வியாழன், 9 செப்டம்பர், 2021

இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்

இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்
இந்த உலகம் இழந்த மகத்தான உண்மைகள்
  •  பெரும் பெரும் வீடுகள் உள்ளன ஆனால் சுற்றத்தார்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
  •  அதிகப்படியான கல்வி எல்லோருக்கும் கிடைத்துவிட்டது ஆனால் அடிப்படை அறிவே இங்கு இல்லாமல் போய்விட்டது.
  • உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் உறுவாகிவிட்டது ஆனால் நோய்க்கு பலியாகுபவர்கள் இன்னும் குறைந்தபாடில்லை.
  • விண்ணை தொட்டுவிட்டனர் ஆனால் பக்கத்துவீட்டாரை இன்னும் சந்திக்கவில்லை.
  • அதிகப்படியான வருமானம் வந்துவிட்டது ஆனால் மனநிம்மதி மட்டும் இன்னும் வரவில்லை.
  • சிந்திக்கும் ஆற்றல் வானளவாக உயர்ந்துவிட்டது ஆனால் இழிவு செய்யும் எண்ணம் இன்னும் நீங்கியபாடில்லை.
  • அறிவு அதிகரித்துவிட்டது ஆனால் புரிந்துணர்வு தொலைந்தே போய்விட்டது.
  • விலையுயர்ந்த கடிகாரங்கள் கையை அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் நேரத்தை சரியாக பயன்படுத்துவது நீண்ட ஓய்வுபெற்றுவிட்டது.
  • பந்தங்கள் கூடிக்கொண்டே செல்கின்றது ஆனால் அனைத்தும் நிலைத்திருப்பதற்கு தவறிவிட்டது.
  • சமூக வலைதலங்களில் லட்சக்கணக்கான நண்பர்கள் கூட்டம் குழுமிவிட்டது ஆனால் உண்மை வாழ்வில் ஒருவர் கூட இல்லாத வெறுமை துரத்துகின்றது.
  • மனிதர்களின் எண்ணிக்கையோ உலகை நிரப்பிவிட்டது ஆனால் மனித நேயம் மட்டும் தான் காணமல் போய்விட்டது.
  • இறப்புகளும் இழப்புகளும் இரட்டிப்பாகிவிட்டது ஆனால் இறப்புகளையும் இழப்புகளையும் கூட படம் பிடித்து இன்பம் கானும் ஒரு இழி சமூகம் உறுவாகிவிட்டது.
  • இந்த உலகை மிருகங்கள் கூட பாதுகாக்கவே முற்படுகின்றது ஆனால் இந்த மனிதன்தான் அவற்றை அழித்துவிட எண்ணுகின்றான்.
  • உயிரோடு இருக்கும் காலமெல்லாம் பெற்றோர்கள் துரத்தப்படுகின்றனர். ஆனால் இறந்த பின்போ நிழல் படங்களாக வைக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றனர்.
  • உணவு உறைவிடம் மற்றும் சொந்தங்கள் எல்லாம் இருந்தும் இணைய தளம் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாததாக மாறிவிட்டது.
  • ஒரு தாய் பல குழந்தைகளையும் அக்கரையோடு பார்த்துக் கொள்கின்றாள் ஆனால் அவளை பார்த்துக்கொள்வதற்கு யாருமில்லாமல் தெருவில் விடப்பட்டுவிடுகின்றாள்.
  • உணவு சுவையாக இல்லை என்பதற்காகவே குப்பையில் கொட்டப்படுகின்றது ஆனால் பசியை போக்க ஏதாவது கிடைக்காதா என்றொரு கூட்டம் மற்றொரு புறம் அலை மோதிக்கொண்டிருக்கின்றது.
உண்மையில் இந்த உலகம் ஒரு விசித்திரமான நிலையை அடைந்திருப்பதாகவே காண முடிகின்றது.ஏனெனில் ஒரு புறம் தன் உண்மை முகத்தை மறைத்துக் கொள்ள விரும்புகின்றது ஆனால் மற்றொரு புறம் பிற மனிதர்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தபோராடுகின்றது..! 

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள்

ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள்
ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள்

ஒரு ஜென் துறவியின் அற்புத அறிவுரைகள்

1.உண்மையான ஒரு மனிதன் இந்த உலகில் வாழ்ந்துகொண்டே இவ்வுலகின் ஒரு தூசியின் மீது கூட பற்று வைக்காதவனாக இருக்க வேண்டும்.

2.அடுத்தவர்கள் நல்லது செய்தால் அதுபோல நாமும் செய்ய வேண்டும் என்று மனதுக்கு ஆணையிடுங்கள்.அடுத்தவர் தவறு செய்தால் அதனைப் போன்று நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று உங்கள் மனதிற்கு அறிவுரை கூறுங்கள்.

3.ஒரு இருட்டரையில் இருந்தாலும் உங்கள் முன் உங்களுக்கு பிடித்த ஒரு விருந்தாளி இருப்பதுபோலவே உணருங்கள்.உங்கள் உண்மையான தன்மை தவிர வேறு எந்த உணர்ச்சியையும் அதிகப்படுத்திக்காட்டாதீர்கள்.

4.ஏழ்மை உங்கள் சொத்து.அதை சொகுசு வாழ்க்கைக்கு எப்பொழுதும் பரிவர்த்தனை செய்துவிடாதீர்கள்.

5.முட்டாளாகத் தோன்றும் ஒருவன் முட்டாளில்லாமல் இருக்கலாம்.தனது ஞானத்தை தனக்குள் கவனமாக பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.

6.ஞானம் என்பது சுய கட்டுப்பாட்டினால் தானாக வருவது.அது ஏதோ வானத்தில் இருந்து உங்கள் கைகளில் விழுவதல்ல.

7.பண்பே ஞானம் அடைவதின் முதல் படி.உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு முன் அவர்களே உங்களைப்பற்றி அறிந்து கொள்ளட்டும்.

8.ஒரு மேலான இதயம் எப்பொழுதும் தன்னை முன்நிறுத்துவதில்லை.அது அதிகம் வார்த்தைகளற்று அமைதியாக காணப்படும்.நவரத்தினங்களை காட்டிலும் அது விலைமதிப்பற்றதாக இருக்கும்.

9.ஒரு சிறந்த மனிதனுக்கு எல்லா நாட்களும் அதிஷ்ட நாட்களே.காலத்தை அவன் கடந்துசெல்லவிடுவதில்லை.அதனுடனேயே அவன் நடக்கின்றான்.புகழோ இழிவோ அவனை அசைக்க முடிவதில்லை.

10.திருத்து உன்னை மட்டும்.அடுத்தவர்களை அல்ல.சரியையும் தவறையும் எக்காலத்திலும் விவாதிக்காதே.

11.சில சரியான விஷயங்கள் பல காலங்களாக தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.நூறு ஆண்டுகளுக்கு பின்னர் கூட ஒரு விஷயம் சரியானது என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.எனவே தற்காலிகமாக நீ எதனையும் தூக்கி நிறுத்த அவசியமில்லை.

12.காரணத்தோடு வாழ்.பலன்களைப்பற்றி கவலைப்படாதே.அதை இந்த பேரண்டம் கவனித்துக்கொள்ளும்.ஆகவே ஒவ்வொரு நாளையும் சமாதானமான முறையில் வழிநடத்து.

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்
நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நீங்கள் அடையவிரும்பும் லட்சியத்தை எப்படி அடைவது என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது ஒரே நாளில் ஏன் நம்மால் அதனை அடைய முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றீர்களா..?உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான இலகுவான ஒரு வழியை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தாள் கடைபிடியுங்கள் நிச்சயமாக உங்கள் லட்சியத்தை அடைந்துவிடலாம்.

நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.எவ்வளவு தூரம் நடந்தீர்கள் என்றோ அல்லது உங்கள் தூரத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்றோ யோசிக்கவே செய்யாதீர்கள்.உங்கள் கால்கள் வலிதரும் அளவிற்கு நடந்து கொண்டே இருங்கள்.பிறகு மறுநாளும் அதனைப்போன்றே செய்யுங்கள்.இப்படி உங்கள் லட்சியப்பாதையில் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ நடந்து கொண்டே இருங்கள்.எக்காரணத்திற்கும் நேற்றைய நிலையிலேயே இன்றைக்கும் அமர்ந்துவிடாதீர்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள் உங்கள் லட்சியப்பயணம் எங்கு சென்று முடிய வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை அறியாமலேயே உங்களை அது கொண்டு சேர்த்துவிடும்.

இந்த வழிமுறையானது யார் தன் லட்சியப்பயணத்தை தொடங்கிய பின்பு அது எப்பொழுது முடியும் என்றோ அல்லது தனக்கு ஏன் இன்னும் அந்த லட்சியம் கிட்டவில்லை என்றோ தன்னைத்தானே சந்தேகிப்பார்களோ அவர்களுக்கு மிகச்சிறந்த வழிமுறையாகும்.இதை இங்கு ஏன் குறிப்பிட்டுக் காட்டுகின்றேன் என்றால் நம்மில் பலரும் ஒரு காரியத்தை மிக வீரியமாக ஆரம்பித்து விடுகின்றோம்.ஆனால் அதிலிருந்து உடனே பலன் கிடைக்கவில்லை என்பதால் ஒருசில தினங்களிலேயே அதனை அப்படியே விட்டொழித்து விடுகின்றோம்.அல்லது ஒரே சமயத்தில் அதனை முயற்சித்துவிட்டு பிறகு அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம்.

அதனை போக்குவதற்கு நான் மேலே குறிப்பிட்டுக்காட்டிய அந்த வழியே மிக உதவியாக இருக்கும்.ஏனென்றால் யார் ஒன்றை அடைய வேண்டுமென்று ஆரம்பம் செய்து அதில் நிலைத்திருக்கவும் செய்துவிடுகின்றாரோ அவர் என்றாவது ஒருநாள் அதனை அடைந்துவிடுவதே இயற்கையின் அமைப்பாக இருக்கின்றது.அதில் அவர் தன் பயணத்தை எவ்வளவு குறைவாக அமைத்திருந்தாலும் அதனை விடாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததின் விளைவாக  ஒருநாள் அதனை அவர் மிக இலகுவாக அடைந்துவிட அதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.

எனவே நீங்களும் உங்கள் லட்சியத்தை இலகுவாக அடையவேண்டும் என்று விரும்பினால் அதனை உங்கள் வாழ்வில் அன்றாடம் நிலையாக செய்யும் காரியமாக மாற்றிக்கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் அந்த காரியம் குறைவாக இருந்தாலும் சரியே.அதனை தொடர்ந்து செய்து வருவதில் நிலைத்திருங்கள்.நிச்சயம் ஒருநாள் அது பெரும் வெற்றியாக உங்களை வந்தடைய உங்களின் அந்த சிறிய நகர்வே காரணமாக அமைந்துவிடும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.
பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

முன்னுரை:

உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப்பற்றிப்பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன். மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும்,மனரீதியிலும்,பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில்தான் இன்றுவரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.

அவளை மீண்டும் மீட்டு எடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதலபாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணரமுடிகின்றது.இத்தகைய பெண் அடிமைத்தனம் சம்மந்தமாக"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற எனது சிறிய புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கின்றேன். அவற்றின் ஒரு சிறிய பகுதியயை மட்டும் இந்த கட்டுரையில் பதிவுசெய்கின்றேன்.இந்த கட்டுரையில் பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும் எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.

இதனை படிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை உங்களுக்கு அற்பணம் செய்கின்றேன்.நீங்களும் ஒரு இனத்திற்கு எதுரான இந்த சமூகத்தின் மிகக்கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக்கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

பெண் அடிமைத்தனம்:

1.வெளியில் செல்லும் பெண்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பது.

வேலைக்காகவோ அல்லது தனது தேவைக்காகவோ அல்லது இந்த உலகை ரசிக்கவேண்டும் என்ற தனிப்பட்ட ஆசைக்காகவோ வெளியில் செல்லும் பெண்களின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் கண்ணோட்டம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த சமூகத்தில் புரையோடிப்போய்தான்  கிடகின்றது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.என்னதான் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து வேலை செய்யத்துவங்கிவிட்டனர் என்று போலியாக சமூகத்திற்கு முன்பு மார்தட்டிக்கொண்டாலும் இந்த சமூகம் அவர்களை புறக்கணிப்பதையே வரவேற்கின்றது என்பதையே நிதர்சனமான உண்மையாக நான் காண்கின்றேன்.

உண்மையில் இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட ஒரு பெண் எங்காவது யாராவது ஒருவரால் அவளுடைய நடத்தையாள் சந்தேகிக்கப்படுகின்றாள் என்பதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?ஒருபோதும் முடியாது..!ஏனென்றால் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால் அவள் சந்தேகத்திற்குறியவள் என்று இந்த சமூகம் ஒரு அவளம்நிறைந்த பார்வையை கட்டமைத்து வைத்திருக்கின்றது.மேலும் வீட்டின் உள்ளே இருந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பணிவிடை செய்வதுதான் ஒரு பெண்ணிற்கான சிறந்த இலக்கணம் என்பதாகவும் அது வெளிப்படையாகவே வலியுறுத்திக்கொண்டுமிருக்கின்றது.

அதற்கு தோதுவாக முந்தைய வழிகாட்டிகளான மூதாதையர்களும் வீட்டிற்கு சேவகம் செய்வதையே பெண்களின் மகத்தான பணியாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபத்தான சமூக கட்டமைப்பைவிட்டும் ஒரு சுதந்திரமான சிந்தனையுள்ள பெண் வெளியில் வர யோசித்துப்பார்க்கவே முடியாமல் போய்விடுகின்றாள்.இப்படி ஒரு பெண் தன் வாழ்விலும் ஜெயிக்க வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அளவிற்கு அவளை இந்த சமூகம் வீட்டு சூழலுக்குள் வைத்து பணிவிடை செய்வதற்கு மட்டும் நிற்பந்திக்கும் அந்த நிலையைத்தான் இங்கு நான் பெண் அடிமைத்தனத்தின் உச்சமாக கருதுகின்றேன்.

அச்சம்,நாணம் ,என்பதே பெண்களிடம் காணப்பட வேண்டிய சிறந்த பண்புகள் என்பதாகக்கூறி அவளை நான்கு சுவற்றிற்குள் அடைக்க நினைப்பதையே இந்த சமூகம் அவளுக்குச் செய்யும் மாபெரும் அநீதியாகவும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஆக ஒரு சிறந்த பெண் என்பவள் தன் வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பால், வெளியில் செல்லவேமாட்டால் என்ற அடக்குமுறை நிறைந்த சமூக கட்டமைப்பை சித்தரித்ததில் இந்த சமூகத்திற்கே பெரும்பங்கு இருப்பதாக இங்கு மிக ஆணித்தரமாக பதிவுசெய்துகொள்கின்றேன்.

அடுத்தபடியாக ஒருபெண் சந்திக்கும் மிகப்பெரும் அநீதி மற்றும் அடிமைத்தனம் அவளின் துணையை தேர்ந்தெடுப்பதில்தான் எனபதாகவே நான் காண்கின்றேன்.வாருங்கள் அதுகுறித்த சில விவரங்களையும் இங்கே பார்த்துவிடுவோம்.

2.துணையை தேர்ந்தெடுப்பதில் உரிமையை பறிப்பது.

ஒரு பெண் தான்உறவாடுவதற்கு தகுதியான நபரை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் கூட கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.ஆம்.! தங்கள் வீட்டுப்பெண் அல்லது தங்கள் குடும்பத்துப்பெண் தாங்கள் விரும்பிய நபர்களை தவிர்த்து வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே கூடாது என்ற ஆதிக்க உணர்வு உண்மையில் இன்றும் பெரும்பாலானோரிடம் புரையோடிப்போய் கிடப்பதாகவே நான் காண்கின்றேன்.

அவளுடைய கற்பும்,குலமும் கோத்திரமும் மதிக்கப்பட வேண்டியதுதான் என்றாலும் அதனை விரும்புவதற்கும்,விரும்பாமல் போவதற்கும் அவளுக்கு முழு உரிமையுள்ளது என்பதை ஏற்கமுடியாத இந்த சமூக கட்டமைப்பையே பெண் அடிமைத்தனத்திற்கு உதவும் ஆபத்தான சமூக கட்டமைப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன்.உண்மையில் ஒரு பெண் தான்விரும்பிய நபருடன் பழகக்கூடாது என்று நிர்பந்திப்பதைவிட மிக கொடிய பெண்அடிமைத்தனம் வேறு எதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆனால் அது விஷயத்தில் ஒரு பெண்ணின் உரிமையை பரிப்பதிலேயே இன்றைய சமூகம் மிக வலுவான சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இந்த மனித இனத்திற்கான சாபமாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பர்களாக இருக்கட்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் தன் வீட்டார்களின் ஆசைக்கினங்கவோ அல்லது தான் சார்ந்த சமூகத்தின் ஆசைக்கினங்கவோதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிலையை உறுவாக்கியதில் இந்த அவளம் நிறைந்த சமூகத்திற்கே பெரும் பங்கு இருப்பதாக நான் காண்கின்றேன்.

தொடர்ந்து வாசிக்க அமேசானில் இடம்பெற்றிருக்கும் எனது"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற புத்தகத்தை பெற்று பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி: