வெள்ளி, 17 செப்டம்பர், 2021

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்?(Who is the Periyar E.V.Ramasamy?)

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்
யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்


தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு மகத்தான "கதாநாயகன்"தான் பெரியார் என்ற போற்றுதலுக்குறிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்கள் என்பதாகவே நான் காண்கின்றேன்.ஏனெனில் அவருடைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தையும் நான் உற்றுநோக்கிய சமயம் இந்த தமிழ் சமூகத்தை உயர்த்தி நிறுத்துவதிலேயே அவர் தன் வாழ்வு முழுவதையும் அற்பனித்து இருப்பதை என்னால் காண முடிந்தது.

இன்றைய நிகழ் உலகின் கதாநாயகர்கள் அனைவரும் மக்களுக்கு பண உதவி செய்தோ அல்லது ஏதேனும் பொருள் உதவி செய்தோ தன்னை கதா நாயகர்களாக நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.ஆனால் பெரியாரை என்னால் அப்படி காணமுடியவில்லை.மாறாக அவர் ஒரு சமூகத்திற்கான வாழ்வியல் விடியளுக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்திருப்பதை காணும்பொழுது எவ்வாறு நான் அவரை உண்மை கதாநாயகன் என்று கூறாமல் ஒரு எழுத்தாளனாக கடந்துவிட முடியும்.?

எனவேதான் பெரியாரின் வாழ்வியல் குறித்த அறிமுகமான என்னுடைய புத்தகத்திற்கு பெயரே "தமிழர்களின் கதாநாயகன் பெரியார்" என்று பெயரிட்டுள்ளேன்.உண்மையில் அவர் இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மிகப்பெரும் வில்லனாக திகழ்ந்தார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அடித்து, அடக்கி ஆழவும்,சுரண்டிப் பிழைக்கவும் நினைத்தவர்களுக்கே வில்லனாக இருந்தார் என்பதை கவனிக்கும் சமயம் அங்கும் அவர் உண்மை கதாநாயகன் என்ற பெருமையையே சேர்த்துக்கொண்டுவிட்டார் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

பெரியாருக்கான அறிமுக உரையான என்னுடைய சிறிய புத்தகத்தில் மூன்றே மூன்று பகுதிகளை மட்டுமே பதிவு செய்வது எனது நோக்கம் என்பதால் பெரியார் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் நான் தொகுக்கவில்லை என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுவிடுகின்றேன்.ஏனெனில் அந்த புத்தகத்தில் பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் உண்மை கதாநாயகனாக திகழ்ந்ததற்கான அடிப்படை காரணிகளை மட்டுமே தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.

அதாவது பெரியார் வாழ்ந்த சமயத்தில் இந்த தமிழ் சமூகம் எத்தகைய நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்பது சம்மந்தமாகவும் அதனை பெரியார் எப்படி கலைஎடுத்தார் என்பது சம்மந்தமாகவும் மேலும் தமிழர்களையும் தமிழ்மொழியையும் குறிவைத்து தாக்க நினைத்தபோது அதனை எவ்வாறு உயர்த்தி நிறுத்தினார் என்பது சம்மந்தமாகவும் மட்டுமே இந்த சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இறைவன் நாடினால் பெரியாரின் முழு வாழ்வியலையும் தனி ஒரு புத்தகமாக தொகுத்து வழங்குகின்றேன்.(அப்பணியை செய்து கொண்டும் இருக்கின்றேன்.)

பெரியார் தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கதாநாயகனாக ஆவதற்கு அன்றைய சமூக கட்டமைப்பே காரணமாக இருந்தது என்பதால் பெரியார் காலத்தில் அன்றைய சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பது சம்மந்தமாக நாம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கின்றது என்பதால் முதலில் அது சம்மந்தமாக இங்கு பார்ப்போம்.


பெரியார் காலத்தில் தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது.?

  • குறிப்பிட்ட சில மக்கள் சூத்திரர்கள் எனக்கூறி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தைவிட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
  • பார்ப்பனர்கள் என்று கூறப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மட்டும் உயர் சாதியினர் என்றும் அவர்களுக்கு சரி சமமாக ஏனைய எச்சமூகத்தை சார்ந்தவர்களும் இடம் பெறக்கூடாது என்ற சமூக அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.
  • கீழ் சாதியினராக பார்க்கப்படுவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது என்பது தான் கல்வி கொள்கையாக இருந்தது.
  • அரசு அலுவல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற சூழலே மிகைத்திருந்தது.
  • உயர் சாதியினராக பார்க்கப்படும் பார்ப்பனர்கள் புழங்கும் பொது இடங்களில் கீழ் சாதியினர் புழங்கக் கூடாது என்றும் இன்னும் அவர்களைப் போன்று செறுப்போ அல்லது தோளில் துணியோ அல்லது குடை பிடித்துக் கொண்டோ தெருவில் நடமாடக் கூடாது என்றும் வெளிப்படையாகவே தடை இருந்தது.
  • அவ்வாறே கீழ் சாதியினராக பார்க்கப்படுபவர்கள் பொது குழங்களிலோ அல்லது கிணருகளிலோ தண்ணீர் அருந்த முடியாது.
  • ஊரின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் தேனீர் கடையிலும் கீழ் சாதியினர் கொட்டங்குச்சியில் தேனீரை பெற்றே குடிக்க வேண்டும் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
  • அசிங்கமான வார்த்தைகளாலும் இழிவான பெயர்களாலும் உயர் சாதியை சார்ந்த சிரியவர்கள் அழைத்தாலும் கீழ் சாதியினர் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • உணவு விடுதிகள் ,குளிக்கும் அறைகள் மற்றும் கோவில்களுக்குள் உயர் சாதியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
  • மாட்டு வண்டிகளில் அமர்ந்து செல்லக் கூடாது,அதிலும் குறிப்பாக எதிரில் பார்ப்பனர் வந்துவிட்டால் ஓரமாக ஓடிச் சென்று கண்ணில் படாதவாறு நின்று கொள்ள வேண்டும்.
  • கீழ் சாதியினர் தங்க நகைகளை ஒரு பொழுதும் அணியக் கூடாது.
  • கீழ் சாதியினர் மண் சுவரால் ஆன ஓலை குடிசைகளில் மட்டுமே வாழ வேண்டும்.
  • கீழ் சாதியினர் உலோக பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
  • கீழ் சாதி பெண்கள் மாராப்புத் துணி அணியக்கூடாது என்றும் இன்னும் மேல் சட்டை அணியக் கூடாது என்றும் பனிக்கப்பட்டிருந்தனர்.
  • பெண்கள் என்றாலே இழி பிறவிகள் என்று பரவலாக கருதப்பட்டு வீட்டில் எடுபிடி வேலைக்கென்றே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இந்நாட்டை ஆண்ட சேரர்கள் ,மற்றும் சோழர்கள் ,மற்றும் பாண்டியர்கள், மற்றும் நவாப்கள் ஆகிய அனைவரின் ஆட்சி காலத்திலும் கொஞ்சமும் குறைவின்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தாரால் மட்டுமே அரங்கேறியதை வரலாற்றின் மூலம் அதிகாரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய மனித உரிமை மீறல்களையெல்லாம்  கலைவதற்கு பெரியார் கையாண்ட வழிமுறைகள்தான் அவரை தமிழ் மண்ணின் போற்றுதலுக்குறிய கதாநாயகனாக நிலைநிறுத்தியது என்பதாகவே நான் நம்புகின்றேன்.
எனவே அடுத்தபடியாக தமிழ் மக்களின் இந்த இழிவை துடைக்க பெரியார் எத்தகைய வழிமுறைகளை கையாண்டார் என்பதைக் குறித்து பார்ப்பதே இங்கு உசிதமாக இருக்கும் என்பதால் அவற்றைப்பற்றி பார்ப்போம்..!
பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை கலைய மூன்று முக்கிய ஆயுதங்களை மிக வீரியமாக பயன்படுத்தியதாக வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. 

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

2.எழுத்துப் பிரச்சாரம்.

3.தமிழுக்கான அரும்பணியும் அரசியல் பங்கும்.

பெரியார் இந்த மூன்று பெரும் ஆயுதங்களாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை துடைத்துவிடலாம் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணிக்க முன்வந்தார்.

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

தொடர்ந்து வாசிக்க என் புத்தகத்தை அமேசானில் பெற்று பெரியாரின் ஒப்பற்ற வாழ்வின் அந்த மூன்று அரும்பணிகளும் எவ்வாறு இருந்தது என்பதையும் அறிந்து பலனடைந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

புதன், 15 செப்டம்பர், 2021

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)
யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)


முன்னுரை

இன்று செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்றைய நன்நாளிலே அவரை இந்த தமிழக மக்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூற கடமைபட்டுள்ளனர்.ஏனெனில் இந்த தமிழ் சமூகத்தை பீடித்திருந்த அடக்குமுறைகளையும் அடிமைத்தனங்களையும் அரசியல் ரீதியாக தவிடு பொடியாக்கிக்காட்டிய ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்த மாமனிதர் அவர்.

அவருடைய வரலாற்றை சுறுக்கிக்கூறிவிட முடியாது என்பது எனக்குத் தெரிந்தும் வேறுவழியின்றி மிக வட்டுறுக்கமாக இந்த கட்டுரையில் அவரின் ஒப்பற்ற வாழ்வின் சிறு பகுதியை மட்டும் பதிவு செய்கின்றேன்.அவருடைய தமிழ் மண்ணிற்கான சேவையை தொகுத்து வந்து கொண்டிருக்கின்றேன். இறைவன் நாடினால் மிகவிரைவில் அவற்றை புத்தமாக வெளியிடுகின்றேன்.

இங்கு அறிஞர் அண்ணாவின் வாழ்வை மூன்று பகுதிகளாக பிரித்திருக்கின்றேன்.

 1.அவர் பெரியாரிடம் கற்ற சமூக அக்கரை மற்றும் விடுதலை.
 2.ஆசானுக்கே ஆசானான ஆச்சர்யமிகுந்த அவரது அரசியல்.
 3.சமூகத்திற்கு ஆற்றிய அவரது பணிகள் மற்றும் தொண்டுகள்.

1.பெரியாரிடம் கற்ற சமூக அக்கரையும் விடுதலை உணர்வும்.

அறிஞர் அண்ணாவின் வாழ்வை குறித்து பேசும் பொழுது அங்கு பெரியாரை விட்டுவிட்டு செல்லவே முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் பெரியாரோடே இரண்டற கலந்து அவரின் ஆழமான அனைத்து சமூக நீதிகளையும் மேலும் இந்த தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அங்குளம் அங்குளமாக அரிஞர் அண்ணா பாடம் படித்திருப்பதை வாரலாறு மிக வெளிப்படையாகவே எடுத்தியம்புகின்றது.

அவ்வளவு ஏன் பெரியாரின் வலது கையாகவோ அல்லது இடது கையாகவோ இல்லாமல் இரு கையாகவுமே திகழ்ந்தவர்தான் அறிஞர் அண்ணா என்று கூறினாலும் அது மிகையாகாது.உண்மையில் வரலாற்றை மிக ஆழமாக உற்றுநோக்கும் பொழுது அறிஞர் அண்ணா பெரியாரின் அலப்பரிய நம்பிக்கைக்கு முழு பாத்திரமான ஒரு செல்லப்பிள்ளை என்றும் கூட குறிப்பிடலாம்.அறிஞர் அண்ணா பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் துவங்கிய ஆரம்ப இடமே பெரியாரின் "விடுதலை" பத்திரிக்கையும் ,"குடியரசு" பத்திரிக்கையும் தான்.
ஆம்...!
அங்கிருந்து தான் அறிஞர் அண்ணாவின் நீண்ட நெடிய அரசியல் மற்றும் சமூக தொண்டுகள் போன்ற சிந்தனை ஓட்டங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பெரியாரின் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் திராவிட தத்துவார்த்தங்களையும்,கடவுளின் பெயராலும் சாதி,மதங்களின் பெயராலும் தன் இன மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குபவர்களின் உண்மை முகங்களையும் பெரியாரிடமிருந்து மிக சாதூர்யமாக அறிஞர் அண்ணா கற்றரிந்தார்.அதன் விளைவாகவே நேரடியாக சமூகத்தொன்டாட்ட அரசியலில் குதித்தார்.

2.ஆசானுக்கே ஆசானான அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல்.

அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணமும் பெரியாரிடமிருந்தே துவங்கியதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.ஆம்...!அறிஞர் அண்ணா முதல் முதலில் பெரியார் தலைமையில் காங்கிரசிற்கு எதிராக உறுவாக்கப்பட்ட நீதிக்கட்சியிலிருந்துதான் தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.தன்தமிழ் மக்களை சுரண்டிப்பிழைத்துக்கொண்டிருக்கும் காங்கிரசின் அரசியலில் முற்றிலும் நம்பிக்கை இழந்த ஆசானிற்கு மக்களுக்கான புதிய அரசால் தமிழ் சமூகத்தை காத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் முயற்சியில் அரசியல் கலமாடத் துவங்கினார்.

தன் சமூகத்தின் மீது தெலிக்கப்பட்டிருக்கும் இழிவை போக்குவதற்கு முதல் தடைக்கல்லாக இருப்பதே இந்த தரித்திரம் பிடித்த அரசியல்தான் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த பெரியார் தன் செல்லப் பிள்ளையான அண்ணாவின் நிலையும் மாறிவிடுமோ என்று அஞ்சினார்.ஆனால் அங்கு தான் அறிஞர் அண்ணா தன் ஒப்பற்ற ஆசானின் கனவுகளை காக்க வந்த பெரும் போராளி என்பதை நிறூபித்து காண்பித்து ஆசானுக்கே ஆசானாக உறுவெடுத்தார்.

அரசியலில் பயணித்துக்கொண்டே பெரியாரின் திராவிடக்கொள்கையை தன் எழுத்தாலும், நாடகங்களாலும், திரைப்படங்களாலும் எட்டுத்திக்கும் பரந்து விரியச்செய்தார்.தன் கட்சிக்கு பெயரே"திராவிட முன்னேற்ற கழகம்"என்று பெயர் சூட்டினார்.நாடாலுமன்றத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுக உரையிலேயே தன்னை திராவிடன் என்று அடையாளப் படுத்திக்கொண்டார்.இந்தியாவிலேயே காங்கிரஸிற்கு எதிராக முதல் முதலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் காண்பித்தார்.

3.அரிஞர் அண்ணாவின் அரும்பணிகள்.

  • இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நின்றார்.
  • மும்மொழிக் கொள்கையை முடக்கி இரு மொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார்.
  • இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வடவர்கள் நினைத்த போது நாடாளு மன்றத்தையே கேள்விக்கனைகளால் திக்குமுக்காடச் செய்தார்.
  • தமிழகத்தின் மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றினார்.
  • ஜமீன்தாரிகளின் நிலச்சுரண்டலையும் பிராமணத்தின் மனித உரிமை மீரல்களையும் "நல்ல தம்பி"மற்றும் "வேளைக்காரி" போன்ற திரைப்படங்களால் தோழுறித்து காண்பித்தார்.
  • ஆரிய மாயை என்ற புத்தகத்தை எழுதி ஆரியத்தின் கோர முகத்தை உலகறியச் செய்தார்.இதனால் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
  • "Home Land "என்ற ஆங்கில வார பத்திரிக்கையாலும் "திராவிடம்"என்ற தமிழ் இதழாலும் காங்கிரஸார்கள் மற்றும் பிராமணர்களின் கூடாரங்களை அசைத்துக் காண்பித்தார். 
  • இன்னும் இந்த தமிழ் மண்ணிற்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராலம் ஏராலம்...!அவைகள் அனைத்தையும் இந்த சிறிய கட்டுரையில் சுறுக்கிவிட முடியாது என்பதால் வருத்ததுடனே கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருகின்றேன்.
இறுதியில் அறிஞர் அண்ணா போயிலை உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் புற்று நோய்க்கு ஆளானார்.அது அவரின் உயிரையும் குடிக்கத் தவறவில்லை.எனவே அதே நோயால் காலமுமானார்.அவருடைய இறுதி ஊர்வலமோ இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாறாக மாறிப்போனது.
ஆம்...!
இந்த மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசித்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட 1 கோடியே 50 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கிண்ணஸ் புத்தகத்தில் இன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்த தமிழ் மக்களுக்காக போராடிய அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இன்று கிண்ணஸ் புத்தகங்களை எல்லாம் தாண்டி எக்காலமும் தமிழர்களின் நெஞ்சங்களில் கலந்துவிட்ட அன்பு அண்ணண் ஆறடி பள்ளத்தில் ஆழ்ந்த துயில் கொண்டாலும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் தமிழ் மக்களை காப்பதால் உயிர்ப்புடனே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அத்தகைய தமிழ் மண்ணின் நேசனை அவர் பிறந்த இன்று நினைவு கூறுவதில் தமிழ் மகன்களாக நம்மில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது
கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது

1939 ஆங்கிலேயே காலம் தொட்டு இந்திய குடியரசு அமைத்த பின்பும் கல்வி மாநில ஆட்சியின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.ஆனால் 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உள்நாட்டு பிரச்சனைகளால்  நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி நாடு முழுவதும் அவசர சட்டத்தை அறிவித்தார்.அச்சமயம் பல்வேறு அரசியல் சட்டரீதியான உரிமைமீரல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அந்த உரிமைமீரல்களில் ஒன்றுதான் கல்வி உரிமையை ஒன்றிய அரசு தன் அதிகாரத்திலேயே வைத்துக்கொண்டதும் என்பதாக நம்மால் கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கும் பொழுது அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய துணை குடியரசு தலைவரான வெங்கைய நாயுடு அந்த அவசர சட்டத்திற்கு வேறொரு காரணத்தையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டு காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது இந்திரா காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினருக்கான வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அறிவித்ததே இந்த அவசரநிலை சட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

எது எப்படியோ.!

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1977 லிலேயே அவசர சட்டம் நீக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசு அரசியல்சாசன சட்டத்தின்படி கல்வியில் மாநிலத்திற்கான சுய உரிமையை வழங்கமறுத்துவிட்டதே மாநில ஆட்சிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.மாநில அரசிடம் கல்வியை வழங்காமல் போனதற்கான பொய் காரணத்தையும் ஒன்றிய அரசு அன்றே முன் வைத்தது.அதாவது தரமான சீரான ஒரேமாதிரியான கல்வியை ஒன்றிய அரசே வகுத்து வழங்கும் என்பதுதான் அந்த மாநில உரிமையை பறித்துக் கொள்வதற்கான பொய்யான வாக்குறுதி.

வாக்குறுதியை வழங்கிய அரசு அதில் உண்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.தரமான கல்வி என்ற பெயரில்  பல்வேறு மாநிலங்களிலும் மாநில மொழியை புறக்கணித்து விட்டு இந்தியை புகுத்த நினைத்ததும், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பாடுபட்டதுமே வெளிச்சத்திற்கு வந்தது.அது அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறிக்கும் படியான நீட் போன்ற தேவையற்ற தேர்வுகளையும் தானே முன்னெடுத்து நிறுத்துவதின் மூலம் தனக்கு சாதகமான குறிப்பிட்ட சாரார்களை மட்டும் குறிப்பிட்ட துறைகளில் ஆக்கிரமிப்பு செய்யவே வழி வகை செய்துகொண்டது.

(குறிப்பு: இன்றைய இரயில்வே துறையிலிருந்து,தபால் துறை வரை இந்தியின் ஆதிக்கமும் வடவர்களின் பங்களிப்புமே அதிகம் காணப்படுவது மத்திய அரசின் வஞ்சகத்திற்கு பெரும் உதாரணமாகும்.)இதையெல்லாம் கேள்வி கேட்க எந்த மாநிலங்களும் துணியாத நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி உரிமையை கோரியிருப்பதும்,நீட் போன்ற போலியான தேர்வுகள் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் உயர்கல்வியை பறிப்பதை எதிர்ப்பதும் தமிழக மக்களுக்கான விடியாலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.!

திங்கள், 13 செப்டம்பர், 2021

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்?

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்
வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்

முன்னுரை:

இன்றைக்கு வெற்றியாளர்கள் வெற்றிஅடைந்துகொண்டே செல்வதற்கு காரணம் என்னவென்று நம்மில் பலரும் யோசிப்பதுன்டு.அத்தோடு மன ஆறுதலுக்காக அவர்களுக்கு அதுவெல்லாம் அதிஷ்டமாக கடவுள் கொடுத்தது, நாமெல்லாம் அதற்கு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான் என்று நமக்குள் நாமே கூறிக்கொண்டு நமது மனதை தேற்றிக்கொள்ளவும் செய்து கொள்பவர்களே அதிகம்.ஆனால் உண்மை அவ்வாறல்ல.வெற்றியாளார்கள் தோல்வியாளர்கள் செய்கின்ற ஒருசில செயல்களை ஒருபோதும் தன் வாழ்வில் செய்வதே இல்லை என்பதே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.எனவே இந்த கட்டுரையில் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத சில விஷயங்களை குறிப்பிட்டுக்காட்டுகின்றேன்.முடிந்தால் நீங்களும் அதனை செய்வதை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயமாக நீங்களும் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே நீடிக்க முடியும்.

வெற்றியாளார்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத 6 விஷயங்கள்.

1.கொண்ட கொள்கையை ஒருபோதும் கைவிடுவதில்லை.

1.தனக்கு சரி என்றோ அல்லது தன்னால் ஒன்றை செய்யமுடியும் என்றோ அவர்கள் உணர்ந்துவிட்டால் அதனை யாருக்காகவும் செய்யாமல் இருப்பதை அவர்கள் விரும்புவதே இல்லை.அக்காரியம் அவர்களுக்கு எத்துனை கடினமாக இருந்தாலும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள்.அவ்வாறே அதற்கு எதிராக எத்துனை தடைகள் வந்தாலும் அவற்றைக்கண்டு ஓடிவிடாமல் அதற்கு தீர்வு காணவே முற்படுவார்கள்.இத்தகைய மனோபாவமே அவர்களை எல்லாக்காலங்களிலும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு முக்கிய காரணியாக இருந்துவிடுகின்றது.

2.நேரத்தை வீணாக்குவதில்லை.

தன் ஆற்றலை வீணான காரியங்களுக்காக செலவழிப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.எச்செயலால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் அறிவார்களோ அவற்றைவிட்டும் மிக தூரமாக இருப்பதே அவர்கள் எக்காலமும் வெற்றியாளார்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

3.தற்பெருமை கொள்வதில்லை.

தன் துறையில் எல்லாமே தனக்கு தெரியும் என்று காட்டிக்கொள்வதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தன் துறை சம்மந்தமான அதிகமான தேடலிலேயே இருப்பதால் அவரகள் கல்வியை தேடும் சாதாரண மனிதனாகவே பெரும்பாலும் தங்களை காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய பண்பே அவர்களை எல்லா காலமும் வெற்றியாளராக இருப்பதற்கான மிகமுக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

4.நிராகரிப்பிற்கும்,தோல்விக்கும் அஞ்சுவதில்லை

நிராகரிப்புகளையும்,இழப்புகளையும்,தோல்விகளையும் கண்டு ஓய்ந்து போய்விடுவதை அவர்கள் தங்கள் வாழ்வில் ஒருபோதும் விரும்புவதில்லை. துன்பங்களுக்கே துன்பம் கொடுக்கும் அளவிற்கான மனோ தைரியம் கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவார்கள்.அத்தகைய பண்பே எப்பொழுதும் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

5.எதிர்மறை எண்ணங்களுக்கு இடமளிப்பதில்லை.

எதிர்மறையான எண்ணங்களுக்கும்,எதிர்மறையாக பேசுபவர்களுக்கும் அவர்கள் ஒருபோதும் மதிப்பளிப்பதே கிடையாது.ஒரு காரியத்தை நேர்மறையாக யோசித்து அதனை சீராக செய்யமுடியும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவற்றைப்பற்றி யார் எதிர்மறை கருத்துக்களை கூறினாலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு அவற்றில் வெற்றி காணும் பக்குவமுடையவர்களாக இருப்பார்கள்.இத்தகைய உறுதிமிக்க பண்பே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாக இருப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

6.தன்னை நம்பியோர்களை ஏமாற்றுவதில்லை.

6.தன்னோடு இருப்பவர்களையும்,தன்னை நம்பி வருபவர்களையும் ஏமாற்ற வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.தன்னுடைய நேர்மை என்பதில் துளியளவும் குறைவு செய்யக்கூடாது என்பதில் மலையளவு உறுதியாக இருப்பார்கள்.இதனால் தன்னை நம்பும் அனைவருக்கும் மதிப்பளித்து அவர்களை கண்ணியப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.இத்தகைய பண்பே அவர்களை எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

ஒரு வெற்றியாளார் செய்யவே விரும்பாத முக்கிய பண்புகளில் இந்த ஆறு பண்புகள் மட்டுமே பிரத்தியேக இடம் பெற்றிருக்கின்றது என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் பதிவிட்டிருக்கின்றேன்.நீங்களும் வெற்றியாளராக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் ஒரு நல்ல வெற்றியாளர் விரும்பாத இந்த ஆறு பண்புகளையும் உங்களைவிட்டும் நீக்கிக் கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் வெற்றியாளராக நீடித்திருக்க முடியும் என்றே நான் ஆதரவு வைக்கின்றேன்.!

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது?

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது
ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது

முன்னுரை:

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்று கேட்கும் அனைவரிடமும்"நீங்கள் ஏன் புத்தகம் படிக்கபோகின்றீர்கள் என்று கேட்பது என்னுடைய வழக்கமாகும்.ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது எப்படி என்பது அவரவர்களின் நோக்கங்களை பொறுத்தே அமைகின்றது என்பதாக கருதுகின்றேன்.மேலும் இன்றைய புத்தக வாசிப்பாளர்களை பல வகையினராக பிறிக்க முடியும் என்றாலும் அவர்களில் சில வகையினரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாசிப்பாளர்களின் வகைகள்:

1.நல்ல நண்பனாக நினைத்து படிப்பவர்கள்.

இந்த வகையினரில் நிச்சயமாக நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை முதலில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொண்டு இந்த சாரார்கள்தான் புத்தகமே தேடும் நபர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இவர்கள் புத்தக காதலர்கள் என்பதால் எத்தகைய புத்தகங்களை நீங்கள் இவர்கள் கையில் கொடுத்தாலும் அதை ஒரு சில மனித்துளிகளில் அதனுடைய மொத்த சாராம்சத்தையும் விளக்கிவிடுவார்கள்.

இவர்களுக்கு புத்தகத்தை படிப்பதற்கான எந்த வறைமுறையும் அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இவர்கள் இருளிலும் படிப்பார்கள், வெளிச்சத்திலும் படிப்பார்கள்.தனிமையிலும் படிப்பார்கள், கூட்டத்திலும் படிப்பார்கள்.ஆகவே இவர்களுக்கு படிப்பதை கற்றுக்கொடுக்க எந்த தேவையும் இல்லை என்பதால் நாம் அடுத்த வகையினரை பார்ப்பதே சிறந்தது என்று கருதுகின்றேன்.

2.அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட உங்கள் துறை சார்ந்த புத்தகங்களை படிப்பதே மேலானதாகும். உதாரணமாக நீங்கள் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அறிவியல் சார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.அதைவிடுத்துவிட்டு வரலாறோ அல்லது புவியியலையோ படிப்பீர்களேயானால் உங்களுடைய புத்தகம் படிக்கும் ஆசை உங்களைவிட்டும் மிக விரைவில் சென்றுவிடும் என்பதே நிதர்சனமான உலவியல் சார்ந்த உண்மையாகும்.

"அப்படியானால் வெவ்வேறு துறைகளின் புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்று கேட்பீர்களேயானால் அங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்க விரும்புகின்றேன்.அதாவது உங்களுடைய அறிவுத்தேட்டம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துத்தான் உங்களுடைய புத்தக வாசிப்பும் தொடரும் என்பது எனது கருத்தாகும்.உங்களால் பல் துறைகளின் புத்தகங்களை நிச்சயமாக வாசித்துவிட முடியும் என்றாலும் அதில் உங்களுடைய அறிவு தேடல் என்பது எவ்வளவு இருக்கின்றது என்பதை பொறுத்தும் நீங்கள் அத்துறையில் முன்பே எவ்வளவு அடிப்படையாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துமே உங்களுடைய வாசிப்பிற்கான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

எனவே அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் புத்தகம் வாசித்தால் முடிந்தளவு நீங்கள் உங்கள் துறை சார்ந்த புத்தகத்தை வாசியுங்கள்.அல்லது நீங்கள் படிக்கும் அப்புத்தகம் ஒரு துறையின் அடிப்படையான அறிவை போதிக்கும் புத்தகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் புத்தகம் வாசிப்பதைவிட அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கின்றோம் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிப்பதால் பெரும்பாலும் அமைதியான இடங்களை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு  சிறந்ததாகும். ஏனெனில் புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது அதனை சிந்தனையில் செலுத்தும்பொழுதோ வேறு சில இடையூறுகள் இருந்தால் அது நம்மை ஆரோக்கியமாக புரிந்து கொள்வதை விட்டும் தடுத்துவிட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.எனவே சிந்தித்து உணர வேண்டிய புத்தகங்களை பெரும்பாலும் தனிமையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறே குறிப்பிட சில பக்கங்களை படித்துவிட்டால் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி படிப்பதற்கு ஓய்வுவிடுங்கள்.அச்சமயம் அமைதியாக அமர்ந்து அது சம்மந்தமாக சிந்தித்துப்பாருங்கள்.அது உங்களுக்கு புதிய பல தீர்வுகளை அளிக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கையாகும்.

3.ஆழமான ஞானம் பெறுவதற்காகவோ அல்லது மன அமைதிக்காகவோ படிப்பவர்கள்.

நீங்கள் ஆழ்ந்த ஞானம் படைக்க வேண்டுமெறோ அல்லது உங்கள் மனதை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்றோ நினைத்தால் நீங்கள் பைபிள்,அல்லது குரான்,அல்லது பகவத் கீதை போன்ற புனித நூல்களை வாசிப்பது சிறந்ததாகும்.ஏனெனில் பெரும்பாலும் மத நூல்கள் பல்வேறு வாழ்வியல் நெறிகளை மிக அற்புதமாக போதிக்கின்றது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அவ்வாறே அந்த புத்தகங்களை உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒன்றாக அமர்ந்து வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஒருவர் வாசித்து அனைவரும் செவிமடுப்பது அதனை புரிந்து கொள்வதற்கும் மேலும் வாழ்வில் அனைவரும் கடைபிடிப்பதற்கும் மிக இலகுவானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.இத்தகைய முறையயே நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் கடைபிடித்துவருகின்றோம் என்பதால் அதனையே உங்களுக்கும் நான் முன்மொழிகின்றேன்.

4.ஒரு மொழியை கற்பதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் ஒரு மொழியை கற்பதற்காக புத்தகங்களை படிப்பவராக இருந்தால் இன்று பல்வேறு மொழிப்புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.மேலும் அவற்றை ஒரு சில நாட்களிலேயே கற்றுவிடும் அளவிற்கு கூட மிக எளிய வடிவில் தொகுக்கப்படுகின்றன.எனவே நீங்கள் மொழியை கற்பதற்காக படிப்பவராக இருந்தால் இரண்டு அடிப்படையான புத்தகங்களை நீங்கள் நிச்சயம் வாசித்தாக வேண்டும்.

ஒன்று அந்த மொழி சார்ந்த இலக்கண இலக்கிய சட்டங்கள் பொதிந்த புத்தகங்கள்.இரண்டாவது அந்த மொழியின் வார்த்தைகள் தொகுக்கப்பட்ட அகராதிகள்.இவை இரண்டையும் நீங்கள் தொடந்து வாசித்து வந்தால் மட்டுமே ஒரு மொழியில் உங்களால் தேர்ச்சி பெறமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறே இதனை மிக ஓர்மனதோடு மனதில் பதியவைக்கவேண்டிய அவசியம் இருப்பதால் காலை பொழுதுகளில் அமைதியான சூழலில் கற்பது சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

5.வாசிப்பது நல்ல பழக்கம் என்பதற்காக வாசிப்பவர்கள்.

வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் அதனை உங்கள் வாழ்விலும் அமைத்துக் கொள்வதற்காக நீங்கள் புத்தகங்கள் வாசிப்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் நீங்கள் மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் அல்லது தினசெய்தித்தாள்கள் வாசிப்பதே போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அப்படி அதுவும் போதவில்லையானால் வெற்றியாளர்களின் வரலாறுகள் அல்லது பொதுவான ஏதேனும் கதைகளை வாசிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனது பரிந்துரையாகும்.

வாசிப்பதை வெறும் பழக்கமாக மட்டுமே ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.ஏனெனில் வெறும் சடங்கிற்காக படிக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு மிக கவனம் என்பது அவசியமில்லை.

6.பொழுது போக்கிற்காக படிப்பவர்கள்.

பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் த்ரில்லர் புத்தகங்கள் அல்லது தொடர் கதைகள் படிப்பது மிக பிரயோஜனமாக இருக்கும்.ஏனென்றால் அவைகள் நம்முடைய மூளைக்கு பல சுவாரஸ்யங்களையும்,எதிர்பார்ப்புகளையும் கூட்டி ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதாரணமாக பயணத்தில் செல்லும் பொழுது பேருந்திலோ அல்லது ரயிலிலோ புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  நாவல் அல்லது த்ரில்லர் கதைகளை படிப்பதே சிறந்தது என்பதாக நான் கருதுகின்றேன்.அவ்வாறே அதனை உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.

ஆக இந்த ஆறு வகையான புத்தக வாசிப்பாளர்களையே நம்மால் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.அடுத்தபடியாக ஒரு புத்தகத்தை நாம் எவ்வாறு அணுகுவது என்பதையும் சுறுக்கமாக விளக்கிவிட விரும்புகின்றேன்.

 ஒரு புத்தகத்தை எவ்வாறு அணுகுவது.?

1.புத்தகங்கள் வாசிப்பதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முடிந்தளவு அடிப்படை உங்களுக்கு முன்பே கொஞ்சம் தெரிந்த விஷயத்தையே ஒரு புத்தகத்தில் படிக்க முயலுங்கள்.அது உங்களுடைய புத்தக வாசிப்பின் ஆர்வத்தை போக்கிவிடாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.அப்படி ஒரு வேளை அத்துறையை படித்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் முதலில் அது சம்மந்தமான அடிப்படை விஷயங்களை கொண்ட புத்தகங்களை வாசியுங்கள்.பிறகு ஆய்வு புத்தகங்களை வாசிப்பது மிக இலகுவாகிவிடும். 

2.புரிவதற்கு மிக கடினமான நீண்ட ஆய்வு புத்தகங்களை எந்த அடிப்படையும் தெறியாமல் வாசிக்காதீர்கள்.ஏனெனில் அது உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

3.ஒரு மொழியை கற்பதற்காக ஒரு மொழியில் உள்ள மிகக்கடினமான ஆய்வு புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பல குழப்பங்களையே கொடுக்கும்.

4.ஒரு துறையில் நீங்கள் மிக அனுபவம் மிக்கவராக இருந்து கொண்டு அத்துறை சார்ந்த ஆரம்ப அடிப்படைகள் சார்ந்த புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அதுவும் உங்களுடைய நேர வீணடிப்பாகவே அமையும் என்றே நான் கருதுகின்றேன்.இதுவே ஒரு நல்ல புத்தக வாசிப்பாளர் ஒரு புத்தகத்தை அணுகும் சிறந்த முறையாக நான் கருதுகின்றேன்.முடிந்தால் நீங்களும் கடைபிடியுங்கள்..!தொடர்ந்து வாசிக்க அமேசானில் எனது புத்தகம் இடம்பெற்றுள்ளது.அதனை பெற்று வாசித்து பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி: