்ற ஒரு அற்புதமான பண்பு அரசியல் செய்வதற்கான முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கமுடிகின்றது.

இதுவே நாட்டின் குடிமகனை அச்சுறுத்தும் காரணியாகவும் அவனை வேற்றுமைபடுத்திக்காட்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இது சமூகத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலையே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.மேலும் இதுவே இந்நாட்டு மக்களில் சிலரை வேண்டுமென்றே  அன்னியப்படுத்தவும்,பலிவாங்கவும் உகந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

உண்மையில் இன்றைய பாஜக அரசு தேசியவாதம் என்ற இந்த சொல்லை வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று நம்புகின்றது.அது உண்மையில் பொதுப்பார்வையில் மிகச்சரியானதாக இருந்தாலும் அது நாட்டின் பல்வேறு மக்களுக்கு மிகப்பெரும் இழப்பைத்தர காத்திருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் தேசியவாதம் என்ற பெயரில் நாடும் நாட்டின் பழமை கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை சொல்லித்திரிபவர்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதை சரியாக காண்பது மிகப்பெரும் அநீதியாகும்.

இந்திய அரசியல் சாசனம் எவ்வாறு நாட்டையும் நாட்டு உடமைகளையும் பாதுகாக்கும்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வலியுறுத்துகின்றதோ அதைவிட அதிகமாக நாட்டு மக்களுடன் சகோதரத்துவத்துடனும் தனிமனித சுதந்திரத்துடனும் செயல்பட வலியுறுத்துகின்றது.இன்றைக்கு நாட்டின் நாலாபுறங்களிலும் பாஜக என்ற குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் தன்னை தவிர்த்து ஏனையவர்களெல்லாம் நாட்டுப்பற்றற்றவர்கள் என்று காட்டிகொள்ளவே முயற்சிப்பது நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடாக நான் காண்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்பு  இசைஅமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இது சம்மந்தமாக ஒரு விஷயத்தை சமூகவலைதளத்தில் பதிந்து அது அனைவராலும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.அவர் தன்னுடைய முன்னுரிமையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.அதாவது எனக்கு முதலில் மொழிதான் அதற்கு பிறகே நாடு என்பதெல்லாம் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.உடனே அவரை தேசவிரோத சக்தி என்றளவிற்கு பலரும் விமர்சனம் செய்யத்துவங்கினர்.அவர்கள் வேறுயாருமில்லை நான் மேற்குறிப்பிட்ட அடிப்படை அரசியல் அறிவில்லாத பாஜக தொண்டர்களேயாவார்கள்.

இங்கு நான் ஒரு முக்கியமான அடிப்படையை விளக்க விரும்புகின்றேன். அதாவது நாட்டுப்பற்று என்பது எல்லோருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு பொதுவான அம்சமேயாகும்.நிச்சயமாக நாட்டில் வசிக்கும் ஒரு பிச்சைக்காரனும் கூட தான்வசிக்கும் நாட்டை நேசிக்கவே செய்வான். அவற்றில் அவனுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் தனக்கு நாட்டுபற்று இருக்கின்றது என்பதை மட்டுமே எப்பொழுதும் ஒருவன் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவனது சொந்த வாழ்வில் வேறு எதற்கும் விருப்பம் இருக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துவது மிகப்பெரும் சர்வாதிகார போக்கு என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே அண்பர்களே..!நாட்டு பற்றையும் அரசியல் ஆதாயம் தேடும் தேசிய வாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரையை எளிய வடிவில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் விதமாக வட்டுறுக்கமாக நான் எழுதியிருக்கின்றேன்.

இதனை நான் மதம் சார்ந்தோ அல்லது ஒரு கட்சி சார்ந்தோ தனிப்பட்ட வெறுப்பினால் பேசுவதாக நீங்கள் நீனைத்தால் தாராலமாக நினைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் என்னுடைய இந்த கட்டுரைக்கான நோக்கம் என் மக்கள் இது போன்ற ஏமாற்றுபேர்விளிகளிடம் சிக்கி (போலி) தேசியவாதம் என்ற பெயரில் தன் சொந்த மக்களையே எதிரியாக்கிவிடக்கூடாது என்ற தூய நோக்கத்திற்கானது மட்டுமே என்பதை தூய மனதுடன் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

நன்றி: